மரமாக மனித வாழ்க்கை

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்



காற்றிலும் கதிரிலும்
சோறு பொறுக்கும்
இலைகளாய்
நம் பொழுதுகள்

கிளைப்பதும் காய்ப்பதுமாய்
நம் குடும்ப உறவுகள்

மரத்துக்கும் அடங்காத
மண்ணுக்கும் அடங்காத
சல்லி வேர்களாய்
நம் ஆசைகள்

செத்த பிறகும்கூட
சாத்தானாய் வாழுமாம்
ஆசைகள்

ஆசைகளான
சல்லி விரல்களால்
குருடாகிப் போயின
ஆன்மீகம் தேடும்
ஆணிவேர்கள்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்