கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Kahlil Gibran’s Paintings
The Miserable Family
“புவியாதிக்க ஆணையில் மனித இனத்தின் ஏகாதிபத்தியச் சங்கிலிகளில் கட்டிப் புழுதிக் குகையில் சிறைப்பட்டு மனிதன் இழந்து விட்ட இதயம் நான். காணும் நீர்த் துளிகளைச் சிந்திக் காலியான கண்களும், கட்டப்பட்ட நாக்கும் மனித இனம் மறந்து போய் மரித்தவை.
இந்த வார்த்தைகள் நான் கேட்டவை. காயப்பட்ட இதயத்தின் நீர்த்துவிட்ட குருதி ஆற்றிலிருந்து அவை வெளியேறியதை நான் கண்டேன்.
இன்னும் சொல்லப்படுகிறது : ஆனால் கண்ணீர்க் குளமான விழிகளும், வீறிட்டழும் ஆத்மாவும் நான் பார்ப்பதையும் கேட்பதையும் தடுத்து விட்டன !”
கலில் கிப்ரான் (உள்ளொளி) (Vision)
+++++++++
<< மழை பாடும் கீதம் >>
கவிதை -21 பாகம் -2
மண்ணுக் குயிரைப் போல்பவன் நான்
மதி கலங்கிய மூலகங்களின்
அடித்தடத்தில்
தொடங்கியது நான் !
மரணத்தின் பயண இறக்கைகளில்
முடிவாக
மடிவதும் நான் !
+++++++++++++++++
கடலின் இதயத்தி லிருந்து
விடுபட் டெழுவது நான் !
காற்றில் உயர்ந்து ஏறுவது நான் !
வரட்சி யான
வயல்களைக் கண்டால்
கீழிறங்கி அணைப்பது நான் !
கிளை மரங்கள் மீதும்
மலர்கள் மீதும்
பல்லாயிரம் தடவைகள்
பாய்வதும் நான் !
+++++++++++++
மென்மையான என் விரல்களால்
ஜன்னல்களைத் தொடுவேன்
மெதுவாக !
அறிவிக்கப் படும் எனது
வருகை யானது
வரவேற்கப் படும் ஒரு கீதம் !
எல்லா ருக்கும் கேட்கும்
ஆயினும்
உணர்ச்சி உள்ளவர் மட்டும்
புரிந்து கொள்ள முடியும் !
++++++++++++++
காற்றில் இருக்கும் கனல் என்னைத்
தோற்று விக்கிறது !
நன்றிக்குப் பதிலாக
நான் வெப்பத்தை அழிக்கிறேன்
ஆணிடம் ஈர்த்த
ஆற்றலைக் கைக்கொண்டு
ஆடவனையே மடக்கும்
ஆயிழை போல் !
+++++++++++++++
கடல்விடும் பெரு மூச்சு நான் !
வயல்களின் புன்னகை நான் !
வானத்தின் விழித்துளிகள் நான் !
காதலும் அது போல
அன்புக்கடல்
ஆழத்தி லிருந்தெழும் பெருமூச்சுகள் !
ஆத்மாவின்
வண்ண நிலத்தி லிருந்தெழும்
புன்முறுவல் நான் !
நித்திய சொர்க்கத்தின்
நினைவி லிருந்து சொட்டும்
கண்ணீர்த் துளிகள் !
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 15, 2009)]
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2
- டிராகன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)
- பனி சூழ்ந்த பாலை!
- நூலகத்தில் பூனை
- நிச்சயமாக உனதென்றே சொல்
- காதல்
- இரவினில் பேசுகிறேன்
- அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்
- கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- வாடகை
- மூன்று கதைகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2
- வேத வனம் –விருட்சம் 64
- “கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)
- தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.
- ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்
- பைக்காரா
- இ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)
- சினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை
- திலகபாமாவின் மறைவாள் வீச்சு
- 67 வயதில் சிறுவனான மாயம்
- குலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.