மீன்பிடி கொக்குகள்..

This entry is part [part not set] of 43 in the series 20110529_Issue

இளங்கோ



வார்த்தைகளின்
வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன்
என் மனவெளியை
சூறையாடிக் கொள்

நேற்றிரவு உரையாடலின்
குளம்
இன்னும்
தளும்பிக் கொண்டிருக்கிறது

அதில்
உன் மௌனக் கொக்கு
ஒற்றைக் காலில்

நி
ற்
கி

து..

நீ
சுருள் பிரிக்கும்
உன் கைத் தூண்டில் முனையில்
ஒரு எழுத்து நெளிகிறதே

மீன் பிடிக்கவா..?

தூ..!

கொக்கை விரட்டு
கொக்கை விரட்டு..

*******
— இளங்கோ

Series Navigationகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் >>

இளங்கோ

இளங்கோ