கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -16 ஏசு கிறித்து வசந்தம்
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
ஏசு கிறித்து வசந்தம்
++++++++++++++
“ஒவ்வொருவரும் உண்டப் பிறகு ஓய்வெடுத்து உறங்குகிறார். வீடு காலியாக இருக்கிறது. பீச் பழம் ஆப்பில் பழம் சந்திக்கவும், மல்லிகைக்கும் ரோஜா மலருக்கும் இடையே உரையாடல் நிகழவும் நாங்கள் தோட்டத்தை நோக்கி வெளியே போகிறோம்.”
ரூமி.
++++++++++++++++
ஏசு கிறித்து வசந்தம்
++++++++++++++++
வசந்த காலமே ஏசு கிறித்து !
தியாகம் செய்யும்
பயிர்ச் செடிகளை
வளர்க்கும் புல் புதர்களில் !
வாய் பிளக்கும் அவை நன்றியில்
வாய் முத்தம் வேண்டி !
ரோஜாவின் சுடரொளிக்கும்
மணிமலர்* ஒளிக்கும்
காரணம்
உள்ளே இருக்கும் விளக்கு !
ஓரிலை நடுங்கும் !
எனக்கும் நடுக்கம் வருகுது
இனிய தென்றலில்
துருக்கிஸ்தான் பட்டுத்
துணி போல் !
ஊது பத்திச் சிமிழ் கனலாய்
ஓங்கி எரியுது !
+++++++++++++
தென்றல் காற்றே புனித ஆன்மா !
மரங்கள் யாவும்
புனித மேரி !
கவனித்து நோக்கு :
கைகோர்த்துக்
கணவனும் மனைவியும் எப்படிக்
களிக்கிறார்
எளிய விளையாட்டில் !
பளிங்கு முத்துக்கள்
ஏடனி லிருந்து
காதலர் இடையே வீசப்பட்டன
திருமண வழக்குப்படி !
+++++++++++++
ஜோஸ•ப் அணியுடை
நறுமணம்
ஜேகப் நோக்கி வருகிறது !
மெக்காவி லிருந்து
முகமது நபியின்
விலை மதிப்பில்லா
செந்நிறக் கல் சிரிப்பொலி
செவியில் கேட்கிறது !
நாமெல்லாம்
இதைப் பற்றியும் அதைப் பற்றியும்
கதைக்கிறோம் !
ஓய்வில்லை நமக்கு
உரையாடும்
இடைவேளை தவிர !
+++++++++++++
மணிமலர்* –> Tulip Flower
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 16, 2010)
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 4
- தமிழக தேர்தல் கூட்டணி அலசல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -16 ஏசு கிறித்து வசந்தம்
- புதாவில் நாய் சந்தை (ஹங்கேரி நாடோடிக்கதை)
- தவறிச் செய்த தப்பு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -9
- குப்பனுக்கு கல்யாணம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1
- ஓர் மடல்
- ஒரு ராஜகுமாரனின் கதை
- சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்
- நிகழ்தலின் நொடி
- ஒரு சொட்டுத் தண்ணீர்
- அவசரகதியில்;
- வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்
- பரிமளவல்லி – 8. வேரில்லாத காளான்கள்
- வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)
- ‘நாவலென்பது தத்துவத்தின் சித்திரவடிவம்’ – அல்பெர் காம்யு
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்
- எப்போதோ ஒரு கான்வாஸ் கூடாரத்தில் தொடங்கியது…….
- நானும் என் எழுத்தும்
- இவர்களது எழுத்துமுறை – 5 மௌனி
- முள்பாதை 43
- சிறுகச் சிறுகச் சூரிய சக்தி சுருங்கி வருகிறா ? [கட்டுரை: 2]
- முல்லைப்பாட்டில் முப்பொருள்கள்
- வளவதுரையனின் நாவல் ‘மலைச்சாமி ‘ யை முன் வைத்து.
- ஓர் இரவு
- கவிதையும் அவனும்
- ஆதலால் நோன்பு நோற்போம்
- நிசத்திற்கும் நடைமுறைக்கும் இடையே
- சாதி – குற்றணர்வு தவிர் ஜனார்த்தன் -கட்டுரை பற்றி
- சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9