கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
நமது பூமி
++++++++++++++
“முடங்கிக் கிடக்கும் பேரளவு அறிவை விடப் பயன்படும் சிறிதளவு அறிவு பெருமளவு தகுதி உடையது.”
“தூரத்தில் உள்ள ஒரு நண்பன் அருகில் இருக்கும் ஒருவனை விட மிக நெருங்கி இருக்கிறான். வெகு தொலைவில் காணப்படும் மலைச் சிகரம் அண்டைப் பள்ளத்தாக்கில் உள்ளதை விடத் தெளிவாகத் தெரிவதில்லையா ?”
கலில் கிப்ரான்.
+++++++++++++++++++
<< நான் இல்லையேல் நீயில்லை புவியே >>
+++++++++++++++++++
பரிதி ஒளி பழுக்க வைத்த
ஒரு கனியா நீ ?
நித்தியத்தில்
நீடித்த
நிலைப் பாட்டில்
கிளைகள் ஓங்கி உயர்ந்த
தனித்துவ ஞானத்தில்
முளைத்த மரமா நீ ?
+++++++++++
அண்ட வெளித் தளத்தின்
உள்ளங் கையில்
காலக் கடவுள் வடித்த
மேலான மணிக் கல்லா நீ ?
+++++++++++
யார் நீ புவியே ?
யார் நீயெனச் சொல் ?
“நான்” என்னும் புவியே
நீதான் !
++++++++++++
என் கண்ணொளி நீ !
என் தெளிவுத் தீர்மானம் நீ !
என் கனவு நீ !
என் அறிவு நீ !
என் வயிற்றுப் பசி நீ !
என் தாகம் நீ !
என் சுகம், துக்கம் நீ !
என் வெறுப்பில் லாமை நீ !
என் விழிப்புணர்ச்சி நீ !
என் கண்ணில் வசிக்கும் எழில் நீ !
என் இதய வேட்கை நீ !
என் ஆத்மாவில் நீடிக்கும்
நித்திய வாழ்வு நீ !
+++++++++++++
“நான்” என்னும் புவியே
நீதான் !
என் வசிப்பு இல்லா தாயின்
இங்கே தோன்றி யிருக்க
மாட்டாய் நீ !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 20, 2010)
- பரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’
- நாட்டுப்புற(ர)ம்
- பணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி
- முள்பாதை 48
- க்ருஷ்ண லீலை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை
- ஆட்டோக்கள் உரசுகின்றன
- மௌனத்தின் பழுப்பு நிறம்..
- மாமிசக்கடை
- முற்றுப்புள்ளி
- முகம் நக
- திருந்தாத கேஸ்
- முத்தப்பிழை !
- ஒற்றைப் பேனாவின் மை
- மழைக்கு பிந்தைய கணங்கள்
- மேடை ஏறாத கலைவண்ணம் …!
- பச்சை ரிப்பன்
- தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு
- சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா
- ஏமாளிகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14
- கவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி
- 2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)
- கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!
- இனிக்கும் கழக இலக்கியம்
- இவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்
- காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை
- தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.
- பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்
- தோழர் சிவம் நினைவுக்கூட்டம்
- தனிமரத்து பூக்கள்
- புறத்தில் அகம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13