செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (2)

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

கிருஷ்ணா வெங்கட்ராமா


ஒரு மாதமாக மீளாத் துயிலில் இருந்தேன் . . .

செவ்வாயில் சோனியா ஏர்வேஸ் இறங்குவதற்கு முன் ஒரு மாதக் களைப்பை நீக்க, விமானத்தில் ஒரு விதமான மருந்து தெளிக்கப்பட்டது. அது மூளையைச் சென்றடைந்தவுடன் உற்சாகப்பட்டவாறே, இறங்கினோம். விமானத்தைவிட்டு இறங்கி டெர்மினலில் நுழையும்போது “ ?லோ” என்று பொம்மையைப் போன்று ஒரு பணிப்பெண் அனைத்து ஆயிரம் பேருக்கும் திருபிச் சொன்னாள். நன்றாக உற்றுப் பார்த்தேன். அட ! உண்மையிலேயே பொம்மை ரோபோப் பணிப்பெண் தான். நன்றாக இருந்தது அது.

அங்கேயும் கூட என்னைக் கடந்து சரவணா ஸ்டோர்ஸ் மஞ்சள் துணிப்பையைக் கையில் எடுத்தவாறு, குவைத் காரர் அவசரமாகச் சென்றார். என்ன அவசரமோ ? சரவணா ஸ்டோர்சில் கும்பலோடு அலை மோதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும். “சீக்கிரம் போகணும் இல்லையென்றால் விசா கவுண்டரில் கியூ நிற்குமே ?” என்று தன் குவைத் அனுபவத்தில் பேசினார்.

ஏதோவென்று ‘சுள்’ ளென்று காலைக் கடிக்கவே ‘பட்’டென்று அந்த இடத்தில் அறைந்து விட்டு . . . விட்ட இடத்தில் தொடர்ந்தேன் . . .

போய் பார்த்தால் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடியிருந்தது. ஒரு வெள்ளைக்காரர் மட்டும் தன் “செவ்வாய்” உதடுகளைத் திறந்து, “ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்” (செவ்வாய் உங்களை இனிதே வரவேற்கின்றது) என்று செவ்வாய் மொழியில் கூற, பின்னால் இருந்த ஒலிப் பெருக்கி தமிழில் மொழிபெயர்த்து எனக்குத் தெரிவித்தது. நன்றி சொல்லிவிட்டு, விசா கார்டைச் சொருகி என்னை பதிவு செய்து விட்டு வெளியே வர, சுங்கத்துறையினர் என்னைப் பிடித்தனர்.

கால் வலிக்கவே தலையணையைத் தூக்கி காலடியில் போட்டு விட்டு . . .

சென்னை மாநகரத்துப் பழக்கத்தில் என் பெட்டியைத் தாம்புக் கயிறு கொண்டு கட்டியிருந்தேன். வினோதமாக அதைப் பார்த்து விட்டு, கத்தி கொண்டு அறுத்தனர். என் பெட்டியில் பருப்புப் பொடி சிதைந்து சிதறியிருக்கவே, செவ்வாய் உலகத்தினர் பயந்து பெட்டியை மூடி “சீல்” வைத்தனர். உள்ளே வேறு மாவடு பாட்டில். மாவடுத் தண்ணீர் மிளகாய் காரத்துடன் எண்ணையுடன் கசிந்திருக்க பயந்து போய் விட்டனர், “செக்யூரிட்டி அதிகாரிகள்”. பல்வேறு கோணங்களில் போட்டோக்கள் எடுத்த பிறகு ஒருவாறு அது என்ன என்று விளக்கி, சாப்பிட்டுக் காண்பித்த பிறகே என்னை வெளியே விட்டார்கள். கொலையுண்ட உடல் சிதறி ரத்தக் கோடுகள் போன்று மாவடுத் தண்ணீர் சிதறி, வெள்ளை வேட்டிகளில் “ரத்தக் கறை” தெளிக்கப்பட்டிருந்தது. எப்படியோ அள்ளி உள்ளே தள்ளி, மீண்டும் பெட்டியைத தாம்புக் கயிறு கொண்டு கட்டினேன். எதுக்கு தாம்புக் கயிறை வீசுவானேன் ? மீண்டும் உபயோகப் படுத்தலாமே ?. என்னப் புது பெட்டி வாங்கினாலும் நம்ம “தாம்புக் கயிறு” தான் கயிறு. மற்றதெல்லாம் மயிறு. (முடியைச் சொன்னேன் !).

அரித்த தலையைச் சொறிந்து விட்டு . . . பொடுகாக இருக்கும் . . . நாளைக்குத் தலைக்குக் குளிக்கணும் . . . திரும்பி படுத்தேன் . . .

வெளியே வந்து பார்த்தால், சாலைகள் “வழுக் மொழுக்” கென்றிருந்தன. “ரோடு எப்படி போட்டிருக்கான் பாரு ! “ என்று யாரையோ சிலாகித்தேன். எங்கள் ஊரில் செவ்வாய்காரன் வந்தால் கூட, “எப்படி ரோடு போட்ட்டிருக்கான் பாரு !” என்று சொல்லலாம். அப்படி குண்டும் குழியுமாக செவ்வாயில் இருப்பதைப் போன்று இருக்குமாக்கும் !

மாம்பலத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு 2 மணி நேரம் ஆன போது, செவ்வாயில் 3 நிமிடங்களில் 30 மைல் காரில் கடக்க முடிந்தது. செவ்வாய் ஆள், அரவம்( பாம்பு), புல், பூண்டு, நண்டு, சிண்டு (குழந்தைகள்),, மாடு, ஆடு இல்லாமல் வெறும் பாறையாக இருப்பதால் அவ்வாறு வேகமாகமாய் ஊடப் போக முடிந்ததாய் காரணம் கற்பித்துக் கொண்டேன்.

வலது கை வலிக்கவே இடப் பக்கம் திரும்பி கைகளை தலைக்கடியில் விட்டுத் தாங்கிப் பிடித்து . . .

எப்படா, செவ்வாய் “உடுப்பி”யைப் பார்ப்போம். மேலும் சில பல இட்லிக்களை விழுங்குவோம் என்று காத்துக் கொண்டிருந்தேன். வாழ்வதே இட்லிக்காக என்றும் தோன்றியது. கஷ்டப்பட்டு இங்கு வந்து வேலைப் பார்த்து மாலைக் காரை ஓட்டி இட்லி வாங்கிச் சாப்பிடத்தான் என்று தோன்றியது. அப்ப, நம்ம ஊரிலேயே இருந்திருக்கலாமே ?. தெருவோரக் கடையில் இட்லியைச் சட்னி/சாம்பாரில் நனைத்து சாப்பிட்டு திண்ணையில் உட்கார்ந்து வம்பு பேசியிருக்கலாம். இப்ப இங்கு வந்து ஆபிஸில் காபி குடித்து, செவ்வாய் இணையதளங்களைப் பார்த்து மாலை இட்லிக்காக ஏங்க வேண்டியிருக்கின்றது.

பாவம், பூவுலக சென்னை வாசிகள். மணமானவுடன், பெண்ணாயிருந்தால், செவ்வாய் போகும்போது கணவருக்காக “அல்ட்ரா டாப் இன்டர் காலக்டிகா கிரண்டர்” வாங்க வேண்டும். அதைக் கடினமாகத் தோல் பை பிய்ந்து, தொங்ககப் போட்டுக் கொண்டு போக வேண்டியிருக்கும். இட்லிக்கு அலையும் இட்லி “சுப்பன்”கள் கணவராக வாய்த்து விட்டு பெண்களின் உயிரை வாங்குவார்கள். நானும் அந்த வகையிலான ஒரு கனவான் தான். நான் வேலை பார்த்த “மார்ஸ்டெக்” கம்பெனியிலிருந்து வந்திருந்த ஏஜெண்ட் என்னை இலவசமாக உடுப்பிக்கு அழைத்துச் சென்றார். அங்கு கம்பெனி செலவில் 2 பிளேட் இட்லி, 1 ஆனியன் தோசை, 1 டிகிரி (555 டிகிரி இல்லை. அது செவ்வாயின் உஷ்ணம்) காப்பி சாப்பிட்டு விட்டு, கைகளை அலும்பிவிட்டு வெளியே வந்தால், செவ்வாயின் உஷ்ணம் என் தலைக் கவசத்தையும் மீறித் தாக்கியது.

இந்த வெயில் காலம், இரவு கூட தலையில் வியர்க்கிறது . . . சனியன் . . . ஃபேஃனில் காற்று போதாது . . .

சியாட்டிலில் எப்போதும் மழை. கனடாவில் எப்போதும் பனி, சென்னையில் எப்போதும் வெயில் என்பதைப் போல அலுத்துக் கொள்வதற்கு ஏற்ற மாதிரி செவ்வாய் வெயில் ரூர்கேலா இரும்பை உருக்கும் அளவிற்கு இருந்தது. மந்தைக் குளிரவிக்கும் விதத்தில் அனேகம் பேர் கைகுட்டையையே ஆடையாக அணிந்தவண்ணமிருந்தனர். பாஷன் மாறிப் போய் சென்னைக்கு இம்மாதிரி சின்ன “ஜட்டி” போட்டுக் கொண்டு கடைகளுக்குப் போய் என் “சின்னப் பையன்” புத்திக் காண்பிக்க ஆசையயிருந்தது. “எங்கிருந்து வந்தான் இந்த அரை டிராசர் லூசு ?” என்று கடைக்காரர்கள் கேட்கட்டும்.

இளம் பெண் என்று நினைத்து பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த நாய் மீது காலைப் போட்டவுடன் “இர்ர் உர்ர்ர்”ரென்றது. ஒரு உதை விட்டவுடன் தள்ளிப் போய் படுத்தது. இனிமேல் மேல் திண்ணையில் படுக்க கூடாது . . .

அடுத்த நாள் “செவ்வாய் சோஷ்யல் செக்யூரிட்டி” என்ற அலுவுலகத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு போனான் ஏஜெண்ட். பேங்க் அக்கவுண்ட் திறக்க ஒரு செவ்வாய் குடிமகன் எண் வேண்டுமாம். அங்கு “அப்ளை” பண்ணி வாங்கினேன். அந்த நம்பருக்காகா மாதம் $450 கட்ட வேண்டும் என்றான். சரி ! பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் வயசான பிறகு சோஷியல் செயூரிட்டியில் பணமிருக்காது என்றும் கதைத்தார்கள். ஆபிசிற்குப் போனால் எனக்குச் சுழலும் இருக்கை அளித்தார்கள். திரும்பினால் என் ரூமின் சன்னல் திரும்பி எங்கு நோக்கினும் பரங்கி மலையே தெரியும். செவ்வாய் மலைக்குன்றுக்கு நானிட்ட பெயர் பரங்கி மலைக் குன்று.

வீட்டு வாசலிலிருந்த குப்பை மேட்டிலிருந்து வந்த துர்வாசனை மனதைக் கவர்ந்து சென்று மீண்டும் மூக்கிற்குள் நுழைத்தது. சற்று மூச்சை உள்ளடக்கிப் பிறகு வாசனையைப் பழக்கிக் கொண்டேன் . . . இக்குப்பை மேடு என்னைச் சமாதியாக்கிடும். நாளைக்கு தீ வச்சுக் கொளுத்த வேண்டும் .. .

சென்னை நினைவுகள் எனக்குள் ஏக்கத்தை ஏற்படுத்தி பெரிய மனக் கிலேசத்தை ஏற்படுத்தியது. நல்ல வேளை தமிழ் சினிமா படங்கள் செவ்வாய் இணைய தளங்களில் வந்ததால் ஆடலுடன், பாடலைக் கேட்டு ரசிப்பதில் தான் சுகம் சுகமென்று இருக்கலானேன். அலுவுலக வேலை போரடித்தது. இணைய தளங்களில், “செவ்வாய் அதிபர் போன் உரையாடல்கள், மற்றும் இ-மெயில்களை ஒட்டுக் கேட்பதற்கு சட்டம் போட்டிருந்தார்.” என்று காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்தது. செவ்வாய் பெண்- பூவுலக ஆண் சேர்க்கை இயற்கையானத் திருமணம் ஆகாது என்று ஒரு சாராரும், அப்படி இருந்தால் தான் “செவ்வாயை செவ்வாய்ப்படுத்தமுடியும்” என்று மறு சாராரும் விவாதம் பண்ணிக் கொண்டிருந்தனர். செவ்வாய் மக்கள் அனைவரும் ஒரு வித சிவப்பிற்கு நிறம் மாறிப் போயிருந்ததால் பூமியிலிருந்து போன அனைவரையும் நிறம் வேற்றுமை கண்டு வித்தியாசப்படுத்தி இகழ்ந்து வந்தனர். செவ்வாயில் நிலத்திற்கு கீழே வாழ்பவர்களுக்கும் மேலே வாழ்பவர்களுக்கும் ஒரு சமூக வேற்றுமை இருந்தது. வண்ண வேற்றுமையில் ஒற்றுமை காணுமாறு அரசியல்வாதிகள் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒரு அரசியல்வாதி மஞ்சள் ராசியென்று மஞ்சள் உடை உடுத்திக் கொண்டிருந்தார். மற்றொருவர் சிவப்பு ராசியென்று சிவப்பை அணிந்து கொண்டிருந்தார். ஒருவர் கறுப்புச் சட்டையணிந்து கொண்டிருந்தார். பச்சை ஆடையும் உண்டு. ஒருவர் வெண் பட்டாடை அணிந்து கொண்டிருந்தார். ஒருவர் ஆடை எதற்கென்று கேட்டார். நிறங்கள் எந்த அண்டங்களுக்குச் சென்றாலும் சூரியக் கதிர்கள் போன்று மனிதரைத் துரத்துமென்று கண்டு கொண்டேன். எனக்கென்னவோ பிடித்தது நீலக் கதிர்கள் தாம். அந்தக் “கலரிலே தான் “பலான” படங்கள் செவ்வாயில் போடுவார்கள்.

வாய் உலர்ந்து தொண்டை வறண்டு போகவே (செவ்வாயில் தாகம் அதிகம் எடுக்குமாம்!) எழுந்து போய் ஒரு டம்ளர் பானைத் தண்ணீரைக் குடித்து விட்டுக் (பானை மாநிறம் !) இருட்டில் கண்மூடி நடக்கும் போது கீழே படுத்திருந்த அப்பாவின் காலை ஓங்கி மிதித்து . . . மன்னிச்சுக்குங்க ஃபாதர் !.

மதங்கள் பூமியைப் போலவே வானத்தில் மிதந்து செவ்வாய்க்கும் இறக்குமதியாகியிருந்தது. குகைகளைக் குடைந்தெடுத்த கோவில்களில், மசூதிகளில், சர்ச்சுக்களில், புத்த வி ?ாரங்களில் கடவுள் செவ்வாயிலும் படைக்கப்பட்டிருந்தார். அனைவருக்கும் செவ்வொளி பின்னால் தலையில் பின்னால் இருப்பதாக வரையப் பெற்றது. “இன்று யேசு கபிலன் பள்ளத்தாக்கில் தோன்றுகின்றார். !” “நாளை இவ்வுலகின் கடைசி நாள்!”, “குருடர்கள் பார்ப்பார்கள்! செவிடர்கள் கேட்பார்கள்” என்று பூமியிலிருந்து வந்திருந்த பிரசாகர் சொல்ல அனைவரும் அவரைச் சென்று பார்த்து குருடராகவே, செவிடராகவே வாழ்ந்து வந்தனர். கல்கி அவதாரம் முடிந்து “கலைமகள் அவதாரம் செவ்வாயில் நடக்கும். செந்தாமரை மீது வீற்றிருப்பாள்” என்று ஆர்.எஸ்.எஸ். இயக்ங்கள் கொடி பிடித்திருந்தன. முகமதுவைப் பற்றிக் கார்ட்டூன் ஒட்டியதால் “அனைவருக்கும் செவ்வாயில் சங்கு !” என்று போர் முழக்கங்களும் நிறைந்திருந்தன. “புத்தரின் சிலைகளை அடித்து நொறுக்குவோம்” என்று டாலிபான் இயக்கத்தினர் செவ்வாய் கானிஸ்தானிலிருந்து அறைகூவல் விடுத்திருந்தனர். ஆக மொத்தம் செவ்வாயும் களை கட்டியது. அவ்வப்போது டயர்கள் எரிக்கப்பட்டன. ராணுவம் ரோந்துக்கு அழைக்கப்பட்டது.

இன்னும் எவ்வளவு அண்டங்களுக்குச் சென்றாலும் இதையே செய்வோம் போலும். தண்ணீர் நமது உடம்பிலிருந்து கழிவாக வந்தாலும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் நமக்கே குடிநீராகத் தரப்பட்டது. அது மாம்பலத்தில் கிடைக்கும் நீரை விடத் தூயதாக இருந்தது. “ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் இதைத் தான் செய்தார்கள் அந்நாளிலேயே ! எங்களுக்கு அதைப் பற்றி முன்னமையே தெரியும்” என்று நம்மவர்கள் மார்தட்டிக் கொண்டனர். மதுபானம், விபச்சாரம், மண்ணை அனுமதியில்லாமல் வெட்டுவது, சுரங்கங்கள் தோண்டுதல் போன்றவை நடைப்பெற்றன. நீரில்லாமல், பாலாறு என்று ஒரு மணல் திடலை “ஆறு” என்று கூறுவது போன்று பல பாலாறுக்கள் செவ்வாயில் இருந்தன. அதிலெல்லாம் மணல் அள்ளும் வித்தையைத் தென்னிந்தியர் சிறப்புறச் செய்தனர். பசுமைத் தாயக நண்பர்கள் “செவ்வாயில் வாழை” என்ற தத்துவத்தைக் கொண்டு வந்தனர். செவ்வாயில் புகைக் குடிக்கத் தடையும் கொண்டு வந்தனர்.

காலையில் சீக்கிரம் 8.00 மணிக்கு போகவேண்டும். என் சிவப்புத் தேவதை மஞ்சள் கலர் சட்டையணிந்து, சிவப்புப் புடவையில் தங்கரதமென வரும் நாள் . . . பச்சை நிறப் பல்லவன் பஸ்ஸைப் பிடிப்பதற்குள் போய் விட வேண்டும் . . .

செவ்வாயில் வாழ்பவர், தங்களுக்கே எல்லாம் தெரியும் என்ற வழக்கமான மனோபாவத்துடன், இறுமாப்புடன் இருந்து பூமியிலிருந்து வந்தவரைக் கடினமான காரியங்கள் அனைத்திற்கும் தயார் படுத்தினர். “ஓ ! பூமியா ?” என்று இகழ்சியாகப் பார்ப்பது நடந்தது. மனைவியை இழிவு பண்னும் கணவன்மாரும் “என் புத்தியச் செருப்பால அடிக்கணும். போயும் போயும் பூமியில் பெண்ணெடுத்தேன் பாரு !” என்று சொல்லிக் கொண்டனர். அமெரிக்க வாழ் குடியினர் செவ்வாயில் தங்கிய பிறகு, “உங்கள் குழந்தைகளும், என் குழந்த்தைகளும், நம்மக் குழந்தைகளோடு, இப் பூமிக் குழந்தைகளோடு வளரட்டும். வீட்டு வேலை செய்ய பூமியில் தான் காசு சல்லிசாகக் குழந்தைகள் கிடைப்பார்கள்” என்று வாழ்ந்து வந்தனர்.

பூமியின் அமெரிக்காவிலிருந்து வந்தாலும் குழந்தைகளை, பெண்களை அவ்வாறு நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மார்ஸ், வீனஸ், போன்றவைப் பொதுப் பெயர்களாக இருந்தது. மார்ட்டின் லூதர் கிங் பெயரில் ஒரு ரோடு போடப்பட்டிருந்தது. சிவகாசிப் பட்டாசுக்கள் அங்கேயும் விற்கப்பட்டன.செவ்வாய்க்கும், ராமநாதபுரத்திற்கும், சிவகாசிக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை தான்.

வாழ்க்கை சுகமாகத் தான் இருந்தது. வாங்கின சம்பளம் செவ்வாயில் வாடகை வீட்டிற்கேப் போதுமானதாக இருந்தது. வெளியே நண்பர்கள் அதிகமில்லாமல் இருந்தது. அனைவரும் செவ்வாய் கிரகத்து விஷயங்களுக்கே முக்யத்துவம் கொடுத்து பேசவே, பூலோக வாழ்க்கைச் செல்லாக் காசாகிவிட்டது. கலாச்சாரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. சினிமா, நாடகம், இசை எல்லாம் செவ்வாய்த் தனத்தோடு இருக்கவே. வேம்பு இனித்தது. தேன் கசந்தது. மாபுளித்தத்து. பலா கசந்தது. சும்மா ! அரசியல் கலந்து பேசிப் பார்த்தேன் ! இப்பழம் புளிக்குமென்று பூமிக்குத் திரும்ப முடிவு செய்தேன்.

இன்னும் விடியலை. இன்னும் கொஞ்ச நேரம் . . . மனதிடம் கொஞ்சி விட்டு குளிரில் போர்வையை இழுத்து போர்த்தி விட்டு . . .

ஆனால், சென்னைக்கும், அதன் வெயிலிற்கும், “கச கச” வென்று இருக்கும் கூட்டங்களையும் அதிகம் கேலி பேசி வந்த நான், அவையில்லாமல் செவ்வாயில் பைத்தியம் போல ஆனேன். சரி ! சம்பாதித்தது போதுமென்று திரும்பி சோனியா ஏர்வேஸில் திரும்பி வந்தேன். அதோ ! பூமி நீல உருண்டையாகத் தெரிந்தது.! அங்கு போனபின்பால், தொடர்ந்து சாதி மத வேறுபாடுகளுக்கிடையே வாழ்க்கை நடத்தப் போகிறோமென்று நினைத்துக் கொண்டேன். எரி நட்சத்திரத்தைப் போன்று எரிந்து சென்னையில் திரும்பி வந்து ஏர்போர்ட்டில் லஞ்சம் வெட்டி, என் உடைமைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றேன் . . .

அடுத்த நாள் என் அம்மா உலுக்கிச் சொன்னாள், “இந்தா சும்மா தானே இருக்கிறாய் ! எழுந்திரு. லுங்கி மேலே போட்டுக்கொண்டால் தூக்கம் எப்படிக் கலையும் ? சென்னை கார்ப்பரேஷனுக்குப் போய் இந்தப் பில்லை கட்டி விட்டு வா!” என்றாள்.

அம்மா சொன்னக் கிளிகள் ஞாபகம் வர “ அம்மா செவ்வாயில் . . .” என்றேன் !

பல்லைப் பேர்த்துடுவேன். எழுந்திருடா சோம்பேறி !

“செவ்வாய் நாறுவதற்குள் பல் தேய்த்து விட்டு, இந்தப் பினாயில் காபியைக் குடித்துவிட்டு 12C பிடித்து வடபழனி போ! ஏவிஎம் ஸ்டூடியோவில் நூறு தினகரன் பேப்பர் கேட்டிருக்கான். போய் போடு !!” என்று அப்பா என்னைக் காய்ச்சித் தள்ளினார்.

நேற்று அதிகம் சூப்பர்ம்ம்ம்மா தினகரனைப் படித்து விட்டு செவ்வாய் கனவு அதிகமாகிவிட்டது போலும் ! கோயம்பேடு நோக்கி பீடு நடை நகரலானேன். தூரத்தே தினகரன் மதிய வெயிலில் மஞ்சளாகக் காய்ந்து கொண்டிருந்தான். மணி 8.00 சிவப்புத் தேவதை கிளியெனப் பறந்து மயிலென நடந்து வந்தாள். அவளை நன்றாகப் பார்ப்பதற்குள் “பர பர” வென வந்தக் கூட்டம் அவளையும் என்னையும் நன்றாகத் தள்ளிவிட்டு, புழுதி கிளம்பிய பச்சைப் பல்லவனை ஆக்ரமிக்க, மயில் காணாமல் போனாள். இவளைப் பார்ப்பதே பெரும் கனவாக இருக்கிறது. பஸ்ஸையும் தவற விட்டேன்.

நீலவானத்தில் சூரிய நட்சத்திரம் காய்ந்து கொண்டிருந்தது.

நமக்கெல்லாம் வட பழனி தான் !

செவ்வாயாவது ? கிளியாவது ?.

காக்கா “கா, கா வென்று” கத்த, கோடம்பாக்கத்துக் குண்டு குழிகளிலில் செவ்வாய் மீது போன “ரோவர்” மாதிரி பொடி நடை நடக்கலானேன். நான் போய்ச் சேர வேண்டிய இடம் வெகு தூரத்திலுள்ளது.

kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணா வெங்கட்ராமா

கிருஷ்ணா வெங்கட்ராமா

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் . . . (1)

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

கிருஷ்ணா வெங்கட்ராம்


“சந்திரனுக்குப் போனாலும் கூட நாயர் டா கடை வைப்பான். “ இதை நாம் நிறைய தடவை கேட்டிருப்போம். எங்கு போனாலும் அந்த இடத்திற்குப் போய் தனக்குத் தெரிந்ததை நிலை நாட்டும் கேரளக்காரரின் கைவண்ணத்தைச் சிலாகிக்க இந்த மாதிரி கூறி வருவதுண்டு.

இங்கிலாந்து போனாலும் இட்லி கேட்பான் தமிழன்!

அமெரிக்கா போனாலும் அரிசிச் சோறு தேடுவான் தமிழன் !

சான் பிரான்ஸிஸ்கோ போனாலும் சாம்பார் வேண்டும்.

போன்ற ரீதியில் நம்மவர்களைப் பற்றி எதுகை மோனையாக வேடிக்கையாகச் சொன்னாலும், அடுத்து செவ்வாய் கிரகத்திற்கே நாம போனாலும் இரண்டாவது ஃபிளைட்டில் நம்மூர் கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் நிறைந்து அங்கு போய் வேலை செய்யப் பிழைக்க ஓடுவார்கள்.

செவ்வாயிலும் ‘செலக்ட் * ’ !

( Select * from என்ற கம்ப்யூட்டர் SQL கேள்வி மொழி உலகப் பிரசித்தம்! இந்திய ஐ.ஐ.டி.யில் படித்தாலும் செலெக்ட் * பண்ணித் தான் ஆக வேண்டும் ! தலைவிதி !)

M1 விசா வாங்க அமெரிக்க, பிரிட்டிஷ் தூதரகங்களுக்கு முன் தவம் கிடக்க வேண்டும். M1 விசா என்பது மார்ஸ் 1 விசாவாகும். முதலில் அதை வாங்கிச் செவ்வாயில் குடியேறுவது. அப்புறம் சிகப்பு கார்டு –ன்று செவ்வாய்க்கு வாங்க வேண்டும். அப்புறம் தமிழகம் கூறும் நற்பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு செவ்வாய்க்குத் தனிக் குடித்தனம் பண்ணத் தயாராக வேண்டும் ! ( சிகப்பு கார்டு என்பது தற்போதைய அமெரிக்க க்ரீன் கார்டு மாதிரி).

ஏதோ ஒரு கார்டு வாங்க வேண்டும். ரேஷன் கார்டாக இருந்தால் என்ன ? தமிழ்நாடு மின்சார பில் ( TNEB Electricity Bill) கார்டாக இருந்தால் என்ன ? சிவப்புக் கார்டாக இருந்தால் தான் என்ன ?. நிறம் எப்படி இருந்தாலும் ஏதோ ஒரு “கார்டை” வாங்கிக் கொண்டு போய்க்கொண்டே இருப்போம்.

யாதும் ஊரே . . . செவ்வாயுள்ளோரும் கேளிர் !

என்ன வளம் இல்லை இத்திருநாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி கிரகத்தில் ? என்று பத்திரிக்கைகள் மாணவர்களைத் தாக்கின. இளைஞர்களை இளித்த வாயர்கள் என்று கேலி செய்தன. அப்பவும், செவ்வாய் M1 விசாவுடன், மனைவி குழந்தைகளுடன், பெட்டி படுக்கையுடன், பெட்டியில் பருப்பு பொடி, அப்பளம், வடாம் சகிதம் செவ்வாய் காலனிக்கு இரண்டாவது ஃபிளைட்டில் படையெடுக்க நீலாங்கரையிலிருந்து, அமைந்தகரை வரை விசா கியூ நீளம் நீண்டிருந்தது.

ஆமா, முதல் ஃபிளைட்டில் யார் போனார்கள் ? “ ?ி ! ?ி ! ஏமாளியான அமெரிக்கா காரன் போய் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டா நமக்கு கஷ்டம் இருக்காதுண்ணா !”

அமெரிக்கர்கள் முந்திரிக் கொட்டை போன்று மற்றவர்களின் வியர்வை, மற்றும் பணத்தைச் செலவழித்துப மற்றவர்களை வைத்துப் பாதை போட்டுக் கொண்டு, செளக்யமாக தான் வாழ்வதற்குச் சகல விதமானத் தேவைகளையும் பண்ணிக் கொண்டு, ரோடில் கார்களை உலாவ விட்டு, செவ்வாயில் தனியே சிறிது காலம் வாழ்ந்து வந்தனர். ஆனால் போகப் போக வசதிகளின் செலவைக் குறைக்க மற்றவர்களின் உதவி அதிகம் தேவைப்பட்டது. காலனிக்கு போய் முதற் கட்டமாக மெக்ஸிக்கோ, லாத்தீன் வேலைக்காரர்களை வைத்து அமெரிக்கா வேலை வாங்கி அனைத்து வசதிகளும் கட்டிடங்களுக்குப் பண்ணி அவற்றைக் கட்டியது. பிறகு டிரில் செய்து, ரோடு போட்டு, கான்கிரீட் கட்டிடங்கள் எழுப்பி, தார் சாலைகள் போட்டு ஜெர்மன், ஜப்பான் காரர்களைத் துணைக்கு அழைத்து நிர்வாகித்தது. ஜப்பான்காரர்கள் செவ்வாய் கிரகக்திற்குத் தக்கதான “செவ்வோட்டோ” கார் தயாரித்து அதிலிருந்து கொட்டும் தண்ணீரை (அது ை ?பிரிட் மாடல் சார் !) குடிதண்ணீராகவும் விற்கச் செய்வார்கள். இந்தியர்கள் அனைவரும் அனைத்தையும் கணக்குப் பண்ணி, சரியாகச் சொல்ல உதவியாயிருந்தனர். பல்வேறு கம்ப்யூட்டர் புரோகிராம்கள் எழுதக் கடைசியாகத் தமிழர்களைக் கூப்பிட்டனர்.

புரோகிராம்காரர்களுக்கு முன்னாலே நாயர் டா கடை வைப்பதற்கும், உடுப்பிக்காரன் இட்லி வடை சாப்பிடக் கடையும், வைதீகக் காரியம் பண்ண மாம்பலத்து சாஸ்திரிகளையும் முன்னே அனுப்பியாயிற்று.

பிறகு என்ன, சென்னையில் எவ்வளவு தான் குப்பை கொட்டுவது ? செவ்வாயிலும் போய் கொஞ்சம் குப்பை கொட்டுவோமே ?. அள்ளுவதற்கு மற்றவர்கள் இருக்கின்றாரே ! “அள்ளு அள்ளு ! தள்ளு ! தள்ளு ! என்று பாடத் தோன்றுகிறது.

இவ்வளவு தூரம் வந்து கை காசு கொடுத்து கூப்பிடறப்போ செவ்வனே செவ்வாயில் வேலை பார்க்க நிறைவேற்றக் கசக்கிறதா என்ன ?. துட்டு குடுக்கிறான் சார் ! எங்க தாத்தா அப்படித் தான் துபாய் சென்றார். அங்கு 55 டிகிரி வெயில் என்று எங்களுக்குக் கதை சொல்லியிருக்கின்றார். அப்படியும் துபாய் துறைமுகத்தில் வேலை பார்த்து விட்டு, கராமாவில் (துபாயில் ஒரு இடம்) மசாலா தோசைச் சாப்பிட்டதைக் கதையாகச் சொல்வார்.

செவ்வாய் வெறும் 555 டிகிரி தானாமே ?. ஒரு 555 பற்ற வைக்கிற மாதிரி தான் இருக்கும்! அப்புறம் ஒன்று ! இது நாமெல்லாம் பெருமை அடித்துக் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தைகள் செவ்வாயிலே வினோதமாக வாயை மூடி பேசுகிறதாமே ! நமக்கு அப்படிக் குழந்தைகள் பிறந்து பேசினால் சந்தோஷமாக இருக்கும்.

தமிழகத்தில் வந்து செவ்வாயைத் திறக்காமல் செவ்வாய் மொழி பேசினால் ஒரு தனி மவுசு தான். பெண்கள் கூட அப்ப தான் நம்ம கிட்டே பேசுவார்களாமே ?. ஒரு காலத்தில் இப்படித் தான் ஆங்கிலம் பேசி பிறகு அதுவே தமிழாக மாறி உருவெடுத்து இப்போது வேறு “செம்மொழி” செவ்வாயிலிருந்து இறக்குமதி ஆகிவிட்டது.

தற்காலம், பொற்காலம், எக்காலத்திலும் எங்கள் தமிழ் உருவெடுத்து, மறுவி, கொடி போல் அசைந்து வளைந்து வளரும். தமிழ் சினிமாக்களைப் பாருங்கள் பெண்கள் மட்டும் செவ்வாய் மொழி பேசி ஸ்டைலாக நடந்து போகிறார்கள். ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கூட நாகரிகத்தில் அப்படித் தான் “செவ்வாய்” மொழி பேசிக் கொள்கிறார்களாம். செவ்வாய் மொழி பேச முடியாமல் கிராமத்து இளைஞர்கள் வெம்புகிறார்களாம். செவ்வாய் “ஸ்பீக்கிங் டியூஷன் சென்டர்கள்” பெருகியிருந்தன.

ஒரு உதாரணம். வாய் திறந்து பேசாத மொழியாதலால் . . .

ம்ம்ம்ம் (செவ்வாய் செம்மொழி பேசினேன் !).

ம்ம்ம்ம் ? ( புரிந்ததா ?).

சரி ! சாண்டில்யன் பாணியில் சொல்லிப் பார்ப்போம் !

இளைய பல்லவனின் கைகள் இளவரசியின் இடுப்பை அணைக்க . . .

“ம் ம் ம் ம் “

“என்ன ம் ம் ம் ம்” மையல் கொண்டு பேசினான்.

“ம் ம் ம் ம் “

“மேலும் ம் ம் ம் ம் மா ?”

அப்போது ஒரு காலணியொன்று புதரிலிருந்து “விர்”ரென்று எரியம்பு போன்று பறந்து பல்லவனின் கையைத் தட்டிவிட்டது.

“ம் ம் ம் மா !” அலறினாள் இளவரசி !

(தொடரும்)

கடைகளில் கூட “எக்ஸ்கியூஸ் மி” என்றால் யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்று இருப்பவர்கள் கூட “ம்ம்ம்ம் ம்” என்றால் விரைந்து “என்ன மேடம் , ம்ம்ம் ?” கால் தமிழ, கால் ஆங்கிலம், அரை செவ்வாய் மொழியில் பேச, ஆனந்த விகடன் பத்திரிக்கை கூட புதுத் தமிழில் ம்ம்ம்ம் கலந்த மொழியில் பத்திரிக்கை வெளியிட்டது.

மற்ற மொழிகள் சோறு போடுமா ?. ம்ம்ம்ம் சோறு போடுமா ? என்று விவாதித்து ம்ம்ம்ம் மை அனைவரும் அனைத்துப் பள்ளிகளிலும் தேர்ந்தெடுத்தனர்.

சென்னையில் வந்து செவ்வாய்க்கு காலையில் 7 மணிக்கு காபி கொடுத்து பிறகு வேலையை ஆரம்பித்து வைத்தால், இரவு 9 மணி வரை உழைத்து, பத்து மணிக்குச் செவ்வாய் கிரகத்து உடுப்பி ே ?ாட்டலில் தோசையைச் சாப்பிட்டுவிட்டு, 11 மணிக்குப் பூமி வெப் சைட்டிலிருந்து தமிழ் படத்தை ‘இலவசமாக டவுன்லோட் செய்து” இறக்கிப் பார்த்து காலையில் மீண்டும் வேலைக்குச் சுறு சுறுப்பாகத் தயாராவான், தமிழன்.

ஃபிளைட்டில் ஏற்றி மாதம் செலவு பண்ண $ம் கொடுத்தால் போதும், வந்து இறங்கிச் செவ்வனே செவ்வாயில் இறங்கிப் பணிகளை நிறைவேற்றத் தமிழனை நம்பலாம்.

அப்படித் தான் என்னைக் கூப்பிட்டார்கள். என் தாத்தா இப்படி தான் துபாய்க்குப் போன பின்பு, அமெரிக்காவிற்கு H1 சென்று வந்து விட்டு கடைசிக் காலத்தில் என் அப்பாவைக் கழுத்தறவு செய்தாராம். “இங்கு இது கிடைக்கும், அங்கு அது கிடைக்கும்” என்று அறுத்துத் தள்ளினாராம்.

சரி! நம்மையும் ஒருத்தன் எதுக்காவது கூப்பிடறானே என்று கிளம்பி விட்டேன். மறைமலையடி நகரில் சென்னைக்கு வெளியே கொல்லைப்புறம் கூப்பிட்டிருந்தாலும் போய்விட்டிருப்பேன். பிளைட்டில் டிக்கெட் போட்டுக் கூப்பிடறானே, மேலும் இலவசமாக சூடு பறக்கும் செவ்வாய் கிரகத்தில் குளிர்ச்சியான பீர் கிடைக்குமென்று “குமுதம்” நம்பகமான செய்தி கொடுத்திருந்தது.

அதனால் செவ்வாய் நமக்கு நல்லத் தீனி போடுமென்று பூமியை விட்டு, சென்னையிலிருந்து செவ்வாய் நோக்கி புறப்பட்டேன். மேல் மருவத்தூரில் சிவப்புச் சேலை கட்டிய அம்மன் சிலையும், சிவப்பு சேலை கட்டிய சாமியார்களையும், பெண்களையும், ஆண்களையும் பார்த்திருக்கின்றேன். அதற்கப்புறம் “வெளி உலகம்” இப்போது தான் பார்க்கப் போகிறேன். இதுவும் சிவப்புதானாமே ! அம்மன் காப்பாற்றுவாள் என்று நம்பி சிவப்புக் குங்குமம் இட்டு வேண்டிக்கொண்டு கிளம்பினேன்.

மாம்பலத்தில் ஒரு ஃபிளாட் வந்திருக்காம்! விலை 60 லட்சமாம் ! அம்மா சொன்னாள். ரூ 40 லட்சம் வெள்ளை. ரூ 20 லட்சம் கறுப்பு. வெள்ளைக் கறுப்பு என்றால் அப்போது தான் முதன் முதலாகத் தெரியும். ஒரு வேளை சிவப்பு, நீலம் என்று செவ்வாயில் பேசலாம். செவ்வாயில் இறங்குவதற்கு முன் வீட்டை வாங்கியாச்சு ! கடனை அடைக்க போகத் தான் ஆக வேண்டுமென்ற நிலைக்குத் தள்ளப் பட்டேன்.

இந்தியன் என்றால் வெள்ளை என்று வெள்ளை மனதுடன் நினைத்திருந்தேன். நாம் வெள்ளை இல்லை என்று விமானத்தில் கண்ணாடி பார்த்த பிறகல்லவா தெரிந்தது ?.

செவ்வாயில் வெயில் என்னை மாநிறமாக வறுத்தெடுத்து விட்டால் என்ன செய்ய ?.

பூமியின் ஆண்டவனைப் போல செவ்வாயிலும் அவனுக்கு தூய “வெள்ளை” மனம் .. அடடா ஆண்டவனும் வெள்ளையா ? தூய வெண்பட்டாடை போன்ற இதயம் படைத்தவன். . செவ்வாயிலாவது வெள்ளை, கறுப்பு என்று நிற வேற்றுமை நீங்கிய சமுதாயம் என்பதால் அங்கு ஆண்டவன் “நீல” மனம் படைத்தவனாயிருப்பான். கண்ணனை “நீல மேகக் கண்ணா வாடா” என்று தானே வணங்குகின்றோம் ?

வெள்ளைப் பணிமகள்கள் வேண்டா வெறுப்பாக என்னை செவ்வாய் கிரகத்திற்கு “சோனியா ஏர்வேஸில்” ஏற்றினாள். வெளிப்படையாக “ ?லோ” என்றாள்.

வெள்ளைக்காரி நினைத்துக் கொண்டாள் “ ஏன் இவர் இப்படி சிரிக்காமல் “உம்” மென்று இருக்கிறார் ?”. என் கஷ்டம் எனக்குத் தான் தெரியும். கோடம்பாக்கத்தில் இடர்பாடுகளுக்கிடையே கஷ்டப்பட்டு 500 சதுர அடி வீட்டை ரூ. 40 லட்சத்திற்குப் பதிவு செய்து விட்டு, அம்மாவை, வயதான அப்பாவை மாம்பலத்தில் விட்டு விட்டு வந்தேன்.

சென்னை டிராபிக் ஜாமில் தட்டுத் தடுமாறி விமான நிலையத்திற்கு வந்தால், அங்கே ஆர்ப்பாட்டம் ! செவ்வாய்க்கு விமானம் பறந்தால் “செவ்வாய்” தோஷமாம். செவ்வாய் தோஷம் சென்னைக்குப் பிடிக்காமல் இருக்க “சோனியாவை” தடை செய் என்று ஒரு மத வாதிக் கட்சியினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். நான் தான் அன்று நவக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்து அன்று காலை கபாலீஸ்வரர் கோவிலில் செவ்வாய்க்கு விசேஷ பூஜை செய்திருந்தேனே ?. அம்மா கூட செவ்வாழையைக் குழைத்து நெற்றியிலிட்டு, சந்தனக் காப்பு போட்டு என்னை அனுப்பியிருந்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “செவ்வாய்” காலடி வைத்தால் நம்ம சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம் பறந்து விடுமென்று நம்பிக்கையோடு பயணத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருந்தேன்.

“செவ்வாயிலே சனிக் கிழமை தோறும் எண்ணைத் தேய்த்துக்கொள்ளப்பா . . . “ என்றாள் அம்மா ! “சென்னையைக் காட்டிலும் ை ?ட்ரஜன் ஆக்ஸிஜன் கலந்து நீரை அதிகம் உற்பத்தி பண்ணுகின்றாராமே ! நல்லாத் தேய்த்துக் குளி ! முக்யமாகத் தலையில் தண்ணீர் படக் குளி! “ என்று அப்பா பொரிந்தார். அவருக்கு சிறு வயது முதலே மஞ்சளான நில அடித் தண்ணீரிலும், சோப்பு நுரை வராதக் குளியல்களும் பயமுறுத்தியிருக்க வேண்டும். என் பெட்டியில் சிறிய பெட்டியில் பிள்ளையார் மற்றும் ஒரு முருகன் படமும் இருந்தது. “யாமிருக்க பயம் ஏன் ?” என்று முருகப் பெருமனார் சாந்தியளித்தார். செவ்வாயில் இன்னும் முருகனுக்குபக் கோவில் கட்டவில்லை. நான் தான் பெரிய ஆள் ஆன பிறகு காட்ட வேண்டும்!

முதலில் திருப்பதி பாலாஜி கோவில் கட்டினார்களாம். பிறகு தெலுங்கர்களுடன் சண்டை போட்டுவிட்டு பின்னால் முருகன் கோவில் கட்ட வேண்டியிருக்கும்.. ஒருத்தருக்கு செவ்வாய் கிரகம் போகும் போது விமானத்தில் பெட்டிக்கு 60 கிலோ வரை கொண்டு போகலாமாம். அதனால் அம்மா முண்டு முடுக்கு வரைப் பெட்டியில் அடைத்திருந்தாள். அப்பா, மேற்கு மாம்பலத்தில் கிடைக்கும் ஒரு விதமான சகல விதமான எல்க்ட்ரானிக் பூட்டுக்களையும் திறக்கத் தக்க சாவியினை வாங்கிக் கொடுத்தார். “சும்மா வச்சுக்குப்பா! உதவும் !” என்றார். திறக்காத கதவும் திறக்கும் என்று வாண்டுமாமா எழுதும் மந்திரவாதிக் கதை போன்று இருந்தது. பெட்டியை அம்மா அடைத்த பின்பு எப்படி பளுத் தூக்கிப் பார்ப்பது ? அருகே ஒரு விறகுக் கடை இருந்ததால், எடை தூக்கி நிறுத்திப் பார்த்து 59.99 கிலோ அடைத்திருப்பது புரிந்தது.

தீவிரவாதிகள் தொல்லைகள் அதிகம் இருந்ததால் (மாம்பலம் கொசுக்களைச் சொல்லவில்லை !), சுலபமாகக் கழற்றி போடும் காலணிகளைப் (பூட்ஸ் தான் சார் ! சும்மா உங்க தமிழைப் பரிசோதித்தேன் !) போட்டுக் கொண்டு சென்னை விமானநிலையத்திற்குப் போனேன். கலைஞர் கருணாநிதி என்ற பெயரிடப்பட்ட டெர்மினலில் இறங்கி ஜெயலலிதா என்று பெயரிடப்பட்ட எலிவேட்டரில் ஏறி, சிதம்பரம் என்று பெயரிடப்பட்ட வாயிலில் உள்ளே நுழைந்து, செக்யூரிட்டி “செக்” கிற்குப் போனேன். அம்மாவின் கை முறுக்கு காற்று புகாத டப்பாவில் அடைக்கப் பெற்று பெட்டியில் நெய் வாசனையுடன் இருந்தது. இந்தப் பாழாப் போன மோப்ப நாய் “செக்யூரிட்டி செக்” கில் காண்பித்துக் கொடுத்து விட்டது. முறுக்கு பறிபோன சோகத்தில் “அன்னை சோனியா ஏர்வேஸில்” செவ்வாய் கிரகத்திற்குப் புறப்படத் தயாரானேன்.

விமானத்தின் உள்ளே அமர்ந்தேன். விண்வெளியில் தலை சுற்றி மிதக்காமல் இருக்க சுற்றிலும் கவசம் சாத்தப்பட்டு போர் வீரனைப் போல இருந்தேன். உள்ளே குளிர் காற்று வீசியது. பணிப்பெண் புறப்பட 20 நிமிடங்கள் இருக்கும் போது வந்து ஒரு தட்டில் இட்லியும், சாம்பாரும் வைத்தாள். இன்னும் 3000 வருடங்கள் நிலைத்து நிற்கும் இட்லியைச் சிலாகித்தேன். நன்றாகச் சாப்பிட்டு விட்டு தஞ்சாவூர் டிகிரி காப்பி சாப்பிட்டேன். இனிமேல் எப்போது கிடைக்குமோ ?. போய் சேர ஒரு மாதம் ஆகும் என்று கால அட்டவணையில் போட்டிருந்தது.

“எங்கு போகிறீர்கள் ?” என்று செவ்வாய் கிரகத்திற்குப் போகும் பக்கத்து சீட் மனிதரைக் கேட்டேன். அங்கு கபிலன் பள்ளத்திற்குப் போவதாய் சொன்னார். கபிலன் என்றத் தமிழ விஞ்ஞானி செவ்வாயில் நீர் கிடைக்கும் பள்ளத்தாக்கைக் கண்டுபிடிக்க அவர் நினைவாக அமெரிக்கா அவருக்குப் பெயரிட்டிருந்தது.

100 ஆண்டுகளாகக் கபிலன் அமெரிக்கராக இருந்தாலும் “நம்ம ஆளுங்க !” என்று பக்கத்து சீட் மகிழ்ந்து கொண்டது. பள்ளத்தில் குழி வெட்டி வீட்டுத் தூண்கள் கட்டுவதில் பக்கத்து சீட்காரர் கலைத் திறமைவாய்ந்தவராம். ராமேஸ்வரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் தூண்களைப் பராமரிப்பவராம். அவரை குவைத்தில் உள்ள ஒரு ஏஜென்ட் பிடித்து ஈராக் அனுப்ப, அங்கிருந்த அமெரிக்கப் பட்டாளம் செவ்வாயிலுள்ள கபிலன் பள்ளத்தில் தூண்களை எழுப்பப் பயன்படுத்திக் கொண்டது. ஏழ்மையில் வாழும் அவரது குடும்பத்தினைக் காப்பாற்ற அவரும் செவ்வாய் போகத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்.

இரண்டு வருடங்களுக்கு முன் மனைவியைப் பார்த்த பிறகு போன வாரம் தான் லீவிற்கு குவைத்திலிருந்து வந்தாராம். மனைவியுடன் இல்வாழ்க்கையை ஒரு வாரம் அனுபவித்து விட்டு அவளுடன் இருந்த பிறகு மீண்டும் அவருக்குச் செவ்வாய் கிரகம் பயணம். அவருக்கு அமெரிக்க செவ்வாய் குடியரசு ஆறு வருடம் வேலை பார்க்க விசா கொடுத்திருந்தது. ஆறு வருடம் கழித்து தான் வருவாராம்.

குழந்தை பிறந்தால் வரும்போது ஐந்து வயது இருக்கும் என்று ஜோதிடம் கூறினார். அவர் மனைவியை நினைத்துக் கவலை கொண்டேன். ஆறு வருடத்திற்கு ஒரு முறை என்றால் மொத்தம் அறுபது வருடங்களில் பத்து தடவை மட்டும் . . . என்று இல்லறக் கணக்கு போட . . . எண்ணங்கள் சிறகடிக்கவே . . . (இதிலேயெல்லாம் மனது சிறகடிக்கும் . . . மற்ற நேரத்தில் ‘அடை ‘ காத்து கோழி போன்று உட்கார்ந்து சோம்பேறியாக இருக்கும் ).

செவ்வாய் போன பிறகு கிடைக்க ஆளில்லாமல் தலையில் ஒரு கவசத்தைப் பொருத்தினால் அனைத்து சிற்றின்பமும் அனுபவிக்கலாம் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். இத்துடன் பேரின்பமும் பெரியவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அனைத்துக் கடவுள்களையும் கவசத்தின் மூலம் கண்கள் மூட, தரிசனம் செய்யலாம். பிறகு நிம்மாதியாகப் போய் சேரலாம்.

“உன்னைக் கடைசியாகக் கொஞ்சம் பார்த்து விட்டேனென்றால் கண்களை மூடிவிட்டு போய்விடுவேன் . . . “ ஆயிரம் வருடங்கள் பேசி வந்தாலும், செவ்வாயில் தலைக் கவசம் வைத்து விட்டு கடைசியில் யாரை வேண்டுமென்றாலும் பார்த்துப் பரலோகம் போகலாம் ! செவ்வாய்க்கும் மேலேப் பரலோகம் இருக்கிறது தெரியுமா ?

பாலாஜி பார்க்க (திருப்பதிக் கடவுள் சார் !) கொஞ்சம் செலவாகும். பாற்கடல் ( மில்கி வே காலக்ஸி) பின்னனியுடன் ரெ ?மான் (இது வேறு ரெ ?மான் சார்!) இசையுடன் ரகுமானை தரிசிக்கலாம். பத்து தடவை செலவு செய்து இது மாதிரி பார்த்தால்,

நாராயணன் போன்று ஒருவர் வேடமிட்டு “நரனே நீ வேண்டுவது கேள்!” என்று கேட்பார்.

“மீண்டும் பிறவா வரம் வேண்டும்” என்று கேட்டால் தலையில் இருக்கும் கவசம் வெடித்து 1 வினாடியில் சாம்பல். இதெல்லாம் கொஞ்சம் “ஓவராக” இருந்தால்,

இப்போதைக்கு, சாப்பாடைப் பற்றி பேசுவோம் ! எதுக்கு சாம்பல், பேரின்பம் என்று நினைக்க வேண்டும் ? மற்ற சாமான்யர்களைப் போன்று அடுத்த வேளைச் சாப்பாட்டுக் கனவுகளோடு ஆழ்ந்தேன்.

2-3 நாட்கள் எங்கு தங்கலாம், என்ன சாப்பிடலாம் என்று தமிழ் குடிமகன் கவலைகளுடன் இருந்தோம். செவ்வாய் COOUM நதிக்கரையோரம் கெயிட்டி என்ற தியேட்டரில் “பலான மலையாளப் படங்கள்” காண்பிக்கப்படுவதாகப் குவைத் காரர் தெரிவித்தார். குவைத்தில் காலம் காலமாகக் காய்ந்திருப்பார்கள் போல. மற்றத் தமிழ் சினிமா படங்கள், செவ்வாயில் “எவெரெஸ்ட்” என்ற தியேட்டரில் காண்பிப்பதாகச் சொன்னார் குவைத் காரர். செவ்வாயில் தங்கமும் பாளம் பாளமாகக் கபிலன் பள்ளத்தாக்கில் கிடைக்கும் என்றார். “வரும்போது தங்க பிஸ்கட் வாங்கி வரலாம் சார் !திநகர் லலிதா ஜுவல்லரியில் கிராமுக்கு $50 போகும்” என்றும் சொன்னார். குவைத்தில் வாங்கிய சென்ட்டோட அவர் உடம்பு “கமகம” க்க நான் மாம்பலத்தின் கசங்கிய மலர் போன்று மூக்குப்பொடி வாசனை வீசினேன். குவைத் காரர் போன்று செவ்வாயில் சீனத்துச் செம்பட்டில் ஒரு சட்டை வாங்கிக் கொண்டு, தங்கப் பாளாங்களுக்கு வரி கட்டு சென்னைக்குத் திரும்பி வருவாதாய் கனவு கண்டேன்.

“சோனியா ஏர்வேஸில்” போரடித்தால் பார்க்க 1000 தமிழ் படங்கள் உள்ளடங்கிய டிவிடி பெட்டி அனைவருக்கும் ஒன்று இலவசமாக உடைக் கவசத்திற்குள் சொருகிவிட்டிருந்தது. போரடித்ததால் சேனல்களைத் திருப்பினேன். 1950லிருந்து 2080 வரை வந்தத் தமிழ்படங்கள் பல இருந்தது. அடிமைப் பெண் படம் கூட இருந்தது. பாஷா இருந்தது. கஜினி இருந்தது. சிவாஜி இருந்தது. ?ிந்தி இருந்தது. மலையாளம் இருந்தது. தெலுங்கு இருந்தது. ஆங்கிலம் கொஞ்சம் இருந்தது.

தமிழ், தெலுங்கு படங்களில் ஓடி ஆடி பாடிக்கொண்டிருந்தனர். தெலுங்கு ?ீரோ சிரஞ்சீவி கிருஷ்ணா ஒரு ?ிந்தி நடிகையின் ஒல்லி இடுப்பைப் பிடித்துக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தார். சிரஞ்சீவி, என்.டி.ராமாராவின் மகள் வயிற்றுப் பேரனாயிற்றே ?. சரி ! பாடல்கள் கேக்கலாம் என்று பார்த்தால் உலகத்து அனைத்து மொழிகளின் பாட்டுக்களும் இருந்தன. லதீன் சல்சா பாட்டுக்கள், சென்னை கானா பாட்டு, ஜாஸ் சங்கீதம், சைனாவின் புல்லாங்குழலிசை, புரியாத கர்நாடக சங்கீதம் (அப்ப கூடவா புரியலை ! ஜடம் !), தலைyai ஆடவைக்கும் ?ிந்துஸ்தானி , தாலாட்டும் கிராமியப் பாடல்கள் என்று கலக்கியிருந்தனர். செவ்வாயில் போய் இணைய தளத்தில் எனக்குப் பிடித்த அனைத்துப் பாடல்களையும் இறக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். செவ்வாய்க்கு இன்னும் பூமியின் சில சட்ட திட்டங்கள் வரவில்லை. ஆதலால் இலவசமாக இறக்குமதி செய்து கொள்ளலாம்.

நன்கு தூக்கம் வரவே கவசத்தைக் கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன். சோனியா ஏர்வேஸ் “ஜிவ்வென்று” பூமியை விட்டு வெகு தூரம் வந்திருந்தது. மிதக்கும் உணர்வுடன் காதில் மெல்லிய இசையுடன் செவ்வாய் தேசத்தில் புதிய காதலியைப் பார்க்கும் ஆர்வத்தில் கனவுகள் கண்டேண். “அங்கே யாரையும் தேடிக்க வேண்டாம். அந்தச் செவ்வாய் கலாச்சாரம் நமக்கு ஒற்றுக் கொள்ளாது. நீ திரும்பி இரண்டு ஆண்டுகளில் மாம்பலம் வந்து திருமண மண்டபத்து தண்ணீரைக் குடித்து ே ?ாமப் புகையில் (காதலால்) கண்கள் கசிந்து, எரிய மூன்று நாள் திருமணம் தான் நடக்கணும்” என்று அம்மா கட்டளையே போட்டாள். அதற்குப் பயந்து செவ்வாய் கிரகத்தில் எனக்கு இரண்டு கொம்புள்ள காதலி கிடைப்பதாகக் கனவுகள் கண்டேன் . . .

“எனக்குத் தெரிந்த பெண் மதுரையில் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். கிளியாட்டம் இருப்பாள் !” என்று எனக்கு அம்மா கற்பனை மூட்டினாள். கிளியுடன் செவ்வாயில் கற்பனையாட்டம் போட வேண்டியது தான். கிளி பச்சையாகத் தானே இருக்கும். ! @ @ !

செவ்வாயில் மரம் இருக்குமோ ?.

தமிழ் சினிமா, டூயட் பாடல்களை மட்டும் டிவியில் காண்பித்து இருநூறு வருடங்களாகக் படம் காட்டி என்னை போன்றவர்களை மண்டுவாக மாற்றி விட்டிருந்ததால், கிளியின் உதடுகள் அருகே உதடுகளைக் கொண்டு வரும்போது கனவிலும் பூச்செண்டுகள் வந்து மறைத்தது.

“அங்கே இங்கே கண்ணை அலையவிடாதே ! உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே “ என்று அம்மா புறப்படும் போது அறிவுரை சொன்னாள். “வரும்போது மங்கோலியப் பெண்ணோ, சிலி நாட்டுப் பெண்ணையோக் கூட்டிக் கொண்டு வந்தால் என்னை உயிரை நீ பார்க்க மாட்டாய் “ என்று பயமுறுத்தியிருந்தாள். “அம்மா, நான் செவ்வாய்க்குப் போறேன். தென் அமெரிக்காவிற்கு அல்ல. சீனாவுக்கு அல்ல. செவ்வாயில் வெப்பம் அதிகம். பெண் ரோபோக்கள் தான் இருக்கும்” என்று பயத்தை தெளிவித்து வேறு பயத்தை உண்டாக்கினேன்.

கலவி, திருமணம், ஆண்-ஆண், ஆண்-பெண், ஆண்- குதிரை, ஆண்-பன்றி என்று பல்வேறு உறவுகளைத் தாண்டி, சிலபலக் கலவைகளை, கலவிகளைத் தாண்டி மற்ற நாடுகள் அப்போது முன்னேறிக் கொண்டிருந்தனர். என்ன முன்னேற்றம் !

“செவ்வாய் நாட்டு அதிபர் தேர்தலில் கூட ஆண்-செல்லப் பிராணிகள், பெண்-செல்லப் பிராணிகள் சேர்க்கையை நியாயப்படுத்தி ஒரு சாராரும், திருமணம் என்றால் ஆண்-பெண் என்று ஒரு சாராரும் விவாதிப்பது சுவாரசியமாக இருக்கின்றது” என்று என் நண்பன் இ-மெயிலில் எழுதியிருந்தான்.

என் அம்மாவோ கிளி, கோலமயில் என்கின்றாள். குழந்தைகளைச் செயற்கைமுறையில் கிளினிக்கில் பெற்றுக் கொண்டு, பின்பு பணம் கட்டி ரசீது வாங்கி, வரி செலுத்தி நற்குடிமகன்களாய் மற்ற நாட்டு மக்கள் எல்லாம் சுதந்திரமாக வாழ, என்னை மாதிரி அம்மாவிடம் கேக்கும் பையன்களும் சென்னையில் இருந்தனர். இதிலிருந்து தப்பித்து அப்பாடி என்று ஒரு வழியாகச் செவ்வாய் புறப்பட்டோமென்று மனம் துள்ளியது.

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்!

சிரிக்குது எனைப் பார்த்து . . . பாடல் காதில் ஒலிக்க . . .

கி.மு. 2000 முன்பு இயற்றப்பட்டத் தமிழ் பாட்டு ….

தூரத்தே இளஞ்சிவப்பில் தெரிந்த செவ்வாய் பந்துருண்டை தன் பவள வாய் திறந்து என்னைப் பார்த்து இளிக்க ஆரம்பித்தது.

செவ்வாய் நாறாமல் இருந்தால் சரி ! போய் பார்ப்போம் !

( செவ்வாயில் வளரும் !)

kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணா வெங்கட்ராம்

கிருஷ்ணா வெங்கட்ராம்