பிறருக்காக வாழ்பவன்

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

வருணன்



பெரும் ரசனைக்காரனாக
தன்னைப் பறைசாற்றிக் கொண்டவன்
எரிச்சலுருகிறான் தாமதமாவது பற்றி
நாவிதனின் விரல்களுக்கிடையில்
நர்த்தனமிடும் கத்தரியின் கிறீச்சொலியை
ரசிக்காமல்…
தான் பிறருக்காகவே வாழ்பவனென
அவன் சொல்லிக் கொள்வதில்
ஒரேயொரு உண்மையும்
சிலவேறு அர்த்தங்களும்
இருக்கவே செய்கின்றன.

-வருணன்

Series Navigation

வருணன்

வருணன்