இரட்டை ரோஜா இரவு

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

தேனு



சத்தமாக
ஒரு உரையாடல்
மௌனித்திருந்த வேளையில்,
இரு உடல்களுடன் தனிமை நாற்றமும்
அறை முழுக்க
கட்டவிழ்க்கப்பட்டிருந்தது..
.
மௌனித்திருந்த உரையாடலின்
முன்குறிப்பு
ஒற்றை இரவிலோ,
ஒற்றை கவிதையிலோ
நிச்சயமாக நிறையாது எனக்கு..
.
பார்வைகளில் பரிமாறப்படும் ஒரு மன்னிப்பில்
நான் நானாகவும்
அவள் நானாகவும் ஒன்றிணைய
அறையின் விளக்குகள்
வெள்ளை நிறத்தில் மழை பொழிவதைப்
விரிவாகச் சொல்வதற்கில்லை…
காதல் என்னும் ஒற்றை சொல்
போதுமானது..
.
பிறகான மிச்ச இரவில்
எங்களுக்குள்ளான இடைவெளியை
நிரப்பிடுகின்றன,
ஒன்றோடொன்று புணரத்துவங்கிய
விழிகளும் விரல்களும்..
.
– தேனு [thenuthen@gmail.com]

Series Navigation

தேனு

தேனு