சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2
K.ரவி ஸ்ரீநிவாஸ்
சுஜாதா தமிழில் பல பத்திரிகைகளில் எழுதியிருககிறார். ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.ஆனால் அவர் எந்த பத்திரிகையுடனும் குறிப்பாக தொடர்புபடுத்தி பாரக்கபடவில்லை.ஜெயகாந்தன் குமுதம்,விகடன் போன்றவற்றில் எழுதிய போதும் அவரது எழுத்து அவருக்காக படிக்கப்பட்டது,மதிக்கப்பட்டது.சுஜாதாவும் அப்படித்தான்.பல எழுத்தாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெகு ஜன பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறாரகள்.ஆனால் நாம் அவர்களுடய எழுத்தினைத் தான் கணக்கில் கொள்கிறோம். உதாரணமாக பிரபஞ்சன் குமுதத்தில் பணி புரிந்துள்ளார், விகடனில் எழுதியுள்ளார்.கல்கியிலும் எழுதியுள்ளார்.ஆனால் அதற்காக அவரை நாம் அந்த பத்திரிகைகளுடன் அடையாளப்படுத்துவதில்லை.சு.சமுத்திரம், ஜெயந்தன் உட்பட பலரும் அவர்களது எழுத்துக்களால் தான் அடையாளம் காணப்படுகிறார்களே தவிர அவர்கள் எழுதிய பத்திரிகைகளுடனல்ல.மேலாண்மை பொன்னுச்சாமி கல்கியில் எழுதியிருக்கிறார், சுஜாதா அவரது எழுத்தினைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பதற்காக யாரும் அவர் வணிகபத்திரிகை சார்புடையவர் என்று கூறுவதாகத் தெரியவில்லை.எஸ்.வி.ராஜதுரையும்,வ.கீதாவும் நக்கீரனில் தொடர் ஒன்று எழுதியதற்காக நாம் அவர்களை நக்கீரன் பாணி இதழியலுடன் தொடர்புபடுத்துவதில்லை.வண்ணநிலவன் துக்ளக்கில் பணி புரிந்தாலும், துர்வாசர் என்ற பெயரில் எழுதியிருந்தாலும் நாம் அவரை துக்ளக் அல்லது சோவின் அரசியல் நிலைபாடுகளுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பதிலை.புதுமைப் பித்தன் திரைப்பட வசனம் எழுதியதற்காக நாம் அவரை தமிழ் சினிமாவின் பிரதிநிதி என்று கருதுவதில்லை.இது விந்தனுக்கும், எஸ்.ராமகிருஷ்ணன்,ஞானக்கூத்தன்,புவியரசுக்கும் பொருந்தும்.K.S.கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனாரக இருந்தார் என்பதால் நாம் கோமல் சுவாமினாதனை K.S.G படங்களுடன் தொடர்புபடுத்துவதில்லை, K.S.G பாணி இயக்குநர் என்று கருதுவதில்லை.இது போல் பல உதாரணங்கள் தர முடியும். வண்ணதாசன் வங்கி ஊழியர் என்பதற்காக அவரை வங்கியின் பிரதிநிதி என்று கருதமுடியாது. சுஜாதா குமுதத்தின் ஆசிரியராக சில காலம் இருந்தார். வணிகப் பத்திரிகைகளின் உரிமையாளர் அல்ல, அவற்றின் ஆசிரியர் குழுவிலும் அவர் இடம் பெற்றத்தில்லை.சுஜாதாவே விரும்பினாலும் அவற்றின் செயல்பாடு, எவற்றை வெளியிடுவது போன்ற கொள்கைகளில் அவரால் மாற்றத்தினை கொண்டுவர முடியாது என்றே கருதுகிறேன்.அவரது ஆலோசனைகள் ஏற்கப்பட்டலாம், ஆனால் தீர்மானிப்பது அவரல்ல. எனவேதான் அவர் வணிகப்பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளாரக அறியப்பட்டார், வணிகபத்திரிகை உரிமையாளர்/நிர்வாகி அவரல்ல என்று அனைவருக்கும் தெரியும். சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்த போது நடத்திய போட்டிகளின் நடுவர் பட்டியலைப் பார்த்தால் அவர் எப்படி கருதப்பட்டார் என்று தெரியும். ஜெயமோகன் குறிப்பிடும் எளிய அடையாளத்திற்கு அப்பால்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும்.சுஜாதா சுஜாதாதான், குமுதம் நிறுவனர் அல்ல, விகடனின் ஆசிரியருமல்ல என்பது எல்லாருக்கும் தெரியும்.மேலும் சுஜாதா தனக்கென ஒரு சிஷ்ய குழுவையோ (அ) துதிபாடிகளையோ உருவாக்கவில்லை. தன்னை எந்த பத்திரிகையுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
முற்போக்கு இலக்கியம், முற்போக்கு உள்ளட்க்கம் என்பதும் கேள்விகுட்படுத்தப்பட்டு சர்சிக்கிப்பட்டு பலரால் நிராகரிக்கப்பட்டது.தட்டையான சோசலிச யதார்த்தவாதம் மார்சிய ஆய்வாளர்களாலேயே விமர்சிக்கப்ப்ட்டு பல ‘முற்போக்கு ‘ படைப்புகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. ஜே ஜே சில குறிப்புகள் , ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் உட்பட பல படைப்புகள் கவனிப்பு பெற ஒரு முக்கியமான காரணம், இந்த நிராகரிப்புதான்.இலக்கியம் என்பது சமூகத்திற்கு செய்தி சொல்கிற அல்லது நீதி போதிக்கிற ஒன்று என்பதை சிறுபத்திரிகைகள் பல ஏற்கவேயில்லை. சிறுபத்திரிகைகள் பல முன்வைத்த எழுத்தாளர்கள் பலர் இந்தப் பார்வையுடன் ஒத்துப்போகிறவர்களே. படிகள், அதன் பின் வந்த நிறப்பிரிகை போன்றவை இலக்கியம் குறித்த விமர்சன்ப்பார்வையை வேறு தளங்களுக்கு எடுத்துச் சென்றன.எனவே செத்த குதிரையை அடித்து ஒப்பாரி வைப்பது எதற்கும் உதவாது. சுஜாதாவின் எழுத்துக்கள் ஏன் ‘உரிய ‘ கவனம் பெறவில்லை என்பதற்கான காரணங்கள் வேறு.
(என் ஞாபக சக்தியை அடிப்படையாகக் கொண்டே இதனை எழுதுகிறேன். தகவல் பிழையிருப்பின் பொருத்தருள்க).
தொடரும்
- கால பூதம்…
- காமராஜர் 100
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10
- குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)
- பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்
- வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!
- கடிதங்கள்
- மீண்டும் பிறவி வேண்டும்
- அன்பே வெல்லும்
- ஒரு பூட்டுக்குப் பின்னால்….
- ஜெனிபர் லோபஸ்:
- ஊர்க்கதை
- முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்![பெருங் கதை]
- உலக அரங்கில் தமிழ் இலக்கியம்
- பாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station
- விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி
- அறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)
- இறுதிவரை….
- மனம்
- வேடிக்கை உலகம்
- விமரிசனம்
- மழை
- அழகு
- காதல் கடிதம்
- கல்யாணப் பயணம்
- ஆதங்கம்!
- அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?
- வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)
- ஸுகினி சட்னி (Zucchini chutney)
- தமிழர் உணவு
- இருதலைகள்…
- எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை
- பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து
- விடியும்! நாவல் – (5)
- திரிசங்கு
- ஒண்டுக் குடித்தனம்
- அழகான ராட்சசி
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2
- விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)
- மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)
- ‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்
- கற்பனை
- சா. கந்தசாமியின் படைப்புகள்
- கோபத்துக்கும் கோபம் வரும்
- இரண்டு கவிதைகள்
- ‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘
- Langston Hughes கவிதைகள்
- அஞ்சாதே! கெஞ்சாதே!
- விமர்சனத் தீ
- வருத்தம்
- மருதாணி
- பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!
- நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?
- உறைவிடம்
- மரக்கூடு
- காலம்