கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது -2009

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்



2009ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் இருவருக்கு வழங்கப்படுகிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர் மதிப்பும் கொண்டது. இம்முறை இந்த விருதை கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி.பழனிச்சாமியும், ஐராவதம் மகாதேவனும் பெறுகிறார்கள். பரிசுப் பணம் பிரித்து கொடுக்கப்படாமல் இருவருக்குமே ஆளுக்கு 1500 டொலர் வழங்கப்படுகிறது.

கோவை ஞானி.

கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி.பழனிச்சாமி ஒரு தமிழாசிரியர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும் திறனாய்வாளராகவும் இயங்கி வருகிறார். இவரை ‘இடைவிடாது இயங்கிவரும் ஆய்வு அறிஞர் ஞானிக்குள் தமிழ் இயங்குகிறது’ என்று வர்ணிப்பார்கள். தமிழின் நவீன இலக்கியங்களை மார்க்ஸிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். நுட்பமான இலக்கிய உணர்வும், நவீன இலக்கியங்களை , திறந்த மனத்துடன் அணுகும் பண்பும் கொண்டவர். இவர் ‘நிகழ்’ என்ற சிற்றிதழை பல ஆண்டுகளாக தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக நடத்தி வந்தார். இதுவரை இவர் 24 திறனாய்வு நூல்களையும் 12 தொகுப்பு நூல்களையும் 4 கட்டுரை தொகுதிகளையும் இரண்டு கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். இதுதவிர தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களில் ‘இந்தியாவில் தத்துவம், கலாச்சாரம்’ ‘கடவுள் ஏன் இன்னனும் சாகவில்லை’ ‘தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்’ ‘மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்’ ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இவருடைய நீண்ட கால தமிழ் சேவைக்காக ‘விளக்கு விருது’, ‘தமிழ் தேசியச் செம்மல் விருது’, ‘தமிழ் தேசியத் திறனாய்வு விருது’, ‘பாரதி விருது’ ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

ஐராவதம் மகாதேவன்

ஐராவதம் மகாதேவன் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். இந்திய ஆட்சிப் பணியில் 33 வருடங்களும், தினமணி இதழின் ஆசிரியராக நாலு வருடங்களும் பணி புரிந்தார்.

இவருடைய தினமணி காலத்தில் தமிழ் மொழியின் பரவலான எழுத்துபாவனை தூய தமிழ்ச்சொற்களின் அறிமுகத்தால் பெரும் மாற்றமடைந்தது. தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இவர் நடத்திய நீண்ட கால ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச புகழ் இவரை தேடி வந்தது. கல்வெட்டு ஆராய்ச்சிகளில் இவர் காட்டிய அர்ப்பணிப்பும் உழைப்பும் தொல்தமிழ் குறித்தும் பண்பாடு, வரலாறு குறித்தும் தீர்க்கமான முடிவுகளை எட்ட உதவியிருக்கிறது. இவர் நாம் வாழும் காலகட்டத்தின் மாபெரும் ஆய்வாளர் என்பதை பல்துறை அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பரவியது என்பதையும் அந்த நூற்றாண்டிலேயே எழுத்தறிவு தோன்றியது என்பதையும் ஆராய்ச்சி மூலம் நிறுவியிருக்கிறார். அரசவை, மேனிலை மக்கள், வழிபாட்டு தலங்கள் மத்தியில் மட்டுமே எழுத்தறிவு என்ற நிலை இல்லாமல் எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு காணப்பட்டது என்பது

இவருடைய ஆராய்ச்சியிகளின் முக்கியமான முடிவு.. இவர் எழுதியுள்ள நூல்கள் The Indus Script : Texts, Concordance and Tables (1977) Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003) இவருடைய ஆராய்ச்சிகளுக்காக இந்திய அரசு இவருக்கு 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.

விருது வழங்கும் விழா பற்றிய விவரங்கள் பத்திரிகைகளிலும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இணையத்தளத்திலும் அறிவிக்கப்படும்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004


கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் உலகத்து தமிழ் படைப்பாளிகள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

போட்டி விபரங்கள்:

1) போட்டிக்கு அனுப்பப்படும் கதை ஆசிரியரின் சொந்தக் கற்பனையாகவும், இதற்குமுன் பிரசுரிக்கப்படாததாகவும் இருக்கவேண்டும்.

2) வளர்ந்த, வளரும், புதுமுக எழுத்தாளர்கள் யாவரும் இந்தப் போட்டியில் வித்தியாசமின்றி கலந்துகொள்ளலாம்.

3) ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பலாம்.

4) தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளின் பரிசு விபரங்கள்:

அ) முதல் பரிசு : கனடியடொலர் 300.00 ( இந்திய ரூ 10,000 ; இலங்கை ரூ 20,000)

ஆ) இரண்டாம் பரிசு : கனடிய டொலர் 200.00 ( இந்திய ரூ 6,666 ; இலங்கை ரூ 13,333)

இ) மூன்றாம் பரிசு : கனடிய டொலர் 100.00 ( இந்திய ரூ 3,333 ; இலங்கை ரூ 6,666)

5) தேர்வுக்குழுவின் முடிவு இறுதியானது.

6) போட்டிக்கு சிறுகதைகள் அனுப்பவேண்டிய முகவரி:

Tamil Short Story Contest

16, Hampstead Court,

Markham, ON

L3R3S7

Canada

7) சிறுகதைகள் தட்டச்சில் அல்லது கம்புயூட்டரில் அச்சடிக்கப்பட்டு, 2000 வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும். இந்த விதிகளை புறக்கணிக்கும் சிறுகதைகள் நிராகரிக்கப்படும்.

8) போட்டியில் தேர்வு பெறாத சிறுகதைகள் திருப்பி அனுப்பப்படமாட்டா. தேவையான நகலை முன்பே எடுத்து வைத்திருப்பது நல்லது.

9) முதல் மூன்று கதைகளைத் தவிர மேலும் பிரசுரத்துக்கு உகந்தவற்றை, ஆசிரியர் சம்மதத்துடன், காலம் இதழ் பிரசுரிக்கும்.

10) போட்டிக்கான படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004.

11) போட்டி முடிவுகள் 30, ஜூன் 2004 க்கு முன் அறிவிக்கப்படும்.

12) சிறுகதையின் எந்தப் பக்கத்திலும் ஆசிரியர் பெயர் இருக்கக்கூடாது. கதையுடன் வரும் மேல் இணைப்பில் கீழ் கேட்கும் விபரங்களை குறிப்பிடுதல் அவசியம்.

அ) சிறுகதை வார்த்தைகளின் எண்ணிக்கை.

ஆ) ஆசிரியர் பெயர், முகவரி, தொலைபேசி எண், தொலைநகல், ஈமெயில் போன்ற விபரங்கள்.

இ) நூறு வார்த்தைகளுக்கு மேற்படாமல் ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு.

amuttu@rogers.com

***

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004


கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் உலகத்து தமிழ் படைப்பாளிகள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

போட்டி விபரங்கள்:

1) போட்டிக்கு அனுப்பப்படும் கதை ஆசிரியரின் சொந்தக் கற்பனையாகவும், இதற்குமுன் பிரசுரிக்கப்படாததாகவும் இருக்கவேண்டும்.

2) வளர்ந்த, வளரும், புதுமுக எழுத்தாளர்கள் யாவரும் இந்தப் போட்டியில் வித்தியாசமின்றி கலந்துகொள்ளலாம்.

3) ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பலாம்.

4) தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளின் பரிசு விபரங்கள்:

அ) முதல் பரிசு : கனடியடொலர் 300.00 ( இந்திய ரூ 10,000 ; இலங்கை ரூ 20,000)

ஆ) இரண்டாம் பரிசு : கனடிய டொலர் 200.00 ( இந்திய ரூ 6,666 ; இலங்கை ரூ 13,333)

இ) மூன்றாம் பரிசு : கனடிய டொலர் 100.00 ( இந்திய ரூ 3,333 ; இலங்கை ரூ 6,666)

5) தேர்வுக்குழுவின் முடிவு இறுதியானது.

6) போட்டிக்கு சிறுகதைகள் அனுப்பவேண்டிய முகவரி:

Tamil Short Story Contest

16, Hampstead Court,

Markham, ON

L3R3S7

Canada

7) சிறுகதைகள் தட்டச்சில் அல்லது கம்புயூட்டரில் அச்சடிக்கப்பட்டு, 2000 வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும். இந்த விதிகளை புறக்கணிக்கும் சிறுகதைகள் நிராகரிக்கப்படும்.

8) போட்டியில் தேர்வு பெறாத சிறுகதைகள் திருப்பி அனுப்பப்படமாட்டா. தேவையான நகலை முன்பே எடுத்து வைத்திருப்பது நல்லது.

9) முதல் மூன்று கதைகளைத் தவிர மேலும் பிரசுரத்துக்கு உகந்தவற்றை, ஆசிரியர் சம்மதத்துடன், காலம் இதழ் பிரசுரிக்கும்.

10) போட்டிக்கான படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004.

11) போட்டி முடிவுகள் 30, ஜூன் 2004 க்கு முன் அறிவிக்கப்படும்.

12) சிறுகதையின் எந்தப் பக்கத்திலும் ஆசிரியர் பெயர் இருக்கக்கூடாது. கதையுடன் வரும் மேல் இணைப்பில் கீழ் கேட்கும் விபரங்களை குறிப்பிடுதல் அவசியம்.

அ) சிறுகதை வார்த்தைகளின் எண்ணிக்கை.

ஆ) ஆசிரியர் பெயர், முகவரி, தொலைபேசி எண், தொலைநகல், ஈமெயில் போன்ற விபரங்கள்.

இ) நூறு வார்த்தைகளுக்கு மேற்படாமல் ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு.

amuttu@rogers.com

***

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்