கடல் உள்ளும் வெளியேயும்..

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

தேனம்மை லஷ்மணன்


********************************************

கடற்கரையோரம்
செல்லும் போதெல்லாம்
சுனாமியும்
சர்வதேச எல்லையுமே
நினைவை உறுத்தி..

காற்று வாங்க நினைத்து
காற்றோடு கலந்த
மூச்சையெல்லாம் உணர்ந்து
சங்கு., சிப்பி., மணல் குத்த

அலைச் சத்தம் துரத்த
செயலற்ற பாதசாரியாய்
தடுமாறி திரும்பி ஓடினேன்
வீட்டுக் காற்றை சுவாசிக்க..

Series Navigation

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்