நேந்திரங்காய் வறுவல்

This entry is part [part not set] of 17 in the series 20010401_Issue


நேந்திரங்காய் –2

உப்பு –4ஸ்பூன்

தண்ணீர் –1/2ஆழாக்கு

தேங்காய் எண்ணெய் –பொரிக்கத்தேவையான அளவு

நேந்திரங்காய்களை நீரில் போட்டு ஊற வைக்கவேண்டு. நாலு ஸ்பூன் உப்பையும் அரை ஆழாக்கு நீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். நேந்திரங்காய் அரை மணிநேரம் ஊறியபின் கைகளால் அதன் தோலை உரிக்கவும். பின் சிறிய வில்லைகளாகச் சீவிக் கொள்ளவும். அடுப்பில் தேங்காய் எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் கொஞ்சம் வில்லைகளைப் போட்டு, சிறிது உப்பு நீரைத் தெளித்து வறுபட்டவுடன் எடுத்துவைக்கவும்.

Series Navigation