வளையல் துண்டுகளின் காட்சி

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

அன்பாதவன்



அருகருகே த் தொடர்கிறது
நம் பயணம்
சுவாரஸ்ய மவுனத்தோடும்
சுகமான நினைவுகளுடனும்
தண்டவாளங்களைப் போல
தகுந்த இடைவெளியோடு.
@
உடைந்த வளையல்துண்டுகளாய்
வீழும் உரையாடல்களைக் குலுக்க
மனசின் முப்பட்டைக் கண்ணாடியில்
திரள்கின்றனப் புதுப்புது பொழிப்புரைகள்.
@
’பசிக்குதுடா’-என்றக் கெஞ்சலில்
எட்டிப்பார்க்குமுன்னுள்ளொருக்
குழந்தை

பசியறிந்து ஊட்டிய விரல்களிலிருந்து
வழியுமுன் கடவுளின் மனிதம்

சொல்லதிகாரம் திரண்ட
கட்டளைகளில்
நிமிர்ந்தப் பனையென உன்
ராட்சசம்

சொல் செல்லமே
யார்தான் நீ?
@
அன்பாதவன்
Anbaadhavan1963@gmail.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.