சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue


லண்டனின் சாக்கடைகள் வெகு சீக்கிரமே வர்த்தக நிறுவனங்களுக்கிடையே அதி வேக இணையத் தொடர்புக்காக உபயோகப்படுத்தப்பட இருக்கின்றன.

டயல் செய்து கிடைக்கும் இணையத்தொடர்பு வேகத்தைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும் பிடி நிறுவனத்தின் செம்பு கம்பி ப்ராண்ட்பாண்ட் இணைப்பு மூலம் இன்றைய ப்ராண்ட்பாண்ட் கொடுக்கப்படுகிறது.

புதிய நிறுவனம் அர்பாண்ட் , சுமார் 80 கிமீ சாக்கடை இணைப்பு மூலம் சுமார் 8400 கட்டடங்களுக்கு திட்டமிட்டுள்ளது.

இணைக்கப்படும் பாதிக் கட்டடங்கள் பாதாள இணைப்பிலிருந்து சுமார் 50 மீட்டர்கள் தள்ளி இருக்கும்.

இந்த நிறுவனம் நேரடியாக இறுதி உபயோகிப்பாளர்களுக்கு இணைப்பு கொடுக்காது. இது மொத்த விலையாக இடையில் இருக்கும் பல இணையத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்கும்.

‘இறுதி மைல் தீர்வு என்பது மிகப்பெரிய பிரச்னையான விஷயம். பல நிறுவனங்கள் பிடி நிறுவனத்திடமிருந்து செம்புக்கம்பி தீர்வையே நம்பி இருக்கின்றன. பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பிடியிடமிருந்து ஒத்திக்கு எடுக்க வேண்டியகட்டாயத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் நாங்கள் தரும் மாற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறோம் ‘ என்று கூறுகிறார் அர்பாண்ட் நிறுவனத்தின் தலைவர் ரோஜர் வில்ஸன்

‘போக்கு வரத்து நெரிசலுக்கிடையே சாலைகளை நோண்டுவது என்பது மிகப்பெரிய பிரச்னை. நாங்கள் நேரடியாக ஏற்கெனவே இருக்கும் சாக்கடை குழாய்களை உபயோகிப்பதன் மூலம் சாலைகளைத் தோண்டுவது என்பதே இல்லாமல் போய்விடும். இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது ‘ என்று கூறுகிறார் இவர்.

Series Navigation

செய்தி

செய்தி