மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

முனைவர்,சி,சேதுராமன்


முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,
மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

காஞ்சித்திணையின் பொருண்மைக் கூறுகளான இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியன பற்றியும் இம் முப்பற்றுதலையும் விடுத்து உலகில் நிலைத்ததெனக் கருதப்படும் வீடுபேற்றை வலியுறுத்தும் மனப்பாங்கினையும் மாங்குடி மருதனார் வழி நாம் காணலாம்.

இளமை நிலையாமை

“பாங்கருஞ் சிறப்பின் பன்னெறி யானும்’’ என்ற தொல்காப்பியர்; கூறும் நிலையாமைக்கு உரை விளக்கந் தரும் இளம்பூரணர்; இளமை நிலையாமையையே முதற்கண் கூறுகின்றார்;. இளமை நிலையாமை பற்றி நாலடியார்,

“எனக்குத் தாய் ஆகியாள் என்னையீங் கிட்டுத

தனக்குத்தாய் நாடியே சென்றாள்- தனக்குத்தாய்

ஆகியவளும் அதுவானால் தாய்த்தாய்க் கொண்டு

ஏகும் அளித்திவ் வுலகு“ (நாலடியார், பா.எ.,15)

என்று கூறுகின்றார்;. மாங்குடி மருதனார்; இளமை நிலையாமையை,

“இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்

பெரும்பின் னிட்ட வால்நரைக் கூந்தலர;

நன்னர்; நலத்தர், தொல்முது பெண்டிர்;

செந்நீர்;ப் பசும்பொன் புனைந்த பாவை

செல்சுடர்;ப் பசுவெயில் தோன்றி யன்ன

செய்யர், செயிர்;த்த நோக்கினர், மடக்கண்

ஐஇய கலுழு மாமையர்; வைஎயிற்று

வார்;ந்த, வாயர, வணங்குஇறைப் பணைத்தோள்

சோர்;ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை,

தொய்யில் பொறித்த சுணங்குஎதிர்; இளமுலை,

மைஉக் கன்ன மொய்இருங் கூந்தல்

மயில்இய லோரும் மடமொழி யோரும்,

கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கைஎறிந்து

கல்லா மாந்தரொடு நகுவனர்; திளைப்பப்,

புடைஅமை பொலிந்த வகைஅமை செப்பில்

காமர்; உருவின் தாம்வேண்டு பண்ணியம்

கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக“

(மதுரைக்கா : 407-423)

என்று மதுரை நகரத்து மக்கள் வாழ்க்கை கொண்டு விளக்குகின்றார்;. திருக்குறள் கூறும்,

“நாளென ஒன்றுபோல் காட்டிஉயிர்; ஈரும்

வாளது உணர்;வார்;ப் பெறின்“

(திருக்குறள், குறள் எண், 334)

என்ற பாடற்கருத்தும் இளமை கழிவதன் கணக்கைக் கூறுவது – இளமை முடிந்து முதுமையாம் தன்மையைச் சுட்டுவது எண்ணிப் பார்;த்தலுக்குரியது.

செல்வம் நிலையாமை

அரசனுக்குக் கூறும் நிலையாமை பற்றிய நூல் மதுரைக்காஞ்சி ஆதலின் செல்வத்தின் நிலையாமையைப் போர்;த் தொழில் கொண்டு விளக்குவர்; நூலாசிரியர்;. தலையாலங்கானத்துப் பாண்டிய நெடுஞ்செழியன் தன் பகை நாட்டுச் செல்வங்களைக் கொள்ளையிட்டு, எரியூட்டி அழிப்பவனாகின்றான். அதனால் அவர்;தம் செல்வங்கள் அழிகின்றன; வளம் குறைகின்றன. இதனை,

“உறுசெறுநர்; புலம்புக்கு அவர்;

கடிகாவின் நிலை தொலைச்சி,

இழிபு அறியாப் பெருந்தண் பணை

குரூஉக் கொடிய எரி மேய,

நாடுஎனும்பேர்; காடுஆக,

ஆசேந்தவழி மாசேப்ப,

ஊர்; இருந்த வழிபாழ் ஆக,

……………………………….

……………………………….

கொழும்பதிய குடி தேம்பச்

செழுங்கேளிர்; நிழல்சேர்

நெடுநகர்; வீழ்ந்தகரி குதிர;ப் பள்ளிக்

குடுமிக் கூகை குராலொடு முரல

……………………………….

……………………………….

பாழ் ஆயின நின்பகைவர்; தேஎம்“

(மதுரைக்கா : 153-176)

“பணிந்தோர்; தேஎம் தம்வழி நடப்ப

பணியார்; தேஎம் பணித்துத் திறை கொண்மார்;’’

(மதுரைக்கா : 229 – 230)

என கூறுவதன் வழி செல்வ வளமை நிலையற்றது, அது அழிவதும் இடம் பெயர்;வதும் உடைய தன்மையது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்;. மேலும் செல்வமானது தீயொழுக்கத்தாலும் நிலையற்றதாவதை,

“மாயப் பொய்பல கூட்டிக் கவவுக் கரந்து

சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த

இளம்பல் செல்வர்; வளம்தப வாங்கி,

நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்

மென்சிறை வண்டினம் மான, புணர்;ந்தோர்“

(மதுரைக்கா : 570-574)

என்றும்,

“பழம்தேர்; வாழ்க்கைப் பறவை போல,

கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மோய“

(மதுரைக்கா : 576-577)

என்றுங் கூறுவதன் காரணம் பொருட்பெண்டிராம் பரத்தையர்; வழிச் சேரலிலும் செல்வம் அழிவாகும் தன்மையது என்பதை நன்குணரச் செய்துள்ளார்; மாங்குடிமருதனார்;. ஆசிரியரின் இக்கூற்று,

“துகள்தீர்; பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க

அகடுற யார்;மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்“.

என்ற நாலடியார்; பாடற் கருத்துடனும்,

“ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்

கருப்புநாண் கருப்புவில் லருப்புக்கணை தூவச்

செருக்கயல் நெடுங்கட் சுருங்குவலைப் படுத்துக்

கண்டோர்; நெஞ்சம் கொண்டகம் புக்குப்

பண்டேர்; மொழியிற் பயன்பல வாங்கி

வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிரை“

(மணிமே., காதை 18, பா.வரி;104-109)

எனும் மணிமேகலை கருத்துடனும் ஒப்பு நோக்குதற்குரியதாகும்.

யாக்கை நிலையாமை

யாக்கையினது நிலையாமை பற்றிக் கூறிய மாங்குடிமருதனார்,;

“பொய் அறியா வாய்மொழியால்

புகழ்நிறைந்த நல் மாந்தரொடு

நல்ஊழி அடிப்படர

பல்வௌ;ளம் மீக்கூற,

உலகம் ஆண்ட உயர்;ந்தோர்; மருக!“

(மதுரைக்கா: 19 – 23)

என பாண்டியனின் பரம்பரை பற்றி மொழிகிறார்;. பொய் அறியாச் சான்றோர்; சூழக் காலங்காலமாக நல்லாட்சி புரிந்தனர்; உன் முன்னோர்;. அவர்;கள் வழி வந்தவனே! நல்லோனே! எனத் தொடக்கத்திலேயே யாக்கையினது நிலையாமை குறிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது மதுரைக்காஞ்சியில்! காஞ்சித்திணையின் கருவாகக் கொண்டுள்ள,

“பருந்து பறக்கல்லாப் பார;வற் பாசறைப்

படுகண் முரசம் காலை இயம்ப

வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த

பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்;

கரைபொருது இரங்கும் கனைஇரு முந்நீர்;த்

திரைஇடு மணலினும் பலரே உரைசெல

மலர்;தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!“

(மதுரைக்கா : 231-237)

என்ற பாடல்வரிகள் எண்ணாதோரையும் ஒரு கணம் நினைக்கச் செய்கின்றது நிலையாமைப் பொருள்தனை! மதுரைக்காஞ்சிக்கு விளக்கவுரை தந்த பொ.வே. சோமசுந்தரனார், ‘‘மக்கட்பிறப்பினை எய்தினோர்; அதனால் பெறற் பாலதாகிய வீடு பேற்றினை எய்திய வழியன்றி அப்பிறப்பான் உறுபயன் வேறின்றாகவும் நிலையாத இப்பொய்ப் பொருளை மெய்யாகக் கருதிப் பெரிதும் முயன்று அழிந்தனர்; என்று இரங்கியவாறு. எனவே இவையிற்றின் தன்மை இத்தகையதாகலின் நின்றுழி நில்லாது கானல்நீர்; எனத் தோன்றிக் கனவென மாயும் இப்பொருள்களிடத்தே பற்று வைத்து முயலுதல் அவம் செய்தலேயாம். இத்தகைய அவலம் நினக்குக் கெடுவதாக என்பது குறிப்பு. ‘‘இது மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை அன்றிப் பிறவியற் முயலாமையில் கழிந்தமை கூறிற்று’ என்பர்; நச்சினார்;க்கினியர்;. இத்தொடரே இந்நூலின் காஞ்சி கூறியதென்க. இதனால் இப்பனுவல் மதுரைக்காஞ்சி என்னும் பெயர்;த்தாயிற்றென்க’’ (பத்துப்பாட்டு ப.,77) என இதற்கு உரை வகுத்துள்ளார்;. (தொடரும்…..3)

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

முனைவர்,சி,சேதுராமன்


முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,
மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
பத்துப்பாட்டு நூல்களுள் நீண்ட நெடிய அடிவரையறையையும் காஞ்சித்திணையின் நிலையாமைத் தன்மையும் தன்னகத்தே கொண்டு, சங்ககாலப் பாண்டிய மன்னர்;களின் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வது மதுரைக்காஞ்சியாகும். நிலையாமையை எடுத்துக் கூறி வாழ்வின் நிலைபேற்றிற்கு உரிய வாழ்வியற் அறங்களை எடுத்துரைக்கும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் இந்நூலமைந்துள்ளது.

காஞ்சித்திணை

காஞ்சித் திணையாவது தொல்காப்பியத்தில்,

‘‘காஞ்சிதானே பெருந்திணைப் புறனே

பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்

நில்லா வுலகம் புல்லிய நெறித்தே“

(தொல்., பொருள்., புறத்., நூ.,76)

என வரையறுக்கப்பட்டுள்ளது. காஞ்சி என்னும் புறத்திணை பெருந்திணைக்குப் புறனாகும். ஒருவற்கு ஒரு துணையாகாமை காரணமாய் அரிய சிறப்பினாற் பல நெறியாயினும் உலகம் நிலையற்ற தன்மையை உடைத்து என்பதை விளக்குவது காஞ்சித்திணை என்பர்; தொல்காப்பிய புறத்திணை உரையில் இளம்பூரணர்;. மேலும், அவர்; தன் உரையில், ‘‘அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், ‘‘ஏறிய மடற்றிறம்’’ (அகத்திணை – 54) முதலாகிய நோந்திறக் காமப் பகுதி அகத்திணை ஐந்தற்கும் புலனாயவாறு போல இது புறத்திணை ஐந்தற்கும் புறனாகலானும் இதுபோல அதுவும் நிலையாமை நோந்திறம் பற்றியும் வருதலானும் அதற்கிது புறனாயிற்று’’ என்பர; (தொல்., பொருள்., புறத்., இளம்., உரை., ப.,127) தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் புறந்திணையியலுக்கு உரைதந்த நச்சினார்;க்கினியர்,

“தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக, அறம்பொருள் இன்பமாகிய பொருட் பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வமும் இளமையும்; முதலியவற்றானும் நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை யுடைத்துக் காஞ்சி என்றவாறு’’ என்பர்;. மேலும், வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர்; பல்வேறு நிலையாமை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம் என்றார்; ; (தொல்., பொருள்., புறத்., நச்சர்;., உரை., பக்.,235-236).

நிலையாமையாவது, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என மூவகையாகக் கொண்டுள்ளனர்; நம் முன்னோர்;. நிலையாமையை மூவகைப்படுத்தி, ‘‘இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என இவற்றுள்,

இளமை நிலையாமையாவது,

“பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்

கனிஉதிர;ந்து வீழ்ந்தற் றிளமை – நனிபெரிதும்

வேற்கண்ணள் என்றிவளை வெஃகல்மின் மற்றிவளும் கோற்கண்ணள் ஆகுங் குனிந்து“

(நாலடி – இளமை-7)

செல்வம் நிலையாமையாவது

“அறுசுவை உண்டி அமர;ந்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்

சென்றிரப்பர்; ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்

றுண்டாக வைக்கற்பாற் றன்று“

(நாலடி – செல்வம், -1)

யாக்கை நிலையாமையாவது முன்னர்;க் காட்டுதும் என்பர்; இளம்பூரணர். (தொல்., பொருள்., புறத்., இளம்., உரை., ப.,127).

“காஞ்சித்திணையாவது, தனக்கு ஒப்பில்லாத சிறப்பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் காரணமாக யாக்கை, இளமை, செல்வம் என்பனவற்றால் நிலைபேறில்லாத இவ்வுலகியலைப் பற்றிக் கொண்டு அதனால் உளவாம் பலவகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றலாகிய ஒழுகலாறாம். நில்லாதவற்றால் நிலையுடையதனை அடையும் முயற்சியே காஞ்சித்திணை யென்பது தொல்காப்பியர்; கருத்தாகும்’’ என்பர் க.வௌ;ளைவாரணன். (தொல்காப்பியம், (வரலாறு),ப.,101). திருக்குறள் நிலையாமை அதிகாரத்திற்கு (34) உரை வகுத்த பரிமேலழகர்,

“நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந்தன்மை. மயங்கியவழிப் பேய்த் தேரிற் புனல் போலத் தோன்றி, மெய்யுணர்;ந்தவழிக் கயிற்றில் அரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலை வேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கு மென்பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும் ஒருவாற்றான் வேறுபடாமையுமுடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கேயுடைய வென்பாருமெனப் பொருட்பெற்றி கூறுவார்; பல திறத்தராவர்;; எல்லார்;க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகலின், ஈண்டு அதனையே கூறுகின்றார்;. இஃதுணர;ந்துழியல்லது பொருள்களிற் பற்று விடாதாகலின், இது முன்வைக்கப்பட்டது“ (திருக்குறள், பரி.உரை., ப.,121) என அதிகார விளக்கமுங் கொடுத்துள்ளார்;. மேலும், நிலையாமையடுத்ததாகிய துறவு என்னும் அதிகாரத்திற்கு (35) விளக்கமாக, ‘‘அஃதாவது, புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கையின் கண்ணும் உளதாம் பற்றினை, அவற்றது நிலையாமை நோக்கி விடுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்“ என்கிறார் (;திருக்குறள், பரி., உரை., ப.,126).

காஞ்சித் திணையாவது, உலகத்து நிலையாமையையும் அவற்றின் கண்ணதாகிய நன்னெறியால் வீடு பேற்றை அடைதலையும் குறித்தனர்; எனலாம்.

காஞ்சித் துறைகள்

காஞ்சித்திணையின் துறைகளாக

“மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்

கழிந்தோர்; ஒழிந்தோர்;க்குக் காட்டிய முதுமையும்

பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்

புண்கிழித்து முடியும் மறத்தி னானும்

ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன்

பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்

இன்னென்று இரங்கிய மன்னை யானும்

இன்னது பிழைப்பின் இதுவா கியரெனத்

துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்

இன்னகை மனைவி பேஎய் புண்ணோன்

துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்

நீத்த கணவற் றீர;த்த வேலின்

பெயர;த்த மனைவி வஞ்சி யானும்

நிகர்;த்து மேல்வந்த வேந்தனோடு முதுகுடி

மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும்

முலையும் முகனுஞ் சேர்;த்திக் கொண்டான்

தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ

ஈரைந் தாகும் என்ப பேரிசை

மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்

மாய்ந்த பூசல் மயக்கத் தானுந்

தாமே எய்திய தாங்கரும் பையுளும்

கணவனோடு முடிந்த படர்;ச்சி நோக்கிச்

செல்வோர்; செப்பிய மூதா னந்தமும்

நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்த

தனிமகள் புலம்பிய முதுபா லையும்

கழிந்தோர்; தேஎத்துக் கழிபடர்; உறீஇ

ஒழிந்தோர்; புலம்பிய கையறு நிலையும்

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனோடு நனியழல் புகீஇச்

சொல்லிடை இட்ட பாலை நிலையும்

அரும்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த

தாய்தப வரூஉந் தலைப்பெயல் நிலையும்

மலர்;தலை உலகத்து மரபுநன்கு அறியப்

பலர்;செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு

நிறையருஞ் சிறப்பின் துறையிரண்டு உடைத்தே“

(;தொல்., பொருள்., புறத்., நூ.,77)

எனத் தொல்காப்பியம் கூறுகின்றது.

இதனிடையே,

‘‘நிலையொடு தொகை, ஈரைந்தாகு மென்ப’’ என்றதனாலும் இறுதியில், “நிறையருஞ் சிறப்பின் துறையிரண்டு உடைத்தே“ என்றதனாலும் “முற்கூறிய பத்தும் ஒருவகையென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொரு வகையென்பதும் பெறப்பட்டன“ என்கிறார்; இளம்பூரணர். (தொல்., பொருள்., புறத்., இளம்., உரை., ப.,129).

நச்சினார்;க்கினியர்,; தொகைஇ ஈரைந்தாகு மென்ப – தொகை பெற்றுக் காஞ்சி பத்து வகைப்படுமென்று கூறுவர்; ஆசிரியர்;; நிறையஞ்சிறப்பிற்றுறை இரண்டு உடைத்தே – ஆதலான் அக்காஞ்சி நிறுத்தற்கு எதிர்; பொருளில்லாத பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறையும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினையுடைத்து என்றவாறு எனவே, முற்கூறிய பத்தும் இப்பத்துமாக இருபதென்பதுங் கூறினாராயிற்று, நிறையருஞ் சிறப்பென்றதனானே மக்கட்குந் தேவர்;க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச் சிறப்புடைத்தாகக் கூறப்படுவது; ஏனை அஃறிணைப் பகுதிக் கண்ணுள்ள நிலையாமை காஞ்சிச் சிறப்பன்று என்றுணர்;க“ என உரைதந்துள்ளார்; ; (தொல்.. பொருள்., புறத்., நச்சர்., உரை., ப.,251).

காஞ்சித்துறையான இருபது துறைகளை உடையதாய் முற்பத்து ஆண்பாற் கூற்றதாகவும் பிற்பத்து பெண்பாற் கூற்றாகவும் கொண்டுள்ளனர்; எனலாம். மேலும், நிலையாமை கூறும் காஞ்சித் திணையானது அஃறிணைகளுக்குச் சிறப்பின்மை கருதி உயர்;திணையோர்;க்கு மட்டுமே உணர;த்தப்பட்டுள்ளது எனில் பொருந்தும்.

மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணைத் துறைகள்

பத்துப்பாட்டில் ஆறாவதாக விளங்கும் மதுரைக் காஞ்சியென்னும் நூல் மாங்குடி மருதனாரால் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனுக்குப் பாடப்பட்ட நூல். காஞ்சி என்பது நிலையாமையை உணர்;த்தி அறிவுறுத்துவது. மதுரைக் கண்ணிருந்து உலக நிலையாமையை அறிவுறுத்தப் பாடியதாகலின் மதுரைக் காஞ்சியெனப் பெயர்; புனைந்தார்; போலும்.

காஞ்சியென்பது பல்வேறு நிலையாமைகளைப் பொருளாகக் கொண்டு பாடப்பெறுவது. மதுரைக்காஞ்சியில் பாண்டியர்; தலைநகரமாகிய மதுரையைப் பற்றியே பெரிதும் பாடப்பட்டிருத்தலையும் அறிய முடிகிறது. (1. தொடரும்)

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.