வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்.


சேதமாக்கியது .
——————————
இரவின் மன அலறல்
மவுனத்தை சேதமாக்கியது .
கடக்கின்ற கனமேற்றும்
நொடிகள் வெறுமையாக
இறைந்து இருக்கிறது
என் வெற்றிடத்தில் .

தோன்றியறியாத தனிமை
அமைதியை குலைக்கும்
விதமாகவே கண்ணிர் துளியான
நிகழ்வு நடைபெறுகிறது
அப்பழுக்கற்ற அமைதி மேலும்
சூடி கொள்கிறது இந்த இரவின் மனம் .
இதன் மைய நோக்கு விசை
குறிக்கப்படுகிறது விலகிய
கோணம் விரைவிலே
மாற்றியமைக்கப்படலாம்.

இரவில் அகற்றப்படும் புன்னகை
வன்மம் கொண்டே ஒப்பிடப்படுகிறது
சிதறிய சிறு ஒளியில் இரவு தன்
போர்வையை போர்த்தி கொண்டது
இனி செய்ய வேண்டியது இந்த இரவை
கடந்தாக வேண்டும் என்பதே .

————————————————————————————————
இன்றும் அப்படியே .
——————————————-

துருத்திய கனவொன்று
பகலிலும் காண கிடக்கிறது
இயல்பை மிஞ்சும் அளவில்
சில நூற்றாண்டின் வன்மம்
மேலும் வலிமையடைகிறது .

அதன் உறுதியான சிதைவை
விருப்பும் காரணம்
இன்னும் உருவாக்கப்படவில்லை .
தோன்றலின் அமைவு எப்பொழுதும்
சந்தேகத்தின் மீதே அமர்த்தப்பட்டிருக்கிறது .

எழுகின்ற நம்பிக்கை வெறும்
சொல்லாகவே உணர காலம்
எதையும் விட்டு வைக்கவில்லை
இன்றும் அப்படியே .

வளத்தூர் தி .ராஜேஷ்.

Series Navigation

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்


ஒரு அன்பு
——————————————
ஒரு அன்பு
அவ்வளவு
எளிதாக
உணரகூடியதல்ல
அதன்
மகத்துவம்
புரிவதற்கு
முன்பு
அதன்
புத்துணர்ச்சியை
உடேன
நாம் பெறுவதே
அந்த
அன்பினை
பெறுவதற்கு
நாம் தகுதி
உடையவர்களாகிறோம் .

அன்பு
அளப்பரிய
பல புரிதல்
உள்ளடக்கியது
அது எங்கும்
வியாபித்திருக்கும்
பிரபஞ்சம்
இங்கு இப்படி தான்
இருக்க வேண்டும்
என்ற
பிறப்பிக்கப்பட்ட
கட்டளை ஏதும்
இதில் இருக்க
போவதில்லை .

பிரிந்த அன்பு
நெருங்கும்
அன்பு
என்று எந்த
அளவுகோலும்
இதில் வரையறுக்கவில்லை.

என்
வருங்கால
துணைவிக்கு
எந்த அளவிற்கு
தகுதியாக இருக்க
போகிறேன் என்ற
கேள்வி எழவே
வாய்பிருக்க கூடாது .

அவ்விதமான அன்பை
நன் வழங்கும்
பொழுதோ
பெரும் பொழுதும்
உள்ளத்தில்
எந்த களங்கமும்
இன்றி இருக்க
அன்பு தன்னை
மாற்றியமைக்க
வேண்டியதில்லை
அது ஒரு
அன்பாக இருந்தாலே
போதுமானது .
———————————————————————————————-
நாள்
—————–

இன்று கொடுக்கப்பட்ட
என் தினம் எவ்விதம்
கழிந்தது
ஒரு முன்னோட்டமாய்
நினைவின் அசைவில்
ஏற்றப்படுகிறது .

முதல் யோசனையில்
பத்து நிமிடம் கழிந்தது
பிறகும் தொடர்கிறது
நேரங்களின் இயக்கம் .

பல புன்னைகையை
புரிந்திருக்கலாம்
அதை கவனிக்க
நானும் நீங்களும்
மறந்திருக்கலாம் .

சில கோபங்களை
மிக எளிமையாக
கையாண்டு இருக்கலாம்
நானும் நீங்களும்
மறைக்க வாய்ப்பில்லாமல்
ஏற்று கொண்டிருக்கலாம் .

நீங்கள் அறிந்திராத
கணத்தில் என் மனதின்
கண்ணிர் ஆவியாகி
போயிருக்கலாம் .

சிறுது வேலை
செய்து இருக்கலாம்
என நீங்கள் நம்பும்
காரணங்கள்
கிடைத்திருக்கலாம் .

தினமும் முழுமையாக
உணவு உண்பவனாக
உங்களுக்கு இன்றும்
காட்சியளித்திருக்கலாம்.

திடிரென தோன்றும்
இயலாமையின்
ஆளுமை மீண்டும்
நீள்கிறது .

வெறுமையும் தனிமையும்
நான் கருதி கொண்டிருக்கும்
அமைதியை மேலும்
தனித்து விட போக போகிறது
நானும் நீங்களும்
அதன் ஊடே சிறிது
நேரம் பயணித்தோம்
பிறகு அதன் தடங்களை
ஒருவேளை
நீங்களோ நானோ
அழித்திருக்க
வாய்ப்பிருக்கிறது .

உயிராக நேசிக்கும்
பிரபஞ்சம் பற்றி
சில மைக்ரோ நொடிகளில்
எளிதாக நினைத்தாயிற்று
இப்பொழுது புன்னைகையும்
கோபமும் கண்ணீரும்
ஒரு சேர வருவதை
நீங்கள் கவனித்தாலும்
உங்களுக்கு தெரியாது.

அது என் கனவாகவே
உங்களுக்கு
தோற்றமளிக்கிறது.

பொதுவாக எப்பொழுதும்
போல இன்றும்
எல்லாவற்றையுமே
சகிக்க கூடிய நாட்களாக
இருக்கத்தான் செய்கிறது .
-வளத்தூர் தி .ராஜேஷ்

Series Navigation

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்



அதன் மீதமே
————————
பிறப்பிக்கபட்ட நிர்பந்தம் என்னை
தழுவி கொள்வதற்கு முன்
தொடர்ந்து எழுகின்ற மவுன அலறல்
சுயத்தில் எதிரொலிக்க மறுக்கிறது
அதன் மீதமே .
பழியின் தீரம் என்னை பிடித்தது
தப்பி விட முயலவில்லை
வன்மம் பெருக்கெடுக்கிறது
காணும் யாவற்றிலும் நிழலாய் பயணக்கிறது
ஒவ்வொருவரின் மீதும் குற்றம்
சுமத்த வாய்ப்பு எளிதாகியது .
——————————————————————————-

அஞ்சுவதில்லை
—————————–
செயலை ஏற்றுகொள்ளும் முனைப்பில்
தவறின் அறியாமை தன்
புன்னைகையில் இன்னும் மிளிர்கிறது
அதனால் உண்டாகுகிற நிதானிக்கும்
தன் மனிப்பை சற்று மேலோட்டமாக
ரசிக்க உங்களுக்கு எப்பொழுதும்
நேரம் இருந்து கொண்டே இருப்பதால்
தவறின் செயல் தொடர்கிறது .
இருந்தும் மனதின் கட்டமைப்பின் விதை
கூற்றின் செயலுக்கு அஞ்சுவதில்லை .
—————————————————————————–

நாமாவோம்
———————–
தீண்டப்படாத எந்த நினைவையும்
விட்டு வைக்கவில்லை இனி
தவிப்புகளை புரிந்து கொள்கின்ற
ஒரே மொழி நம் மவுனம் மட்டுமே .

அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகள்
தினமும் வந்து சேர்ந்து விடுகிறது
ஒன்றுபடும் நம் நேசத்தில்
என் தவறுகளும் பொய்மையும்
உன்னிடம் மேன்மையடையக்கூடும் .

என் வரையறையில் உன்னை
காண்பது விட உன் வரைமுறையில்
நம் வாழ்வை காண்போம்
கற்பனையில் சொல்வதாக
எண்ணி விட கூடும் ஆதலால்
நூற்றில் நானோவின் ஒரு
பகுதியை எழுதி விடுகிறேன்
மன்னிப்பாயாக .

நம் தேடல்கள் இனி நாமாவோம்
பெருகி கொள்கின்ற விருப்பம்
பொருந்தும் மனமாகும்.

இன்று வரை நீ யாரென்று
தெரியவில்லை நாளை வரை
காத்திருக்க வைக்க வேண்டுமா
முதல் முறையாக நியாயப்படுத்தி
கொள்கிறது பல நிலைகளுடைய
தன் விருப்பங்கள் .

Series Navigation

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்


மெய்யாகும் சூழ்.

வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே
நம்பிக்கையும் துரோகமும் பதிவிறக்கம்
செய்யப்பட்டு வந்திருக்கிறது
உனது எனது பேதமில்லை
ஒன்றிலிருந்து ஒன்றாக
ஒவ்வொருவரிடமும் பின்னப்பட்டிருக்கும்
நிர்பந்தங்கள் எப்பொழுது அவிழ கூடும் .
காண்கின்ற எல்லாவற்றிலும்
கேள்விகளும் பதில்களும்
இவையாகவே தொற்றி கொண்டிருக்கிறது .

இது வரை தோன்றிடாத எண்ணங்களில்
அடங்கி இருப்பவையாக கருதப்படும்
அதன் இயக்கங்கள் யாவற்றிலும்
நம் இப்பொழுதைய சிந்தனைகள் கொஞ்சமேனும்
அடித்தளமிட்டு பரிகாசித்து கொண்டிருக்கும் .

கூற்றின் அறம் பொய்க்குமாயின்
தவறின் கொள்கைகள் நியாயப்படுத்த
காரணங்கள் எளிதாக கிடைத்து விடுகிறது
சூழ்ந்து இருக்கும் நிலை கூட அவ்வாறே
தோற்றமளித்து கொண்டிருக்கிறது
இன்றளவும் .

செய்து கொண்டிருப்பவை அனைத்தும்
அகத்தின் மெய்யை உரமேற்று கொண்டிருப்பவை
ஒளிகளின் பார்வையை அதன் நிழல் கொண்டு
வழிப்பட்டு வந்தவை ஒளியாகவே உணரும்
காலத்தின் சூழ் மெய்யாகும் .
———————————————————————————————————–
ஒப்பற்ற வெளி .

முடிவில்லா நெறியினை
வழிபட்டு வந்ததன்
வினை
பழியொன்றை என்னில்
சேர்க்கப்பட்டன .

நன் மதிப்பை
குலைக்கும் விதமாக
செயலும் துணை
சேர்ந்ததாக
அறிவிக்கப்பட்டன .

தன்னை அறிய
நேரம் இல்லாத
காரணத்தில்
மற்றவை அறிந்து
கொள்வதன் விருப்பம்
இப்பொழுது
எனக்காகிறது .

தயவு எனக்காகும்
நேரத்தில் மற்றவையை
பரிந்துரை செய்ய
இன்னும் கூடுதல்
பணிவு அவசியமாகிறது .

மொத்தத்தில் சிதறிய
மனங்களை அனைத்தும்
ஒன்று சேர்த்து கொள்கிறது
ஒப்பற்ற வெளி .
————————————————————-
-வளத்தூர் தி .ராஜேஷ்

Series Navigation

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ்

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

தி .ராஜேஷ்


மறைக்கப்படுபவையாகிறது

என் பலவீனத்தின் பிரதிபலிப்பு
உங்களை வதம் செய்யாமல்
இருக்கவே ஏற்று கொள்பவை
மறைக்கப்படுபவையாகிறது .

உங்களுக்கென்றே ஒதுக்கியுள்ள
வாழ்வை நிறைவாக்க
இலட்சிய வீறுநடை புரிய
என் இயல்பின் மூலத்தில்
கொள்முதலாக்குகிறது .

செயல் புரிகின்ற
மறு ஆக்கம்
என் வினையினை
சாராமல் இருக்கவே
கற்பிக்கப்படுபவையாகிறது.

மிகைமை உடைய
நியாயம் உங்களுக்காகும்
பொழுது என் சிதைக்கப்பட்ட
பிரபஞ்ச பெருங்கனவு
விழித்து கொண்டே
இருக்கும் உங்களை
விழுங்க .
– தி.ராஜேஷ்

—————————————————-

சூல்நிலையாக்கம்

ஆக்கத்தின் ஆளுமை
பல சிந்தனையின்
ஒரு வடிவை செய்வதற்கும்
எடுத்துரைக்கவும்
வாய்ப்புண்டு .

அதனால் உணர்வதற்கு
வழிவகை இருப்பதாக இன்றும்
நம்பிக்கைக்கான விதை
வேரூன்றப்படுகிறது என்னில் .

உடைக்கப்பட்ட பொருளின்
சிதறல்கள் ஒடுக்கப்படுவதால்
அதன் தடயத்தின் இயல்பை
மீறுவது கேள்வியின் ஊடே
உங்கள் அகத்தில்
ஏற்றப்படுகிறது .

மதிக்கப்படும் தீஞ்செயல்
ஒன்றை இதற்கு மேலும்
நான் புனிதப்படுத்த
தேவையில்லை
அவையாவும் ஏற்கனவே
விட்டொழியப்பட்ட
காரணத்தால் இன்றைய
உங்களின் கேள்விகள்
தேவையாய் இருக்கவில்லை

பிறகு அறிய போகும் பதில்
கண்டிப்பாக அப்பொழுது
உங்களுக்கானாதாக
இருந்திருக்காது.

ஒரு சூல்நிலையாக்கம்
உங்களில் நுழைந்து விடில்
மீண்டு விடுதல்
மற்றுமொரு வழியில்
உங்கள் கவனம்
சிதறடிக்கப்படுகிறது
உங்கள் சுயமும்
இதில் அடங்கி இருக்கலாம்.
-தி .ராஜேஷ்

Series Navigation

தி .ராஜேஷ்

தி .ராஜேஷ்