நினைவுகள்
முனைவர் சி.சேதுராமன்
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
என்றும் என் நினைவுகள்
என் மண்ணைச் சுற்றிக் கொண்டு……
பிறந்தது, வளர்ந்தது, நடந்தது எழுந்தது
அனைத்தும் எந்தன் மனக் கண்ணில்
ஆனால் ஏனோ என்னுள்ளே
ஆழ்ந்த துயரம் எழுகின்றது
வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதற்கு
வளமையாய் வேரூர் சென்றாலும்
வளமையாய் என்றும் என்னுள்ளே
என் மண்ணின் நினைவே வருகிறது
பழகிய இடங்கள் பழகிய முகங்கள்
பழகிய வீடு பழிகிய மரங்கள்
பழகிய காடு, பழகிய குளங்கள்
படிப்பதற்காகச் சுற்றிய இடங்கள்
எல்லாம் அனைத்தும் எந்தன் உள்ளே
மறக்க முடியா மங்காத நினைவுகள்..
துயில் எழுந்தவுடன் தூய்மைக் காற்றைத்
துய்க்க முடியா துயரநிலைதான்
நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாய்
இயல்பாய் பழக கறுக்கும் மனிதர்கள்
இயலாமையாலே இருக்கும் மனிதர்கள்
வண்டி, வாகனம், வசதிகள் அனைத்தும் இருந்தும் எனக்கு
மனது இங்கே ஒட்டவுமில்லை ஒதுங்கவுமில்லை
மண்ணைத் தேடி மனதும் ஓட
மண்ணில் வாழ்ந்த நினைவுகள் என்னுள்
சக்கரம் போலே சடுதியில் வந்தது…
எத்தனை சுகமாய் அந்நிய மண்ணில்
எப்படியாக வாழ்ந்தாலும்……..
எந்தன் நினைவில் என்தாய் மண்தான்
என்றும் எங்கும் எதிலும்
எந்தன் நினைவுகள் தோறும்
மண்ணின் நினைவுகள்……
மறக்க முடியா இதய உறவுகள்……
மனதில் நீங்கா நினைவுகள்….
- யட்சியின் குரல்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)
- வெளியேறுதலுக்குப் பின்
- மரம் மறப்பதில்லை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4
- ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை
- “நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்
- கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்
- ப.மதியழகன் கவிதைகள்
- பதிவிறக்கக் கனவு
- விடுபட்டவை
- இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]
- சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்
- கொள்ளை..
- முடிச்சு
- அவள்
- சாளரங்கள்
- வெயில் நிலவு!
- அவள் நிறையும் கிறுக்கல்கள்
- செம்மொழித் தமிழின் தனித்தன்மை
- தாங்கல்
- மரத்தின் கௌரவம்
- இரண்டு கவிதைகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு
- மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- புள்ளிகளும் கோடுகளும்.
- பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை
- கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3
- அதையும் தா
- ‘மம்மி’ தாலாட்டு!
- மீள்தலின் இருப்பு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)
- பெண்ணே நீ …..
- அப்பாவின் வாசம்
- அதிகமாகும்போது
- நினைவுகள்
- நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)