விஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா ?
காற்று அசுத்தமும், தண்ணீர் அசுத்தமும் பெருகி வரும் இந்தியா, வெகுவிரைவில் விஷ மெர்க்குரிக்கான உலகத்தின் குப்பைக்கூடையாகவும் ஆகி வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வு குழு ஒன்று தெரிவித்துள்ளது.
வளர்ந்த நாடுகள் பாதரசத்தை உபயோகத்திலிருந்து நீக்கி வரும் இந்த வேளையில், இந்தியா தொடர்ந்து மறு உபயோகம் செய்யப்படும் பாதரசத்தையும், பாதரச உபரிப்பொருட்களையும் இறக்குமதி செய்து வருகிறது என்றும் இந்த இறக்குமதி கடந்த 7 வருடங்களில் ஆறுமடங்கு அதிகரித்திருக்கிறது என்றும் அறிவியல் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது. Center for Science and Environment (CSE).
‘நாம் வெகு விரைவிலேயே உலகத்தில் விஷ பாதரசத்தின் குப்பைக்கூடையாக ஆகிவருகிறோம் ‘ என்று சிஎஸ்ஸி இயக்குனர் சுனிதா நாராயண் அவர்கள் தெரிவிக்கிறார்.
உலகப்பொருட்களை மறு உபயோகம் செய்வதில் முதலாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இவ்வாறு மறு உபயோகம் செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் காரணமாக சுகாதாரப் பிரச்னைகளையும் எதிர்நோக்கிவருகிறது. பிளாஸ்டிக் முதல் கம்ப்யூட்டர் பழைய பொருட்களிலிருந்து எஃகு வரை எல்லா அபாயகரமான பொருட்களும் அபாயகரமான முறையில் மறுஉபயோகத்துக்காக இந்தியா வருகின்றன. இவை பெரும்பாலும் விஷத்தையும் heavy metals என்று கூறக்கூடிய விஷ உலோகங்களையும் இந்தியச் சுற்றுச்சூழலில் நிறைக்கின்றன.
சிஎஸ்ஸி என்ற சுற்றுச்சூழல் குழு சமீபத்தில் கோக்கோகோலா பெப்ஸி போன்ற குளிர்பானங்களில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளை ஆராய்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. இதன் கூற்றுப்படி, இந்தியாவின் பாதரச இறக்குமதி 1996/97இல் 257 டன்களாக இருந்தது, இன்று 2002/03இல் 1386 டன்களாக அதிகரித்திருக்கிறது.
பெரும்பாலான பாதரசம் ஸ்பெயின், பிரிட்டன், ருஷ்யா, இத்தாலி மற்றும் அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் பாதரச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. ‘நாம் உலகத்தின் குப்பைக்கூடையாக ஆக முடியாது ‘ என்று இயக்குனர் கூறுகிறார். ‘பாதரசம் எங்கும் போவதில்லை. அது எல்லா உயிரனங்களுக்குள்ளும் தங்குகிறது. அது உணவு சங்கிலியில் எளிதாக பயணம் செய்கிறது. பாதரசத்தை இவ்வாறு இறக்குமதி செய்வது முழு உயிரனங்கள் மக்கள் தாவரங்கள் அனைத்தையும் அபாயத்துக்குள் கொண்டுவருகிறது ‘ என்றும் கூறுகிறார்.
ஏற்கெனவே நிலத்தடி நீரில் ஏராளமான அளவு பாதரசம் இருப்பதாக சமூக சேவையாளர்கள் கூறுகிறார்கள். நாட்டில் உபயோகிக்கப்படும் சாதரண குடிதண்ணீரில் ஏராளமான அளவு விஷ பூச்சிக்கொல்லிகளும், விஷங்களும், ஆண்டிபயாடிக்ஸ் ஆகியவையும், விஷ உலோகங்களும், மலமும் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
சில அரசாங்க பரிசோதனைகள் சுமார் 50 சதவீத உணவு மற்றும் பானங்கள் இவ்வாறு அசுத்தமானவையாக இருக்கின்றன என்று தெரியப்படுத்துகின்றன. இவ்வாறு அசுத்தமான உணவு பொது ஆரோக்கியத்தின் தீவிர பிரச்னை என்று மத்திய மாநில அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
சட்டங்களும் இல்லை, முக்கியமாக இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் குறைவாகவே இருக்கிறது.
இப்படியான அசுத்தங்கள், கான்ஸர், பிறப்புக் குறைபாடுகள், தீராத வியாதிகள் ஆகியவற்றை உருவாக்குகின்றன. ஏழை மற்றும் படிப்பறிவற்ற விவசாயிகள் இன்னும் ஏராளமான பூச்சிக்கொல்லிகளையும், உரங்களையும் ஏன் டிடிடி போன்ற தடை செய்யப்பட்டவற்றையும் நேரடியாகவே பாதிக்கப்பட்ட தாவரங்கள் மீதும் விலங்குகள் மீதும் தெளிக்கிறார்கள்.
- சைக்கிள்
- ரமணன், NRI
- தெளிவு
- குழந்தை
- அமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்
- விடியும்! – (21)
- உறவு
- அவரோகணம்
- பெண்ணில்லா உலகம்.
- மூடநம்பிக்கைக்கு அறிவியலைப் பலியிட்ட பல்கலைக்கழகங்கள்
- உயிர்ப்பலியும் பெரியாரும்
- கடிதங்கள்( தமிழ்) – நவம்பர் 6, 2003
- ஆதம்பூர்க்காரர்கள்
- குலேபகாவலி Vs மிராண்டா
- சூஸ்பொரி – கல்லூரிக் காலம் – 6
- 3 கவிதைகள்
- சொல்லாத ஒரு சொல்
- காய்ந்து கொண்டிருக்கும் நதியின் துயரை:கூட்டுக்கவிதை
- தெரிந்துகொள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்று
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -4
- தீபங்கள்
- நீயும்–நானும்
- நமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா ?
- அணுத்திமிரும், ‘அணுஜனநாயகமும் ‘
- தயிர் சாதம்
- கவிதைகள்
- அத்தை மகள்!
- சூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்
- அமெரிக்க அணுத்துறைத் தணிப்பு முறைகள் இந்தியாவுக்கு ஒத்தவையா ? பாரதம் வாழைப்பழக் குடியரசா ? அல்லது பலாப்பழக் குடியரசா ?
- வட இந்திய கார கத்திரிக்காய் கறி
- எனக்குப் பிடித்த கதைகள் – 84 – மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் ‘மாடும் மனிதனும் ‘
- வடஇந்திய மோர்க்கறி அல்லது மோர்க்குழம்பு (தஹி கி கறி)
- ரவி ஸ்ரீநிவாசுக்கு பதில்
- திறந்த விழிகள்:கட்டுக்கோப்பான படைப்புமுறை நோக்கி: ஆர். ஆர். சீனிவாசனின் விவரணப்படங்கள்
- பல கோடி பிரபஞ்சங்களா ? அல்லது நமது பிரபஞ்சத்தின் அதிர்ஷ்டம் தானா ?
- கலைஞர்-ஜெயமோகன்
- கண்ணப்ப தம்பிரான் – அஞ்சலி
- சாரு நிவேதிதாவின் கோணல்கள் – நாடோடிப் பக்கம்
- புகாரி நூல் வெளியீடு
- பாராட்டியே தீரவேண்டும் பாலாவை
- Mr. & Mrs. Iyer
- தீக்கதிர் தோழர்களின் தீபா ‘வலி ‘
- ஒரு நாள் மட்டும்……..
- சொந்த மொழி
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 2
- திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்
- குறிப்புகள் சில-நவம்பர் 6 2003
- இஸ்லாத்தில் பிரிவினை
- விஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா ?
- நந்தவனத்தில் ஓர் ஆண்டி
- கடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் , 6, 2003
- ஒரு வரவுக்காய்..
- முனி.
- தமிழ் சினிமாவின் பிதாமகன் (கள் ) – யார்… ?
- இறைவா நீ என்ன சாதி ?
- நிறமற்ற ஒரு சுவர்
- கவிதைகள் சில
- உயிர்மை நவம்பர் 2003 இதழிலிருந்து