ரவா பொங்கல்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

வைஷாலி


ரவை : 1 ஆழாக்கு

பயற்றம் பருப்பு : 1/4 ஆழாக்கு

மிளகு : 1/2 ஸ்பூன்

இஞ்சி : 1 துண்டு

முந்திரி பருப்பு : 6

உப்பு : 1/2 ஸ்பூன்

நெய் : 1 1/2 கரண்டி

கருவேற்பிலை : சிறிதளவு.

ரவையை ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒன்றரை ஆழாக்கு நீர் விட்டு பயற்றம் பருப்பை அரைப் பதம் வேக விடவும். பின் 3 ஆழாக்கு நீர் ஊற்றி கொதித்ததும் உப்பு போட்டு வறுத்த ரவையை சிறிதுசிறிதாக கொட்டி கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். தீயை குறைவாக (SIM) வைத்து ஒரு தட்டு போட்டு மூடி வேக விட வேண்டும். நன்கு வெந்து பதம் வந்தவுடன் இறக்கி வைத்து அதில் முந்திரி பருப்பு, மிளகு, கருவேற்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி இவற்றைப் நெய்யில் வறுத்து அதில் கொட்டி கிளறவும். சூடாகப் பரிமாறவும்.

Series Navigation

தமிழில்: வைஷாலி

தமிழில்: வைஷாலி