கைப் பிடியின் பிடிவாதம்
குமரி எஸ். நீலகண்டன்

என்னுடன் தொங்கி
விளையாடியத் தோழனாய்
அந்தக்காலக் கதவின்
தாழ் கைப்பிடி.
அப்பா அம்மா
தங்கையென எல்லோரின்
சந்தோஷ சங்கடங்கள்
கோப தாபமென
மன அழுத்தங்களின்
மின்சார பாய்ச்சல்களுக்கும்
ஈடு கொடுத்து..
இயங்கியது இக்கைப்பிடி.
ஆனந்தத்தில் ஆடாமல்
துயரத்தில் துவளாமல்
அமைதியாய் அசைகிற
அந்தக்காலக் கைப்பிடி.
பளபளக்கிற இதன்
மேனிக்குள் எங்கள்
குடும்ப வரைபடமாய்
எங்கள் எல்லோரின்
கைரேகைகள்.
காலம் கடந்து
மெலிந்த வலிந்த
அழுத்தங்களுக்கும்
தடுமாறாமல்
தடம் மாறாமல்
இளமைத் துடிப்புடன்
இன்றும் இயங்கும்
இந்தக் கைப்பிடி.
இன்று எனது
முதுமையைச் சொல்கிறது
கதவைத் திறக்க
முனைந்த எனக்கு
திறக்காமல் பிடிவாதமாய்
- பரிமளவல்லி 24. சந்தேகங்கள்
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- ஒரு பாக்டீரியாவின் கனவு..
- முள்பாதை 59
- ஆயிரங்கால் மண்டபம்
- கிட்டிப் புள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8
- டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்
- ஆதிவண்ணம்
- துடித்தலும் துவள்தலும்
- அம்மாவின் கேள்வி
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3
- கைப் பிடியின் பிடிவாதம்
- கவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்
- M. ராஜா கவிதைகள்
- கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20
- மறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)
- வடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை
- ஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட்சி
- வண்ணதாசனின் ஒட்டுதல் படித்தேன்
- வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ
- கம்பன் காட்டும் விதி
- இவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்
- ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்
- இலக்கியவாதிகளும் சோளக்காட்டு பொம்மையும்
- ஆபத்து
- கேள்விகளால் வாழும் மரணம்
- லதாமகன் கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)
- நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..
- சலன மழை!
- உன்னோடு நீ..
- கானல் வஞ்சம்
- சடலாய்வு
- புத்தமாவது
- ரகசியம் பரம ரகசியம்