பா. சத்தியமோகன்
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு அழகிய காட்சி. குறிஞ்சி நிலமும் நெய்தலாகிய கடலும் புணரும் இடங்களை அழகாக வர்ணிக்கிறார் சேக்கிழார்.
கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து
மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்
ஆடு நீள்கொடி மாடமா மல்லையே அனைய.
( பாடல் 1118 )
கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய இடத்தில் பவளக்கொடியின் மெல்லிய கொழுந்துகளைக் காண்கிறார் சேக்கிழார். அதன் அருகில் சந்தனமரத்தின் கிளைகள் தொட்டுக் கொண்டிருக்கின்றன. இன்புறுகிறார் அவர். குறிஞ்சி நிலமும் நெய்தலும் கொள்கிற இணைவு, திணைமயக்கமாக விரிகிறது. இந்த இடத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது மகாகவி பாரதியின் புலமை நினைவு வந்தது.
கவிதை மட்டுமாகவே அவரை அடைகிற பலருக்கு உண்மையில் அவர் குறிஞ்சி நிலமாக மட்டுமே தெரிவார். அரசியல் கட்டுரைகளும், (சியூசின்) சீனக்கதையை அவர் மொழி பெயர்ப்பதும், தத்துவ விசாரணையும், பகவத் கீதை உரையும், ?வி ?யா ? பத்திரிகையின் ஆசிரியராக இருந்து அவர் உரைத்த சிந்தனை வீச்சுகளும் வாசிக்கிறவர்களுக்கு ,பல படைப்புகள் கொண்ட கொந்தளிக்கிற கடலாக, அறியப்படாத நெய்தல் நிலமாகவும் தரிசிக்க முடியும்.
கடல் அவருக்கு மிகவும் பிடித்த வி ?யம். ?சித்தக்கடல் ? என்று ஒரு படைப்புக்கு தலைப்பு வைத்துள்ளார். இது தவிர கடல் என்ற தலைப்பில் பாரதியாரின் கதைகளிலும் ஒன்று வருகிறது. மிக வி ?தாரமான கதை. ?ஒரு நாள் மாலையில் நான் வேதபுரம் கடற்கரையில் தனியிடத்தில் மணல் மேலே போய் படுத்துக் கொண்டிருந்தேன் ? என்று ஆரம்பிக்கிறது அது. ?கடற்கரை ஆண்டி ? என்றும் ஒரு கதை எழுதியிருக்கிறார். யோகி ஒருவரை சந்திக்கிறார் பாரதி. இனி அவர் வரிகளில் காண்போம்.
?இந்தக் கடற்கரையாண்டி நடுப்பகலில் நான் அலைகளைப் பார்த்து யோசனை செய்வது கண்டு புன்சிரிப்புடன் வந்து என்னருகே மணலின் மேல் உட்கார்ந்து கொண்டு ?என்ன யோசனை செய்கிறாய் ? ? என்று கேட்டார்.
?விதியைப் பற்றி யோசனை செய்கிறேன் ? என்றேன்.
?யாருடைய விதியை ? என்று கேட்டார்.
?என்னுடைய விதியை; உம்முடைய விதியை; இந்தக் கடலின் விதியை; இந்த உலகத்தின் விதியை ? என்று சொன்னேன். அப்போது கடற்கரையாண்டி சொல்லுகிறார் ?தம்பி உனக்கும், கடலுக்கும், உலகத்துக்கும் விதி தலைவன். எனக்கு விதி கிடையாது. ஆதலால் உங்கள் கூட்டத்தில் என்னைச் சேர்த்துப் பேசாதே ? என்றார்.
?எதனாலே ? ? என்று கேட்டேன்.
அப்போது அந்த யோகி மிகவும் உரத்த குரலில் , கடலோசை தணியும்படி பின் வரும் பாட்டை ஆச்சரியமான நாடக ராகத்தில் பாடினார்.
?சேல்பட்டடிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்
கால்பட்டழிந்ததில் கென்றலை மேலயன் கையெழுத்தே! ?
கந்தரலங்காரத்தில் நான் பலமுறை படித்திருக்கும் மேற்படி பாட்டை அந்த யோகி பாடும் போது, எனக்கும் புதிதாக இருந்தது. மேலெல்லாம் புளகமுண்டாய் விட்டது. முதலிரண்டடி சாதாரணமாக உட்கார்ந்து சொன்னார். மூன்றாவது பதம் சொல்லுகையில் எழுந்து நின்று கொண்டார். கண்ணும், முகமும் ஒளி கொண்டு ஆவேசம் ஏறிப்போய் விட்டது. ?வேல் பட்டழிந்தது வேலை (கடல்) ? என்று சொல்லும் போது சுட்டு விரலால் கடலைக் குறித்துக் காட்டினார். கடல் நடுங்குவதுபோல் என் கண்ணுக்குப் புலப்பட்டது.
கடற்புரத்திலிருந்து சிங்கத்தின் ஒலி போலே விடுதலை விடுதலை என்ற ஒலி கேட்டது. ? இப்படியாக முடிக்கிறார் .
வாழ்வில் விடுதலை அடைய விரும்பிய பாரதிக்கு கடல் என்பது நிச்சயம் வெறும் நீர்ப்பகுதியாகத் தோன்றியிருக்க முடியாது. தன் அகத்தையே பொங்குமாக்கடலாக
ஆக்கிக்கொண்ட பாரதி , கடல் வேறு என நினைத்திருக்கவே முடியாது .
****
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- புத்தர்களும் சித்தர்களும்
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- பேட்டி
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- மெய்மையின் மயக்கம்-29
- மரபுகளை மதிக்கும் விருது
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- புத்தர்களும் சித்தர்களும்
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- பாரதியும் கடலும்
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- அடியும் அணைப்பும்
- மோகனம் 1 மோகனம் 2
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- பகையே ஆயினும்….
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- இப்படித்தான்….
- காதல் கடிதம்
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- புனிதமானது
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்
- அம்மா
- பெயரில் என்ன இருக்கிறது ?
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- நீங்களுமா கலைஞரே ?
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?