அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


முன்னுரை: யந்திர யுகத்திற்கு வந்துள்ள இந்தியா மீண்டும் பசுமை யுகத்துக்கு மீளாது. பரிதிக்கனல், காற்றாடி, கடலை, கடல்வெப்பம், பூதளக்கனல், பயிர்வளச் சக்கை, உயிர்வளக் கழிவு போன்ற மிள்பிறவி எருக்களை மின்சக்தியாக மாற்றுவதற்கும் திறமை மிக்க விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும், நுணுக்கமான யந்திர சாதனங்களும் இந்தியாவுக்குத் தேவை. அசுரன் கூறுவதுபோல் வெறும் அறிவாளிகள் மட்டும் இருந்தால், இந்திய யந்திரங்களை எள்ளி நகையாடுவதைத் தவிர சக்கரங்களை வேகமாய்ச் சுற்றி மின்சக்தி உண்டாக்க முடியாது! மோட்டர் வாகனங்கள், யந்திரச் சாதனங்கள், ஆகாய விமானங்கள், அண்டவெளிக் கப்பல்கள், அணுமின் நிலையங்கள் போன்றவை ‘உடன்படும் அபாய எதிர்பார்ப்புக் கணிப்புகள் ‘ [Acceptable Risk Assessments] என்னும் விதி முறைக்கு உட்பட்டுதான் வடிவம் பெற்று உலகம் எங்கும் இயங்கி வருகின்றன. உருவாக்கிய மனிதருக்கு யந்திரங்கள் பிரதிப் பலன்களை அளித்து வருகின்றன. பூரணத் திறமில்லா மனிதர்கள் தவறுகள் இழைத்தோ, அவர் வடித்த யந்திரங்கள் பழுதடைந்தோ அபாயங்கள் நிகழ்வதை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றை நிச்சயம் பேரளவு குறைக்க முடியும். விபத்துகளில் பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் தவறுகளை எவ்விதம் குறைப்பது, யந்திரப் பழுதுகளை எவ்விதம் அகற்றுவது என்பதில் மனித இனம் முழு ஆற்றலைச் செலுத்தி, யந்திர யுகத்தில் தப்பிப் பிழைக்க வேண்டும்.

அமெரிக்காவில் மோட்டர் வாகன விபத்துகளில் ஆண்டுக்குச் சராசரி 50,000 பேர் மரணம் அடைகிறார்கள்! அணுயுகம், அண்ட வெளியுகம் பிறந்த பிறகு கடந்த 50 ஆண்டுகளில், கார் விபத்தில் மட்டும் (50×50,000 =2,500,000) 2.5 மில்லியன் மாந்தர் உயிரை இழந்துள்ளனர்! ஆயினும் கார் உற்பத்தியோ அல்லது கார் ஓட்டுதலோ அமெரிக்காவில் குறைந்துள்ளனவா ? நாள் தோறும் ஆயிரக் கணக்கான விமானங்கள் 300-400 நபர்களை ஏற்றிக் கொண்டு வானத்தில் 5 மைல் உயரத்தில் உலகெங்கும் பறக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒரு விமானம் விழுந்து அத்தனை பேரும் மாண்டு போகிறார்கள்! ஆயினும் விமானங்கள் பறக்காமல் இருக்கின்றனவா ? அல்லது மக்கள்தான் அச்சமடைத்து விமானத்தில் பறக்காமல் புறக்கணிக்கின்றாரா ? 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி பயங்கர வாதிகள் நான்கு விமானங்களைக் கடத்திக் கொண்டுபோய் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களையும், ஐம்புறக் கோட்டையையும் தகர்த்து இரண்டு மணி நேரத்தில் சுமார் 5000 பேரைக் கொன்றார்கள். அந்த கோரச் சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு முறைகளுடன் விமானங்கள் பறக்காமல் உள்ளனவா ? அல்லது மக்கள் பயந்துபோய் விமானப் பயணத்தையே நிறுத்தி விட்டார்களா ? அசுரன் செர்நோபிள் கோர விபத்தை மட்டும் கூறி, அணுமின் உலைகள் அனைத்தையும் மூடச் சொல்வதும் இவற்றைப் போன்ற உதாரணம்தான்!

அணுசக்தி அம்மன் மீது ஏவிய அசுரபாணம்!

இரண்டாம் கட்டுரையில் அசுரன் தனது வலுவான, பயங்கரமான, இதுவரை எவரும் எறியாத, மீண்டும் அவர் மீதே தாக்கப் போகும் ஓர் அசுர பாணத்தை ஏவி விட்டு, அணுசக்தி அம்மனைத் தகர்த்து வீழ்த்தி விட்டதாய்ப் பூரித்துக் கொண்டிருக்கிறார்! 2002 ஜூலை 24 ஆம் தேதி மெட்ராஸ் அணுமின் நிலையத்தில் பணியாளர் ஒருவர் கதிரியக்கக் கனநீர்க் கசிவில் தளத்திலே மரணம் அடைந்தார் என்று கூறுகிறார்! இது அசுரப் புளுகு! இன்றைய நாள்வரை (டிசம்பர் 1, 2004) இந்திய அணு உலைகளில் கதிர்வீச்சுத் தீண்டி, ஒருநபர் கூட உயிரிழந்த தில்லை என்பது எனது அழுத்தமான திருவாசகம். பீட்டாக் கதிர்களை மட்டும் வீசும் டிரிடியம் ஏறிய கனநீர்க் கசிவில் [Beta Ray Emitting Tritiated Heavy Water] மனிதன் எவனும் அடுத்த கணமே மாண்டு போக முடியாது! விஞ்ஞான சூன்ய அறிவாளி ஒருவர்தான் இதை மெய்யென்று நம்பி எழுதி வருவார்! இந்த அசுரக் குற்றச்சாட்டை அவசியம் அசுரன் முதலில் திண்ணை வாசகருக்கு மெய்ப்பிக்க வேண்டும். நீதி நெறி தெரிந்த தமிழ் நாட்டு இதழாசிரியர் ஒருவர் இவ்விதம் நெஞ்சழுத்தமுடன் கூசாமல், இவ்விதம் அசல் புரளிகளை இணைய தளத்தில் எழுதுவது வியப்பாக இருக்கிறது!

கொல்லன் தெருவில் ஊசியை விற்றுக்கொண்டு, இந்தியாவில் விஞ்ஞான அறிவாளிகள் நிறைவாகவும், மெய்ஞ்ஞான அறிவாளிகள் குறைவாகவும் இருப்பதாய் முரணாக கூறிக்கொண்டு, செர்நோபிள் அணுமின் உலை விளைவுகளை விளக்கி, இறுதியில் புலிக்கொடியை ஏந்திக் கொண்டு சேரன் செங்குட்டுவன் போர் அனுபவசாலியாய்க் கூறித் தான் எத்தகைய ஓர் முற்போக்குப் பிற்போக்குவாதி என்று காட்டிக் கொள்கிறார், அசுரன். அடுத்த ஊர் வீரபாண்டிய கட்டப் பொம்மனை மறந்ததோடு, அணுத்துறை வலைத் தளத்தையும் (www.npcil.org) படிக்காமல், வெட்கக் கேடான இந்திய அணுமின் நிலையங்கள் என்ன லட்சணத்தில் இயங்கி யுள்ளன என்று திண்ணையில் கால் நீட்டிக் கொண்டு பாட்டியம்மா வக்கனை அடிப்பது போல் கேட்பது நல்ல நகைப்பை உண்டாக்குகிறது! இந்தியா உள்பட உலக நாடுகளில் நேர்ந்த அணுசக்தி உலைகளின் அபாய விபத்துகளையும், அவற்றின் பண்பாடு, பராமரிப்பு, பாதுகாப்பு, கதிர்வீச்சுக் கழிவுப் புதைப்பு ஆகியவற்றையும், அணு ஆயுத வெடிப்புகளையும், கதிரியக்கப் பொழிவுகளையும் பற்றி விளக்கமாய், கடந்த மூன்று ஆண்டுகளாக 50 கட்டுரைகளுக்கு மேற்பட்டு நான் திண்ணையில் எழுதியிருப்பதை, அசுரன் படித்தது போல் தெரியவில்லை. மேலும் அணுவியல் எருக்கோல் யுரேனியம்-235, -233, புளுட்டோனியம்-239 [Nuclear Fuel] ஆகியவற்றைப் பற்றிக் கூறியது போல, வேறு மீள்பிறப்பு எரிசக்திகளின் [Renewable Energy Sources: Wind, Solar, Geothermal, Bio-mass, Bio-gas Power] மூலம் மின்சக்தி உற்பத்தி செய்வது பற்றியும், அவற்றின் நிறைபாடுகள், குறைபாடுகள் ஆராயப் பட்டும் பத்துக்கு மேற்பட்ட எனது கட்டுரைகள் திண்ணையில் வந்துள்ளன.

அசுரன் கூறிய செர்நோபிள் அணு உலை விபத்தின் கோர விளைவுகள் அனைத்தும் உண்மை. அதன் தீவிரக் கதிரியக்கப் பொழிவுகள் ஐரோப்பாவிலும், அமெரிக்கா, கனடா, ஆசியாவிலும் பரவிப் பாதித்ததும் உண்மை. அதேபோல் இப்போது 2003 ஆண்டில் ஐரோப்பாவில் 170 அணுமின் நிலையங்கள் சீராகக் கண்காணிக்கப்பட்டு இயங்கி வருவதும் உண்மை. அடுத்துப் புதிய அணுமின் நிலையங்கள் 30, மூடப்பட்ட பழைய அணுமின் நிலையங்கள் கனடா, அமெரிக்கா, இந்தியாவில் செம்மை யாக்கப்பட்டு மீண்டும் இயங்கி வருவதும் உண்மையே.

அடுத்த அண்டப் புளுகு மணவாளக்குறிச்சியில் அசுரன் நேரடியாகப் பார்த்து மானஸைட் மணல் வடிக்கட்டுச் சாலையின் கதிரியக்கத்தால் உண்டானதாகக் கருதி, ஆதாரத்துடன் நிரூபிக்காதப் புற்று நோய் நபர்கள். மானஸைட் மணல் தென்னிந்திய மேற்குத் திசையில் தமிழகத்தின் பெரும்பான்மைக் கடற்கரைப் பகுதியிலும் (மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி), கேரளாவின் கடற்கரைப் பகுதியிலும் (சவரா, சத்திரபூர்), குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளிலும், கிழக்கே தமிழ்நாடு, பாண்டிச் சேரி, ஆந்திரா பிரதேசம், ஒரிஸா, மேற்கு வங்காளக் கடற்கரைப் பகுதிகளிலும் 3600 மைல் நெடுவே பல இடங்களில் கிடைக்கிறது. உலகத்திலே மிகப் பேரளவு தாதுக்கள் இல்மனைட், ரூடைல், லிகோஸீன், ஸிர்கான், மானஸைட், ஸில்லிமனைட், கார்னெட் [Ilmanite, Rutile, Leucoxene, Zircon, Monazite, Sillimanite, Garnet] அனைத்தும் தென்னகத் தீவகற்பக் கரை மணலில் கிடைக்கின்றன.

தென்னகக் கடற்கரையிலும், கடலிலும் எங்கெல்லாம் மானஸைட் மணல் படிந்துள்ளதோ, அங்கு வாழும் மனித இனங்கள், மீன்வளங்கள் அனைத்தும் தோரியக் கலவையில் எழும் பின்புலக் கதிரியக்கத்தால் தீண்டப் படுகின்றன. அச்சிறிய தாக்குதல் பல்லாண்டுகள் நீடித்தால் [Long Term Low Level Radiation due to Thorium Compounds], மனித இனத்துக்கும், மீன்வளங்களுக்கும் என்ன பாதிப்புகள் நேருகின்றன என்னும் விஞ்ஞான உயிரியல் விளைவுகளின் புள்ளி விவரங்களைச் சேமிக்காமல், உறுதியாக எதையும் கூற முடியாது. மணவாளக்குறிச்சி மணல் வடிகட்டுச் சாலை கல்பாக்கம் போன்று அணுவியல் ஆய்வுக் கூடமன்று. பல தாது உலோகக் கலவைகளை [Ilmanite, Rutile, Leucoxene, Zircon, Monazite, Sillimanite, Garnet] ஒப்புமை எடைமானம், மின்னியல் கடத்துவம், காந்தப் பற்றல், தளமுறைப் பண்பு [Specific Gravity, Electrical Conductivity, Magnetic Susceptibility, Surface Characteristics] வழிகளில் பிரித்தெடுப்பது. மற்றும் ஸிர்கான் [Zircon] தாதுவை ரசாயன முறையில் ஸிர்கலாய் அணு உலை அழுத்தக் குழல்கள் உருட்ட [Zircaloy Pressure Tubes] ஸிர்கான் பளிங்காக [Zircon Frit] மாற்றுவது. ஆதலால் மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் கடலின் மூலம் வரும் மானஸைட் தோரியக் கலவை இரசாயன முறையில் மாறுதல் அடைவதில்லை! ஆதலால் மணல் சாலையில் அதன் கதிர்வீச்சு அளவிலும் மாறுதல் எதுவும் அடைவதில்லை!

அணு ஆயுதங்கள், அணு உலைகள் தோன்றுவதற்கு முன்பே, இயற்கையாகவே பூதளத்தில் பின்புலக் கதிர்வீச்சுகள் [Background Radiation] பல மில்லியன் ஆண்டுகளாக மனிதரையும், உயிரினத்தையும், பயிரினத்தையும் தாக்கி வந்திருக்கின்றன. அண்டவெளியிலிருந்து அகிலக் கதிர்வீச்சு [Cosmic Radiation] பூமியை நோக்கி அடிக்கிறது. தென்னக தீவகற்பத்தில் கடலருகே வாழ்பவர்கள் மானஸைட் மணல் கதிர்வீச்சு, நீலகிரி மலைமீது வாழ்பவர்கள் பாறைக் கதிர்வீச்சு, விமானத்தில் பறந்து செல்பவர் அகிலக் கதிர்வீச்சு ஆகியவற்றால் தீண்டப் படுகிறார்கள். பின்புலக் கதிர்வீச்சு அட்டவணையில் பார்த்தால், கேரளா (கன்னியா குமரி) கடற்கரையில் வாழ்வோர் (800-8000) மில்லிரெம் (0.8 Rem-8 Rem) கதிரடி பெறலாம் என்று காட்டுகிறது. இலங்கையில் கிரானைட் பாறைக் குன்றுகள் மீது வாழும் மக்கள் 3-7 ரெம் கதிரடி வாங்குவதாகத் தெரிகிறது. பிரேஸில் கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மாந்தர் 1.7 ரெம்-12 ரெம் கதிரடி பெறுகிறார். வர்த்தகத் துறை விமானங்களில் பறப்போர் அகிலக் கதிரடிப்பால் 3.5 ரெம் வாங்குகிறார். இவ்வித இயற்கைத் தணிவு நிலைக் கதிர்வீச்சால் [Low Level Radiation] மாந்தருக்கு நீண்ட காலப் பாதிப்பு என்ன என்று புள்ளி விவரங்கள் உலகில் இன்னும் சேமிப்பாக வில்லை! அவர் குறிப்பிட்ட மீன்கள் அமில மழை அல்லது மேறு இரசாயனக் கழிவுகளால் மடிந்து போயினவா என்பதை ஆராய வேண்டும். அதே போல் சென்னை கடற்கரை, கல்பாக்கம் கடற்கரை நீரில் தணிவு நிலைக் கதிர்வீச்சுத் துணுக்குகள் ஓரளவு கலந்துள்ளதால் மீன்கள் செத்தனவா இல்லையா என்பது ஆதாரமுடன் நிரூபிக்கப் படாமல் பசுமைவாதிகள் கூக்குரல் போடுவது சரியன்று.

இந்திய அணுமின் நிலையங்களின் அண்டையில் இருக்கும் குடியேற்றக் காலனியில் வாழ்வோர்களில் ஊழியர், ஏழைப் பாமரர் மட்டும் பலவித நோய்களில் தவிப்பதாக [கைகளில் ஆறு விரல்கள்! காலில் ஏழு விரல்கள் வயிறு வீக்கம், ஊதிய வயிறு! கழுத்து வீக்கம், காய்ச்சல், வழுக்கத் தலை, வயிற்றுப் போக்கு, ஊனிலிருந்து இரத்தம், குருதிச் சீர்கேடு! பெண்டிருக்கு மார்புப் புற்று நோய் வாய்ப்பட்டு, மதலைக்குப் பால் கொடுக்க முடியாமல் கண்ணீர் விடுவது! மதலைகளுக்கு வெட்டி வெட்டி இழுக்கும் இழுப்பு நோய்!] அசுரன் (எஸ்.பி. உதயகுமார்) எழுதிய கற்பனை நாடகத்தில் எழுதிய நிஜப் பொய்களை, மெய்யானவை என்று நிரூபிக்காமல் அப்படியே ஒதுக்கிவிட்டு, செர்நோபிள் அணுமின் உலையில் ஏற்பட்ட கதிரியக்கப் பொழிவின் விளைவுகளை நிரம்ப எழுதியிருக்கிறார். இந்திய அணுமின் உலைகள் செர்நோபிள் அணுமின் உலைகள் போன்று பிற்போக்கானவை அல்ல. செர்நோபிள் அணுமின் உலை வெடித்ததைப் போல், கூடங்குளம் அணுமின் உலைகளோ, மற்ற எந்த இந்திய அணுமின் உலையோ வெடிக்கப் போவதில்லை! அசுரன் போன்ற விஞ்ஞான எதிர்ப்பு அறிவாளிகள் இக்கருத்தைப் புரிந்து கொள்ள முடியாது! புரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள்!

இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் போபால் நகரில் 1984 ஆம் ஆண்டில் நேர்ந்த மாபெரும் கோர மரண விபத்துக்கு அடுத்தபடிதான், 1986 இல் வெடித்த செர்நோபிள் அணுமின் உலையின் கதிரியக்கத் தீங்குகள் இடம் பெறுகின்றன. இவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறும் எனது விஞ்ஞானக் கட்டுரைகள் திண்ணையில் வந்துள்ளன. உலக வரலாற்றில் யந்திர யுகத்தின் கோர விளைவுகளில் முதல் இடங்களைப் பெறும் இவ்விரு விபத்தும் தானாக எழுந்து மக்களுக்கு இன்னல் தரவில்லை! அவை இரண்டும் மாபெரும் மனிதத் தவறுகளால் உண்டானவை! பொதுடமை ரஷ்யா நிதிச் சிக்கனத்தில் IAEA நியதிக்கு முரணாய்க் கோட்டை அரணில்லாமல் டிசைன் செய்த பிற்போக்கான பாதுகாப்புப் பண்புகளை உடையது, செர்நோபிள் அணுமின் உலை. இந்திய அணுமின் நிலையங்கள் (தாராப்பூர், ராஜஸ்தான் முதலிரு இரண்டு யூனிட்டுகளைத் தவிர) அனைத்தும், அபாய விபத்து நிகழும் போது கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் இரட்டைக் காங்கிரீட் கோட்டை அரண்களைக் கொண்டவை! அமெரிக்கா கட்டிய தாராப்பூர் முதல் இரண்டு யூனிட்டுகள், கனடா கட்டிய ராஜஸ்தான் முதல் இரண்டு யூனிட்டுகள் ஆகியவை ஒற்றைக் காங்கிரீட் கோட்டை அரண் பெற்றவை. செர்நோபிள் அணுமின் உலை ஒரு கோட்டை அரணுக்குள் கட்டப்பட்டு இருந்தால் அத்தனை மரணங்கள் ஏற்பட்டிருக்கா. மேலும் கதிரியக்கம் பரவி உலகெங்கும் எண்ணற்ற மாந்தர் தாக்கப்பட்டிருக்க மாட்டர்கள்!

1945 முதல் 1987 வரை 285 விபத்துக்கள் அணு உலைகளில் ஏற்பட்டுள்ளதாக அசுரன் கூறும் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வோம். 2004 ஆண்டு வரை எடுத்துக் கொண்டால் இதே வீதத்தில் 400 சராசரி விபத்துக்களாக நீட்டிக் [Average Extrapolation] கணக்கிடலாம். உலக அணு உலைகள் ஆண்டுதோறும் அனுப்பும் விபத்துக்கள் அனைத்தையும் அகில அணுசக்தித் துறைப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)] உலக அணுவியல் இயக்குநர் கூட்டவை [World Association of Nuclear Operators (WANO)] ஆகிய இரண்டு நிறுவகங்கள் ஒழுங்காக ஏழு தலைப்புகளில் பிரித்து அவற்றின் மூல காரணங்களை ஆய்வு [Root Cause Analysis] செய்து தவிர்ப்பு நெறிகள், முறைகளை குறிப்பிட்ட நாடுகளுக்குத் திருப்பி அறிவிக்கின்றன. பிறகு அவற்றை நாடுகள் ஏற்றுக் கொண்டு, தடுப்பு ஏற்பாடுகளை அமைத்து, மீண்டும் பழுதுகள் அல்லது தவறுகள் நேராமல், உலக நாடுகள் கண்காணித்து வருகின்றனவா என்று நிபுணர்களை அனுப்பிச் சோதிக்கின்றன. உலகத்தில் IAEA, WANO அணுசக்தி உலைகளைக் கவனித்து வருவது போல், மற்ற இரசாயனத் தொழிற்சாலைகள் மேற்பார்வை செய்யப்படுவதில்லை.

அணு உலை எரிக்கோல்கள் உருகிப் போய், தீப்பற்றிப் பலர் உயிரிழந்து, கதிரியக்கம் நிலையத்தை விட்டு வெளியேறி உலகெங்கும் பரவியதால், 1986 இல் நிகழ்ந்த செர்நோபிள் விபத்து (யுக்ரேன், பழைய ரஷ்யா) தகுதி: 7 [Category:7] பெற்றது. அமெரிக்காவில் 1979 இல் நேர்ந்த திரிமைல் தீவு [Three-Mile Island TMI-2 Unit] அணுமின் நிலைய விபத்து தகுதி: 6 [Category:6] பெற்றது. இவ்விபத்தில் எரிக்கோல்கள் உருகினாலும், அணு உலைப் பாதிப்புகள், பேரளவு கதிரியக்கம் கோட்டை அரணுக்குள் அடக்கப்பட்டன. கதிர்வீச்சுத் துணுக்கள் ஓரளவு கசிந்து தப்பிச் சென்றன ஆயினும், யாரும் மரணமடைய வில்லை. TMI-2 விபத்துக்குப் பிறகு அமெரிக்க அணுத்துறைக் கட்டுப்பாட்டுப் பேரவை [Nuclear Regulatory Commission (NRC) அணுமின் நிலையங்களைச் சுற்றி வாழும் மாநில மக்களுக்கு பொட்டாஸியம் அயொடைடு [Potassium Iodide Tablets] வில்லைகளைத் தைராய்டு புற்றுநோய் தடுப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சட்டமிட்டது. காலரா, பெரியம்மை, மலேரியா, ஃபுளுக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுக்க ஊசி போடுவது போல், பொட்டாஸியம் அயொடைடு வில்லை தருவது, வருமுன் காக்கும் பாதுகாப்பே. அசுரன் இவற்றை ஏன் அமெரிக்கா அளித்துள்ளது என்று கேட்டிருந்தார்.

அணு உலை விபத்துக்கள் இவ்விதம் தகுதி: 1,2,3,4,5,6,7 எண்களின் இனவகுப்புகளில் பிரிக்கப்பட்டு, காரண மூலங்கள் ஆழமாய் ஆராயப்படுகின்றன. இந்தியா உள்பட உலக நாடுகள் போபால், செர்நோபிள் போன்ற விபத்துக்களைத் தடுப்பதற்கும், பாதுகாப்பு நெறிகளை மேம்படுத்தவும், பணியாளருக்கு மிகையான பயிற்சிகளை அளிப்பதற்கும், புதுப் பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்த வேண்டும். அவ்விதம் செய்யாமல் அசுரன் கூறுவதுபோல் அணுமின் நிலையங்கள் யாவற்றையும் அடுத்த கணமே மூடுவதற்கும், பயன்தரும் இரசாயனத் தொழிற்சாலை அனைத்தையும் உடனே நிறுத்துவதற்கும் உபதேசம் செய்வது அறிவுடைமை யாகாது. உண்மை என்ன வென்றால் போபால் விஷவாயு விபத்து 1984 ஆம் ஆண்டில் இந்தியாவில் நேர்ந்தாலும், செர்நோபிள் போன்ற ஒரு கோர விபத்து இந்திய அணுமின் உலைகளில் நிகழவே நிகழாது.

திரிமைல் தீவு விபத்து, செர்நோபிள் பெரு விபத்துக்குப் பிறகு உலக அணுவியல் நாடுகள் அனைத்தும் இரண்டு முறை அணுசக்தி உலைகளில் டிசைன் செம்மைப்பாடுகள், பாதுகாப்புச் சாதனங்கள், இயக்கப் பயிற்சி நெறிகள் அனைத்தும் மேம்படுத்தப் பட்டன. இப்போது (2003) ரஷ்யாவில் 30, செர்நோபிள் விபத்து நாடான யுக்ரேனில் 13, பின்லாந்தில் 4, சுவீடனில் 11, ரூமேனியா 2, சுவிட்ஸர்லாந்தி 5, ஹங்கேரியில் 4, பெல்ஜியத்தில் 7, செக்கோஸ்லேவியாவில் 6, லிதுவேனியாவில் 2, ஸ்பெயினில் 9, பிரான்சில் 59, ஜெர்மனியில் 18 ஆக மொத்தம்: 170 அணுமின் நிலயங்கள் ஐரோப்பவில் இயங்கி வருகின்றன. 30 உலக நாடுகள் 437 அணுமின் நிலையங்களை இயக்கி வருவதோடு, இன்னும் 30 புதிய அணுமின் நிலையங்கள் கட்டப் பட்டு வருகின்றன. அடுத்து கனடா, அமெரிக்கா, இந்தியாவில் மூடப்பட்ட பழைய அணுமின் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன.

அசுரன் அணுசக்தி துறையின் [www.npcil.org] தளத்தைப் படிக்காது, இந்தியாவின் 14 அணுமின் நிலையங்கள் எந்த லட்சணத்தில் இயங்கி வருகின்றன என்று அறியாமல் கேட்பது நல்ல சாமர்த்தியம்! அனைத்து நிலையங்களின் தனித்தனிச் சாதனைகளை [www.npcil.org] (2001-2004) அட்டவணையில் காணலாம். நிதிச்செலவு, இயக்க விபரங்களுக்கு அந்த இணைய தளத்தை முதலில் நோக்கச் சொல்லி யிருந்தேன். சுருக்கமாகச் சொன்னால் அவற்றின் சராசரி உற்பத்தித் திறம் [Capacity Factor]: கைகா: 84%, கக்கரபார்: 88%, நரோரா: 89%, ராஜஸ்தான் புதியவை: 72%, 84%, பழையது: 85%, தாராப்பூர்: 88%. 2002-2003 ஆண்டில் மட்டும் மொத்தம் 19200 மில்லியன் யூனிட் ஆற்றல் உற்பத்தி செய்து, 1438 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. ஏழாண்டுகளில் (1995-2002) ஆண்டுக்குச் சராசரி 13590 மில்லியன் யூனிட் ஆற்றல் பரிமாறிச் சராசரி திறம்: 74% இல் அனைத்து நிலையங்களும் இயங்கி யுள்ளன. 2002 இல் கல்பாக்கத்தின் ஒரு நிலையம் 92% தகுதியில் இயங்கியுள்ளது.

கல்பாக்கம் FBTR (Fast Breeder Test Reactor) வேகப் பெருக்கி வணிகத்துறை நிலையம் [Commercial Unit] அன்று. அது முன்னோடி ஆய்வு உலை [Prototype Research Reactor]. புதிதான காட்டு யானையைப் பயிற்சிக்கு மெல்ல மெல்ல உட்படுத்துவது போல, பாதுகாப்பாக 12.5 மெகாவாட் ஆற்றலில் [30% திறமையில்] குறைவாக இயங்கி வருகிறது. 2000 ஆம் ஆண்டில் 52 நாட்கள் தொடர்ந்து ஓடியதை எள்ளி நகையாடுகிறார், அசுரன். அபாயகரமான வேக நியூட்ரான் அணு உலையைப் பற்றி விஞ்ஞான அறிவில்லாமல், மீன்வள அனுபவம் மட்டும் பெற்ற அசுரன் வக்கனைப் பாட்டி போல் பேசி, இது வெட்கக் கேடு, இது என்ன லட்சணம் என்று தனது உச்ச அறியாமையைக் காட்டுகிறார். பிரான்சின் ராப்ஸோடி மாடலாக இருப்பினும், அந்நிய உதவி எதுவும் இல்லாமல், கல்பாக்கம் FBTR வேகப் பெருக்கி நிபுணர்கள், இப்போது இயக்கத்திலும், பராமரிப்பிலும், பயிற்சி முறைகளிலும் மெதுவாகக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். அமெரிக்கா செறிவு யுரேனியம் மிகையாய் இருப்பதால், வேகப் பெருக்கியில் நிதி செலவழிக்க விருப்பமின்றிக் கைவிட்டது. இந்தியாவின் வேகப் பெருக்கி அணுவியல் ஆராய்ச்சிகளை ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள் பாராட்டி வரும்போது, அணுவியல் விஞ்ஞான சூன்யமான அசுரன் FBTR வேகப் பெருக்கி அணுமின் உலையைப் பற்றி வாதாட எந்தத் தகுதியும் அற்றவர்.

வாழிய பாரத மணித்திரு நாடு! என்று பாரதியார் சைபீரியாவையோ, பி.ஜே.பி. கட்சியின் இராம பூமியையோ பற்றிப் பாடவில்லை! மூன்றாய் வெட்டுப்படாத முழு இந்தியா ஒன்றைத்தான் பாரத நாடு என்று பாரதியார் விளித்திருக்கிறார். நான் குறிப்பிடும் பாரதம் கூட்டரசான குடியரசு இந்தியா ஒன்றையே. பாரதத்தின் முழுப் பலன்களில் கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக்கூடம் ஒன்று! மெட்ராஸ் அணுமின்சக்தி நிலையம் ஒன்று! கூடங்குளம் அழுத்தநீர் அணுமின் நிலையம் ஒன்று! தூத்துக்குடியில் இயங்கிப் பொன்னீர் [Liquid Gold or Golden Water] எனப்படும் ஹெவி வாட்டரை ஆக்கிக் கொண்டிருக்கும் கனநீர் உற்பத்தி ஆலை ஒன்று! உன்னத தொழில்நுணுக்கக் கல்விக் கூடமான சென்னை இந்தியப் பொறிநுணுக்கக் கூடம் [Indian Institute of Technology] ஒன்று. மத்திய அரசில் நிதிப்பங்கீட்டில் நிலவப்பட்ட இவை போன்று இன்னும் எத்தனையோ கூறலாம். இவை அனைத்தும் ஏராளமான தமிழருக்கும், இந்தியருக்கும் பிழைப்பு ஊதியம் அளிப்பதோடு, பல வழிகளில் பயன் கொடுத்தும் வருகின்றன. பசுமை மயவாதிகளுக்கு விஞ்ஞான வளர்ச்சியில் நம்பிக்கை யில்லாததால், இவையெல்லாம் எதற்கு என்று வாதடலாம். இவற்றை மூடிவிடுவதற்கு முன்பு, அங்கு பணிபுரியும் ஆயிரக் கணக்கான படிப்பாளிகளுக்கும், பணியாளிகளுக்கும் முதலில், பசுமை மயவாதிகள் வேறு வேலைகளைக் கைவசம் வைத்துக் கொள்வது அவசியம்!

இரண்டாம் உலகப்போர், கொரியா, வியட்நாம், இரு ஈராக் போர்கள் (1991, 2003), சைனா, பாகிஸ்தான் பாரதக் காஷ்மீர் போர்களைப் போன்ற தற்கால யுத்தங்களுக்கு, அசுரன் போன்ற பசுமை மயவாதிகள் என்ன விதமான ஆயுதங்களை இந்தியா தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் கூறலாம். சேரன் செங்குட்டுவன் வில்லும், வாளும், குதிரை யானைப் படைகளும் போதுமா ? அல்லது வீரபாண்டிய கட்டப் பொம்மனின் கத்திகள் மட்டும் போதுமா ? ஆயுதங்கள் மூலம் எந்தப் பிரச்சனையும் தீராது, என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறும் போது அவரது கைவசம் எத்தனைக் கட்டளை ஏவு கணைகளும், அணு ஆயுதங்களும் பயமுறுத்துவதற்காக உள்ளன என்பதை அசுரன் மறந்து விட்டார். உன் குரல் ஓங்கிப் பிறர் காதில் பட வேண்டுமானல், நிச்சயம் கையில் நீளமான ஒரு பிரம்பு தயாராக இருக்க வேண்டும்!

ஒட்டு மரங்களில் கூட்டுப் பந்தலாய் நின்று கொண்டிருக்கும் பாரத நாட்டின் குடியரசு, ஒற்றைக் காலைப் பிடிங்கி விட்டால் சரிந்து போகிறது. கூட்டாட்சிக் குடியரசில் மத்திய அரசு கர்நாடகா மாநிலத்தின் கையை முறித்து, தமிழ் நாட்டுக் காவிரி நதிக்கு நீரைத் திறந்துவிடக் கட்டளையிட முடியாது! அல்லது இந்திய இராணுவத்தைக் கர்நாடகா மீது ஏவிட முடியாது! வேற்றுமொழி பேசும் மாநிலங்களுக்குள் ஒருமைப்பாடு இல்லாமையால், மத்திய அரசு சில சமயங்களில் மெளனமாய் இருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? இப்போது (2004) காங்கிரஸ் கட்சி ஆட்சியில் சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதியிலிருந்து ஆந்திரா நல்ல மனதுடன் ஓரளவு நீரைத் தெலுங்கு-கங்கா கால்வாய் மூலம் அனுப்பி வருகிறது. வேறு கட்சி டெல்லிப் பீடத்தில் இருந்தால் சென்னையின் நீரோட்டம் நிறுத்த மாகலாம்! ஊருக்கு நூறு கட்சிகளும், வீதிக்கு ஆறு தலைவரும் தில்லு முள்ளுகள் செய்து கொண்டு கட்டுப்பாடுகளும், முட்டுக்கட்டையும் இட்டு ஒருமைப்பாடு இல்லாத இந்தியாவில் இவ்வளவாவது கிடைத்ததே என்று சகித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? சென்னை அணுமின்சக்தி நிலையங்கள் மீது கற்களை விட்டெறியும் பசுமை மயவாதிகள், கன்னியா குமரி நகரில் ஆயிரக் கணக்கான சுற்றுலா நபர்களுக்குப் போதியச் சுகாதாரக் கழிப்பறைகள், கழிவு நீக்க வசதிகளை ஏற்படுத்த வழி வகுக்காமல் நாற்றம் பிடித்துக் பலவித நோய்களுக்குக் காரணமாய் இருப்பதைத் தவிர்க்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கே இணைத்து, இராவண பலத்துடன் நிரந்தரமாய்த் தீர்க்கலாம்.

யந்திர யுகத்தில் வேரூன்றி விழுதுகள் விட்டு ஆலமரமாய் முன்னேறும் விடுதலை இந்தியாவில் மிகுந்த விஞ்ஞான அறிவு வேண்டாம் என்று கூறும் முதலான பசுமைவாதியும், வெற்று அறிவாளியும் அசுரன் ஒருவராகத்தான் இருக்க முடியும்! பசுமைவாதிகள் எதிர்த்தாலும், யந்திர யுகத்தின் சக்கரங்களை நிறுத்திப் பழைய பதினைந்தாம் நூற்றாண்டுக்கு இந்தியப் பாட்டாளி மக்கள் கூட மீண்டும் செல்ல விரும்ப மாட்டார்கள். மின்சாரத்துக்கு மாற்று வழிகள் உள்ளன என்று கூறினாலும், அசுரன் கலிகால யந்திரங்கள் தேவை என்றோ, அவற்றை உருவாக்க கன யந்திரத் தொழிற் துறைகள் முதலில் அமைக்க வேண்டும் என்றோ, அவற்றை டிசைன் செய்ய ஆழ்ந்த விஞ்ஞானப் பொறியியல் அறிவு அவசியம் என்றோ அசுரன் எப்போது அறிந்துக் கொள்ளப் போகிறார் ?

திரும்பவும் நான் அசுரனுக்குக் கூறுகிறேன்: செர்நோபிள் அணுமின் உலைபோன்று, இந்திய அணுமின் நிலையங்களில் ஒன்றேனும், மனிதத் தவறாலோ அன்றி யந்திரப் பழுதாலோ வெடித்துக் கதிரியக்கத்தை தாரணி எங்கும் பரப்பாது. அதைப் புரிந்து கொள்பவர் வெறும் அறிவாளியாக மட்டும் இருந்தால் போதாது. ஓரளவு விஞ்ஞான அறிவும், திறந்த மனதும் ஆப்பிள் எது, ஆரஞ்சு எது என்று வேறுபாடு காணும் கூரிய

மதியும் வேண்டும். தமிழகத்தின் கிணற்றுக்குள் இருந்து கொண்டு, இந்திய அணுமின் நிலையங்களை நேரடியாகப் பார்க்கத் தேவையில்லை என்று ஆதாரமின்றிப் பிறர் ஊதிய சங்கையே மீண்டும் ஊதிக்கொண்டு அணுத்துறை நிபுணராகக் காட்டிக் கொள்வது, ஆக்க எழுத்தாளிக்கு நெறியாகாது.

அசுரனுக்கு மீண்டும் ஒருமுறை நான் கூறும் ஓர் ஆலோசனை. அடுத்து அவர் எழுதப் போகும் இந்திய அணுத்துறை வண்டவாளங்களை ஆவேசத்தில் குவிப்பதற்கு முன்பு, முதலில் நண்பர் எஸ்.பி. உதயகுமாருடன் ஒழுங்காக வீட்டுப் பாடங்களை இந்திய வலைத் தளங்களில் [www.npcil.org, www.dae.gov.in, www.barc.ernet.in, www.igcar.ernet.in] ஊன்றிப் படித்து, அவை அனைத்தையும் புளுகு என்று புறக்கணிக்காது எடுத்துக் கொண்டு, பிறகு வெளித் தளங்களில் மேய்ந்து அறிவித்தால், திண்ணை வாசகருக்குப் புதிய விருந்தாக இருக்கும். மேலும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் யாரோ ஒருவர் கதிர்வீச்சுக் கனநீர்க் கசியில் தளத்திலே மாண்டதாகக் கூறியது பொய்த்தகவல் என்று அவர் அறிந்தால், அந்த அபாண்டப் பழியைச் சுமத்தியதற்கு அணுசக்தி அம்மனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

(அசுரன் அடுத்த பாணத்தைத் தயாராக வைத்திருக்கிறார்! திண்ணை வாசகர்களே! இக்கட்டுரைப் போர் தொடரும்)

இவைசார்ந்த தலைப்புகளில் திண்ணையில் மேலும் வெளியானவை:

I. (Power from Various Sources)

a) http://www.thinnai.com/science/sc0311041.html [Power Blackout in North America 2003]

b) http://www.thinnai.com/sc0603041.html [Hydro Electric Power(Niagara Falls)]

c) http://www.thinnai.com/sc0610041.html [Wind Power Electricity]

d) http://www.thinnai.com/sc0617043.html [Energy from Ocean Waves, Tides & Thermal-1]

e) http://www.thinnai.com/sc0624044.html [Energy from Ocean Waves, Tides & Thermal-2]

f) http://www.thinnai.com/sc0701042.html [Power from Geothermal Energy]

g) http://www.thinnai.com/sc0715042.html [Power from Solar Energy]

h) http://www.thinnai.com/sc0722044.html [Energy from Renewable Bio-mass]

i) http://www.thinnai.com/sc0729041.html [Renewable Hydrogen Power Vehicles]

j) http://www.thinnai.com/sc0819041.html [Toxic Emissions from Fossil Fuels]

k) http://www.thinnai.com/sc0827044.html [Water Pollutants from Industrial Discharges]

l) http://www.thinnai.com/science/sc0518031.html [Bhopal Chemical Disaster]

II. (Nuclear Assessment Topics)

1. http://www.thinnai.com/science/sc0504032.html [Cancer Kalpakkam]

2. http://www.thinnai.com/sc0909044.html [21 Century Nuclear Power]

3. http://www.thinnai.com/pl0925032.html [Again Kalpakkam]

4. http://www.thinnai.com/science/sc0525034.html [Nuclear Power Risks]

5. http://www.thinnai.com/science/sc0323033.html [Kudaunkulam Risk Assessments]

6. http://www.thinnai.com/pl04190312.html [Kalpakkam By: Gnani (II)]

7. http://www.thinnai.com/pl0918034.html [Kalpakkam By: Gnani (I)]

8. http://www.thinnai.com/ar1111047.html [Article By: N.R. Kulzalini]

****

[jayabarat@tnt21.com (S. Jayabarathan)] [December 1, 2004]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


[மதிப்புக்குரிய நண்பர் அசுரன் அவர்களின் உடல்நிலைப் பாதிப்பைத் திண்ணை அகிலவலைத் தொகுப்பில் படித்து மனம் வருந்திய பலரில் நானும் ஒருவன். அவரது உடல்நலம் சீராகிச் செம்மை அடைய, முதலில் என் பிரார்த்தனைகள்.]

சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும்

பீரங்கி கொண்டு பிளப்பதுவும் எக்காலம் ?

இப்படி ஒருகாலத்தில் தி.மு.க. கவிராயர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் சங்கநாதம் செய்ததுண்டு! இப்போது அசுரன், ஞாநி போன்ற அணுசக்தி எதிர்ப்பாளிகள் பலர் அணுமின் நிலையங்கள் முன் நின்று பீரங்கியால் தாக்கி, இந்தியாவை இருட்டடிப்பில் தள்ள முற்பட்டு வருகிறார்கள். ‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை விடுதலை இந்தியாவில் தமிழகம் புறக்கணிக்கப் படுவதைப் பல்லாண்டுகளாய்ப் பறைசாற்றி வந்தார். இப்போது இந்தியாவிலே இரண்டாவது பெரிய ஆராய்ச்சித் தளமான கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக்கூடம், மற்றும் சென்னை அணு மின்சக்தி நிலையம் ஆகியவைத் தமிழ்நாட்டில் நிறுவகமாகி இயங்கி வருகின்றன. தென்னாசியாவில் 2000 மெகாவாட் மின்சாரம் பரிமாறப் போகும் மிகப் பெரிய அணுமின்சக்தி நிலையம் இப்போது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கூடங்குளத்தில் கட்டுமானமாகி வருகின்றது. பாரதத்தின் பச்சை மயவாதிகள் ‘தெற்கும் தேயட்டும்! வடக்கும் வாடட்டும்! ‘ என்று அணுமின்சக்தி உற்பத்தியில் முன்னேறும் இந்தியாவுக்கு முட்டுக்கட்டை இட்டு வருகிறார்கள்!

21 ஆம் நூற்றாண்டில் நாட்டுக்கு முதல் தேவை நீர்வளம். இரண்டாம் தேவை மின்சக்தி. இந்தியாவின் இவ்விரு முக்கியத் தேவைகளுக்கும் இடையூறு செய்துவரும் எதிர்ப்பாளிகள் யாவரும் தேசப் பற்றில்லாத பிற்போக்குவாதிகளே! மக்கள் தொகை பெருகி வரும் இந்த யந்திர யுகத்தில் வாழும் நம்மை 15 ஆம் நூற்றாண்டுப் பச்சை யுகத்துக்குத் திருப்பி அழத்துச் செல்ல சூழ்மண்டலக் காப்பாளிகள், தயாராக மாட்டு வண்டியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சூழ்மண்டலக் காப்பாளிகள் ஒரு நாட்டுக்குத் தேவையே. ஆனால் இந்தியா முழுவதிலும் அவர்கள் இனம் மட்டும் பெருத்துக் கொண்டே போனால், யந்திர யுகச் சாதனங்கள் அனைத்தும் இயங்காமல் நிறுத்தப்பட்டுக் கண்மூடி விடும். பலவித வர்ணங்களால் வரையப் பட்ட, பொலிவுள்ள பாரத தேசத்தைத் தூரிகை கொண்டு, ஒரே பச்சை நிறமாக்கினால் எப்படி கோரமாய்க் காட்சி தரும் என்று சிறிது நாம் கற்பனை செய்து பார்ப்போமா ? இப்படித்தான் இறைவனிடன் வரம் பெற்ற ஓர் அசுரன், உலகு அனைதையும் பச்சை நிறமாக்க முயன்றான் என்னும் பழைய கதை ஒன்று வழக்கத்தில் பரவி உள்ளது!

இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்குக் காரண கர்த்தாவும் ஓர் அசுரன்தான். நண்பர் அசுரனைத் தாக்க இக்கட்டுரை எழுதப்பட வில்லை. அவரது தவறான கருத்துக்களை அணுசக்தி அம்மன் மீது அம்புகளாக தொடுத்திருப்பதைத் தெளிய வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். அசுரன் கடந்த வாரத் திண்ணையில் (நவம்பர் 11, 2004) எழுதிய நாடகம், ‘கற்பனை ‘ என்று சொல்லித் தப்பிக் கொள்ளப் முயன்றாலும், அணுசக்தியைப் பற்றி நாட்டில் பரவி வந்துள்ள ‘மெய்யான பொய்களைத்தான் ‘, அவர் மீண்டும் தோண்டி அள்ளி அம்மன் மீது அப்பி யிருக்கிறார். என் கட்டுரைப் பதிலைப் படிப்பதற்கு முன்பு, ‘அணுசக்தி அம்மன்: உலகை அழிக்கத் துடிக்கும் ஒரு பிசாசின் கதை ‘ [http://www.thinnai.com/st1111041.html] என்னும் அவர் எழுதிய நிஜ நாடகத்தை முதலில் வாசகர் படித்து நகைத்திட வேண்டுகிறேன். நிஜப் பொய்களின் இந்த நிழல் ஆட்டங்கள், எதிர்ப்பாளிகளின் நெஞ்சில் ஊறிய வெறுப்பு உணர்ச்சியால் ஏற்பட்ட அச்சங்களே தவிர, விஞ்ஞான முறையில் நிரூபணப் படுத்தி எடுத்துக் காட்டிய சான்றுகள் அல்ல!

அசுரனைப் போல் அணுசக்தி அம்மன் மீது அடிக்கடி கணைகளை வீசித் தாக்கி யிருப்பவர் மதிப்புக்குரிய மற்றொரு நண்பர்: ஞாநி! பார்க்கப் போனால் ஞாநி அசுரன் அல்லர்! அசுரன் ஞாநி அல்லர்! அசுரன் ஓர் சூழ்மண்டலவாதி! ஞாநி ஓர் சமூகவாதி! ஆனால் இருவரும் அணுசக்தி அம்மன் மீது தவறான ஒரே மாதிரியான எதிர்ப்புக் கணைகளை ஏவி யிருப்பதால் இருவருக்கும் பதில் அளிப்பது எனக்கு எளிதாகிறது! சென்ற வாரக் கட்டுரை ஒன்றில் [எங்கே செல்கிறோம் ?] ந. இரா. குழலினி அவர்களும் கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளைப் பற்றி இதே பாணியில் எழுதியிருக்கிறார். கல்பாக்கத்தின் அணுமின் ஆய்வுக் கூடத்தைச் சுற்றி வாழும் மக்கள், அதன் கதிரியக்கம் தாக்கிப் புற்று நோயால் இன்னல் படுவதாகவும், குழந்தைகள் ஆறு விரலோடு பிறப்பதாகவும் ஞாநியும் புரளியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்! அவருக்குத் திண்ணையில் நான் எழுதிய பதில், அணுமின்சக்தி பற்றி அசுரன், குழலினி ஆகியோரது தவறான கருத்துகளுக்கும் பொருந்தும். அணுமின் நிலையங்களை உட்புறம் நேராக நோக்காதவர்கள், அணுமின்சக்தி விஞ்ஞானத்தை ஆழ்ந்து அறியாதவர்கள், அரைகுறை அணுவியல் அறிவு பெற்றவர்கள், சூழ்மண்டலக் காப்பாளிகள் ஆகியோரே, அணுசக்தி அம்மன் மீது கற்களை விட்டெறிந்து வருவது புரிந்து கொள்ளக் கூடிய எதிர்ப்புகளே!

இந்தக் கட்டுரை இந்தியா இரகசியமாகச் செய்துவரும் அணு ஆயுதப் பெருக்கத்தைப் பற்றிய தில்லை. அணுமின்சக்தி வளர்ச்சியைப் பற்றியது. கதிரியக்கமற்ற அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் [Nuclear Fusion Power Stations] வரும்வரை, இன்னும் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு நமது மின்சார விளக்குகளைக் கதிரியக்கம் உள்ள அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் [Nuclear Fission Power] மட்டுமே, ஒளியேற்றப் போகின்றன! பாதுகாப்புடனும், கவனமுடனும் அணுமின் சக்தியைப் பாரதத்தில் பயன்படுத்துவதற்கு உரிய ஆக்கவழிகளை, பச்சைமய வாதிகள் எடுத்துக் காட்டினால் நாட்டில் ஒளி உண்டாகும். அல்லது வேறுவித விஞ்ஞானப் பொறியியல் முறைகளில் பேரளவு மின்சக்தி உற்பத்தியை எவ்விதம் சிக்கனமாக, சீக்கிரமாக உண்டாக்கலாம் என்று எடுத்துக் காட்டினால் நாடு நலம் பெறும்.

20 நூற்றாண்டு இடைக் காலத்திலிருந்தே அணுசக்தி யுகமும், அண்டவெளி யுகமும் ஒரே சமயத்தில் விருத்தியாகி இரண்டாம் தொழிற் புரட்சி தோன்றி விட்டது! 1980 ஆண்டுகளில் மின்கணனி யுகமும் தொடர்ந்து, உலகெங்கும் அகிலவலை இணைப்புகள் பெருகி, பல நாடுகளில் மின்சக்திப் பற்றாக்குறை ஏற்பட்டு இருட்டடிப்பும், பழுப்படிப்பும் மக்களைப் பாதித்து வருகின்றன! 1945 இல் ஹிரோஷிமா, நாகசாக்கியில் அணுகுண்டுகள் போடப்பட்டு கதிரியக்கத்தால் 59 ஆண்டுகளாகப் பாதிக்கப் பட்டும், பூகம்பத்தாலும், சூறாவளி சுனாமிகளாலும் அடிக்கடி தாக்கப்பட்டு இடர்ப்படும் ஜப்பானில் 54 அணுமின் நிலையங்கள் 28% ஆற்றலை அளித்து வருகின்றன! இலங்கையில் பாதியளவு இருக்கும் தென் கொரியா இந்தியாவை விட ஐந்து மடங்கு அணுமின்சக்தி உற்பத்தி செய்து 40% பங்கை ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகிலே பிரான்ஸ் நாடு ஒன்றுதான் 59 அணுமின் நிலையங்களை இயக்கி, 63,000 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்து, மிக்க அளவு (76%) பங்கைப் பரிமாறு வருகிறது. அமெரிக்காவில் 103 நிலையங்கள் 97000 மெகாவாட் அணுமின் சக்தி உற்பத்தி செய்தாலும், அவை அனைத்தும் 20% பங்களவே பரிமாறி வந்தன. 2004 ஆண்டில் உலக நாடுகளில் 437 அணுமின் நிலையங்களை 30 நாடுகள் இயக்கி, மொத்த ஆற்றலில் 16% பங்கை ஏற்றுப் பரிமாறி வருகின்றன.

அசுரனது தவறான தகவல்களுக்கு எனது எதிர்முகக் கருத்துக்கள் பின்வருமாறு:

1. அணுமின் நிலையங்கள் உலகத்தை அழிக்கா! அணுமின் நிலையங்கள் அணு ஆயுதங்கள் போன்று வெடிக்கா! ஏராளமான அணு ஆயுதங்கள் பல இடங்களில் வெடித்தால் மட்டுமே உலகை அழிக்கலாம்! அணு குண்டுகள் வேக நியூட்ரான் (Fast Neutron) இயக்கத்தால் வெடிப்பவை! தற்போது இயங்கும் 437 அணுமின் நிலையங்கள் [ஒன்று அல்லது இரண்டு வேகப் பெருக்கிகளை (Fast Breeder) தவிர] யாவும் மிதமாக்கப் பட்ட வெப்ப நியூட்ரான்களால் (Thermal Neutrons) இயங்குபவை.

2. தமிழ்நாடு கூடங்குளத்தில் உள்ள ரஷ்யன் VVER அணு உலைகளில் இந்தியா அணுகுண்டு ஆக்க முடியாது! மின்சக்தி மட்டுமே உற்பத்தி செய்யும். ரஷ்யாவின் அனுமதியும், அகில அணுவியல் பேரவையின் (IAEA) ஆசியுமின்றி ரஷ்யன் அணு உலைகளின் புளுடோனியத்தை எடுத்து இந்தியா அணுகுண்டு செய்ய முடியாது.

கூடங்குளம் VVER அணு உலை செர்நோபிள் மாடல் அணு உலைபோல் வெடிக்காது. [கீழ்க் காணும் 5 ஆம் குறிப்பீடுத் திண்ணைக் கட்டுரையைப் படிக்கவும்]

3. அணுமின் நிலையப் புகை போக்கிகள் இரண்டு விதமானவை. 1. கொதியுலை வெப்பமாற்றியில் கசியும் நீராவியை வெளியாக்கும் புகை போக்கிகள். அவற்றில் வேறு எரியும் புகை எதுவும் வராது! 2. அணுஉலை மூடிய காங்கிரீட் கோட்டை அரணுக்குள் சுற்றிலும் உண்டாகி, முடிவில் கதிரியக்கம் வடிகட்டி வெளியாக்கப்படும் வாயுவின் புகை போக்கி. அதிலும் வேறு எரியும் புகை எதுவும் வராது!

4. அணுஉலைத் தணிப்புச் சாதனங்கள், டர்பைன் நீராவிக் குளிர்கலம் [Steam Turbine Condeser] ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் கடல்நீரில், கதிரியக்கம் வடிகட்டப் பட்ட சாதா நீர் சோதிப்புக்குப் பிறகு கலக்கிறது. கடலுக்கு மீளும் அந்தக் கடல்நீர் வெள்ளத்தில் அதிக அளவு கதிரியக்கம் உள்ளது என்பது தவறு. குறைந்த அளவு கதிரியக்கம் மட்டுமே சோதிக்கப்பட்டு கடல்நீரில் அனுமதிக்கப் படுகிறது.

5. கடந்த 45 ஆண்டுகளாக அணு உலை, அணுமின் நிலையங்கள் பலவற்றிலும் முன்னின்று இயக்கப் பராமரிப்பு, சோதிப்புத் துறைகளில் பணியாற்றி வந்திருக்கிறேன் நான். எனக்கோ, அணுமின் நிலையங்களின் அண்டைக் காலனியில் வாழ்ந்த என் மனைவிக்கோ அல்லது இரு புதல்விகளுக்கோ கதிரியக்கத்தால் எவ்வித உடற்கேடுகளும் இதுவரை வரவில்லை! கல்பாக்கத்தில் நான்கு ஆண்டுகள் பணி செய்த போது, புற்று நோயில் என் அன்னை இறந்தார். அந்தப் புற்று நோய் அணு உலைக் கதிரியக்கத் தாக்குதலால் ஏற்பட்ட தில்லை! எனது இரண்டு புதல்விகளும், ஒரு மருமகனும் அணு உலை அனுபவம் பெற்றவர்கள். இப்போது கனடா அணுமின் நிலையத்தில் பணிபுரியும் எனது புதல்விக்கோ அல்லது அவளது இளமையான இரண்டு குழந்தைகளுக்கோ அசுரன், ஞாநி அச்சமூட்டி வருவதுபோல், கைகளில் ஆறு விரல்கள் முளைக்கவும் வில்லை! காலில் ஏழு விரல்கள் தோன்றவு மில்லை! வயிறு வீக்கம், ஊதிய வயிறு எதுவும் இல்லை! கழுத்து வீக்கம், காய்ச்சல், வழுக்கத் தலை, வயிற்றுப் போக்கு, ஊனிலிருந்து இரத்தம், குருதிச் சீர்கேடு எதுவும் யாருக்கும் கிடையா! பெண்டிர் யாரும் மார்புப் புற்று நோய் வாய்ப்பட்டு, மதலைக்குப் பால் கொடுக்க முடியாமல் கண்ணீர் விட்ட தில்லை! புதல்வியின் குழந்தைகளுக்கோ அல்லது காலனியில் வாழும் மதலைகளுக்கோ வெட்டி வெட்டி இழுக்கும் இழுப்பு நோய் வரவில்லை.

அசுரன், ஞாநி ஆகியோர் காட்டிய அத்தனை நோய்களும், கதிரியக்கம் தாக்காமலே மாந்தருக்கு வரலாம். கதிரியக்கத்தால் வந்த நோய்கள் அவை என்பதற்கு எந்த ஆதாரங்களும், விஞ்ஞான நிரூபணங்களும் இல்லை! அசுரன் போன்ற சூழ்மண்டல வாதிகள் (http://www.iaea.or.at/), வியன்னாவில் இருக்கும் அகில அணுவியல் பேரவை (IAEA), உலக அரங்குகளின் அணு உலைகளைக் கண்காணித்து வருவதை அறிய வேண்டும். பாரதம் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடா விட்டாலும், அகில அணுவியல் பேரவையின் நியதிகளையே, அணுமின்சக்தி இயக்கங்களுக்குப் பின்பற்றி வருகிறது!

வட அமெரிக்காவிலே கனடாவில் உள்ள மிகப் பெரிய பிக்கரிங் அணுமின்சக்தி நிலையத்தின் 8 உலைகள், 5 மில்லியன் மக்கள் தொகை மிஞ்சிய டொராண்டோ நகரத்தின் அருகிலே உள்ளது! அங்குதான் என் புதல்வி எஞ்சினியராகப் பணியாற்றி வருகிறாள். கனடாவிலோ, அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ அணுசக்திக் காலனியில் வாழும் அதிகாரிகள், பணிப்பாளிகள் அனைவரும் பொதுவாக உடல்நலமோடு வாழ்கிறார்கள். அணுமின் நிலையங்களின் அண்டை நீர்வளத்தில் பிடித்த மீன்களைச் சமைத்து உண்டு வருகிறார்கள். யாரும் அதனால் நோய்வாய்ப்பட வில்லை! ஏரியிலோ, கடலிலோ கதிரியக்கத்தால் மீன்கள் செத்து மடியவில்லை. அசுரன் கூறிய நோய்களில் ஒன்றேனும் கதிரியக்கத்தால் வந்திருந்தால், காலனியில் வாழும் யூனியன் ஊழியர்கள் அணுமின் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டு விடுவார்களா ? கல்பாக்கம், ராஜஸ்தான், நரோரா, கக்கரப்பார், கைகா, தாராப்பூர், பாம்பே ஆகிய அணு உலைத் தளங்களின் காலனியில் வாழும் பல ஆயிரக் கணக்கான அதிகாரிகள், பணியாளிகள் எவருமே கதிரியக்கம் தாக்கப்பட்டு, அசுரன் காட்டிய நோய்ப் பட்டியலில் பாதிக்கப் படவில்லை! ராஜஸ்தான், டெல்லி அருகே நரோரா அணுமின் நிலையங்களின் ஊழியர்கள், எத்தகைய பேராற்றல் படைத்த யூனியன் பாதுகாப்பு உடையர் என்பதைத் தமிழர் பலர் அறிய மாட்டார்கள்!

6. அணுசக்திக் கமிஷன் அதிபதி ஒரே அழுத்தலில் தெற்காசியாவையே அழிக்கக் கூடிய அணுகுண்டின் விசை அவர் கைவசம் உள்ளதாம்! என்ன அபத்தமான கற்பனை எழுத்து இது ? அணுகுண்டை ஏவும் கணைகள் அனைத்தும் இந்திய இராணுவத் தளபதியின் கையாட்சியில் உள்ளன! அவற்றை ஏவிடப் பச்சை கொடி காட்டுபவர், இந்திய அரசாங்கத்தின் தலைவராக ஆட்சி செய்யும் பிரதம மந்திரி!

7. பாரத நாடு அணுவியல் துறைகளில் அமெரிக்காவைப் பின்பற்றுவதாகச் சொல்வது கோமாளித் தனமாகும்! விஞ்ஞானத் துறைகளில் முன்னேறும் இந்தியா, அணுவியல் முயற்சிகளில் தனக்கென்று ஒரு தனித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது! எதிர்காலப் பேரளவு மின்சக்தி உற்பத்திக்கு வேகப்பெருக்கி அணுமின் நிலையங்களை [Fast Breeder Power Stations] இந்தியா விருத்தி செய்வதுபோல் பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளன. ஆனால் அமெரிக்க என்றைக்கோ அவ்வழியைப் புறக்கணித்து விட்டது!

8. இந்தியாவில் அரசாங்க உதவி இருப்பினும் அணுமின்சக்தித் துறையகம் [Nuclear Power Corp of India Ltd (NPCIL)] ஓரளவு தனித்துப் பொதுநபர் பங்கீட்டு நிறுவனமாய் இயங்கி வருகிறது. அந்த துறையகம் தனது வரவு செலவு கணக்குகளை பொது நபருக்கு அறிவிப்ப தில்லை என்று அசுரன் புளுகு விடுகிறார். ஆண்டறிக்கைகள், நிதிப்போக்கு விவரங்கள் அனைத்தும், துறையகத்தின் [www.npcil.org] என்னும் அகிலவலை முகப்பில் காணலாம். அத்துடன் இந்திய அணுமின் துறையகத்தின் பணிகள், தகவல், அணுமின் நிலைய இயக்கங்கள், கட்டுமான வேலைகள், பாதுகாப்புகள் அனைத்தையும், அசுரன் போன்றோர் கற்பனைப் புரளி நாடகங்களை எழுதுவதற்கு முன்பு சற்று படித்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்!

9. கன்னியா குமரி, கேரளாக் கடற்கரைகளில் கதிரியக்கம் கொண்ட தோரியம் என்னும் மூலகம் கலந்த ‘மானஸைட் மணல் ‘ [Thorium Monazite Sand] பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்தக் கடற்கரைகளின் மீது 10,000 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து, புரண்டு வாழ்ந்த தமிழர்களும், மலையாளிகளும், அவரது ஆயிரம், ஆயிரம் சந்ததிகளும் கதிர்வீச்சால் எந்த வித நோய்களும் தாக்கப் பட்டதாக இதுவரை நிரூபிக்கப் படவில்லை!

10. அணுசக்திக் கெட்டுப்பாடு, நீதிபாதி, பூட் லிக்கர், பிக் லையர், டி.ஏ.இ. தாஸ் [Dept of Atomic Energy (D.A.E)] போன்ற பெயர்கள், கதிரியக்க காற்றை வெளியிடுவது, சட்டைக்குள் புது ரூபாய்களைத் திணிப்பது என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது, மட்டரக எழுத்தாகத் [Cheap Shots] தெரிகின்றது. கற்பனை நாடகம் என்று வேடம் போட்டுக் கொண்டு, வேண்டு மென்றே குறிப்பிட்ட பெயர்களைச் சொல்லித் திட்டமிட்டு அணுசக்தி அதிகாரிகளைத் திட்டி யிருப்பது கண்ணியமான எழுத்தாகத் தோன்றவில்லை!

11. சூழ்மண்ட காப்பாளி அசுரன் பாரதத்தின் கல்பாக்கம், நரோரா, ராஜஸ்தான், கைகா, கக்கிரபார், தாராப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் சிலவற்றுக்கு விஜயம் செய்து, அவற்றின் காலனியில் வாழும் ஊழியர், அதிகாரிகளுடன் நேராக உரையாடி, அங்குள்ள நீர்வளம், நிலவளம், வாயு மண்டலம், சாப்பாடு, பயிரினம், புல் தின்னும் பசுக்கள் ஆகியவை மாசுபட்டு நாசம் அடைந்துள்ளனவா என்று கண்டு வந்து எழுதினால், திண்ணை வாசகர்களுக்கு மெய்யான அறிவு விருந்தாக இருக்கும்!

தமிழகத்தின் கிணற்றுக்குள்ளே கிடந்தவர் பலருக்கு வடநாட்டு மாந்தரைப் போல போரின் அனுபவங்களும், இன்னல்களும் நேரில் அறிவதற்கு வாய்ப்புக்கள் எவையும் இல்லை. தேசப்பற்று, தேசப் பாதுகாப்புச் சிந்தனை இல்லாத மனிதர்தான் இரகசியப் பாதுகாப்புத் திட்டங்களை எள்ளி நகையாடுவார்! பாதுகாப்பு இல்லாத நாடுகளும், போர் ஆயுதங்கள் இல்லாத படைகளும் உலக வரலாறுகளில் என்ன பாடுகள் பட்டுள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். 2500 ஆண்டுகளாக பாரத நாடு அலெக்சாண்டர் முதல், கஜினி, பாபர் போன்ற முகமதியர், பிறகு பிரான்ஸ், பிரிட்டன், பாரத விடுதலைக்குப் பின்பு சைனா, பாகிஸ்தான் ஆகிய படையெடுப்புகளால் இந்தியர் பட்ட இன்னல்களையும், சிதைக்கப் பட்ட இந்திய காலாச்சாரங்களையும், கோரம் செய்யப்பட்ட நமது கோயில்களையும் இந்தியன் ஒருவன் மறக்க முடியுமா ?

தமிழ்நாடு இந்தியாவில் தனியாகத் தொங்குவதாகக் கனவு கண்டு, அதை மட்டும் தலையில் வைத்துக் கொண்டு கரகமாடி வரும் தமிழர் பலர், தாம் பாரத மாதாவின் புதல்வர் என்று வெளியில் சொல்லிக் கொள்ள வெட்கப் படுவது மெய்யானது! அணுசக்தி அம்மன் நாடகத்தில் பாரத அன்னையின் படம் போட்டு அசுரன் அவமதித்துள்ளது அதற்கு ஓர் உதாரணம்! தேசப் பற்றில்லாத தனித் தமிழர்கள் பலர் பாரத நாட்டின் பாதுகாப்பில் முழுப் பலாபலன்களை அனுபவித்து வந்தாலும், அவற்றை காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்! இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக அணு மின்சக்தி ஆக்குவதற்கு மகத்தான சாதனைகளை நுணுக்கமாகச் செய்துவரும் விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்களைக் கேலி செய்து, அணுசக்தி அம்மன் கோரஸ் பாட்டைப் பாடுவதாய் நாடகத்தில் காட்டுவது, அற்பப் புத்தியைக் காட்டுகிறது. இந்திய அணுசக்திக் கமிஷன் அதிபதி, அணுசக்தித் துறை ஆளுநர் மற்றும் அணுசக்தித் துறைக் கட்டுப்பாடு அதிபர்களை நாடகத்தில் எள்ளி நகையாடுவது சிறுமைப் புத்தியைக் காட்டுகிறது! ஆக்கத் துறைகளில் எதையும் வாழ்க்கையில் சாதித்தவர் எவரும், இந்திய வல்லுநர்களை இவ்விதம் இழிவாகக் கேலி செய்து ஆனந்திக்க மாட்டார்!

இவைசார்ந்த தலைப்புகளில் திண்ணையில் மேலும் வெளியானவை:

1. http://www.thinnai.com/science/sc0504032.html [Cancer Kalpakkam]

2. http://www.thinnai.com/sc0909044.html [21 Century Nuclear Power]

3. http://www.thinnai.com/pl0925032.html [Again Kalpakkam]

4. http://www.thinnai.com/science/sc0525034.html [Nuclear Power Risks]

5. http://www.thinnai.com/science/sc0323033.html [Kudaunkulam Risk Assessments]

6. http://www.thinnai.com/pl04190312.html [Kalpakkam By: Jnani (II)]

7. http://www.thinnai.com/pl0918034.html [Kalpakkam By: Jnani (I)]

8. http://www.thinnai.com/ar1111047.html [Article By: N.R. Kulzalini]

****

[jayabarat@tnt21.com (S. Jayabarathan)] [Nov. 15, 2004]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


[மதிப்புக்குரிய நண்பர் அசுரன் அவர்களின் உடல்நிலைப் பாதிப்பைத் திண்ணை அகிலவலைத் தொகுப்பில் படித்து மனம் வருந்திய பலரில் நானும் ஒருவன். அவரது உடல்நலம் சீராகிச் செம்மை அடைய, முதலில் என் பிரார்த்தனைகள்.]

சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும்

பீரங்கி கொண்டு பிளப்பதுவும் எக்காலம் ?

இப்படி ஒருகாலத்தில் தி.மு.க. கவிராயர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் சங்கநாதம் செய்ததுண்டு! இப்போது அசுரன், ஞாநி போன்ற அணுசக்தி எதிர்ப்பாளிகள் பலர் அணுமின் நிலையங்கள் முன் நின்று பீரங்கியால் தாக்கி, இந்தியாவை இருட்டடிப்பில் தள்ள முற்பட்டு வருகிறார்கள். ‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை விடுதலை இந்தியாவில் தமிழகம் புறக்கணிக்கப் படுவதைப் பல்லாண்டுகளாய்ப் பறைசாற்றி வந்தார். இப்போது இந்தியாவிலே இரண்டாவது பெரிய ஆராய்ச்சித் தளமான கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக்கூடம், மற்றும் சென்னை அணு மின்சக்தி நிலையம் ஆகியவைத் தமிழ்நாட்டில் நிறுவகமாகி இயங்கி வருகின்றன. தென்னாசியாவில் 2000 மெகாவாட் மின்சாரம் பரிமாறப் போகும் மிகப் பெரிய அணுமின்சக்தி நிலையம் இப்போது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கூடங்குளத்தில் கட்டுமானமாகி வருகின்றது. பாரதத்தின் பச்சை மயவாதிகள் ‘தெற்கும் தேயட்டும்! வடக்கும் வாடட்டும்! ‘ என்று அணுமின்சக்தி உற்பத்தியில் முன்னேறும் இந்தியாவுக்கு முட்டுக்கட்டை இட்டு வருகிறார்கள்!

21 ஆம் நூற்றாண்டில் நாட்டுக்கு முதல் தேவை நீர்வளம். இரண்டாம் தேவை மின்சக்தி. இந்தியாவின் இவ்விரு முக்கியத் தேவைகளுக்கும் இடையூறு செய்துவரும் எதிர்ப்பாளிகள் யாவரும் தேசப் பற்றில்லாத பிற்போக்குவாதிகளே! மக்கள் தொகை பெருகி வரும் இந்த யந்திர யுகத்தில் வாழும் நம்மை 15 ஆம் நூற்றாண்டுப் பச்சை யுகத்துக்குத் திருப்பி அழத்துச் செல்ல சூழ்மண்டலக் காப்பாளிகள், தயாராக மாட்டு வண்டியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சூழ்மண்டலக் காப்பாளிகள் ஒரு நாட்டுக்குத் தேவையே. ஆனால் இந்தியா முழுவதிலும் அவர்கள் இனம் மட்டும் பெருத்துக் கொண்டே போனால், யந்திர யுகச் சாதனங்கள் அனைத்தும் இயங்காமல் நிறுத்தப்பட்டுக் கண்மூடி விடும். பலவித வர்ணங்களால் வரையப் பட்ட, பொலிவுள்ள பாரத தேசத்தைத் தூரிகை கொண்டு, ஒரே பச்சை நிறமாக்கினால் எப்படி கோரமாய்க் காட்சி தரும் என்று சிறிது நாம் கற்பனை செய்து பார்ப்போமா ? இப்படித்தான் இறைவனிடன் வரம் பெற்ற ஓர் அசுரன், உலகு அனைதையும் பச்சை நிறமாக்க முயன்றான் என்னும் பழைய கதை ஒன்று வழக்கத்தில் பரவி உள்ளது!

இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்குக் காரண கர்த்தாவும் ஓர் அசுரன்தான். நண்பர் அசுரனைத் தாக்க இக்கட்டுரை எழுதப்பட வில்லை. அவரது தவறான கருத்துக்களை அணுசக்தி அம்மன் மீது அம்புகளாக தொடுத்திருப்பதைத் தெளிய வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். அசுரன் கடந்த வாரத் திண்ணையில் (நவம்பர் 11, 2004) எழுதிய நாடகம், ‘கற்பனை ‘ என்று சொல்லித் தப்பிக் கொள்ளப் முயன்றாலும், அணுசக்தியைப் பற்றி நாட்டில் பரவி வந்துள்ள ‘மெய்யான பொய்களைத்தான் ‘, அவர் மீண்டும் தோண்டி அள்ளி அம்மன் மீது அப்பி யிருக்கிறார். என் கட்டுரைப் பதிலைப் படிப்பதற்கு முன்பு, ‘அணுசக்தி அம்மன்: உலகை அழிக்கத் துடிக்கும் ஒரு பிசாசின் கதை ‘ [http://www.thinnai.com/st1111041.html] என்னும் அவர் எழுதிய நிஜ நாடகத்தை முதலில் வாசகர் படித்து நகைத்திட வேண்டுகிறேன். நிஜப் பொய்களின் இந்த நிழல் ஆட்டங்கள், எதிர்ப்பாளிகளின் நெஞ்சில் ஊறிய வெறுப்பு உணர்ச்சியால் ஏற்பட்ட அச்சங்களே தவிர, விஞ்ஞான முறையில் நிரூபணப் படுத்தி எடுத்துக் காட்டிய சான்றுகள் அல்ல!

அசுரனைப் போல் அணுசக்தி அம்மன் மீது அடிக்கடி கணைகளை வீசித் தாக்கி யிருப்பவர் மதிப்புக்குரிய மற்றொரு நண்பர்: ஞாநி! பார்க்கப் போனால் ஞாநி அசுரன் அல்லர்! அசுரன் ஞாநி அல்லர்! அசுரன் ஓர் சூழ்மண்டலவாதி! ஞாநி ஓர் சமூகவாதி! ஆனால் இருவரும் அணுசக்தி அம்மன் மீது தவறான ஒரே மாதிரியான எதிர்ப்புக் கணைகளை ஏவி யிருப்பதால் இருவருக்கும் பதில் அளிப்பது எனக்கு எளிதாகிறது! சென்ற வாரக் கட்டுரை ஒன்றில் [எங்கே செல்கிறோம் ?] ந. இரா. குழலினி அவர்களும் கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளைப் பற்றி இதே பாணியில் எழுதியிருக்கிறார். கல்பாக்கத்தின் அணுமின் ஆய்வுக் கூடத்தைச் சுற்றி வாழும் மக்கள், அதன் கதிரியக்கம் தாக்கிப் புற்று நோயால் இன்னல் படுவதாகவும், குழந்தைகள் ஆறு விரலோடு பிறப்பதாகவும் ஞாநியும் புரளியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்! அவருக்குத் திண்ணையில் நான் எழுதிய பதில், அணுமின்சக்தி பற்றி அசுரன், குழலினி ஆகியோரது தவறான கருத்துகளுக்கும் பொருந்தும். அணுமின் நிலையங்களை உட்புறம் நேராக நோக்காதவர்கள், அணுமின்சக்தி விஞ்ஞானத்தை ஆழ்ந்து அறியாதவர்கள், அரைகுறை அணுவியல் அறிவு பெற்றவர்கள், சூழ்மண்டலக் காப்பாளிகள் ஆகியோரே, அணுசக்தி அம்மன் மீது கற்களை விட்டெறிந்து வருவது புரிந்து கொள்ளக் கூடிய எதிர்ப்புகளே!

இந்தக் கட்டுரை இந்தியா இரகசியமாகச் செய்துவரும் அணு ஆயுதப் பெருக்கத்தைப் பற்றிய தில்லை. அணுமின்சக்தி வளர்ச்சியைப் பற்றியது. கதிரியக்கமற்ற அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் [Nuclear Fusion Power Stations] வரும்வரை, இன்னும் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு நமது மின்சார விளக்குகளைக் கதிரியக்கம் உள்ள அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் [Nuclear Fission Power] மட்டுமே, ஒளியேற்றப் போகின்றன! பாதுகாப்புடனும், கவனமுடனும் அணுமின் சக்தியைப் பாரதத்தில் பயன்படுத்துவதற்கு உரிய ஆக்கவழிகளை, பச்சைமய வாதிகள் எடுத்துக் காட்டினால் நாட்டில் ஒளி உண்டாகும். அல்லது வேறுவித விஞ்ஞானப் பொறியியல் முறைகளில் பேரளவு மின்சக்தி உற்பத்தியை எவ்விதம் சிக்கனமாக, சீக்கிரமாக உண்டாக்கலாம் என்று எடுத்துக் காட்டினால் நாடு நலம் பெறும்.

20 நூற்றாண்டு இடைக் காலத்திலிருந்தே அணுசக்தி யுகமும், அண்டவெளி யுகமும் ஒரே சமயத்தில் விருத்தியாகி இரண்டாம் தொழிற் புரட்சி தோன்றி விட்டது! 1980 ஆண்டுகளில் மின்கணனி யுகமும் தொடர்ந்து, உலகெங்கும் அகிலவலை இணைப்புகள் பெருகி, பல நாடுகளில் மின்சக்திப் பற்றாக்குறை ஏற்பட்டு இருட்டடிப்பும், பழுப்படிப்பும் மக்களைப் பாதித்து வருகின்றன! 1945 இல் ஹிரோஷிமா, நாகசாக்கியில் அணுகுண்டுகள் போடப்பட்டு கதிரியக்கத்தால் 59 ஆண்டுகளாகப் பாதிக்கப் பட்டும், பூகம்பத்தாலும், சூறாவளி சுனாமிகளாலும் அடிக்கடி தாக்கப்பட்டு இடர்ப்படும் ஜப்பானில் 54 அணுமின் நிலையங்கள் 28% ஆற்றலை அளித்து வருகின்றன! இலங்கையில் பாதியளவு இருக்கும் தென் கொரியா இந்தியாவை விட ஐந்து மடங்கு அணுமின்சக்தி உற்பத்தி செய்து 40% பங்கை ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகிலே பிரான்ஸ் நாடு ஒன்றுதான் 59 அணுமின் நிலையங்களை இயக்கி, 63,000 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்து, மிக்க அளவு (76%) பங்கைப் பரிமாறு வருகிறது. அமெரிக்காவில் 103 நிலையங்கள் 97000 மெகாவாட் அணுமின் சக்தி உற்பத்தி செய்தாலும், அவை அனைத்தும் 20% பங்களவே பரிமாறி வந்தன. 2004 ஆண்டில் உலக நாடுகளில் 437 அணுமின் நிலையங்களை 30 நாடுகள் இயக்கி, மொத்த ஆற்றலில் 16% பங்கை ஏற்றுப் பரிமாறி வருகின்றன.

அசுரனது தவறான தகவல்களுக்கு எனது எதிர்முகக் கருத்துக்கள் பின்வருமாறு:

1. அணுமின் நிலையங்கள் உலகத்தை அழிக்கா! அணுமின் நிலையங்கள் அணு ஆயுதங்கள் போன்று வெடிக்கா! ஏராளமான அணு ஆயுதங்கள் பல இடங்களில் வெடித்தால் மட்டுமே உலகை அழிக்கலாம்! அணு குண்டுகள் வேக நியூட்ரான் (Fast Neutron) இயக்கத்தால் வெடிப்பவை! தற்போது இயங்கும் 437 அணுமின் நிலையங்கள் [ஒன்று அல்லது இரண்டு வேகப் பெருக்கிகளை (Fast Breeder) தவிர] யாவும் மிதமாக்கப் பட்ட வெப்ப நியூட்ரான்களால் (Thermal Neutrons) இயங்குபவை.

2. தமிழ்நாடு கூடங்குளத்தில் உள்ள ரஷ்யன் VVER அணு உலைகளில் இந்தியா அணுகுண்டு ஆக்க முடியாது! மின்சக்தி மட்டுமே உற்பத்தி செய்யும். ரஷ்யாவின் அனுமதியும், அகில அணுவியல் பேரவையின் (IAEA) ஆசியுமின்றி ரஷ்யன் அணு உலைகளின் புளுடோனியத்தை எடுத்து இந்தியா அணுகுண்டு செய்ய முடியாது.

கூடங்குளம் VVER அணு உலை செர்நோபிள் மாடல் அணு உலைபோல் வெடிக்காது. [கீழ்க் காணும் 5 ஆம் குறிப்பீடுத் திண்ணைக் கட்டுரையைப் படிக்கவும்]

3. அணுமின் நிலையப் புகை போக்கிகள் இரண்டு விதமானவை. 1. கொதியுலை வெப்பமாற்றியில் கசியும் நீராவியை வெளியாக்கும் புகை போக்கிகள். அவற்றில் வேறு எரியும் புகை எதுவும் வராது! 2. அணுஉலை மூடிய காங்கிரீட் கோட்டை அரணுக்குள் சுற்றிலும் உண்டாகி, முடிவில் கதிரியக்கம் வடிகட்டி வெளியாக்கப்படும் வாயுவின் புகை போக்கி. அதிலும் வேறு எரியும் புகை எதுவும் வராது!

4. அணுஉலைத் தணிப்புச் சாதனங்கள், டர்பைன் நீராவிக் குளிர்கலம் [Steam Turbine Condeser] ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் கடல்நீரில், கதிரியக்கம் வடிகட்டப் பட்ட சாதா நீர் சோதிப்புக்குப் பிறகு கலக்கிறது. கடலுக்கு மீளும் அந்தக் கடல்நீர் வெள்ளத்தில் அதிக அளவு கதிரியக்கம் உள்ளது என்பது தவறு. குறைந்த அளவு கதிரியக்கம் மட்டுமே சோதிக்கப்பட்டு கடல்நீரில் அனுமதிக்கப் படுகிறது.

5. கடந்த 45 ஆண்டுகளாக அணு உலை, அணுமின் நிலையங்கள் பலவற்றிலும் முன்னின்று இயக்கப் பராமரிப்பு, சோதிப்புத் துறைகளில் பணியாற்றி வந்திருக்கிறேன் நான். எனக்கோ, அணுமின் நிலையங்களின் அண்டைக் காலனியில் வாழ்ந்த என் மனைவிக்கோ அல்லது இரு புதல்விகளுக்கோ கதிரியக்கத்தால் எவ்வித உடற்கேடுகளும் இதுவரை வரவில்லை! கல்பாக்கத்தில் நான்கு ஆண்டுகள் பணி செய்த போது, புற்று நோயில் என் அன்னை இறந்தார். அந்தப் புற்று நோய் அணு உலைக் கதிரியக்கத் தாக்குதலால் ஏற்பட்ட தில்லை! எனது இரண்டு புதல்விகளும், ஒரு மருமகனும் அணு உலை அனுபவம் பெற்றவர்கள். இப்போது கனடா அணுமின் நிலையத்தில் பணிபுரியும் எனது புதல்விக்கோ அல்லது அவளது இளமையான இரண்டு குழந்தைகளுக்கோ அசுரன், ஞாநி அச்சமூட்டி வருவதுபோல், கைகளில் ஆறு விரல்கள் முளைக்கவும் வில்லை! காலில் ஏழு விரல்கள் தோன்றவு மில்லை! வயிறு வீக்கம், ஊதிய வயிறு எதுவும் இல்லை! கழுத்து வீக்கம், காய்ச்சல், வழுக்கத் தலை, வயிற்றுப் போக்கு, ஊனிலிருந்து இரத்தம், குருதிச் சீர்கேடு எதுவும் யாருக்கும் கிடையா! பெண்டிர் யாரும் மார்புப் புற்று நோய் வாய்ப்பட்டு, மதலைக்குப் பால் கொடுக்க முடியாமல் கண்ணீர் விட்ட தில்லை! புதல்வியின் குழந்தைகளுக்கோ அல்லது காலனியில் வாழும் மதலைகளுக்கோ வெட்டி வெட்டி இழுக்கும் இழுப்பு நோய் வரவில்லை.

அசுரன், ஞாநி ஆகியோர் காட்டிய அத்தனை நோய்களும், கதிரியக்கம் தாக்காமலே மாந்தருக்கு வரலாம். கதிரியக்கத்தால் வந்த நோய்கள் அவை என்பதற்கு எந்த ஆதாரங்களும், விஞ்ஞான நிரூபணங்களும் இல்லை! அசுரன் போன்ற சூழ்மண்டல வாதிகள் (http://www.iaea.or.at/), வியன்னாவில் இருக்கும் அகில அணுவியல் பேரவை (IAEA), உலக அரங்குகளின் அணு உலைகளைக் கண்காணித்து வருவதை அறிய வேண்டும். பாரதம் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடா விட்டாலும், அகில அணுவியல் பேரவையின் நியதிகளையே, அணுமின்சக்தி இயக்கங்களுக்குப் பின்பற்றி வருகிறது!

வட அமெரிக்காவிலே கனடாவில் உள்ள மிகப் பெரிய பிக்கரிங் அணுமின்சக்தி நிலையத்தின் 8 உலைகள், 5 மில்லியன் மக்கள் தொகை மிஞ்சிய டொராண்டோ நகரத்தின் அருகிலே உள்ளது! அங்குதான் என் புதல்வி எஞ்சினியராகப் பணியாற்றி வருகிறாள். கனடாவிலோ, அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ அணுசக்திக் காலனியில் வாழும் அதிகாரிகள், பணிப்பாளிகள் அனைவரும் பொதுவாக உடல்நலமோடு வாழ்கிறார்கள். அணுமின் நிலையங்களின் அண்டை நீர்வளத்தில் பிடித்த மீன்களைச் சமைத்து உண்டு வருகிறார்கள். யாரும் அதனால் நோய்வாய்ப்பட வில்லை! ஏரியிலோ, கடலிலோ கதிரியக்கத்தால் மீன்கள் செத்து மடியவில்லை. அசுரன் கூறிய நோய்களில் ஒன்றேனும் கதிரியக்கத்தால் வந்திருந்தால், காலனியில் வாழும் யூனியன் ஊழியர்கள் அணுமின் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டு விடுவார்களா ? கல்பாக்கம், ராஜஸ்தான், நரோரா, கக்கரப்பார், கைகா, தாராப்பூர், பாம்பே ஆகிய அணு உலைத் தளங்களின் காலனியில் வாழும் பல ஆயிரக் கணக்கான அதிகாரிகள், பணியாளிகள் எவருமே கதிரியக்கம் தாக்கப்பட்டு, அசுரன் காட்டிய நோய்ப் பட்டியலில் பாதிக்கப் படவில்லை! ராஜஸ்தான், டெல்லி அருகே நரோரா அணுமின் நிலையங்களின் ஊழியர்கள், எத்தகைய பேராற்றல் படைத்த யூனியன் பாதுகாப்பு உடையர் என்பதைத் தமிழர் பலர் அறிய மாட்டார்கள்!

6. அணுசக்திக் கமிஷன் அதிபதி ஒரே அழுத்தலில் தெற்காசியாவையே அழிக்கக் கூடிய அணுகுண்டின் விசை அவர் கைவசம் உள்ளதாம்! என்ன அபத்தமான கற்பனை எழுத்து இது ? அணுகுண்டை ஏவும் கணைகள் அனைத்தும் இந்திய இராணுவத் தளபதியின் கையாட்சியில் உள்ளன! அவற்றை ஏவிடப் பச்சை கொடி காட்டுபவர், இந்திய அரசாங்கத்தின் தலைவராக ஆட்சி செய்யும் பிரதம மந்திரி!

7. பாரத நாடு அணுவியல் துறைகளில் அமெரிக்காவைப் பின்பற்றுவதாகச் சொல்வது கோமாளித் தனமாகும்! விஞ்ஞானத் துறைகளில் முன்னேறும் இந்தியா, அணுவியல் முயற்சிகளில் தனக்கென்று ஒரு தனித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது! எதிர்காலப் பேரளவு மின்சக்தி உற்பத்திக்கு வேகப்பெருக்கி அணுமின் நிலையங்களை [Fast Breeder Power Stations] இந்தியா விருத்தி செய்வதுபோல் பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளன. ஆனால் அமெரிக்க என்றைக்கோ அவ்வழியைப் புறக்கணித்து விட்டது!

8. இந்தியாவில் அரசாங்க உதவி இருப்பினும் அணுமின்சக்தித் துறையகம் [Nuclear Power Corp of India Ltd (NPCIL)] ஓரளவு தனித்துப் பொதுநபர் பங்கீட்டு நிறுவனமாய் இயங்கி வருகிறது. அந்த துறையகம் தனது வரவு செலவு கணக்குகளை பொது நபருக்கு அறிவிப்ப தில்லை என்று அசுரன் புளுகு விடுகிறார். ஆண்டறிக்கைகள், நிதிப்போக்கு விவரங்கள் அனைத்தும், துறையகத்தின் [www.npcil.org] என்னும் அகிலவலை முகப்பில் காணலாம். அத்துடன் இந்திய அணுமின் துறையகத்தின் பணிகள், தகவல், அணுமின் நிலைய இயக்கங்கள், கட்டுமான வேலைகள், பாதுகாப்புகள் அனைத்தையும், அசுரன் போன்றோர் கற்பனைப் புரளி நாடகங்களை எழுதுவதற்கு முன்பு சற்று படித்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்!

9. கன்னியா குமரி, கேரளாக் கடற்கரைகளில் கதிரியக்கம் கொண்ட தோரியம் என்னும் மூலகம் கலந்த ‘மானஸைட் மணல் ‘ [Thorium Monazite Sand] பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்தக் கடற்கரைகளின் மீது 10,000 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து, புரண்டு வாழ்ந்த தமிழர்களும், மலையாளிகளும், அவரது ஆயிரம், ஆயிரம் சந்ததிகளும் கதிர்வீச்சால் எந்த வித நோய்களும் தாக்கப் பட்டதாக இதுவரை நிரூபிக்கப் படவில்லை!

10. அணுசக்திக் கெட்டுப்பாடு, நீதிபாதி, பூட் லிக்கர், பிக் லையர், டி.ஏ.இ. தாஸ் [Dept of Atomic Energy (D.A.E)] போன்ற பெயர்கள், கதிரியக்க காற்றை வெளியிடுவது, சட்டைக்குள் புது ரூபாய்களைத் திணிப்பது என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது, மட்டரக எழுத்தாகத் [Cheap Shots] தெரிகின்றது. கற்பனை நாடகம் என்று வேடம் போட்டுக் கொண்டு, வேண்டு மென்றே குறிப்பிட்ட பெயர்களைச் சொல்லித் திட்டமிட்டு அணுசக்தி அதிகாரிகளைத் திட்டி யிருப்பது கண்ணியமான எழுத்தாகத் தோன்றவில்லை!

11. சூழ்மண்ட காப்பாளி அசுரன் பாரதத்தின் கல்பாக்கம், நரோரா, ராஜஸ்தான், கைகா, கக்கிரபார், தாராப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் சிலவற்றுக்கு விஜயம் செய்து, அவற்றின் காலனியில் வாழும் ஊழியர், அதிகாரிகளுடன் நேராக உரையாடி, அங்குள்ள நீர்வளம், நிலவளம், வாயு மண்டலம், சாப்பாடு, பயிரினம், புல் தின்னும் பசுக்கள் ஆகியவை மாசுபட்டு நாசம் அடைந்துள்ளனவா என்று கண்டு வந்து எழுதினால், திண்ணை வாசகர்களுக்கு மெய்யான அறிவு விருந்தாக இருக்கும்!

தமிழகத்தின் கிணற்றுக்குள்ளே கிடந்தவர் பலருக்கு வடநாட்டு மாந்தரைப் போல போரின் அனுபவங்களும், இன்னல்களும் நேரில் அறிவதற்கு வாய்ப்புக்கள் எவையும் இல்லை. தேசப்பற்று, தேசப் பாதுகாப்புச் சிந்தனை இல்லாத மனிதர்தான் இரகசியப் பாதுகாப்புத் திட்டங்களை எள்ளி நகையாடுவார்! பாதுகாப்பு இல்லாத நாடுகளும், போர் ஆயுதங்கள் இல்லாத படைகளும் உலக வரலாறுகளில் என்ன பாடுகள் பட்டுள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். 2500 ஆண்டுகளாக பாரத நாடு அலெக்சாண்டர் முதல், கஜினி, பாபர் போன்ற முகமதியர், பிறகு பிரான்ஸ், பிரிட்டன், பாரத விடுதலைக்குப் பின்பு சைனா, பாகிஸ்தான் ஆகிய படையெடுப்புகளால் இந்தியர் பட்ட இன்னல்களையும், சிதைக்கப் பட்ட இந்திய காலாச்சாரங்களையும், கோரம் செய்யப்பட்ட நமது கோயில்களையும் இந்தியன் ஒருவன் மறக்க முடியுமா ?

தமிழ்நாடு இந்தியாவில் தனியாகத் தொங்குவதாகக் கனவு கண்டு, அதை மட்டும் தலையில் வைத்துக் கொண்டு கரகமாடி வரும் தமிழர் பலர், தாம் பாரத மாதாவின் புதல்வர் என்று வெளியில் சொல்லிக் கொள்ள வெட்கப் படுவது மெய்யானது! அணுசக்தி அம்மன் நாடகத்தில் பாரத அன்னையின் படம் போட்டு அசுரன் அவமதித்துள்ளது அதற்கு ஓர் உதாரணம்! தேசப் பற்றில்லாத தனித் தமிழர்கள் பலர் பாரத நாட்டின் பாதுகாப்பில் முழுப் பலாபலன்களை அனுபவித்து வந்தாலும், அவற்றை காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்! இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக அணு மின்சக்தி ஆக்குவதற்கு மகத்தான சாதனைகளை நுணுக்கமாகச் செய்துவரும் விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்களைக் கேலி செய்து, அணுசக்தி அம்மன் கோரஸ் பாட்டைப் பாடுவதாய் நாடகத்தில் காட்டுவது, அற்பப் புத்தியைக் காட்டுகிறது. இந்திய அணுசக்திக் கமிஷன் அதிபதி, அணுசக்தித் துறை ஆளுநர் மற்றும் அணுசக்தித் துறைக் கட்டுப்பாடு அதிபர்களை நாடகத்தில் எள்ளி நகையாடுவது சிறுமைப் புத்தியைக் காட்டுகிறது! ஆக்கத் துறைகளில் எதையும் வாழ்க்கையில் சாதித்தவர் எவரும், இந்திய வல்லுநர்களை இவ்விதம் இழிவாகக் கேலி செய்து ஆனந்திக்க மாட்டார்!

இவைசார்ந்த தலைப்புகளில் திண்ணையில் மேலும் வெளியானவை:

1. http://www.thinnai.com/science/sc0504032.html [Cancer Kalpakkam]

2. http://www.thinnai.com/sc0909044.html [21 Century Nuclear Power]

3. http://www.thinnai.com/pl0925032.html [Again Kalpakkam]

4. http://www.thinnai.com/science/sc0525034.html [Nuclear Power Risks]

5. http://www.thinnai.com/science/sc0323033.html [Kudaunkulam Risk Assessments]

6. http://www.thinnai.com/pl04190312.html [Kalpakkam By: Jnani (II)]

7. http://www.thinnai.com/pl0918034.html [Kalpakkam By: Jnani (I)]

8. http://www.thinnai.com/ar1111047.html [Article By: N.R. Kulzalini]

****

[jayabarat@tnt21.com (S. Jayabarathan)] [Nov. 15, 2004]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா