கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++
++++++++++++++
எத்தனை விதமான பெண்டிர் ?
++++++++++++++
வாலிபன் ஒருவன் வழி நெடுவே
கேள்வி கேட்டு அலைந்தான் :
“ஞானி ஒருவரைக்
காண நான் விழைகிறேன்;
இயல வில்லை என்னால்.”
அருகில் நின்றவன் கூறினான் :
“மரக் குதிரை மேலமர்ந்து அங்கே
சிறுவரோடு
விளையாடி வரும்
அந்த மனிதரைத் தவிர
எந்த நபரும் இல்லை
எமது ஊரில்.
உள்ளொள,¢ கூரிய அறிவு
விரிந்த விழுமம் உடையவர்,
ஆனால் அவற்றை யெல்லாம்
மறைத்துக் கொண்டு
சிறுவரோடு விளையாடுகிறார்.”
++++++++++
சிறுவர் விளையாடும் இடத்தை
நெருங்கிக் கேட்டான் :
“அன்புத் தந்தையே !
நீர் சிறுவனாய் மாறியதின்
மர்மம் என்ன ?”
மா மனிதர் கூறினார் :
“போடா போ !
எந்த மர்மமும் இன்றில்லை”
வழிப்போக்கன் கேட்டான் :
“குதிரையைத் திரும்பி ஒருகணம்
பதில் அளிப்பீர் !”
குருநாதர் கூறினார் :
“விரைவாகக் கேள் !
நேர மில்லை எனக்கு !”
+++++++++++
தனது முக்கிய
வினாவைக் கேளாமல்
விகடம் பேசினான் வழிப்போக்கன் !
“திருமணம் புரிய வேண்டும்
பொருத்த மான பெண்ணொருத்தி
இருக்கி றாளா இந்தத்
தெருவில் ?”
குருநாதர் கூறினார் :
“முத்தரப் பெண்டிர் உள்ளார்
இத்தரையில் !
இருவர் துயர் கொடுப்பவர் !
ஒருத்தி ஆத்மாக்கு
அமுத சுரபி !
முதல் பெண்
முழு மனைவி ஆவாள் உனக்கு !
அடுத்த பெண்
பாதி மனைவிதான் உனக்கு !
மூன்றாம் பெண்
தீண்டாள் உன்னை !
ஊரை விட்டு
ஓடிப் போய்விடு
குதிரை உன் தலையை எட்டி
உதைப்ப தற்கு முன் !”
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 26 2010)
சி. ஜெயபாரதன், கனடா
- நினைவுகளின் சுவட்டில் – 56
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.
- சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்
- புறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்
- சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்…
- போந்தாக்குழி
- பரிமளவல்லி 18. ‘இன்Nஃபா-ட்ராக்’
- இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:
- சத்யானந்தன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி
- நிழல் வேண்டும் காலம்
- நண்பேன் . . . ?!?
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2
- அன்பானது குடும்பம்
- இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்
- திண்ணைகள் வைத்த வீடு..
- மீராவாணி கவிதைகள்
- கவிதை வரையறுக்கிற மனம்
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- அம்ஷன் குமார் – ஒருத்தி – மற்றும் டாக்குமண்டரிகள் நேரம் மாற்றம்
- தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை
- இவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி
- தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்
- நிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 7)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15
- அகழி
- மரணக்குறிப்பு
- நிழல்
- மடங்கி நீளும் சொற்ப நிழல்..
- பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…
- பாடம்
- தீபாவளி 2010
- கவியும் நிழல்
- மிகவும் அழகானவள் ….!
- முள்பாதை 53