தாணிமரத்துச் சாத்தான்…..!
கலாசுரன்

அந்த இரண்டு மரங்களும்
கால்வலிக்க நின்றுகொண்டிருந்தன..!
அங்கு யாரும் பொதுவாக
செல்வதில்லை
அந்த அரசமரத்தடியிலான
கோயில் பூசாரியை தவிர
பக்கத்தில் நிற்கும்
தாணி மரத்திலும்
ஒரு விளக்கு
எரிந்துகொண்டிருப்பதுண்டு
அரசமரத்துக் கடவுளும்
தாணி மரத்துச் சாத்தானும்
எங்களுக்கு விந்தையானதாக
இருந்தது
அந்த மரங்களில்
ஏதேனும் ஒன்றைப் பார்த்து கூட
சூண்டுதலோ
உமிழ்தலோ கூடாதென்றே
நம்பியிருந்தோம்
அப்படி ஏதேனும் நிகழ்ந்தால்
ஓன்று சாமிக்குற்றம்
அல்லது சாத்தான் குற்றம்
இரண்டும் பிரச்சினை தான்…
அங்கு எச்சம் போடும்
காக்கா, குருவி, நாய் என
ஒன்றிற்கும் இந்த குற்றங்கள்
பலிப்பதாக பார்த்ததில்லை….!
கடவுளுக்கும் சாத்தானுகுமான தூரம்
ஏழு அடி ஆறு அங்குலம் தான்
என்று நாங்கள் தெரிந்து வைத்திருந்தோம் …
அடிக்கடி பெரியவர்கள்
அந்த மரங்களைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள்
பூசாரி
பக்தி பூசிய
விபூதியோ, பூக்களோ
வழிபாட்டிலான
அர்ச்சனை பொருட்களோ
கொண்டு வருவார்
காணிக்கை போட்டு
வாங்கிக்கொள்வார்கள்….
சுவையானவை
நாங்களும் எடுத்துக்கொள்வோம்
என்றும்போல்
அன்று மாலையிலும்
அர்ச்சனை பொருட்கள் சாப்பிட்டோம்…
அங்கு
விளையாடிக்கொண்டிருந்த
சிறுவன் ஒருவன் கவலையோடு சொன்னான்
அந்த அரசமரத்து சாமி
மிகவும் ஏழையாக இருக்கிறார் என்று …
ஏன்…? என்றவனிடம்
சாமிக்கு உடுக்க
ஒரு சிவப்பு துணிதான் இருக்கிறது
அதும் மிகவும் சிறியது…..!
பூசாரயின் காதுகளிலும்
ஒலித்தது … சிறுவனின் கவலை….!
அடுத்த திருவிழாவிலேயே
அரசமரத்து சாமிக்குக் கிடைத்தது
கிளைகளும் வேர்களும் மட்டும்
வெளியே திரியும்படியான
ஒரு சிவப்பு சட்டை ….!!
சிறுவன் ஆனந்தத்தில்
விழாமுடித்துத் திரும்புகையில்
கண்ட காட்சி
அவனை மீண்டும் கவலைப்படுத்தியது ..
அங்கு
தாணிமரத்துச் சாத்தான்
அம்மணமாக
நின்றுகொண்டிருந்தான்…!
————————————————————-
கலாசுரன்
கலாசுரன்
- இசட் பிளஸ்
- எரியாத முலைகள்
- மறுபடியும் அண்ணா
- கோகெய்ன்
- உவமையும் பொருளும் – 1
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- காதுள்ளோர் கேட்கட்டும்
- இரண்டு கவிதைகள்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- வனச்சிறுவனின் அந்தகன்
- கடிவாளம்
- சும்மாக் கிடந்த சங்கு
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- குற்றமிழைத்தவனொருவன்
- மேட்ரிக்ஸ் தமிழில்
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- பார்சலோனா -3
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- தந்தையும் தாயுமான அதிபர்.
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)