சாத்தான் படலம் !

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

ஆர்த்தி நாகராஜன்


அழுது நனைத்த
தலையணையில்
உமிழ்ந்து படர்கிறது
இரக்கமின்மை

பிரிவு குறித்த
சேதி சொல்லி
எக்களிக்கும், தெறித்து பிரிந்த
மின்னல் கீற்றுகள்

இருவழிப் பாதையில்
நடுக்கோட்டின் வழியே
தனியே நகரும்
மனம்

ஆடி களிக்க
வார்த்தை விளையாட்டு உனக்கு,
அலரி அழ ‘ஆ, ஊ ,ஓ..’ போதுமே
எனக்கு

எச்சமிடம் ஓலத்தின்
நாயகனாய் போயிருந்த
தனிமை ,
காதல் தொலைத்து
முக்கி முனகி, மீண்டு எழ
அனைவருக்கும் தேவதையாகி
போன தருணத்தில் எனக்கு நான்
சாத்தனாகி போயிருந்தேன் !

Series Navigation

ஆர்த்தி நாகராஜன்

ஆர்த்தி நாகராஜன்