மரணத்தின் தூதுவன்

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

ஷம்மி முத்துவேல்



அந்த குளக்கரையில் நின்றிருந்த
ஒற்றை நாரையின்
அலகுகளில் காத்து இருக்கின்றான்

எதிர்பார்ப்பின் சாளரம் திறந்து வைத்தபடி
கிணற்றுக்கும் வாய்க் காலுக்கும் இடையே
துள்ளிக் கொண்டு திரிகிறது
ஓர் மீன் கூட்டம்…

காற்றின் கடும் தாக்கம் கண்டு
ஒளிந்து இருக்கும் தாய் பறவையின்
கண்களின் தவிப்பு
இடிக்கு பற்றி எரியும் மரத்தைப்
பார்க்கும் போது ….

மழையின் அடர் இருட்டில்
ஒடுங்கியபடி அமர்ந்து இருக்கும்
தோல் வற்றிப் போன கிழவனின்
அருகே நிற்கும்
கூரையற்ற குட்டிச்சுவர் …

ஷம்மி முத்துவேல்

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்