ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue


ஆந்த்ராக்ஸ் பாக்டாரியாவில் இருக்கும் மூன்று புரோட்டான்கள் அதனை படுபயங்கரவிஷமாக ஆக்குகின்றன

அறிவியலாளர்கள் இந்த ஆந்த்ராக்ஸ் பாதிப்பின் தீய விளைவுகளை தடுக்க புது வழிகளை கண்டறியத் தேவையான் விஷயங்களை அறிந்துள்ளார்கள்.

இந்த ஆந்த்ராக்ஸ் பாக்டாரியம் மனித உடலை தாக்க உபயோகிக்கும் இன்னொரு ஆபத்தான மூலக்கூறைப்பற்றியும் எல்லாவிஷயங்களையும் அதன் வடிவமைப்பையும் பற்றி கண்டறிந்துள்ளார்கள்.

ஆண்ட்ரூ போம் என்ற பாஸ்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர், ‘இவ்வாறு ஆந்த்ராக்ஸ் பாக்டாரியத்தை ஆராய்வது பல விதங்களிம் அறிவியல் சமூகத்தின் புரிதலை விரிவுபடுத்தியிருக்கிறது ‘ என்று கூறுகிறார்.

ஆந்த்ராக்ஸ் விஷம் மூன்று புரோட்டான்களால் ஆனது. இவை சேர்ந்து வேலை செய்கின்றன. இவை இந்த பாக்டாரியத்தின் விதைகளை நுகர்ந்தவுடன் மனிதனைக் கொல்லக்கூடியவை.

முதலாவது புரோட்டான் மற்ற புரோட்டான்களை மனித உடலின் எதிர்ப்புச்சக்தியிடமிருந்து காப்பாற்றுகிறது. இரண்டாவது மனித உடலின் எதிர்ப்புச் சக்தி செல்களை அழிக்கிறது. மூன்றாவது மூலக்கூறு ஓடேமா ஃபாக்டர் (Oedema Factor EF) என்று அழைக்கப்படுகிறது. இது மனித உடலின் செய்தித்தொடர்புச் சாதனத்தை அழிக்கிறது. இவ்வாறு பாதிக்கப்படும் செய்தித் தொடர்புச் சாதனம், செல்களின் சக்தி சமச்சீர்வைக் குலைக்கிறது. இதன் காரணமாக செல்கள் அதிகமாக திரவத்தை உட்கொள்ள ஆரம்பிக்கின்றன.

இதனால், நோயாளிகள் ரத்தக்கசிவு ஏற்பட்டு, செப்டிக் அதிர்ச்சியில் இறக்கிறார்கள்.

அறிவியலாளர்கள் இந்த இரண்டு புரோட்டான்களின் வடிவமைப்பை சென்ற வருடம் வெளியிட்டார்கள். இந்த வாரம் நேச்சர் இதழில், ஆராய்ச்சியாளர்கள் ஒடேமா ஃபாக்டரின் வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளார்கள். இது எவ்வாறு செய்தித்தொடர்புக்கு முக்கியமான மூலக்கூறுடன் இணைந்து அதனை செயலிழக்கவைக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த மூலக்கூறுகளின் உள்ளே இருக்கும் அணுக்களை தெளிவாக வரையறை செய்தவன் மூலம், மருந்து நிறுவனங்கள் இந்த மூலக்கூறுகளை தடுக்கும் மூலக்கூறுகளை வடிவமைக்க உதவி இருக்கிறார்கள்.

இதன் பலனாக ஃப்ரெஞ்ச் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தை உருவாக்கி இருக்கிறார்கள். இது வெற்றிகரமாக எலிகளிடம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Series Navigation

செய்தி

செய்தி