இனிவரும் வசந்தத்தின் பெயர்

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

கலாசுரன்


*
வெளிறிய கோடை இலைகளே..
வறண்டு போன
நடை பாதைகளே..
நீருடை பூணும்
கானல்களே..
ரத்தமற்று சுருங்கிப் போன
நதி தமநிகளே..
கருகி விழுந்த
பூவிதழ்களே..

எனதிந்த
வெற்றுக் காகிதங்களிடம்
இனிவரும்
வசந்தத்தின் பெயரை மட்டும்
சொல்லுங்கள்..
*
***
கலாசுரன்

Series Navigation

கலாசுரன்

கலாசுரன்