சாலைக் குதிரைகள்

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

சூர்யா நீலகண்டன்


சாலையில் சிங்கமாய் சீறி
இயந்திரக் குதிரைகளில்
பறந்தவர்களை
காவல் துறை
கேமிராக் கண்களில்
பார்த்து கைகளில்
விலங்கை மாட்டியது.

சிறையின் கம்பிகளுக்குள்
இருந்து கண்ணயர்ந்தவர்களின்
கனவில் ஒரு தேவதை வந்து
சொன்னாள்..

போட்டிகளுக்கென்றே
களங்கள் இருக்கின்றன..
திறன்களையெல்லாம்
அங்கே கொட்டினால்
கோப்பைகளெல்லாம்
வீட்டில் குவியுமே என்று.

Series Navigation

சூர்யா நீலகண்டன்

சூர்யா நீலகண்டன்