“படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

விஜயன்



கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த ஐந்து விஷயங்களில் புரியாத சில விஷயங்கள் இருப்பதாயும் அதை புரிய வைக்கும்படி என் நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் சில உண்மைகள்;

“நான் சொல்வதனைத்தும் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை” ராமர் சேது என்பது ஒரு சமஸ்கிருத சொல் (சேது என்றால் – பாலம் என்று பொருள்) ராமருக்கு பொருள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ராமாயண இதிகாசம் (காலம் கிமு 500லிருந்து – 100 வரை) ராமர் சீதையை மீட்க, வானரப் படைகளுடன் கல் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக புராணம்.
ஆதம்ஸ் பாலம் (காலம் 1000 ஏடி) ஒரு இஸ்லாமிய புராணமனிதர் ஹஆதம்’ ஒற்றைக்காலில் ஆயிரம் வருடம் தவமிருந்து அந்த ஹபாதக் குழிச்சுவடு’, ஆதம்ஸ் சிகரத்தில் உள்ளதாக அவர் இலங்கைக்கு செல்ல உபயோகித்த பாலம் என்று மற்றொரு புராணம்.
உண்மையில் ராமர் பாலம் என்பது இலங்கை, மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே உள்ள ஒரு தொடர் பாறை மற்றும் கற்களால் ஆன கடல் மூடிய ஒரு பாதை.

ராமர் பாலம் பற்றிய நவீன ப+கோலத்தின் முதல் பதிவு மேஜர் ஜேம்ஸ்தேனல் என்பவரின் பதிவு, அந்த நபரின் முக்கியத்துவமற்ற பர்ஸனாலிட்டி, காரணமாக அது கண்டு கொள்ளப்படவில்லை. பின்னர் 1822ல் ஆர்த்தர் காட்டன் என்பவரின் தலைமையில் மேஜர் சிம் என்பவர் ஒரு கப்பல் வழிப்பாதை ஏற்படுத்த முயன்று ஓரிரண்டு பாறைகளை வெடி வைத்து தகர்த்தி பின் கைவிடப்பட்டது.
இதற்கு பின்னால் 1837ல் லெப்டினன்ட் எப்.டி. போவல் பரிந்துரையில் ராமர் சேது கால்வாய் அமைந்தால் அது இலங்கையைச் சுற்றிவராமல் இந்திய கிழக்கு கடற்கரையில் ஒரு குறுக்கு வழி பயணம் மேற்கொள்ள முடியும் என்பதாகும். இது ப+கோள சரித்திரம். 1911ல் பாரதியார் கூட “சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம்” என்று பாடியுள்ளார் அப்போது யாரும் பாரதியை ராமர் சென்டிமெண்ட் சொல்லி எதிர்க்கவில்லை.

பின்னர் 2001 ப.ஜா.க. அரசியல்தான் முதலில் “சேது சமுத்திர கப்பல் கால்வாய்த் திட்டம்” அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஜெயலலிதாவும், வைகோவும், அன்று, அதை தங்கள் சாதனையாக கூறிக் கொண்டார்கள்! இப்போது திமுக உள்ளடக்கிய மத்திய அரசு சுமார் 2400 கோடி செலவில் திட்டம் தொடங்கி 6 மாதங்கள் ஓடிவிட்டது. ப+கோள ரீதியாக இந்தியக் கடலோரத்தில் மேற்கே தொடங்கி கிழக்கு முடிய இந்திய எல்லைக்குட்பட்ட கடலில் பயனிப்பது வியாபாரம் மற்றும், எல்லைப் பாதுகாப்புக்கு உதவியளிப்பது. சுற்றுச் சூழல், பொருளாதார சாத்தியங்கள் எல்லாம் முன்பே கண்டறியப்பட்டு திட்டம் தொடங்கி, 2008ல் கப்பல் விடுவதாய் பேச்சு. இடையில் ‘சுப்ரமணிய சாமி’ பொது நல வழக்கு தொடர்ந்து ப.ஜா.க. ராமரைத் துணைக்கு அழைத்து ஒரு கேலி கூத்து நடந்து முடிந்துவிட்டது. இந்த இடத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘அடிப்படை கடமை’ பகுதி 4ஏ, ஆர்டிக்கல் 51ஏல் கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தை எல்லோரும் புறக்கணித்துவிட்டனர் அதில் “51ஏ(எச்)ல் விஞ்ஞான ரீதியான உணர்வுகள், மனிதநேயம், கேள்வி கேட்கும் உணர்வு மற்றும் சீரமைப்பு குணங்களை வளர்க்க வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்கிறது” இதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தார்களா என்று பார்ப்போம்.

இந்தப் பிரச்சினை முதலில் சென்னை உயர்நீதி மன்றத்தில் சுப்பிரமணிய சுவாமியின் பொது நல வழக்காகத் தொடரப்பட்டது. அதில் சுவாமியின் வாதம் என்னவென்றால் ராமர் பாலம் ஒரு புராதன சின்னம் அதை தொல்பொருள் ஆராய்ச்சி சட்டத்தில் புராதனச் சின்னமாக அறிவித்து ராமர் பாலம் உடைத்து கால்வாய் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்பதாகும். சென்னை உயர்நீதி மன்றமும் கால்வாய் திட்டப் பணிக்கு இடைக்கால உத்தரவு வழங்க மறுத்தாலும் ‘புராதன சின்னம்’ வாதத்தில் அர்த்தமிருப்பதாய் கூறி வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றிவிட்டது. இந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றத்தின் தவறு என்னவென்றால், முதலில் இன்றுவரை ராமர் பாலம் மத்திய அரசால் புராதன சின்னம் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு தரவில்லை, என்பதையும் 51ஏல் சொன்ன அடிப்படைக் கடமையான விஞ்ஞான அணுகுமுறையை மறந்ததும் ஆகும். அதைவிட பல கோடி ரூபாய் திட்டத்திற்கு திட்டம் நடக்கும்போது முட்டுக்கட்டை போட வழி வகுத்ததாகும்.
இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் மாற்றப்பட்ட வழக்கில் மத்திய அரசு ‘தொல்பொருள் புராதன சின்னம்’ அமைச்சகத்தின் பிரமாணப் பத்திரத்தில் ராமர் பாலம் என்பது இயற்கையான ஒரு ப+கோள அமைப்பு, ராமர் பாலத்தை கட்டியதற்கோ ராமர் என்பவர் இருந்ததற்கோ ஆதாரப் ப+ர்வமான தடயம் ஏதுமில்லை என்று கூறினார்கள். “கடவுள் பற்றிய சித்தாந்தத்தில்” கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்ற கூற்று உண்மை. மேற்கு, கிழக்கு திசைகள், அட்சரேகை, மகர ரேகை போன்று “கடவுள்” என்பது ஒரு கற்பனைக் கோட்பாடு அதில் தவறேதுமில்லை. அது வேறொன்றை உணர்ந்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட ‘கோட்பாடு’.

இங்குதான் வந்தது வம்பு ‘தென்ன மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும்’ என்பது போல ராமர் நம்பிக்கையுள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையேயான அரசியல், மத்திய அரசும் தேவையின்றி தான் சட்டப்படி தாக்கல் செய்த பிராமனத்தை வாபஸ் பெற்றதாகக் கூறி மாற்று திட்டம் பற்றி பரிசீலிக்க 3 மாதம் அவகாசம் கேட்டு, இந்துக்களின் உணர்வை அரசியல் ரீதியாக ப.ஜா.காவுக்குப் போட்டியாய் அங்கீகாரம் செய்து,” அடிப்படை கடமையான ‘சைன்டிபிக் டெம்பரை’ தாரைவார்த்தது.
இதோடு நிற்காமல் வாதப் பிரதிவாதம், வன்முறை என்று பரவி கலைஞர் பந்த் அறிவிக்க அதை எதிர்த்து அதிமுக வழக்குத் தொடர ஹபந்த்’ சட்ட ரீதியாக தவறு என்று உச்ச நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்துள்ளபோதும் கூட, பட்டும் படாமல் ஆட்சியாளர்களைப் பகைக்காமல் ஒரு வழ வழா குழ குழாத் தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் வழங்க அதை மேல் முறையீடு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஹஇரும்புகை’ உறுதியுடன் 30 செப்டம்பர் ஞாயிற்றுக்கிழமை தடை செய்து; நீதிமன்ற ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட் பதிலுக்கு கலைஞரும் அக்டோபர் 1ம் தேதி உண்ணாவிரதம் அறிவிக்க, அதைக் கண்டிக்கும் விதமாய் உச்ச நீதிமன்றம் தன் எல்லையை மீறி திமுக அரசை கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க எங்கோ தொடங்கி, எங்கோ முடிந்த ஒரு கேலிக்கூத்து அரங்கேறியது. ஆக இதில் தேசிய நலன் மற்றும் மக்கள் நலன் இரண்டாம் பட்சமாகிப் போனது.

சரி இதில் உண்மை எது ‘விஞ்ஞானம், தொழில், பொருளாதாரம் இவைசார்ந்து ராமர் சேது கால்வாய் ‘ கிழக்குக் கடற்கறை கப்பல் வழிப்பாதை திட்டம்’ 2000 முதல் 4000 கோடி செலவில் தொடங்கி, முக்கால்வாசி முடிந்து அற்பத்தனமாய் ஒரு பொது நல? வழக்கில், மத உணர்வு புகுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. விரையமானது யார் பணம்? யார் நேரம்? அண்டை நாடான சீனாவிற்கு நான் விஜயம் செய்தபோது கடைசி நாள் கூட்டத்தில் சீன, இந்திய வித்தியாசத்தை பேசியபோது “சீனாவில் நிர்வாகம் தேசிய மயமாக்கப்பட்டு, அரசியல் உள்@ர் மயமாக்கப்பட்டதே, அதன் வளர்ச்சியின் ரகசியம்; மாறாக இந்தியாவில் அரசியல் தேசியமயமாக்கப்பட்டு, நிர்வாகம் உள்@ர் மயமாக்கப்பட்டதே, அதன் மித வளர்ச்சிக்கு காரணம்” இந்தியாவின் தடைக்கல்லே அதன் அரசியல் தான் என்பது என் கூற்று. உள்ளாட்சி தேர்தல் தொடங்கி, நாடாளுமன்றத் தேர்தல் வரை நம் நேரம் பெரிதும் அரசியலில் வீனாகிப்போகிறதே தவிர, நிர்வாகத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. இதை மீறியும் இந்தியா முன்னேறினால் அதற்கு காரணம் ‘டெக்னாலஜி பிரேக் த்ரூவே’ தவிர அரசியலோ, நிர்வாகமோ அல்ல!


kmvijayan@gmail.com

Series Navigation

விஜயன்

விஜயன்

“படித்ததும் புரிந்ததும்”.. (3) தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

விஜயன்


செப்டம்பர் 15 2007 அண்ணா பிறந்த நாள், விநாயகர் சதூர்த்தி, கலைஞர் டிவி உதயமான நாள், காலை செய்தியில்..
பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு
முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு
தமிழக அரசு அவசரச் சட்டம் முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு
விநாயகர் சதூர்த்தி வேலையில் மும்முரமாய் இருந்த மனைவியிடம் கேட்டேன், எனக்கொரு சந்தேகம், பிறந்து உயிருடன் இருக்கும் வரை பிறந்த நாள் கொண்டாடலாம் இறந்த பிறகு எப்படி பிறந்த நாள் கொண்டாடலாம்?
அவளும் மகான்கள் இறந்தாலும், வாழ்கிறார்கள் என்பது ஐதீகம் எனவே அவர்களுக்கு இறந்த பின்னரும் பிறந்த நாள் கொண்டாடுவதில் தவறில்லை என்று வாரியார் பாணியில் வியாக்கியானம் செய்தாள்!
நானும் விடாமல் அப்படின்னா இறந்த தேதியும் தானே கொண்டாடுகிறார்கள்? என்றேன். இறந்தவருக்கு பிறந்த நாள் இறந்த நாள் இரண்டும் கொண்டாடினால் எது முறையானது? என்றேன். அவள் அட ராமா உங்கள் வக்கீல் புத்தியை (குறுக்கு கேள்வி கேட்பது) விட்டு வேலையைப் பாருங்கள் என்று சொல்ல நானும் சரி சரி நீயும் அட “ராமா”வில் உள்ள ராமரை சில நாள் (பாஸ்) நிறுத்தி வை, டிவியிலிருந்து பேப்பர் வரை திகட்டுமளவுக்கு ராமர் சர்ச்சை அறிக்கை! மறு அறிக்கை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது என்றேன்.
என் “ஹப்பர்லிங்”கும் அலாகிரிதமும் சும்மா இருக்கவில்லை மீண்டும் ரிமோட்டில் கலைஞர் டிவிக்கு தாவியது. “போக்கிரி”யின் வெற்றி விழாவை பாலச்சந்தர் முதல் விவேக் வரை, “ஹயக்கிரியா”வின் புடவை மாடல் பெண் அஸினையும் (போக்கிரியின் நாயகி) சேர்த்து பாராட்டி அவரும் “கோல்கேட்” கிரிஸ்டல் புன்னகையுடன் பவ்வியமாய் பாராட்டை ஏற்றுக் கொண்டு, “ஸ்வீட் ராஸ்கல்” பாலச்சந்தர் பாஷையில் போக்கிரித்தனம் எல்லோருக்கும் பிடிக்கும் ஆதனால் வெற்றி பெறும் போன்ற இன்றைய சரக்குகளுக்கு, மனோதத்துவ நிபுணர்கள் யோசித்து பதில் சொல்லவும். மீண்டும் செய்திக்கு வருவோம் “சிறுபான்மையினருக்கு தனி ஒதுக்கீடு பற்றி. இட ஒதுக்கீட்டை புரிந்து கொள்ளும் முன் சில அடிப்படை வாசிப்புக்கு பக்குவம் அவசியம். இது பிராமனர் ஆதிக்க கருத்து அல்ல, சாதி சமய எதிர்ப்பும் அல்ல, ஓட்டு வாங்கி அரசியல் அபத்தத்தின் வெளிப்பாடு என்பதையும் புள்ளிவிபரப்படி மறைந்துவரும் சாதி, மத வேற்றுமையை இட ஒதுக்கீடு எப்படி மீண்டும் மீண்டும் நிலை நிறுத்துகிறது என்பதை புரிய வைக்க மட்டுமே.
நம் அரசியலமைப்புச் சட்டம் வரும் முன்னே (1950) தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை விகிதாச்சார ஒதுக்கீடு கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்பிலும் 1921 முதல் இருந்து வந்தது 1923ல் சுமார் 131 சாதியினரே பிற்படுத்தப்பட்டோரில் அறிவிக்கப் பட்டிருந்தது பரிணாம வளர்ச்சியில் நாளாக நாளாக அறிவிப்புகள் கூடி இன்று சலுகைப் பட்டியல் பிற்படுத்தப்பட்டோர் 141, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 42, சீர் மறபினர் 68 ஆக தனித்தனியாக மண்டல் கமிஷன் அறிக்கையில் 288 சாதியினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று அறிவிக்கப்பட்டது.
சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, இந்து மதத்திலிருந்து கிருஸ்துவ மதம் மாறியவர் கூட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலிலும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை, முஸ்லீம் மற்றும் கிறுஸ்துவர்களில் பெரும்பான்மையோர் மதம் மாறியவர்களே எனவே அப்படி மதம் மாறிய இந்துக்கள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தால் அவர்களுக்கும் ஒதுக்கீடு சலுகை உண்டு. ஒதுக்கீடு சலுகை அறிவிக்கப் படாதவர்கள் தமிழகத்தில் வெகு சில சாதி சிறுபான்மையினரே! 12மூ சதம் என்கிறது புள்ளிவிபரம்;;.
இட ஒதுக்கீட்டின் அபத்தம் பற்றித் தெரிய வேண்டுமானால் தமிழக அரசின் அதிகாரப்ப+ர்வ வலை பக்கத்தை பாருங்கள் அதில் புள்ளி விபர அட்டவனையில் 1911 முதல் 2001 வரை தமிழக _னத் தொகையில் கல்வி கற்றோர் சதவீதம் எப்படி 7 சதவீதம் தொடங்கி 75சதவீதமாக உயர்ந்தது என்று ஆதாரப்ப+ர்வமாக சொல்கிறது. என் கேள்வியெல்லாம் சுமார் 80 வருடங்களாக ஒதுக்கீடு செய்து 75 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றதாக கல்வியில் முன்னேறியவர்கள் (லிட்டரேட்) என்று 2001ல் அறிவிக்கப்பட்டால், கல்வியறிவு பெற்றவர்களில் 87 சதவீதம் மக்களை கல்வியில் பின் தங்கியவர்கள் என்று எப்படி அறிவிக்க முடியும். இட ஒதுக்கீடு கல்வியறிவில் பின்தங்கியோருக்கு சலுகை என்றால் 75 சதவீதம் கல்வியறிவுடைய ஜனத்தொகையில் 69மூ இட ஒதுக்கீடு எதற்கு? இது அரசியல் சாஸன மோசடி இல்லையா? உண்மையிலேயே பின்தங்கியவனுக்கு சலுகை அளித்தால் அது நீதி, பட்டியல் போட்டால் மோசடி!
மேலே நான் சொன்ன விஷயம், பொதுவாக இட ஒதுக்கீடு கொள்கையில் உள்ள அபத்தம் இது எல்லாருக்கும் பொருந்தும் தமிழகத்தில் இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் மட்டுமே தரப்படுகிறது. 1950ல் அரசியலமைப்புச் சட்டம் வரும் முன்னால் வர்ணாஸ்ர சமூகம் இருந்து அதில் சாதி வேற்றுமை இருந்தது என்பதை யாரும் மறுக்கவில்லை. மெக்கலே கல்வி முறை வந்து குலத் தொழில் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இன்று வெகுசில கிராமங்கள் தவிர “குலத் தொழில்” அறவே தொலைந்து கல்வி அல்லது வியாபார வேலை நிமித்தமாய் மக்கள் வேறு சமூக வாழ்க்கைக்கு மாறிவிட்ட பிறகு, சாதி வழி ஒதுக்கீடு எதற்கு? நான்காவது தலைமுறையில் நாவிதனும் சித்தப்பனாகிய பிறகு! ஆரசியலமைப்பில் “சாதி, மதம், மொழி, பிறப்பு இதனடிப்படையில் பேதம் கூடாது என்று அடிப்படை உரிமைச்சட்டம் வந்த பிறகு” சாதி வழி ஒதுக்கீடு எதற்கு. சாதி சமய வேறுபாட்டை களைய வேண்டிய அரசு “சலுகை இட ஒதுக்கீடு மூலம் மீண்டும் மீண்டும் சாதி அமைப்பை காப்பாற்றுவது சரியா? ஓட்டு வாங்குவதற்கு வேண்டுமானால் ஹகுழுக்களாக’ (“சாதி, மதம்”) மக்களை வைத்திருந்தால் அது சௌகரியமானதாகப் படலாம். நடைமுறையில் சாதி மத அடிப்படை சலுகைகள் அரசியலமைப்புச் சட்டத்தற்கு புறம்பான நிலை? இருந்தாலும் வெட்கமின்றி தொடர்கிறது மக்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வு முற்றிலும் இல்லை சலுகையை யார் விடுவார்?
சிறுபான்மை இட ஒதுக்கீடு அவசரச் சட்டத்தின் உண்மையான அறிவிப்புக்கும், அதில் உள்ள ஆங்கில சட்ட சொல்லுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது பின்தங்கிய கிறுஸ்துவர்கள் மற்றும் பின்தங்கிய மூஸ்லீம்கள் என்று அழைப்பது சிறுபான்மையினருக்கு உண்மையில் புதிதாக எந்த ஒதுக்கீடு ஏதும் இல்லை அவர்களில் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்கள் 30 சதவீத ஒதுக்கீட்டிலிருந்து ஹதனி ஒதுக்கீடாக 7மூ’ பெறுகிறார்கள். இதற்கான நோக்கம் சட்டத்தில் கூறியது போல சிறுபான்மையினர் தங்கள் மக்கள் தொகையில் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிற்படுத்தப்பட்டோர் கமிஷனும் அவ்வாரே பரிந்துறைக்க “முதல்வரும் தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்” என்பதற் கிணங்க சிறுபான்மையினர்பால் கனிவும் கரிசனமும் கொண்டு தனி ஒதுக்கீடு அறிவித்துவிட்டார். எனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஏனைய பல சாதியினருமே அவரவர் மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கீடு கேட்டால் தவறில்லை ஆனால் அது சாத்தியமில்லை! 30 சதவீகித இட ஒதுக்கீட்டில் 7 சதம் போக மீதம் 23மூல் 141 பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்த விகித அடிப்படையில் பிரித்துக் கொடுப்பது சாதிக்கு 0.6 சதமா? “சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்” என்பது மாறி சொல்லாததையும் செய்வோம், செய்ய முடியாததையும் செய்வோம்” என சொல்லும் அரசு அமைந்திருப்பது நம் ப+ர்வ ஜென்ம பலனே! ஒரு வேலை முதல்வரின் கனிவும், கரிசனமும் அனைவருக்கும் சம நீதி வழங்கலாம், சாதி மக்கள்த் தொகை வாரியாக! என்று தோன்றினால் அதையும் அறிவிக்கலாம். தேர்தலுக்கு மிகவும் உதவும்!
இது நடந்து ஒரு வாரம் கழித்து யதேச்சையாய் மற்றொரு ஹப்பர் லிங்க் “ஜனா” படத்தில் “தப்பு எங்கு நடந்தாலும் அந்த தப்பை தட்டிக்கேக்கறது என் தப்பில்லை” அஜித்தின் பஞ்ச் டைலாக்! சினிமாவில் மட்டுமே செய்ய முடியும்! வசனத்தை பேச ஒருவரும் எழுத ஒருவரும் இருப்பதால் எது வேண்டுமானாலும் சாத்தியமே!


kmvijayan@gmail.com

Series Navigation

விஜயன்

விஜயன்

“படித்ததும் புரிந்ததும்”.. (2) நினைவுச் சின்னம்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

விஜயன்


“200 ஆண்டுகளாக நடந்து வந்த குதிரை
பந்தயத்தை நிறுத்துவதென்று 18.8.1974 தேதியில்
தமிழக அரசு அறிவித்ததின் நினைவுச் சின்னம்”

சென்னை ஜெமினி மேம்பாலம் (அண்ணா மேம்பாலம்) கீழே, நீங்கள் பயனித்திருந்தீர்களேயானால் ஒரு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு கீழே நிற்கும் இளைஞனின், இரண்டு சிலைகளைப் பார்த்திருப்பீர்கள். சற்று உற்று பார்த்தீர்களானால், அதன் பீடத்தில் மேலே சொன்ன வாசகங்களை படிக்கலாம். அது சரி ஒரு நினைவுக்கு எதற்கு இரண்டு சின்னங்கள் (சிலைகள்) இந்த நினைவுச் சின்னத்தின் அபத்தம் பற்றி புரிந்து கொள்வோம்.
சென்னைக்கு முதல் நினைவுச் சின்னமே 1639ம் ஆண்டு கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டைதான்! அது தொடங்கி சென்டரல் ஸ்டேஷன், ரிப்பன் பில்டிங், உயர்நீதி மன்ற கட்டிடம், கன்னிமாரா லைப்ரரி போன்று 1680களில் தொடங்கி 1890 வரை வந்த கட்டிடங்கள் தான் நினைவுச் சின்னம். பின்னர் 1959ல் அண்ணா சாலையில் கட்டப்பட்ட எல்.ஐ.சி 14 மாடி கட்டிடம்; கண்டிப்பாக எல்ல சினிமாவிலும் மெட்ராஸ் என்பதற்கு அடையாளமாய் காட்டப்படும் சின்னம், சிலை என்று சொன்னால் மெரினா பீச்சில் உள்ள காந்தி சிலை, உழைப்பாளர் சிலை, தீவுத்திடலில் உள்ள குதிரை மேல் உள்ள மன்றோ சிலை.
பின்னால் உலகத் தமிழ் மாநாட்டில் மெரினா பீச்சில் வந்த பல தமிழறிஞர்கள், கண்ணகி சிலை உட்பட வந்தவை கூட நினைவுச் சின்னங்கள் அல்ல. நினைவுச் சின்னம் என்றால் குறைந்தது 50 வருட காலமாவது அந்த நினைவுகள் அசை போடுவதாய் இருக்கவேண்டும்.
மேலே சொன்ன அந்த குதிரை சிலை, முதலில் கல்கியின் “படைப்பான வந்தியத்தேவனின்” வரைபட வார்ப்பு என்றுதான் சொல்லப்பட்டது. பின்னால், இந்த நினைவுச் சின்ன சேர்க்கை சிலையின் பீடத்தில் தனியாக ஒரு சாதனையாகச் செதுக்கப்பட்டது. இதில் அபத்தம் என்னவென்றால் சென்னை கிண்டி மற்றும் ஊட்டியில் நடைபெற்ற குதிரைப் பந்தயம் இன்றும், அன்றும் நீதிமன்ற ஆணையால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான். அர்த்தமற்ற அறிவுப்புகள் எல்லாம் நினைவுச் சின்னமா? அதை பீடத்தில் செதுக்க வேண்டுமா? மேலை நாடுகளில் சிலைகள் சிற்பக்கலையின் வெளிப்பாடாய் இருந்தது, பண்டைய தமிழகத்திலும் அப்படித்தான் இருந்தது கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழ் குடியின், இன்றைய சிக்கலே இதுதான் அபத்தமான அறிவுப்புகளை, சாதனையாக பீடமேற்றிக் கொள்வதுதான். ஜெயகாந்தன் சொல்வது போல உண்மையான “ஞானத்திற்கு எதற்கு பீடம்” ஞானபீடம்?
“குதிரை பந்தயம் பல ஆண்டுகளாக ஒரு பொழுதுபோக்காக இருப்பினும் அதில் பணம் பண்ணும் விஷயம் ஒரு காலகட்டத்தில் பெரிய சமூக பாதிப்பை எல்லா தட்டு மக்களுக்கும் ஏற்படுத்தியது. அந்த காலத்தில், சீட்டாட்டம், குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு போன்றவை எளிதாக பணம் பண்ணும் வியாதியாய் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது” அதை நடத்தியவர்கள் பெரும்பணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அன்றைய அரசும் மக்கள் பால் உள்ள கரிசனத்தால் அல்ல, “எம்ஆர்சி” என்கிற குதிரைப் பந்தயக் கிளப் வசதிமிக்க செட்டியார்கள் வசமிருந்தால் அரசியல் வாதிக்கும், வசதியான குடும்பத்திற்கு ஏற்பட்ட மானப் பிரச்சனை காரணமாக, சட்டமியற்றும் அதிகாரம் தவறாக பிரயோகிக்கப்பட்டது. 1974ல் ஓர் அவசரச் சட்டம் மூலம் குதிரைப் பந்தயம் நிறுந்த சட்டமியற்றப்பட்டது.
ஆனால் நீதிமன்ற வழக்கின்; இடைக்கால உத்திரவின் மூலமும், 2001ல் வந்த இறுதித்தீர்ப்பின் மூலமும் அரசின் நினைவுச் சின்னமாகிய இந்த அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்று டாக்டர் கே.ஆர். லட்சுமணன் என்ற வழக்கில் முற்றுப் பெற்றது.
மேற்சொன்ன இந்த தீர்ப்பிலும் ஒரு அபத்தம் உள்ளது. இந்த தீர்ப்பின் சாரம் என்னவென்றால் “குதிரைப்பந்தயம்” ஒரு சூதாட்டம் அல்ல, ஸ்கில் என்று சொல்லப்படுகிற திறமை எனவே அதை சூதாட்டம் என்று சொல்லி சட்டமியற்றி தடை செய்தது செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
குதிரை பந்தயம் வேண்டுமானால் திறமையால் நடத்தப்படும் ஒரு பந்தயமாக இருக்கலாம் ஆனால் அதை வைத்து நடத்தப்படும் “பெட்” எனப்படுவது சந்தேகமற்ற சூதாட்டம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இந்த தீர்ப்பு சில நீதிமன்ற தீர்ப்புகளின் அவலத்திற்கு ஒரு உதாரணம்.
1968ல் உலகத் தமிழ் மாநாட்டில் வைத்த பல சிலைகளில் “சிலப்பதிகாரக் காப்பியத் தலைவி” கண்ணகி சிலை பற்றிய கூத்து அனைவருக்கும் தெரியும் ஒரு அரசியல் தலைவிக்கு மலையாள ஜோசியர் பனிக்கரின் பரிகாரமாய், தடையாக தோன்றிய ஒரு சின்னம், ராவோடு ராவாக நீக்கப்பட்டு சில நாட்கள் மிய+சியத்தில் குப்புறப்படுத்துக் கொண்டு, பின்னர் மீண்டும் மற்றொரு தலைவர் ஆட்சியில் வர்ணம் ப+சப்பட்டு அதே இடத்தில் நிறுவப்பட்டு “பந்தாடப்படும் சிலைகள்” நினைவுச் சின்னமா? அல்லது அரசாட்சியின் கலாச்சார சீர்கேடா? துக்ளக் ராஜ்யம் டில்லியில் மட்டுமே நடந்தது என்பது சரித்திரம், சரித்திரம் மீண்டும் மீண்டும் எங்கு வேண்டுமானாலும் அரங்கேறும் என்பது நிகர்சனம். 50 ஆண்டுகளாய் நசுக்கப்பட்ட சிறுபான்மையரின் உயர்வுக்காக, என்று சொல்லி சமிபத்தில் அறிவிக்கப்பட்ட 7% இட ஒதுக்கீட்டுக்கு கூட ஒரு நினைவுச் சின்னம் என்று அறிவிக்கப்படலாம், ஆயிரம் விளக்கு பகுதியிலும் சாந்தோமிலும் ஒரு நினைவு சின்னம் வந்தால், அந்த எண்ணத்தை விதைத்தற்காக என்னை சபிக்காதீர்கள்!


kmvijayan@gmail.com

Series Navigation

விஜயன்

விஜயன்

“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

விஜயன்



என் எழுத்துலக நண்பர்கள் தொடங்கி, என் மகள் முடிய நான் ஏன் எழுதக் கூடாது, என்று சதா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஏதோ ஒரு தயக்கத்தில், பொழுதுபோக்காய் கதைத்துக் கொண்டிருந்தாலும், உருப்படியாக எதையும், எழுதும் எண்ணத்தை அமல் படுத்தவில்லை…
இதற்கு வேறு சில உள் காரணங்களும் உண்டு. எண்பதுகளின் நடுவில் நானும் பதிப்புக்கு அனுப்பாமல் என் சிந்தனைகளை புதுக்கவிதைகளாக எழுதி வைத்துக் கொண்டது உண்டு. அப்படி ஒரு வேலையில் இலங்கைப் பிரச்சனை, தமிழர்களின் தலைவர்களுக்குள்ளேயே வேற்றுமையாய் இருந்து, தங்களை அழித்துக் கொண்டிருந்த வேலையில், “தனித்தனி முக்கனி பிழிந்து” என்று ராமலிங்க சுவாமிகளின், சரணத்தில் தொடங்கி “கோர்பச் சேவைப் பிடுங்கி திரிகோன மலையில் நடலாமா! என்று முடித்திருந்தேன்.
“கோர்பசேவ்” என்ற ரஷ்ய அதிபர் சமாதானத்தின் சின்னமாகவும், களாஸ்நாஸ்ட், “பெரெஸ்ட்ரோய்கா” போன்ற வார்த்தைகள் பெரிதாக உலக அளவில் பிரச்சாரம் செய்யப் பட்ட காலம் அது. என்னுடைய இந்தக் கவிதை வரிகள் எண்ணி மூன்று வருட காலத்தில், காலாவதியானது. இன்று கோர்ப சேவ் ஒரு சமாதானத்தின் குறியீடும் அல்ல, சோவியத் நாட்டின் வரை படமும் சித்தாந்தமும் மாறிவிட்டது. இப்படி என் பதிவுகள் 5 வருட இடை வெளிக்குள்ளேயே புஸ்வானமாகிப் போனதால் எழுதும் எண்ணத்தை தள்ளிப் போட்டுவிட்டேன்.
இப்ப மீண்டும் தலைத்தூக்க வைக்க, என் நண்பர்கள் முயற்சித்தபோது “என்னடா இது சோதனை பாண்டிய நாட்டுக்கே வந்த வேதனை” என்று திருவிளையாடலில் சொன்னதுபோல எழுத முற்பட்டுவிட்டேன். என்ன, எனக்கு சிவபொருமான் திருவிளையாடல் புரிந்து “பாட்டும் நானே பாவமும் நானே” என்று பின்னனி பாடவில்லை.
சோதனை என்றவுடன் “சத்ய சோதனை” பற்றி என் அனுபவத்தை எழுதினால் என்ன என்று தோன்றுகிறது. முதலில் காந்திய சரிதையில், “சத்ய சோதனை” “சுய தர்மமா”, சகதர்மமா என்ற கேள்வி எழக் காரணமாய் இருந்த கோர்ட், நடவடிக்கை ஒன்றைச் சொல்கிறேன்.
சென்னை உயர்நீதி மன்றத்தில், மூத்த நீதிபதியாய் இருந்த ஒரு நேர்மையான நீதிபதி. தான் படித்துணர்ந்த “சத்ய சோதனையை” ஒரு குற்றம் சாட்டப்பட்டவர்மேல் பிரயோகித்து, குற்றவியல் சட்டத்தில், சீர்திருத்தும் பணியாக ஒரு முயற்சி செய்தார். “பெயில்” கேட்டு வந்த ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு பெயில் கண்டிஷனாக நீ போலீஸ் ஸ்டேஷனிலோ அல்லது மாஜிஸ்ட்ரேட் முன்னோ கையெழுத்திடுவதற்கு பதிலாக, காந்தியடிகளின் சத்ய சோதனையை படித்து நூலகத்தில் கையெழுத்துப் போடுமாறு உத்தரவிட்டார். அந்த ஆடுயுவும் அப்படியே செய்தார். பின்னர் பலசமயங்களில் அந்த நீதிபதி இந்த முயற்சியை வழக்கறிஞர் கூட்டங்களில் மேற்கோள் காட்டிவந்தார். பிரச்சனை இப்போது நீதிபதியின் சீர்திருத்த முயற்சி பற்றி அல்ல. சங்க காலம் முதல் ஆத்திச்சூடி, பதினொன்கீழ் கணக்கு நூல்கள் வரை பஞ்சமில்லாமல் பல நன்நெறிகள் சொல்லப்பட்டிருக்கிறது. இருப்பினும், நன்நெறிகள் மட்டும் மனிதனை மாற்றுமா என்பது கேள்விக்குறிய விஷயம். ஏனவே அறிவுரையை சொல்பவர் பரிட்சித்து பார்க்காமல் மற்றவர் மேல் சோதனை செய்து பார்ப்பது என்ன விளைவை ஏற்படுத்தியது என்பதுதான் நாம் புரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்.
அந்த MLA திருந்தினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால், இந்த சோதனைக்குப் பின்னால் அந்த MLA காங்கிரஸ் கட்சியை விட்டு வேறு திராவிடக் கட்சியில் சேர்ந்தார் என்பது மட்டும் தெரியும். அந்த கழகங்கள் மட்டும், சத்ய சோதனையை துறந்தவர்களை, கூண்டாக தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பது பரவலான பேச்சு.
இப்போது பிரச்சனை “சத்ய சோதனையை நாமே நமக்கு பரிட்சித்துக் கொள்வதா அல்லது நம் ஆளுகைக்கு கீழ் உள்ளவர்கள்மேல் செலுத்துவதா. என்பதே! ஓரு குருவிடம் (தலைவர் என்றும் வைத்துக் கொள்ளலாம்). ஒரு தாய் தன் மகன் அதிகமாக சக்கரை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த அறிவுரைக்குமாறு கேட்ட போது, அந்த குரு பத்து நாள் கழித்து வரச் சொல்லி, அதன்பின் அறிவுரை கூறியதாக ஒரு கதையுண்டு. அந்த பத்துநாள் இடைவெளிக்குக் காரணமாக “தான் அறிவுரை சொல்லு முன், தானே அதை சோதித்துப் பார்க்க நினைத்ததுதான்!.
அப்படின்னா, மருத்துவக் கண்டுபிடிப்பு மருந்துகளை முதலில் மனிதன் மேல் சோதிப்பதற்கு முன்னால், எலி, குரங்கு இவற்றில் சோதித்துதானே தருகிறார்கள் என்று அறிவு சார்ந்த கேள்வியை முன் வைக்கலாம் அதற்கு பதில், தற்சமயம் ஹோமிசைட் 1PC 302 தண்டனை சட்டம் மனித வதைக்கு மட்டுமே உள்ளது, மிருக வதை, ஆராய்ச்சிக்கு இல்லை.
நன்நெறிகள் சில சமயம் குள்ள நரிகளாகவும் வாய்ப்புண்டு!


kmvijayan@gmail.com

Series Navigation

விஜயன்

விஜயன்