சத்யானந்தன் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

சத்யானந்தன்


1. வழி

இன்னும் சற்று நேரத்தில்
உணவகம் நீங்கி
மேற் செல்ல வேண்டும்

எலிப்பொறிகள் இடையே
விரையும் வாகனங்கள்
விதவிதமாய்

சாலைகள் சந்திகள்
வழிகாட்டிப் பதாகைகள்
சங்கிலியின் கண்ணிகளாய்

மலையில் மட்டுமே தன்வயமாய்
முன்னகரும் நதி தன்
அங்கமா மணல் இல்லை
சுமையா எனும் வினாவை
விட்டுச் செல்லும்
வழி பற்றிய வினாவை
சாலைகளும் தான்

எந்த ஆற்று மணலோ இவ்
வழி நெடுக இறைந்து கிடக்கிறது

2.நிலம்

போர்கள் தன் பெயரால் வீழும்
உடல்கள் தன் மடியில்
எதிர்வினை புரியாது நிலம்

பாண்டி கபடி மைதானக் கோடுகள்
சில மீண்டு வந்தன கோலங்களாய்
சில நீண்டு சொல்லாடல்களின் மூலங்களைத்
தேடித் தீண்டின

காகங்கள் கழுகுகள் பியுனிஃஸ் யாவும்
உலாவும் நிலமெங்கும் தன்
கர்பத்துள் பொதிந்தவை நிலம்
மட்டுமே அறிந்தது

கலப்பையின் தொடுகையை
நிராகரிக்கவுமில்லை ஏற்கவுமில்லை
நிலம்

3.தடங்கள்

புகை வண்டி நிலையக் கூரை
உணவு வாங்கப் பற்றா ஊதியம்
அனேகருக்கு அதுவுமில்லை மழை
நாளில்

மழை நீர் அல்லது நதி நீர்த் தடம்
உதாரணம் அவர்க்கு
சொற்களால் கட்டமைத்த
கூடாரங்க்கள் வளாகங்கள்
அறியார் அவர் நகரங்களின்
நிரந்தர வழிப்போக்கர்

என் வீட்டு வளாகத்தில் எத்தனையோ
எறும்புத் தடங்கள் இருக்கக் கூடும்

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்

சத்யானந்தன் கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

சத்யானந்தன்


1.வேறெங்குமில்லை

தோல் தோலின் நிறம்
அடையாளமாய் உரைகல்லாய்
பச்சோந்தித் தோலை
பாம்புச் சட்டை போல்
அணியாவிட்டால் நிர்வாணம்

நிறம் சுமக்கும் துணிகளாய்
சில கொடிகள்
அதிகாரத்தின் தூண்களாய்ப்
பல கொடிக்கம்பங்கள் உயர
கீழே குடுக்கைகளாய் குடி
யிருப்புகள் உள்ளீடற்று

சிலம்பம் ஆடுபவன்
கொம்பின் ஒழுங்கில்
க்ழைக்கூத்தாடியின் பாதச்
சமனிலையில் குழையும்
விசித்திர வெண்மை
வெயில் காய்த்த வியர்வையில்
வெளிப்படும் வேறெங்குமில்லை.

2.நெடுஞ்சாலை

என்றேனும் நீயே வருவாயா
நீ இருக்கும் திசை எது
தெரியவில்லை

உன்னைத் தேடுவோர் மௌனியோ
எலிப்பொறிக்குள் ரணமானாரோ
கேட்க ஏதில்லை.

நீண்ட பகல்களும் ஒருமையான
இரவுகளும் ஏனோ போதவில்லை
நெடுஞ்சாலை வளர்ந்து கொண்டே
போகிறது

காற்றில் அலையும் ஒரு
வான் கோழி இறகும் ஒரு
விக்கிரகத்தின் அலங்காரமாய்
மயில்பீலியும் தான்
தென்பட்டன என் சலனங்களில்

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்

சத்யானந்தன் கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

சத்யானந்தன்


1.வானவில்

காலதாமதமாய் கூரையிலேறிக் கூவியது
சண்டைச் சேவலா என அவதானிக்கவில்லை
புத்தகச் சுமையில்

கொதிக்கும் தாரில் செருப்பு சிக்கித் தவிக்கையில்
மீட்டுக் கரை சேர்த்த விரல்களின் தொடுகை
மறுபடி வாய்க்காத காரணம் தேடவில்லை

திறவு கோல்களிின் சாவிப்பதங்களின்
சொடுக்குகளுக்கு இடைப்பட்டு மழை
இன்றி ஆரமிடும் நீளும் ஒரு வானவில்

2.இரு பக்கங்கள்

ஒலைச் சுவடிகள் அனேகம் மௌனித்து விட்டன
காகிதங்களிற் சில காணாமற் போயின பல
காலாவதி ஆயின

மாரிக்கால முற்றத்துப் பிள்ளைச் சொல்லாடல்
சில பதிவுகளாய் வேனிற்கால நெடுஞ்சாலை
நெடுக மரப்பாச்சி மௌனம் இடைவெளியாய்

மின்னணு வெளியில் விரவிய சொற்கள்
சுமக்கும் சேருமிடம் ஏற்குமிடத்தின்
இரு பக்கங்கள் அசல் நகல்

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்