கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நாம் ஊமைகளாக மூலை முடுக்குகளில் தெரியாமல் முடங்கிக் கிடந்தோம். ஆனால் இன்று நமது குரல் ஓங்கி வானகமே அதிரும் வண்ணம் முழக்குகின்றது.”
“நாமோர் சிறிய பொறியாக சாம்பல் குவியலில் புதைக்கப் பட்டிருந்தோம். ஆனால் இன்று நாமோ சீறி எழும் தீக் கனலாக வனக் குன்றின் வாசலில் நிற்கிறோம்.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
+++++++++++++++
ஏகாந்த வாழ்க்கை
+++++++++++++++
என்னரும் சகோதரனே ! நீ
உன் புகழ்ப் பீடத்தின்
மீதமர்ந்து
உன்னைச் சுற்றி யுள்ளோர்
உன் கம்பீரத்தை வாழ்த்தி
தீரச் செயல்களைப் போற்றி
பேரறிவை வியந்து
தேவ தூதருள் ஒருவராய்
உன்னை நோக்கி
வானளாவ முழக்குவதை
நானும் கண்டிருக் கிறேன் !
+++++++++
உன் குடிமக்களைப் பார்த்து நீ
உவப்பதை –
உன்னத வெற்றிகளின்
வெகுமதியை –
உன் உடலுக்கு
நீயே ஆத்மா வென்பதை
நான் உன் முகத்திலே
கண்டிருக்கிறேன் !
+++++++++++
பிற்காலத்தில் மறுபடி நான்
நோக்கிய போது
ஏகாந்தனாய் தனித்து நீ
ஆசனத்தின் அருகில்
நிற்கக் கண்டேன் !
நாற்புறமும் உன் முன்னே
நாடு கடத்தும் கரங்கள்
நீட்டி இருந்தன !
கண்ணுக்குத்
தெரியாத பிசாசுகள் உனக்காகப்
பரிவுக்கும் அருளுக்கும்
இரங்கிப் பாவிப்பது போல்
உனைப் பாதுகாக்க
யாசித்தன
நேசமும் கணப்புத் தழுவலும்
சேர்ந்து !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 14 2010)
- முள்பாதை 60
- பரிமளவல்லி 25. திருத்தங்கள்
- இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்
- பூவா…தலையா…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9
- பந்தயங்கள்
- எஸ்தரும் கருப்பண்ணசாமியும்
- ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.
- பேச மறந்த குறிப்புகள்
- சத்யானந்தன் கவிதைகள்
- மூன்றாம் எண் மதுக்கடையிலிருந்து!
- அருவி
- இன்னுமொரு முறை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..
- மீண்டுமொரு மழைக்காலம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4
- வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்
- இவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்
- பல்வலி என்பது யாதெனில்…!
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21
- அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு
- பணம் காய்க்கும் இளஞ்செடிகள்
- திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்
- மக்கள் கலை இலக்கிய விழா
- ரசிப்பு
- தொலைவின் தூரம்
- ஆங் சான் சூ கீ
- முதிர் இளைஞா…
- மௌனம்
- கோநா கவிதைகள்
- சிலை பேசினால்
- ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்