இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்

This entry is part [part not set] of 43 in the series 20110529_Issue

ஷம்மி முத்துவேல்



இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி
சிக்கலாகுகையில்
சுவாசமோர் விசையில்
மென்காற்றாகவோ புயல்மழையாகவோ
ஏன் பெருமூச்சாகவும்
இருத்தல் கூடும் .

ஒரு கயிற்றின் வழியில்
இரு முனைகளாக வழிந்தோடுமவை
வெவ்வேறு கோணங்கள் தீண்டி
ஒரு மையப்புள்ளியில் ஒன்றுபட
இரு எல்லைகளில் உருட்டப்பட்ட புள்ளிகளாக
மீளவும் சிக்கல்கள்
பிரிக்கப்படாமல்
அவள்
மற்றும்
அவன் ….

-ஷம்மி முத்துவேல்

Series Navigationகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் >>

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்