கோடுபலே (வறுத்த அரிசி வளை)

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

கர்னாடகா சமையல்


4 பேருக்கு

தேவையான பொருட்கள்

2 கோப்பை அரிசி

4 மேஜைக்கரண்டி வெண்ணெய்

மெதுவான மாவுபிசைய தேவையான அளவு பால்

உப்பு ருசிக்கேற்றபடி

ஆழ்ந்து பொறிக்க எண்ணெய்

செய்முறை

1) அரிசியைக் கழுவி ஒரு துணியில் பரப்பி காயவைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் அதனை மிக்ஸியில் மாவுபோல தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும்.

2) அரிசி மாவையும், வெண்ணெயையும், உப்பையும் கலந்து பால் சிறிது சேர்த்து மெதுவாக சப்பாத்தி மாவு போல பிசையவும். நன்றாகப் பிசைந்து சிறிய சிறிய அளவு கையில் எடுத்து உள்ளங்கையால் தேய்த்து இரண்டு இஞ்ச் கயிறு போல ஆக்கி, நுனிகளை வளைத்து நன்றாக அழுத்தி ஒட்டி வளையல் போல ஆக்கவும். இதே போல எல்லா மாவையும் செய்து வைத்துக்கொள்ளவும்.

3) எண்ணெயைக் காயவைத்து புகை வரும் முன்னர் இந்த வளைகளை ஜாக்கிரதையாகப் போடவும். நெருப்பைக் குறைத்து மெதுவான தீயில் இந்த வளைகள் தங்கப்பழுப்பு நிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு ஒரு காகிதத்தில் இவற்றின் எண்ணெயை வடிகட்டி, ஆறவைக்கவும். இதே போல மீதமுள்ள வளைகளையும் வறுத்து எடுக்கவும். இந்த வளைகளை காற்றுப்புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி ஒரு வாரம் வரை வைத்துச் சாப்பிடலாம்.

காபி தேநீர் போன்றவற்றுடன் உண்ணச் சிறந்தது

Series Navigation

கர்னாடகா சமையல்

கர்னாடகா சமையல்