மகரந்தங்களில் தேனுண்ணும் வ‌ண்டுக‌ள்

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ராம்ப்ர‌சாத்


வாசங்களின் அஸ்திவாரங்களில்
பூக்கப் பழகிவிட்டு
அவைகளுக்கு அஸ்திவாரங்களின்றிப்
பூக்கத்தெரிவதே இல்லை…

அஸ்திவாரங்களின் உதவியின்றி
வேரூன்றுவதை பற்றிய
வண்டுகளின் கேள்விகளை
பதில்களின்றி புறக்கணிக்கின்றன…

வாசங்களுக்காகவே மகரந்தங்களை
வளர்க்க முனைகின்றன
பூக்கள்…

மகரந்தங்களில் தேனுண்ணும்
வாய்ப்புக‌ளை வண்டுகள் கேள்விகளில்
இழ‌க்க‌ விரும்புவ‌தில்லை…

– ராம்ப்ர‌சாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation