மழையின் காதலன்
காளி நேசன்

மழையை போல் அவனை யாரும் நேசித்தது இல்லை!
மழைக்கு ஒதுங்கும் தருணங்களில்தான்
அவன் மனிதர்களை தரிசிக்கிறான்!
மழையுடன் அவனுக்கு தீராத உறவு உண்டு!
ஃசெக்கோவின் கதை மாந்தர்கள் அலைகின்றார் அவன் கனவில்
மழை பெய்த இரவுகளில் மட்டுமே!
துவண்டிருந்த நாட்களில் மழை அவனுக்கு ஆறுதல்!
மழை அவனுக்கு தேவ அமிர்தம்!
மழைக்கு முந்திவரும் மண்ணின் மணம்
அவனுக்கு ஆன்ம தரிசனம்!
மழைக்கு மறு நாட்களில்தான்
மலர்கள் காதற் பெண்டிருடன் போட்டியிட முடிந்தது!
காதலுக்கும் காமத்திற்க்கும் நூலிழைதான் தூரமா? யார் சொன்னது?
மழை இறங்கிய ஒரு மாலை பொழுதில் அவன் தோளில் வந்தமர்ந்த
பறவை ஒன்று சொன்னது “ஜென்ம ஜென்ம தூரம்” என்று.
ஜென்மம் தொடரும் உறவுகளை கண்டுணர்ந்த கணங்களில்
இடியும் மின்னலும் அவன் சாளரங்களில் நிரம்பி வழியும்!
அவன் உயிர் காதலை கண்ட கணங்கள்
மழையால் ஆசீர்வதிக்க பட்டிருக்கின்றன!
அவனை போல் திங்களை காதலிக்க யாருண்டு?
ஆதலின், அவன் காதலை மழை எப்பொழுதும் வாழ்த்தியது!
காளி நேசன்
- கற்றது தமிழ்…
- பலி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16
- முள்பாதை 50
- அடடா
- பலிகேட்கும் தேர்வுகள்
- திருப்பூர் : தற்கொலை நகரம்
- சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்
- கானல்
- விசாரம்
- மழையின் காதலன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு
- பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்
- விட்டிலாயிராமல் விலகியிரு…
- உயிர் உறை ரகசியம்
- பயங்கள்
- இரவின் நிழல்
- நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..
- சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி !
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2
- காப்பியங்களில் திருப்பு முனைகள்
- வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”
- இவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்
- புலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்
- ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு
- கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை
- சொல்புதிது’ இலக்கியவிழா
- பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்
- பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- தேடாமல் வந்தது.
- விலகிப் போனவன்
- நிசப்தம்
- மழையில் காலை
- அசம்பாவிதம்
- பாவனை
- தேவை ஒரு மரணம்…
- ஓர் இரவு வானம்
- இன்ப வேரா ,துன்ப போரா ?
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)