இனம் இனத்தோடு…!

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

சபீர்



பிறிதொரு
பின்னிரவில்
ஈர வெளிச்சமும்
தூர வெளிச்சமு மென
மின் கம்பங்களைக்
கடந்து நடக்கயில்
நீண்டும் குறுகியும்
பெருத்தும் மெலிந்தும்
என் பாதம்
தொட்டடுத்தே வந்து…

வெளிச்ச விளிம்புகளிலும்
வீட்டினுள்ளும்
கலங்கியும் தெளிந்தும்
மங்கியும் மடிந்தும்…

ஆயினும்,

தொடர்ந்தே வந்த
என் நிழல்…
மனைவி உறங்கும்
சயன அறை சென்று
விளக்கனைத்ததும்
உக்கிர இருளில்…
இனம் இனத்தோடு!

-sabeer
Sabeer.abushahruk@gmail.com

Series Navigation

சபீர்

சபீர்