இரண்டு கவிதைகள்
சோ.சுப்புராஜ்
1 .குழல் இனிது; மிஸ் இனிது
செல்ல மகள் சில்வியா
மெல்லத் தான்
பேசத் தொடங்கினாள்…..
அம்மா, அப்பா, மாமா
தாத்தா, பாட்டி என்று
உறவுகளின் பெயர்களை
அவளின்
உதடுகளுக்குள் ஏற்றி
உச்சரிக்கச் செய்வதற்குள்
உயிர் போய்விட்ட்து எங்களுக்கு….
ஆயினும்……
இரண்டரை வயதில்
பள்ளிக்குப் போய் விட்டு
வீடு திரும்பிய
முதல் நாளிலிருந்து
எல்லோரையும்
அழைக்கத் தொடங்கினாள்
மிஸ் மிஸ் என்று…..
2.தூக்கமிழந்த பொம்மைகள்
இரவுகளில்
தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில்
பொம்மைகள் புடைசூழத் தூங்குவாள்
எங்கள் வீட்டு இளவரசி!
பொம்மைகளுடனான
அவளின் உலகத்தில்
அனுமதியில்லை யாருக்கும்….!
பொம்மைகளுக்கு
அம்மாவைப் போல் ஊட்டி விடுவாள்;
ஆசிரியையாக
பாடம் சொல்லித் சொல்வாள்;
பாட்டியாக தட்டிக் கொடுத்து
கதை சொல்வாள்;
தூங்க மறுக்கும் பொம்மைகளை
அப்பாவாக மிரட்டி உருட்டியும்
தூங்கப் பண்னுவாள்……!
விழிப்புவரும் நடு இரவுகளில்
இளவரசியைத் தேடினால்
மெத்தையிலிருந்து உருண்டுபோய்
வெறும் தரையில் விழுந்து
தூங்கிக் கொண்டிருப்பாள்
தேவதைக் கனவுகளுடன்…..
இவளின் வரவை எதிர்பார்த்து
மெத்தையில் உருண்டு கொண்டிருக்கும்
அவளின் பொம்மைகள்
கொட்டக் கொட்ட விழித்தபடி…….!
சோ.சுப்புராஜ்
Email : engrsubburaj@yahoo.co.in
- இசட் பிளஸ்
- எரியாத முலைகள்
- மறுபடியும் அண்ணா
- கோகெய்ன்
- உவமையும் பொருளும் – 1
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- காதுள்ளோர் கேட்கட்டும்
- இரண்டு கவிதைகள்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- வனச்சிறுவனின் அந்தகன்
- கடிவாளம்
- சும்மாக் கிடந்த சங்கு
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- குற்றமிழைத்தவனொருவன்
- மேட்ரிக்ஸ் தமிழில்
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- பார்சலோனா -3
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- தந்தையும் தாயுமான அதிபர்.
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)