உயிரோடு நீ

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

செண்பக ஜெகதீசன்


இந்த உலகில்
இருப்பவரில் பலர்
எப்போதோ செத்துவிட்டவர்கள்..
அழுவதற்கு
ஆள்தேடி அலைந்து
வாழ்க்கை என்ற பெயரில்
வலம் வந்துகொண்டிருப்பவர்கள் !

உழைக்கும் தோழனே
உன்வழியே செல்,
எதிரில்வரும் பிணங்களால்
எந்தப் பாதிப்பும்
வந்துவிடாது..
நடந்துசெல் மேலே..
நல்ல சகுனம்தான் !

செண்பக ஜெகதீசன்

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்