மருதம் – புதிய இணைய இதழ்

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

அறிவிப்பு


மருதம் – புதிய இணைய இதழ்

அறிவிப்பு

சொல்புதிது சார்பில் www.marutham.com என்ற புதிய இணைய இதழ் துவங்கப்பட்டுள்ளது. சொல் புதிதை இணையத்தில் கொண்டு வருவது இதன் முக்கிய நோக்கமாக இருந்தாலும் மேலும் பல அரசியல் கலை விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் .

15 நாட்களுக்கு ஒரு முறை இது புதுப்பிக்கப்படும் .2.10.2002 ல் முதல் இதழ் வெளியாகியுள்ளது .

சொல் புதிதைப் போலவே கலை இலக்கியம் அரசியல் வரலாற்றாய்வு அறிவியல் தத்துவம் ஆகிய தளங்களுக்கு அழுத்தம் தரக்கூடிய இதழாக இது இருக்கும். ஆன்மீகத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் . ஆனால் மதம் தவிர்க்கப்படும் . மைய ஓட்டத்துக்கு வெளியே உள்ள ஆன்மீக நீரோட்டங்களை மட்டுமே கணக்கில் கொள்வோம்.

விரிவான தமிழாராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவரும் . தமிழ் இசை , தமிழியக்கம் ஆகியவற்றை சொல் புதிது போலவே மருதமும் முன்னிறுத்தும்

பொதுவாக தீவிரமான வாசகர்களுக்கு உரிய இதழாக இது இருக்கும் . தமிழாராய்ச்சியாளர் குமரிமைந்தன் , வளவ துரையன், விமரிசகர் வேத சகாயகுமார் , அறிவியல் எழுத்தாளர் தி ஸ்ரீனிவாசன் , எழுத்தாளர் பாவண்ணன் , போன்ற பலர் தொடர்ந்து எழுதுவார்கள்

முதல் இதழ் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ளது . இணைமதி TSC !! எழுத்துர்வில் உள்ளது . அந்த எழுத்துரு இருந்தால்மட்டுமே படிக்கமுடியும். வாசகர்கள் வாசித்து கருத்து சொல்ல விரும்புகிறோம்

எழுத்தாளர் பங்களிப்பை நாடுகிறோம்.

சரவணன்

மதுரை

ஆசிரியர்

saravanan@marutham.com

yaazhini@rediffmail.com

***

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு