இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் -3

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

கோமதி நடராஜன்.


அன்புள்ள அனைவருக்கும்

திரு சுப்புடு கையில் என் இட்லியா ?அவ்வளவுதான்.பிச்சு உதறிவிடுவார்.கலைத்தோட்டத்தில், காளான்கள் முளைத்து விடாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ளும், நல்ல தோட்டக்காரர், என்று என் மதிப்பில் உயர்ந்து நிற்பவர் திரு சுப்புடு அவர்கள்.அவருக்கு, என் இட்லியை[made in England],பிளேட் உடைந்து விடாமல், பதமாய் இதமாய், பாிமாறிவிட்டு, எட்டடித் தள்ளி நிற்கிறேன்.

என் சமையலை ருசி பார்க்கச் சொன்னால், என் மாமியார் கூட , பொட்டில் அறைந்த மாதிாி உடனே, சொல்லமாட்டார்.சில நிமிடங்கள் யோசித்து, ‘பரவாயில்லை,இந்த உப்பு, புளி,காரம் மட்டும்தான் கொஞ்சம் குறையுது,மத்தபடி எல்லாம் சாியாத்தான் இருக்கு ‘என்று இதமாகத்தான் சொல்லுவார்.ஆமாம்! ‘மத்தபடிக்கு ‘ நான் எந்த ருசியைப் பாக்கி வைத்திருந்தேன் ?சமையல் சாியில்லை என்று, இதைவிட அழகாக யாராலும் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

நிற்க!சுப்புடு ஸார் எப்படி இருக்கிறார் என்று பார்க்கலாமா ?

குற்றம் கண்ட இடத்தில்,ஆனானப்பட்டப் பரமசிவனே,நெற்றியில் ஒரே ஒரு கண்ணைத்தான் திறந்தார்,

ஆனால் ,நமது சுப்புடு அவர்கள்,நெற்றி முழுக்கக் கண்ணாகக், கனல் பறக்க, அனல் அடிக்க,முகத்தில், எள்ளும் கொள்ளும் வெடிக்க,வார்த்தையில் கடுகு வெடிக்க நிற்கிறார்.நானோ, மைக்ரோ வேவ் அவனில் மாட்டிக்கொண்டதைப் போல் பதை பதப்பும்,ஃப்ாீசாில் சிக்கிக் கொண்டதைப் போல் வெடவெடப்புமாக நின்று கொண்டிருந்தேன்.சுப்புடு அவர்களின் ஆலாபனை தொடங்கியது,ஏகப் பட்ட சங்கதிகளை உள்ளடக்கி,ஏற்ற இறக்கங்களோடு, கீழ் ஸ்தாயிலும் மேல் ஸ்தாயிலும்,அவர் சஞ்சாரம் பண்ணுவதைக் கொஞ்சம் கேளுங்களேன்.

‘..!….#….*…..இந்த அம்மையார் இனிமேல் சமையலறைப் பக்கமே போகாதிருந்தால்,அதுவே இவர்,இக்கலைக்குச் செய்யும் மாபெரும் சேவையாகும்…. ‘

‘சபாஷ் ‘இது என் கணவாின் நிசப்தமான பாராட்டு.

சுப்புடு ஸார்!சமையலறைப் பக்கமே போகாமல்,எப்படி ஸார் சேவை செய்யமுடியும் ?அதுவும் மாபெரும் சேவை ?கோபத்தில் வார்த்தைகள் தடம் புரண்டு வருகிறதோ ?சேவையைப் பிழிந்து எடுக்க சமையலறைக்குச் செல்ல வேண்டாம்,வெந்து எடுக்க சமையலறைப் பக்கம் போய்த்தானே ஆகவேண்டும் ?

ஒரு மடக்கு சோடா குடித்த பாகவதர் போல,மேலும் தொடர்கிறார்.

‘…!…#…*…கல்லால் இட்லி செய்யும் கலை இவர் ஒருவருக்கே இயலக் கூடிய காாியம்….இவர் ஈரான் ஈராக் யுத்தத்தின் போது, எல்லையில் கடை விாித்திருந்தால், ,ஆயுத சப்ளை அமோகமாய் நடத்தியிருக்கலாம். ‘ ‘ஆஹா!பேஷ்!பேஷ்! ‘அடுத்த அப்ளாஸை, எனக்குத் தொியாமல் சுப்புடுவை நோக்கி வீசினார் என் ஆத்துக்காரர்.

ஒவ்வொரு இட்லியும் ஒரு ‘க்ளஸ்ட்டர் பாம் ‘…இட்லி வார்க்கத்தொியாத இவர்,தன்னை இட்லிக்குப் புகழ் பெற்ற, தாமிரபரணி ஆறு தவழும், திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர், என்பதை வெளியே சொல்லாதிருப்பது உத்தமம்….. ‘இவரது கணவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்….. ‘இப்படிய

ன்னையும் என் இட்லியையும், நார் நாராகக் கிழித்தால்தான், அவர் தொண்டையில் முட்டி மோதி,போக்கிடம் இல்லாமல், வயிற்றில் விழுந்த என் இட்லி என்ற வஸ்து, ஜீரணமாகும் என்ற அபிப்பிராயத்தோடு, என்னைக் கிழி கிழியென்றுக் கிழித்துக் கடாசினார்.அதன் பிறகுதான்,அவர் முகத்தில் ஒரு தெளிவு,ஒரு அமைதி எல்லாம் வந்து இறங்கியது.

நெற்றிக்கண் சிவனாய் தொடங்கி, நரசிம்ம அவதாரமாய் நின்ற அவரைப் பார்த்தபோது, சாட்சாத்,சங்கரநாராயணனே சுப்புடு வடிவில் என் முன்னே காட்சி தந்தது போல் புல்லாித்து நின்றேன்.

என் கணவரும் ‘ச்சே!என்ன இது ?சுப்புடு இப்படி சொல்லிவிட்டார் ? ‘…என்றும் ‘

‘ரொம்ப மோசம்! கொஞ்சமாவது நல்லதா சொல்லியிருக்கலாம் ‘என்றும், எனக்காக வருந்துவது போல், வெளியில் சோக முகம் காட்டி,மனதுக்குள்,சுப்புடு அவர்களுக்கு, மலர்ந்த முகத்துடன்,மலர் மாலை அணிவித்து, மணிமகுடம் சூட்டி மகிழ்ந்தார்.

மாியாதையாக இனிமேல்,இட்லி என்று யாாிடமும் வாயைத்திறக்கக் கூடாது.இல்லையென்றால் ‘,பஞ்சு 1/2 கிலோ,மல்லிகைப்பூ 2கிலோ ஊறப்போட்டு மையாக அரைத்துப் பாருங்களேன் ‘என்று பஞ்சாபிக்காாி எவளாவது சொன்னால் அதையும் ,

செய்து பார்த்தாலும் ஆச்சாியமில்லை.bread winner ஆன என் கணவரை,இட்லி வின்னராக்கலாம் என்ற என் நப்பாசைக்கு ஒரு கும்பிடு போட்டு, ரொட்டியோடு ஐக்கியமாகப் பழகி வந்த சமயத்தில்,அமொிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் வழியில் என் வீட்டில் இறங்கினார்,என் ஓரகத்தியின் மகள் சிவா.அமொிக்காவில், தன் கணவருக்காக ‘ஒரு மாதத்துக்குத் தேவையான இட்லியை வெந்து எடுத்து ஃப்ாிசாில் போட்டு வைத்திருக்கிறேன்,தேவையான போது ,தண்ணீர் தெளித்து மைக்ரோ வேவ் அவனில் 2நிமிடம் ஹீட் பண்ணிக் கொள்வார்,சூப்பர் சாஃப்ட்டாக இருக்கும் ‘[சூப்பர் ஸாஃப்டாகஇருக்குமா ?எது ?மைக்ரோ வேவ் அவனா ?]என்ற போது இட்லி ஆசைக்கே தண்ணீர் தெளித்துவிட்ட நான், ‘என்னே இவரது சாதனை!எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை ? ‘என்று ஹைக்கூ பாடினேன்.

இப்படி மனமொடிந்து கிடந்த வேளை,மான்ச்செஸ்ட்டர் வந்து இறங்கிய என் மாமா பெண்,கோதை,என்னிடம் ‘இட்லிக்கு என்னவழி ? ‘என்று கேட்டபோது,எனக்கு அழுவதா சிாிப்பதா,என்று தொியாமல்,இந்த, என் புலம்பலின் ஒரு பிரதியை அவருக்கு அனுப்பிவைத்தேன்.

இந்தியாவை விட்டு,5 மணி நேர வித்தியாச தூரத்தில், இருக்க முடிகிறது,நல்ல தமிழ் கேளாமல் நடமாட முடிகிறது,உறவினர்களை விட்டுப் பிாிந்து நிற்க முடிகிறது,நலம் நாடும் நல்ல நண்பர்களைக் காணாமல் நாளைக் கடத்த முடிகிறது,

இத்தனையும் முடியும் போது,இட்லி இல்லாமல் இருக்க முடியாதா ?கேவலம்!ஒரு அங்குல நாக்கை அடக்க முடியவில்லையென்றால்,அது வெட்கப்பட வேண்டிய விஷயமல்லவா ?

‘இங்கிலாந்து வர விசா கிடைக்காத இட்லியே!உன்னை இந்தியாவுக்கு வந்து கவனித்துக் கொள்கிறேன் ‘.முடிக்கட்டுமா ?

மற்றவை பிறகு

அன்புடன்

கோமதிநடராஜன்[ngomathi@rediffmail.com]

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் – 2

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

கோமதிநடராஜன்


அன்புள்ள அனைவருக்கும்,

லண்டனில் என் தோழிகளிடம், ‘இட்லிக்கு என்ன வழி ? ‘,என்றுக் கேட்டதுதான் தாமதம்,அவர்களும் ஒரே இடத்துக்குப் போகப் பல வழிகளைக் காட்டும்,நம் ஊர்

ஆட்டோ ஓட்டுனர்கள் போல்,ஆளாளுக்கு ஒரு செய்முறையைக் கூறினார்கள்.

நானும் சளைக்காமல்,ஒவ்வொரு வழியையும் முயன்று பார்த்தேன்.செய்து பார்த்தபிறகுதான், எனக்கு ஒரு சந்தேகம் உதித்தது,இவர்களெல்லாம் இட்லிக்கு

வழி சொன்னார்களா அல்லது வெண்பளிங்குக் கல் செய்முறைக்கான விளக்கத்தைக்

கூறினார்களா ?

‘இட்லி மாவில் ஈஸ்ட் போட்டுப் பாருங்களேன் ‘இது ஒரு மலையாளியின் யோசனை.

இட்லி மாவில் ஈஸ்ட் கலந்தால் இட்லி வராது ‘ரொட்டிலி ‘தான் வரும். ‘மாவில் ஈனோ போடுவேன் ‘இது ஒரு குஜராத்தியின் சூப்பர் ஐடியா.கேட்கும்போதே வயிற்றிலிருந்து நுரை பொங்கிப் பொங்கி வருவது போலிருந்தது.

‘இட்லியை விட்டால் இங்கிலாந்தில் இவளுக்கு வேறு எதுவுமே கிடையாதா ? ‘என்று நீங்கள் அங்கே முணுமுணுப்பது எனக்கு இங்கே துல்லியமாகக் கேட்கிறது.

கற்பனையாக ஒரு சின்ன உரையாடல்:

‘இதோ பாருங்கள்,இந்த அறையில்,உங்களுக்குத் தேவையான அத்தனையும் நீங்கள்

நினைத்த நொடியில் வரும்….. ‘

‘ஆஹா!சந்தோஷம்….. ‘இது நான்.

வீட்டுச் சொந்தக்காரர் தொடர்கிறார். ‘டிவியில் சமீபத்தியத் தமிழ் படங்கள்,நீங்கள் டாவியை ஆஃப் பண்ணினால் கூடத் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

‘இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் ‘

‘…..டெலிஃபோனைக் கையில் எடுத்தால் போதும் ஐஎஸ்டி மீட்டர் இல்லாமலேயே மணிக்கணக்கில் எந்த ஊருக்கும் பேசிக் கொண்டே இருக்கலாம் ‘என்று வாிசையாய்

மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காட வைத்தவர்,கடைசியில் ‘ஆனால் ‘என்று ஒரு பீடிகையுடன் , ‘ஒரே ஒரு சிரமம் ‘என்று நிறுத்தினார்.

‘ஒரே ஒரு சிரமம்தானே பொறுத்துக் கொள்ள மாட்டேனா ? நான் என்ன அத்தனை பேராசைக்காாியா ? ‘என்று அவாின் ஆனாலுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் ஆபத்தை

உணராமல் நெகிழ்ந்தேன்.

‘இந்த அறையில் ஆக்ஸிஜன் வர வழியே கிடையாது ‘இது எப்படி இருக்கிறது ?

இதே நிலைமைதான் இட்லி இல்லாத இங்கிலாந்து.இங்கே கிடைக்கும் உணவு வகைகளைப் பற்றி எழுதினால் பத்திாிகைகள் இலவசப் பதிப்பு ஒன்று வெளியிட வேண்டியிருக்கும்.மாதிாிக்குச் சில உணவுகள்[நான் குறிப்பிடும் ஃபாஸ்ட் ஃபுட் எதுவும் வும் 1990ல் இந்தியா கேட் வழியாகவோ,கேட் வே ஆஃப் இந்தியா வழியாகவோ

இந்தியாவுக்குள் நுழைந்திருக்கவில்லை].

மாதிாிக்கு சில பதார்த்தங்கள்:காலை உணவுக்குக் கார்ன்பிளேக்ஸ் பல வகைகள்,பெப்ஸி,கோலா எல்லாமே மஹா மஹாதான்,2லிட்.3லிட் பாட்டில்கள்,ரொட்டி வகைகள்,ஃபிரன்ச் பிரட்,சீஸ் பிரட்,நூறு வகைகள்,[ஆயிரம் ராமர் சேர்ந்தாலும்,பரதனுக்கு ஈடாகாது என்ற கம்பர் லண்டனில் வசிக்க நேர்ந்திருந்தால்,ஆயிரம் ரொட்டிகள் சேர்ந்தாலும் ஒரு இட்லிக்கு ஈடாகுமா ? என்று நிச்சயமாகக் கேட்டிருப்பார்.]ஜாம் ஜாம் என்று ஜாம் வகைகள் ,,டெலிஃபோனில் ஆர்டர் கொடுத்தால் அரை மணிக்குள் அலறிக் கொண்டு வரும் இத்தாலி புகழ் பீட்ஸா,அடி முடி காணமுடியாத நூடுல்ஸ்,அதன் ஒரு முனையை நான் என் தட்டில் பிடித்துக் கொண்டு,அழகாகச் சிக்கல் எடுத்து ,நீட்டி நிமித்தி அனுப்பினால்,அதன் அடுத்த முனையை இந்தியாவில் இருக்கும் உங்கள் கையில் ஒப்படைத்து விடலாம்.

இப்படி ஏராளமான வகைகள் இருந்தாலும் நம் இட்லிக்கு முன் அத்தனையும் தூசு.

ஒரே ஒரு முறை நான் சொல்லும் முறையில் இட்லிக்கு அரைத்து வார்த்துப் பாருங்களேன்,என் தவிப்பு உங்களுக்குப் புாியும். ‘லண்டன் போய் இட்லிக்குத் திண்டாட வேண்டுமென்று உனக்குத்தான் தலையெழுத்து,எங்களுக்கென்ன வந்தது ?,இங்கே நாங்கள் மல்லிகைப்பூ மாதிாி இட்லி வார்த்துச் சாப்பிடுவோம்,மீதமிருந்தால்,தொடுத்துத் தலையில் வைத்துக் கொள்வோம் ‘என்கிறீர்களா ?அதுவும் சாிதான்.

இதோ இன்னும் ஒரு கற்பனை:

‘சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன் ‘என்று யாரோ சொன்னது போல்,ஒரு மாறுதலுக்காக திரு சுப்புடு அவர்கள், ‘ சங்கீதத்தை விட்டுச் சமையலை

விமாிசனம் செய்யப் போகிறேன் ‘என்று வைத்துக் கொள்வோம்.[என் போதாத காலம்],என் இட்லியை விமாிக்க வந்தால் எப்படி இருக்கும் ?

அன்புடன் கோமதி நடராஜன்

( மீண்டும் அடுத்தவாரம் கடிதம் தொடரும்)

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும்

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

கோமதி நடராஜன்.


(1991ம் ஆண்டு டிசம்பாில் எழுதப்பட்டக் கடிதம்)

அன்புள்ள அனைவருக்கும்,

எங்கள் மூன்றாண்டு லண்டன் வாழ்க்கை 1990செப்டம்பர் 6ம்தேதிஏராளமான எதிர்பார்ப்புகளோடும்,எண்ணிக்கையில் அடங்காக் கனவுகளோடும் தொடங்கியது.லண்டன் வாழ்க்கையைப் பற்றி,அங்கு போய் வந்தவர்களிடம் விவரம் கேட்டும்,புத்தகங்களில் ஆழமாகப் படித்தும் ‘ப்பூ இவ்வளவுதானா ?சமாளித்து விடலாம் ‘என்ற இறுமாப்புடன்வந்து இறங்கினேன்.அப்படி வந்த என்னைத் திருத்தப் பாடங்கள் பல காத்திருந்தன.

தபாலில் நீச்சல் கற்று,நம்பிக்கையுடன் குதித்த அப்பாவி போல்,லண்டனில் பல மாதங்கள் திணர வேண்டியிருந்தது. சமையலரைச்சாதனங்கள்,உணவு வகைகள் அத்தனையும் இங்கே தாராளமாகக் கிடைக்கும் என்று சிலர் சொல்லியதைக் கேட்டு,ஒரே ஒரு புத்தம் புது சுமிட் மிக்ஸியை மட்டும் சுமந்து கொண்டு,அகதிகள் மாதிாிவந்து இறங்கினோம். பதினாறு வருடங்கள் கழித்து, அப்போதுதான் தனிக்குடித்தனம் தொடங்குவது போல்,குக்காிலிருந்து குழவி வரை பார்த்துப் பார்த்து வங்கினேன்.

2பவுண்டுக்குக் கரண்டி வாங்கினால் ‘ஐயோ!70 ரூபாய்க்கு ஸ்பூனா ?,100 ரூபாய்க்கு டம்ளரா ?140 ரூபாய்க்கு நெய்க் கிண்ணமா ? ‘என்ற கேள்விக் குறிகளும் ஆச்சியக்குறிகளும் தலைக்கு மேல் வட்டமடிக்கப் பதறிப் பதறி, உப்பு புளி எல்லாம் சேர்த்து, எண்ணி பத்தே பத்துப் பாத்திரம் வாங்கினேன். ஏன் பத்தே பத்துப் பாத்திரம் என்று கேட்கிறீர்களா ?இங்கே அஞ்சலைக்கும் கோவிந்தம்மாவுக்கும் நான் எங்கே போவேன் ? பத்துப் பாத்திரமானாலும்,நூறு பாத்திரமானாலும் நான்தானே தேய்க்க வேண்டும்தனக்கு வந்தால்தானே தொியும் தலைவலியும் காய்ச்சலும். நிறையபேருடையசிரமங்களைப் புாிந்திருந்தாலும்,இங்கே, அவைகளை, அனுபவித்து உணர நிறைய சந்தர்ப்பங்கள் வாய்த்தன. வீடு கிடைக்கும் வரை 26 நாட்களை ஒரு கெஸ்ட் ஹவ்ஸில், 15 வயது மகன்,10 வயது மகளுடன் ஒண்டுக்குடித்தனத்தில் முடங்கிக் கிடந்த வேளையில்,எங்கள் உணவு,காலையில் ரொட்டி ஜாம், மதியம் ரொட்டி ஸாஸ்,இரவு ரொட்டி சீஸ் என்று வகை வகையாய் நளபாகத்தில் ஓட்டினோம்.

இப்படி நாக்கு உலர ரொட்டிகளோடு போராடிக் கொண்டிருந்த வேளையில் டாவியில் ஒரு நிகழ்ச்சி.சென்னை சென்று திரும்பி வந்த, ஆங்கில மாது ஒருத்தி, எடுத்து வந்திருந்த வீடியோவை, ஒளிபரப்பினார்கள். அந்த சூழ்நிலையில் நாங்கள் மெய் மறந்து ரசித்த காட்சி,வாழை இலையில்,உப்பு ஊறுகாய்,பொாியல் அவியல்,கூட்டு,பச்சடி,கீழ் வாிசையில் பருப்பு ,சாதம் ,அதன் மேல் அபிஷேகம் செய்யப் பட்ட,சாம்பார்,உப்பு ஊறுகாய்களுக்கு மூடி போட்டார்போல் அப்பளம், என்று,பக்கவாத்தியங்களோடு சாதம் அருமையாய் சாதகம் பண்ணிக் கொண்டிருந்தது.போதாதற்கு,ஒவ்வொரு ஐட்டத்துக்கும் க்ளோசப் வேறு. எங்கள் வாயில் வேண்டா வெறுப்பாய்த் திணிக்கப்பட்ட ,மெல்லிய ரொட்டித் துண்டு,பாராங்கல்லாய்க் கனத்துத் தொண்டையில் அடைத்துக் கொண்டது. தட்டி இடுக்கு வழியே, காய்ந்த வயிற்றுடன் கல்யாணப் பந்தியை, எட்டிப் பார்க்கும், ஏழைச் சிறுவனின் ஏக்கத்தை அன்று உணர முடிந்தது.

நல்ல பகுதி,மூன்று படுக்கை அறை,பள்ளிக்கூடம்,ட்யூப்[பாதாள ரயில்]ஸ்டேஷன்,என்று சகலமும் பொருந்தி வரும் வரை 40 வீடுகளைப் பார்த்துக் கழித்தபின்,FINCHELI என்ற இடத்தில்[1990ல் மார்கெரெட்டைத் தேர்ந்தெடுத்து , ‘அப்பாடா ‘என்று அக்டோபர் 2ம் தேதி, எங்கள் வயிற்றில் பால் வார்த்த, அந்த வீட்டில், பால் காய்ச்சினோம்.ராகு காலம் எமகண்டம் நாள் கிழமை எதுவும் பார்க்கவில்லை,வீடு கிடைத்த நாளே நல்ல நாள்,என்று குடியேறினோம்.

அக்டோபர் 2,நல்ல நாள் இல்லை என்று எந்த ஒரு சுத்த இந்தியனும் சொல்ல மாட்டான்.

வீட்டில் இறங்கிய உடன், முதலில் செய்த காாியம்,இட்லிக்கு என்ன வழி என்று பார்த்ததுதான்.வீணா,சாவித்திாி,சாரதா,கோபனா, தங்கம் என்று மாநில வாாியாகத் தோழிகள் கிடைத்த உடன்,அவர்களிடம் நான் கேட்ட முதல் கேள்வி,

‘இட்லிக்கு எந்த அாிசி வாங்க வேண்டும் ? ‘என்பதுதான்.

[கடிதம் தொடரும்]

அன்புடன் கோமதி நடராஜன்

ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்