ஆசாரகீனனின் ஏக்கம் தீர்ந்ததென்றால்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

அறுவைவிந்தன் விடாகண்டன்


இடதுசாரிகள் மதச்சார்பற்ற மீடியாக்கள் போன்றவை வான் கோவின் மரணத்தை மூலை செய்தியாகவும் அலட்சியப்படுத்துவதாகவும் ஆத்திரம் கலந்த ஏக்கத்தை ஆசாரகீனனின் கட்டுரை தெரிவித்திருந்தது. நமது இடதுசாரிகள், இன்னபிற மதச்சார்பற்ற வகையறாக்கள் மனிதரின் ஆதங்கத்தை தீர்க்க முன்வரும் பட்சத்தில் நிலைமை என்னவாக இருக்கும் என கற்பனை செய்தேன். இது வெறும் கற்பனை – படைப்புவாதம் போல உண்மை கலப்பில்லாத கற்பனை மட்டுமே – என மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். இதனால் யாருடைய மெல்லிய மனமாவது புண்பட்டு செப்டிக் ஆகவோ சீழடையவோ செய்தால் அதற்காக மிகத்தாழ்மையுடன் என்னை மன்னிக்கும் படி வேண்டிக்கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன்: உயிரினங்கள் ஆண்டவனால் படைக்கப்பட்டன என்பது எவ்வளவு உண்மை கலப்பற்ற கற்பனையோ அதே போல கீழ்கண்ட கற்பனைகளும் கற்பனை மட்டுமே. ஆனால் ஒரு வித்தியாசம்: ஆண்டவன் படைத்தார் என்பது என்றும் உண்மையாக முடியாது. ஆனால் நாளை மற்றொரு படைப்பாளி அல்லது சிந்தனாவாதி ஜிகாதிகளால் கொல்லப்பட்டால், கீழ் கூறிய எழுத்துக்களை ஒருவேளை உண்மையாகவே பத்திரிகைகளில் சந்திக்க நேரிடலாம். எனவே ஆசாரகீனனின் ஏக்கம் கலந்த ஆத்திரம் அணையாமலே இருக்கட்டும்.

வான் கோ சாவுக்கு பத்திரிகை தலையங்கம்

(Who is the real culprit எனும் தலைப்பில் எழுதப்பட்டது)

It is imperative that every left thinking person should know the implications of this accident dubbed as murder by some sections of the media. Van Gogh provoked a large number of Muslims with his unauthentic and one-sided film ‘Submission ‘. He purposefully ignored the fraternal calls by Islamic friends who non-violently reminded him that they might have to terminate his biological activities. The question why he ignored such pleas from Islamic brotherhood begs answers. Care should be taken by responsible secular media to guide people in perceiving in the correct way this alleged murder by alleged Islamic so-called militants. It should not escape our attention that the fascist anti-democratic Indian right wing represented by Sangh Parivar and BJP may use this murder to kindle anti-minority feelings in India. All progressive elements should join hands to condemn BJP in its dastardly effort to spread anti minority venom using this accident dubbed as murder.

வான் கோ சாவுக்கு கொலைகாரன் மட்டுமே காரணமா ?

வான் கோ என்பவரின் சாவு ஒரு தனிமனிதன் எடுத்த தனி திரைப்படத்திற்காக செய்யப்பட்ட ஒரு தனிப்பட்ட கொலை என்று காண முடியாது. அது வரலாற்றின் பாதையில் முன்னேற்ற சக்திகள் பாசிச அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ஓரணியில் அணி திரள்கையில் அதற்கு இடைஞ்சலாக இருக்க வேண்டும் என்பதற்காக IMF மற்றும் அமெரிக்க CIA ஆகியவற்றால் தூண்டப்பட்டு தடம் புரண்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கே எதிர்ப்பு குரல் கொடுத்தமையால் ஏற்பட்ட எதிர்பாராத இழப்புதான் வான் கோவின் மரணம். எந்த மரணமும் துன்பம் தரக்கூடியது என்பதுதான் உண்மை. எனவேதான் எந்த ஒரு செயலும் வரலாற்று சக்திகளின் இயக்கத்தின் வெளிப்பாடு எனக் கூறும் மார்க்சிய ஞாந ஒளியில் இம்மரணத்தின் காரணிகள் இஸ்லாம் அல்லது ஒரு தனிநபர் அல்ல மாறாக ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஏற்பட்டுவிட்ட ஒரு சோக நிகழ்வு. இதன் உண்மை காரணிகள் வான் கோவின் பின்னால் இருக்கலாம் என அவதானிக்கப்பட கூடிய சில ஏகாதிபத்திய சக்திகளும் அவர்கள் கையில் வான் கோ ஒரு பொம்மலாட்ட கருவியாக மாறிவிட்டதுமே.

[ திரிதாம்கிட பத்திரிகையில் ]

வான்கோ மரணம் குறித்து விவரணப்பட தயாரிப்பாளர்

புகழ் பெற்ற விவரணப்பட தயாரிப்பாளர் பட்வர்த்தனிடம் இன்று வான் கோ கொலை தொடர்பாக பேட்டி காணப்பட்டது.

கேள்வி: ஒரு விவரணப்படத் தயாரிப்பாளரான வான் கோ கொல்லப்பட்டது தொடர்பாக தாங்கள் என்ன கருதுகிறீர்கள்

பதில்: (சிறிது நேரம் மோவாயை சொறிந்த பிறகு) இது கொலை என்பதை விட விபத்து என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். ஒரு வகுப்புவாத பாசிஸ்ட்தான் இதை கொலை என்று கூறுவான். (சிறிது உணர்ச்சி வசப்பட்டு) ஏன் இண்டியாவிலே என்ன வாழ்கிறதாம் ? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு விஷயத்தையும் சிரமப்பட்டு திரித்து படம் எடுக்கிறேன். என்னை எத்தனை நாள் காக்க வைச்சான் அந்த அனுபம் கேர். இதைவிடவா வான் கோ கொலையில சுதந்திரம் போயிடிச்சு ? உண்மையிலே அந்த நாட்டிலே பெயர் தெரியாத அந்த இளைஞனுக்கு கூட கொலை செய்ய சுதந்திரம் இருந்திருக்கு. ஆனா இங்கே… கஷ்டப்பட்டு எடிட் பண்ண டாக்குமெண்டரிய சென்சார் போர்ட் பாக்கணுங்கறா அப்போ எது சுதந்திரத்தின் வெளிப்பாடு எது பாசிசத்தின் வெளிப்பாடு ? குஞ்ஞாலி குட்டிக்கு ஒரு ஐஸ் க்ரீம் பார்லர் போகக் கூட சுதந்திரம் இல்லாத பாசிஸ நாடு இது.

கேள்வி: ஆனா சார், அயோத்தி பத்தின உங்க டாக்குமெண்ட்ரில பி.பி.லால், க்ரூவர், எஸ்.பி.குப்தா போன்ற அகழ்வாராய்ச்சியாளர்கள் வரலாற்றாசிரியர்களையெல்லாம் கண்டுக்காம one-sided ஆக இருக்கிறதா கேள்விபட்டோமே.

பதில்: ஆ…ஆர்.எஸ்.எஸ்காரன், ஆர்.எஸ்.எஸ்காரன் என்னை கொல்லபாக்கிறானே! கருத்து சுதந்திரமே இந்த நாட்டில இல்லை பாருங்கோ. இந்த வன்முறையாளனை தூக்கி உதைச்சு வெளியே தள்ளுங்கோ. வன்முறையாளன் என்ன கேள்வி கேக்கிறான் பாருங்கோ. என்னையே கேள்வி கேட்டுட்டான் .

மறுநாள் பத்திரிகை செய்தி: ‘வான் கோ கொலையை விட கொடுமை இந்தியாவில் படமெடுப்பவர்களுக்கு நடக்கிறது: பட்வர்த்தன் ‘ கீழே சிறுதலைப்பாக: ‘கூட்டத்தில் அமளி செய்ய ஆர்.எஸ்.எஸ் முயற்சி ‘

வான்கோ மரணம் குறித்து ராய் தமது வனப்பிரதேச ஆக்கிரமிப்பு மாளிகையிலிருந்து அளித்த கட்டுரை

( ‘Algebra and Calculus of an accident dubbed as murder ‘ எனும் கட்டுரையிலிருந்து, தமிழில் மொழி பெயர்ப்பு அ.ஏங்கல்ஸ், கலர்பிரிப்பான் பத்திரிகை ஆசிரியர்: இக்கட்டுரை World Forum for Justice, Peace and Human Rights of Jehadis and other fighters against US Imperialism, Zionism and Brahminical Tyranny (c/o World Council of Evangelical and Ecumenical Bodies) எனும் அமைப்பு அளித்த 13 இலட்சம் டாலர் விருதினை வாங்கும்போது வாசிக்க எழுதப்பட்ட கட்டுரை.)

இது மரணம் அல்ல விபத்துதான் என புகழ்பெற்ற விவரணப்படத்தயாரிப்பாளர் பட்வர்த்தன் கூறியுள்ள தத்துவார்த்த மற்றும் சமுதாய யதார்த்த பார்வையை மக்களிடம் கொண்டு செல்வது ஒவ்வொரு முற்போக்குவாதியினுடைய கடமை அல்லவா ? அதனை செய்ய என் உயிரையே பணயம் வைக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் அன்றைய தினம் ஐரோப்பா முழுவதும் நடந்த 7201 கொலைகளில் இந்த கொலை என்பதாக சொல்லப்படும் விபத்து மட்டும் ஏன் பிரபல ஊடகங்கள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது ? இதற்கான காரணத்தை இதன் பின் நிற்கும் ஏகாதிபத்திய சதியை நாம் ஆராய வேண்டும். இக்கேள்விக்கான விடை தொடும் புள்ளியில் விளிம்பு நிலை மக்களின் சமூகநீதிக்கான போராட்ட புள்ளியும் ஒன்றுகிறது. அராபியர்கள் மடையர்களுமல்ல ஐரோப்பியர்கள் மட்டுமே அறிவுஜீவிகளுமல்லர். ஆனால் அப்படி ஒரு சித்திரத்தை உருவாக்கும் தேவை அமெரிக்க புஷ்ஷுக்கும், இஸ்ரேலிய ஷரோனுக்கும் குஜராத்தின் மோடிக்கும் உள்ளது. எனவே விபத்துக்களை விபத்துக்களாக மட்டுமே பார்ப்போம். பொதுஜன ஊடகங்களை ஏகாதிபத்திய சதிவலைகளில் விழுந்துவிடாமல் பாதுகாப்போம். அவ்வாறு விழும் ஊடகங்களை கேரள லீக் சகோதரர்கள் தடுத்தாட் கொண்ட முறையில் தடுத்தாட்கொண்டு காப்பாற்றுவோம்.

பிரபல இடதுசாரி பின்நவீனத்துவ எழுத்தாளர்- திண்ணையில் எழுதிய ‘வான்கோ கொலையும் குச்சி ஐஸ் சூப்பிய சிறுவனும் ‘ எனும் கட்டுரையிலிருந்து

இது கொலை. சந்தேகமில்லை. ஒரு முறை ஊட்டியில் நான் சைத்தன்ய நிதியுடன் தெருவில் சென்று கொண்டிருந்த போது அவர் குச்சி ஐஸை சூப்பிக்கொண்டிருந்த ஒரு குழந்தையைக் காட்டி கூறினார், ‘இந்த குழந்தைக்குள் ஒரு பெரிய மனிதன் இருக்கிறான், அவன் நல்லவனா கெட்டவனா ? ‘ நான் அதை இப்போதே எப்படி கூற முடியும் என்றேன். அவர் புன்னகைத்தவாறே ‘நீ தவறு செய்கிறாய் ஜெயன். அதைக் கூற நான் யார் ? என்பதல்லவா உன் கேள்வியாக இருக்க வேண்டும்” என்றார். அச்சம்பவம் ஏனோ இப்போது ஆகப் பெரிய நினைவாக மனக்கண் முன் திரையாடுகிறது. வான் கோவை கொன்றவன் உள்ளேயும் ஒரு வான் கோ இருக்கக் கூடும். வான் கோ உள்ளேயும் ஒரு கொலைகாரன் இருக்கக் கூடும். இதற்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என சிந்தித்தேன். ராகுல் சங்கிருத்தியாயன் எழுதிய இஸ்லாமிய தத்துவ ஞானம் எனும் நூலை அந்த கொலை செய்த அப்பாவி இளைஞன் படித்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா ? அதேவேளையில் தொலைகாட்சியில் வெத்தலை குதப்பியபடி ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறும் இளைஞர்களை பார்த்தது எனக்கு ஞாபகம் வரத்தவறாமலில்லை. எனவே இது கொலைதான். இதைக் கண்டிக்க நாம் யார் ?

[திண்ணையில் அடுத்தவார கடிதம்: ‘மோக ஜெயனின் அபத்தம்: ‘இது கொலையாம் இஸ்லாமிய எதிர்ப்பு வெறியால் மனம் மயங்கி மோக ஜெயன் கூறுகிறார். ராகுல சங்கிருத்தியாயன் என்கிற காஃபீர் இஸ்லாமை குறித்து எழுதியதை ஈமான் உள்ள முஸ்லீம் படித்து திருமறையை தெரிந்து கொள்ள வேண்டுமாம். மதவெறி பிடித்த மோகஜெயனே நீரே திருந்தி உண்மையை ஏற்றுக்கொள்ளும். இல்லையேல் ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவீர் ஏனென்றால் இறைவன் கருணையுடையவன். ‘]

மனித புதல்வன் எழுதிய தலையங்கம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அணியில் இன்று இஸ்லாமியர்களும் நிற்கிறார்கள் என்பதனாலேயே அவர்களுக்கு நீதி கிடைக்காமல் போகும் ஒரு சமூக சூழல் உலகெங்கும் பரவியிருக்க பெரும் மனவியல் தூண்டல்களை வேண்டுமென்றே வான் கோ போன்றவர்கள் செய்யும் போது நீதி கிடைக்காத இஸ்லாமிய இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி விடுவது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. ஆனால் பாசிச சமுதாய அமைப்பை காலம் காலமாக பேணி வரும் நமது நாட்டிலிருக்கும் ஊடகங்களுக்கு இந்த நிகழ்வை கண்டிக்கும் அருகதை உண்டா என்றால் இல்லை என்பதுதான் எந்த நேர்மையான அறிவுஜீவி மற்றும் கவிஞனின் பதிலாக வரும்.

தமிழ் எழுத்தாளரும் தமிழகத்தின் மூத்த முற்போக்கு சிந்தனாவாதி

வான் கோவின் மரணம், மரணம் என்பதாலேயே வருத்தத்தை அளிப்பது. ஆனால் மரணம் என்பதாலேயே கண்டனத்துக்குரியதா என்பதுதான் கேள்வி. முற்போக்கு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது. சமசூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் காட்டிலும் எது கண்டனத்துக்குரியது ? அமெரிக்காவை விட சீரழிவான தேசம் எது ? சமகால தேசங்களிலேயே மிகவும் கொடுமைகளை செய்து அடுத்ததலைமுறையைக் கூட பாதித்திருப்பது அமெரிக்காதான். இந்நிலையில் இந்த ஏகாதிபத்தியத்தினை எதிர்ப்பவர்கள் அதிக போர்குணத்துடன் இருப்பது அதிசயமல்லவே. எனவேதான் இத்தகைய நிகழ்ச்சிகளை கொலை அல்லது குறிப்பிட்ட மதநம்பிக்கையால் ஏற்பட்ட செயல் என்கிற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல் முழுமையாக காண தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உதவியான தத்துவார்த்த உபகரணமாக மார்க்சியம் விளங்கக்கூடும். அதற்காக மார்க்சியம் குற்றம் அற்றதென்று கூறிடமுடியாது.

….பக்கங்கள் சிலவற்றிற்கு பிறகு ஒரு அறிவிப்பு:

‘தமிழ் எழுத்தாளரும் தமிழகத்தின் மூத்த முற்போக்கு சிந்தனாவாதி அடுத்த ஆறு மாதங்கள் அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு சான் டியாகோவில் நடைபெறும் ‘தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் படைப்பாளிகளுக்கு நிலவும் பாதுகாப்பற்ற பாசிச சூழல் ‘ எனும் தலைப்பில் நடக்கும் கலந்துரையாடலில் அனைவரும் கலந்து கொள்ளலாம். ‘

தனித்தன்மை கொண்ட நகைச்சுவை முத்திரையுடன் தமிழ் இலக்கிய உலகில் ஒளி பாய்ச்சி வரும் எழுத்தாளர் திண்ணை வார இதழில் ‘வான் கோவும் வார்த்தைகளும் ‘ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையிலிருந்து:

‘வார்த்தைகள். அதில்தான் எத்தனை வர்ண ஜாலங்கள். வான்கோ என்பவர் கொலை செய்யப்பட்டதாக கூறுகின்றனர் சிலர். மற்ற அனைவருக்குமோ அது விபத்து என்பது தெரிகிறது. வார்த்தை எதுவானால் என்ன என்றா சொல்லமுடியும். உள்ளத்திலிருந்து வெளிவரும் வார்த்தையன்றோ விபத்து என்பது. ஆனால் வான் கோவின் வாழ்க்கையைப் பார்த்தால் வார்த்தைகளின் பலம் நமக்கு தெரியும். Submission என்பது ஒரு வார்த்தை. அதுவே இஸ்லாமின் பொருளாகும் வார்த்தை. எனில் அதே வார்த்தையில் ஒரு படத்தை எடுத்தார் வான் கோ. அது தவறாக இருந்த காரணத்தால் அவர் ஒரு விபத்தால் இறக்க நேரிட்டது. ஒரு வார்த்தையை தவறாக பயன்படுத்தியதால் அவர் உயிரையே இழக்க நேரிட்டது. வார்த்தையின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்களல்லவா ? வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். குறிப்பாக ஈமான் இல்லாதவர்களே வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் அல்லது ஈமான் வரும் வரை மெளனமாக வாய் மூடி நாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருங்கள். இல்லையேல் தவறாக வார்த்தைகள் வரக்கூடும். ஏனெனில் ஈமான் உள்ளவர்கள் உங்களுக்கு தண்டனை அளிக்கவேண்டிய கசப்பான காரியத்தை செய்யும் சூழலுக்கு அவர்களை நீங்கள் தள்ளாமல் இருக்க வேண்டும். ‘

அடுத்த திண்ணை இதழில் ஒரு வாசகர் கடிதம்:

‘இவர்களிடமெல்லாம் நமது அமைதி மார்க்கத்தை நாம் விளக்கி கொண்டிருக்கத் தேவையில்லை. உங்கள் எழுத்துக்கள் உண்மையின் திரு விளக்கம். எல்லோரும் சிலரை போல ஏமாறாமல் இருக்க தயாரில்லை என்பதை நான் சில மாற்றுமத ஏமாந்த சோணகிரிகள் உங்கள் நூலை புகழ்ந்ததிலிருந்து தெரிந்து கொண்டேன்.

துவா மற்றும் சலாமுடன்

xxxx ‘

இடதுசாரிகளையும் இன்னபிற மதச்சார்பற்ற அறிவுஜீவிகளையும் மட்டுமே சொல்லிவிட்டு வலதுசாரிகளை விட்டுவிட்டால் எப்படி ? ஆசாரகீனனின் வார்த்தைகளில் வேறு பிரயோஜனமான வேலைகள் இல்லாமல் கிடைக்கிற ஒதுக்குபுற மைதானங்களில் சிலம்பம் சுழற்றிக்கொண்டு காக்கி கால்சட்டைகளில் திரியும் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரனின் விமர்சனத்தையும் கூட சேர்த்துவிடுவோமே.இடதுசாரி அறிவுஜீவி ஞானமொழிகளுக்கு நடுவே திருஷ்டிப்பொட்டாக

ஒரு ஹிந்து ‘பாசிஸ்ட்டின் ‘ அஞ்சலி:

வான் கோவின் மரணம் இஸ்லாமிய மேலாதிக்க மனோபாவத்தின் சகிப்புத்தன்மையின்மையை காட்டுகிறது. எல்லா ஆபிரகாமிய மதங்களும் இப்படித்தான். ஆபிரகாமிய மதங்கள் என்றால் மார்க்சியமும் அதில் அடக்கம். இத்தகைய கொலைகள் தடுக்கப்படவேண்டுமானால், மார்க்சியம் அழிய வேண்டும். மிஷிநரிகளை நாடுகடத்த வேண்டும். எல்லா மதரசாக்களிலும் பரிணாம அறிவியல் கட்டாய பாடமாக்கப்படவேண்டும். இந்த நடவடிக்கைகளை ஒத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து யாகியோனாமிட்டோஸே பல்கலைக்கழக பேராசிரியர் மிங்கோமோகினோ தனது நூலான ‘நம்முடைய அறிவியல் அறிதல்முறையில் சாங்கிய மற்றும் வேதாந்த ஞான மரபுகளின் பங்கு ‘ (Refer: The contribution of Sankya and Vedanta systems to our present scientific epistemology with special reference to metaphysical and ontological implications of Copenhagen Interpretation of Quantum Mechanics ‘, Minnoto University Press,NY, 1980 பக் 123-124) எனும் நூலில் கூறியிருப்பதை நாம் சிந்தித்தாக வேண்டும். ஆனால் ரவி ஸ்ரீநிவாஸ் இந்த உண்மையெல்லாம் மறைத்து விடுகிறார் என்பதை அவர் மறுக்க முடியுமா ? இதிலிருந்தே அவர் ஒரு ஸ்டாலினிஸ்ட் என்பதும் நான் மட்டும் தான் அறிவியலுக்காக திண்ணையில் குரல்கொடுக்கிறேன் என்பதும் தெரியவில்லையா ? வான் கோவின் மரணத்துக்கு நாம் செலுத்த முடிந்த ஒரே அஞ்சலி அனைவரும் அருகிலுள்ள ஷாகாக்களுக்கு காக்கி கால்சட்டை அணிந்து செல்வதுதான்.

-அறுவைவிந்தன் விடாகண்டன் a k a அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அறுவைவிந்தன் விடாகண்டன்

அறுவைவிந்தன் விடாகண்டன்