எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்
வே.சபாநாயகம்
1. சிறுகதையொன்றின் தரத்துக்கு ஒரு சிறிய பரிசோதனை. கதை வாசகர்களின் மனத்தைக் கவ்விக்கொள்கிறதா, அட்டை மாதிரி? அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடிகிறதில்லை, வைத்துவிட்டாலும் மறக்கமுடிகிறதில்லை, என்று வாசகனை அப்படி ஆட்டி வைக்கிறதா? இந்தக்கதைக்குப் படம் எதற்கு விளம்பரம் எதற்கு என்று தோன்றுகிறதா? அப்பப்பா வாழ்கையில் அற்புதம் இத்தனையா என்று வியக்க வைக்கிறதா? அணுவை அண்டமாகவும், அண்டத்தை அணுவாகவும் மாற்றுகிறதா? கண்ணீர் விடவேண்டிய கட்டத்தில் ஆனந்த சிலிர்ப்பையும் மகிழ்ச்சியின் சிகரத்தில் கண்ணீரையும் தருகிறதா? சிறிய ஒரு விஷயம் பெரியதொரு உண்மையாகி விடுகிறதா? அப்படியானால் அடுத்தபடியான ஆராய்ச்சிக்கு அந்தச் சிறுகதை தகுதி பெற்றுவிட்டது.
2. இலக்கிய ஆசிரியனின் “டெக்னிக்”, விமர்சனத்துக்குப் பாத்திரமாகிறது. கதை மட்டில்
“சப்”பென்று தூங்கிவழிந்து கொண்டிருந்தால் “டெக்னிக்”கின் புதுமை யாரைக் கவரப்போகிறது? சமையல் நன்றாயிருக்கலாம், உப்பு மட்டும் இல்லாவிட்டால்? டெலிவிஷனில் புதுமை இருக்கிறது. “டெக்னிக்” ஒன்றும் மட்டமில்லை. ஆனால் பொய்ச் சிரிப்புக் காட்டும் அந்த முகத்தை எத்தனை நாள் சகித்துக் கொள்கிறது? சில வேளைகளில் ‘பொய்க்கால்” குதிரை ஆடுகிற சிறுவன் போடுகிற போடு எப்படி இருக்கிறது? அவன் உற்சாகமும்., பெருமிதமும் நம்மையுமல்லவா பிடித்துக்கொள்கிறது?
அவன் “டெக்னிக்” மிகப்பழையது. உற்சாகமோ மிகமிகப் புதியது!
3. சிறுகதை ஆசிரியன் வாசகனின் ஒரு தோழன் மாதிரி. சில வேளைகளில் அந்தத் தோழமை அற்புதமாகி விடுகிறது. வாழ்க்கைச் சகதியின் நடுவில் நின்றுகொண்டே, காணாதனவெல்லாம் காட்டி, தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறான்.ஆனால் சில வேளைகளில், ஊட்டி என்றும் கொடைக்கானல் என்றும் அழைத்துப் போனாலும் அங்கேயும் நம்மை “போர்” அடிக்கிறான். கொட்டாவி விட்டுக்கொண்டு காசு செலவழித்த உணர்ச்சியோடு திரும்புகிறோம். இப்பேர்ப்பட்ட தோழமை என்றும் வேண்டாம்! ‘போர்” அடிக்கிற சிறுகதை உங்களுக்கு வேண்டாம்! அதைக் கீழே வைத்துவிடுங்கள்!
(இன்னும் வரும்)
- அக அழகும் முக அழகும் – 1
- எது சுதந்திரம்?
- அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)
- விஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று
- வயதில்லாமல் வாழும் உயிர்
- நினைவுகளின் தடத்தில் – 15
- தயிர் சாதம்
- ரெண்டு சம்பளம்
- வெள்ளித்திரை ஒளியில் ஈசல்
- ஊர்க்கிணறு
- இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி ! [கட்டுரை: 38]
- “மறக்கவே மாட்டோம்”
- தருணம்/2
- எட்டு கவிதைகள்
- குயில்க்குஞ்சுகள்
- வன்முறை
- ஏமாற்றங்கள்
- தொலைந்த வார்த்தை
- தன்நோய்க்குத் தானே மருந்து!
- சுதந்திரம்: சித்தம் போக்கு!! (மொழிச் சித்திரம்)
- “தொலையும் சொற்கள்”
- முனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்
- தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா
- தேடலின் தடங்கள்
- தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- தாகம்
- பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்
- எழுத்துப்பட்டறை – மும்பையில்
- ஹாங்காங்கின் இலக்கிய வெள்ளி
- 27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை
- ‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்
- ஏலாதி இலக்கிய சங்கமம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்
- ஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்
- நீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்
- தந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்
- என்றும் நீ என்னோடுதான்
- கவிதைகள்
- லஞ்சத்திற்கு எதிரான கருத்தரங்கம்
- Release function of the felicitation volume for the renowned epigraphist Mr. Iravatham Mahadevan
- ‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)