எங்கேயோ கேட்ட கடி

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

வைஷாலி



காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை

அது கரையுமே


டைப்ரைட்டிங் மெஷின் பெண்பால்டா

எப்படிடா

ரிப்பன் கட்டியிருக்கு பாரு


தயிர் ஏன் வெள்ளையாக இருக்கிறது

தோய்க்கிறதாலே


காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுகிறார்கள்

அவர்கள் ‘மெய் ‘மறந்து காதலிப்பதால்


போட்டாகிராபி தொழில் செய்ய முக்கியமானது எது ? திறமையா அதிர்ஷ்டமா ?

இரண்டும் இல்லை, கேமரா.


ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ?

ம்….

ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான்


நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி

அவங்க பின் வாங்கிட்டாங்க


தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ?

அவர் வாட்ச்மேனாம்


எல்லாப் பணத்திலயும் ஏன் காந்தி சிரித்துக்கொண்டே இருக்கிறார் ?

அழுதா பணம் நனைஞ்சி போயிடுமே


இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?

அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.


தொலைபேசியில்: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கிவிட்டார்.

இன்னும் சில நிமிஷங்களில் வந்துவிடுகிறேன்

அதுவரை நான் என்ன செய்வது ?

பென்ஸிலை உபயோகியுங்கள்.


அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காத பிஸ்கட்

ட்ரூ பிஸ்கட்


நாய் வியாபாரம் பண்ணீங்களே இப்ப எப்படியிருக்கு வியாபாரம்

கையை கடிச்சிருச்சி


படிச்சவனா இருக்க, நீயே ரூபா நோட்டு அடிக்கலாமா ?

நான் சுயநிதிக் கல்லூரியில் படிச்சவன்சார்


நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?

வேறென்ன சாகாமல் இருப்பதுதான்


நாலுநாளா எனக்குத் தாங்கமுடியாத இருமல்..

பெஸ்ட் ஆஃப் லொக்


எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன்

அது கட்டை எறும்பு


மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைக்காரங்களுக்கு கோபமா என்ன ?

ஏன் ?

மேட்டூர் நீர் மட்டம்னு போடறாங்க தினமும்.



Series Navigation

தமிழில்: வைஷாலி

தமிழில்: வைஷாலி