ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

தேனு


.
வார்த்தைக்கூடை நிரம்ப
பலவண்ண பொய்களுடன்
வெளியேறுகிறேன்
காலைவெயில் நுகரும்
வியர்வையுடன்…
.
ஒவ்வொரு பொய்
துழாவியெடுத்து
சூடிக் கொள்ளும் வேளையிலும்
கண்ணீர்த்துளிகளுடன்
என் கற்பனை தோட்டத்தில்
ஒரு மலர் உதிர்கிறது…
.
நிலவு நீண்டிடும்
இருளினை அள்ளிப் பருகி
நாளின் இறுதியில் நுழைகிறேன்,
நிர்வாணமாய் நிற்கிறது
அருமை தோட்டம்..
.
மறுநாள் வியர்வை நுகர
நான் வெளியேறுகையில்
தோட்டம் நிரம்ப
வண்ண மலர்கள் பூத்துச்
சிரித்திருக்கின்றன..
.
– தேனு [thenuthen@gmail.com]

Series Navigation

தேனு

தேனு