சுயபரிசோதனை
சின்னப்பயல்

உன்னை அதிகம்
துன்புறுத்தியிருக்கிறேனா ?
அது என் சுயத்திற்கு
மகிழ்வைத்தந்திருக்கிறது
உன்னை அதிகம்
காயப்படுத்தியிருக்கிறேனா ?
அது என் சுயத்திற்கு
மருந்து போடுவதற்கு
பயன்பட்டிருக்கிறது.
உன்னை அதிகம்
உதாசீனப்படுத்தியிருக்கிறேனா ?
அது என் சுயத்திற்கு
செருக்கைத்தந்திருக்கிறது.
உன்னை ஒரு புழுப்
போல் நடத்தியிருக்கிறேனா ?
அது எனக்குள் இருந்த
மிருகத்திற்கு உணவாகியிருக்கிறது.
என்னிலும் பார்க்க
உன்னை மேலெழும்ப விடாமல்
அமிழ்த்தியிருக்கிறேனா ?
அது எனது சுயத்தைக்
கூறுபோடுவதிலிருந்து
தப்பிக்க வைத்திருக்கிறது.
எனக்கென உன்னை
உருக வைத்துப்பார்ப்பதில்
என் சுயம் இன்னமும்
தனது இடத்தை,இருப்பை
வலுவாகவே தக்கவைத்துக்கொள்கிறது.
ம்…
பிறர் அடக்கி ஒடுக்கப்படுவதிலும்
ஒரு இன்பம் இருக்கத்தான்
செய்கிறது என்பதை
என் சுயம் உணர்ந்துகொள்வதில்
மீள் பரிசோதனையின்றி
அது தன் வேலையைத் தொடர்ந்து
நடத்திக்கொண்டுதானிருக்கிறது.
– chinnappayal@gmail.com
சின்னப்பயல்
- மனசு
- இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10
- வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்
- யார் கொலையாளி? – துப்பறியும் சிறுகதை
- விஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்
- கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது
- யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்
- ஊட்டவுட்டுத் தொரத்தோணும்
- கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)
- குதிரைகள் இறங்கும் குளம்
- இரட்டை ரோஜா இரவு
- அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)
- பெருங்கிழவனின் மரணம்
- என் மண்!
- அதுவரை பயணம்.
- மரணத்தின் தூதுவன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)
- களங்கமில்லாமல்..
- நெய்தல் போர்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)
- புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!
- செம்மொழித் தமிழின் பொதுமை
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)
- பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்
- நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.
- அலை மோதும் நினைவுகள்
- பிரச்சாரம்
- பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9
- தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி
- இலக்கு
- சுயபரிசோதனை
- சிலர் வணங்கும் கடல்
- தேடும் உள்ளங்கள்…!
- என் மூன்றாம் உலகம்!
- கவலை
- அப்படியாகிலும் இப்படியாகிலும் …
- அதனதன் தனிமைகள்
- அறை இருள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35