கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)

This entry is part [part not set] of 43 in the series 20110529_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !”

கலில் கிப்ரான். (Mister Gabber)

+++++++++++
இசை தனித்துவ மொழி
+++++++++++

இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது
அது உயிரூட்டும் உணர்வு !
இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது
அதுவே அதன் நெஞ்சு !
படைக்கும் போது
கடவுள்
இசை யெனும்
தனித்துவ மொழியை
மனிதனுக்கு அளித்துளான் !
அனைத் துக்கும் வேறு பட்ட
இனிய மொழி அது !
ஆதி மனிதன்
அதன் உன்னதம் பாடினான்
அடர்ந்த கான கத்தில் !
இசை மகள் அரசனின்
இதயம் கவர்ந்து
ஆசனத்தி லிருந்து
இறங்கி வரச் செய்தாள் !

+++++++++++

ஊழ் விதிப் புயலின்
அசுரத் தாக்கலில்
பாழ் பட்டுப் போன
மெல்லிய பூக்களே
நமது ஆத்மா வெல்லாம் !
அதிகாலைத் தென்றலில் கூட
ஆடி நடுங்கிடும்
ஆத்மாக்கள் !
வானி லிருந்து வீழும்
பனித் துளிகளால்
கூனிப் போகும் நமது ஆத்மா !

+++++++++++

பறவையின் இசை ஒலிகள்
மனிதரின்
உறக்கம் கலைத்திடும் மங்கிய
உதயப் பொழுதில் !
முடிவிலாக் கடவுளின்
உன்னத
மகத்துவம் பாடும் போது
மனிதரை
ஒன்று படுத்த
அழைப்பிதழ் அனுப்பிடும்
புள்ளினத் தின்
இசை ஓசை !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 23, 2011)

Series Navigationகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை அடிப்பார். பிதற்றுவாயன் அவரைப் பின்பற்றிச் செல்வதையும் நான் அவரது மௌன முகத்திலே கண்டிருக்கிறேன். பொது மக்களுக்கு ஆட்டிப் படைக்கும் அவன் இருக்கை தெரிவதில்லை.”

கலில் கிப்ரான். (Mister Gabber)

+++++++++++++++
காரணம் (Reasoning)
+++++++++++++++

உன்னை நீயே
கண்காணித்துக் கொள்வாய்
ஓர் எதிரியாய்
உன்னைப் பாவித்து !
பிறரை நீ ஆள முடியாது !
உன் உணர்ச்சிகளை
முதலில்
நீ கட்டுப் படுத்த
முடியாது போனால் !
உனது மனச் சாட்சிக்கு நீ
அடிபணிவாய் !

+++++++++++

உன்னத முனிவர் ஒருவரின்
பொன்மொழி இது :
“எந்தத் தீங்குக்கும்
இருக்குது மருந் தொன்று !
நாடும் மருந் தில்லை
மூடத் தனத் துக்கு !
பிடிவாத
மூடரை இகழ்ந்து
அவர்க்கு அறிவுரை புகட்டல்
நீர் மேல் எழுத்துக்கு
நேராகும் !
குருடனை,
முடக்கு வாதத்தை
குட்ட ரோகி யைக்,
குணப் படுத்தினார்
ஏசு நாதர் ! ஆயினும்
மூடனைக் குணமாக்க அவரால்
முடிய வில்லை !”

+++++++++++

பிரச்சனை என்ன வென்று
அறிந்திட, விளைவை
நாற் புறமும் கூர்ந்து நோக்கு !
எங்குள்ளது தவறென்று
புரிந்து கொள்வாய் !
வீட்டு வாசல்
விரிந்துள்ள போது
திறக்கும் கதவு
சிறுத்தி ருக்க லாமா ?
வாய்ப்பு வாசல் கதவை
வந்து தட்டினால்
பாய்ந்து பிடித்துக் கொள் !
தேடி வரும் போது நீ
ஓடி வரவேற்பாய் !

++++++++++++

தீங்கை நுழைப்பது மனிதன் !
இறைவன் இல்லை !
அறிவையும்
அடிப்படைக் காரணத் தையும்
அளிப்பது நமக்கு
அதிபன்
தவறையும் அழிவையும்
தடுப்ப தற்கு !
கடவுளின் ஆசிகள் உண்டு
காரணம் என்னும்
மானிடக் கொடைக்கு !

(முற்றும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 9, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய் என் முன்னே துள்ளி வந்து தோன்றி அழுவார், முணுமுணுத்துப் புகார் செய்வார். பீடத்திலிருந்து இறங்கி வந்து எனது காபியைக் குடிப்பார். எனது சிகரெட்டைப் புகைப்பார்.”

கலில் கிப்ரான். (Mister Gabber)

++++++++++++
காரணம் (Reasoning)
++++++++++++

கல்வி அடிப்படை யற்ற காரணம்
உழப் படாத வயல் !
சத்துணவு இல்லாத மனித
உடம்பு !
கடையில் விற்பப் படாத
கடைச் சரக்கு !
அளவு பெருகி
மலிந்து போனால் மனிதருக்குச்
சலித்து போவது !
மிகுத்துப் போயின் காரணம்
மதிப்பு இழக்கும் !
கடையில் விற்கப் பட்டால் அதன்
நன்மதிப்பை அறிபவர்
உன்னத ஞானிகள் மட்டும்.
காரணத்தை மூடன் ஏற்று
ஆதரிப்ப தில்லை !
பைத்தியம் என்பான்
பித்தன் !
மூடன் ஒருவனை நேற்று
“எத்தனை மூடர் உள்ளார்
நம்மிடையே ?”
என்று கேட்டேன்.
“கண்டுபிடிக்க நேரம் ஆகும் !
முடியா தென்னால் ! என்பான்
கடின மான செயலா ?
ஞானியை மட்டும்
மானிடர்
எண்ணினால் போதுமே !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 26, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மேடைப் பேச்சில் முழக்கிப் பேரரங்கை நிறுவிச் சமூகத்தை ஒன்று கூட்ட அறிவு ஜீவிகளாய்ப் பாவனை செய்யும் சிரியன் தேசத்துச் சீர்திருத்தவாதிகளுடன் சிறிது பேசிப் பாருங்கள் ! அவரிடம் பேசும் போது மாவரைக்கும் யந்திரத்தை விடக் கோரமாகவும் கோடைக் கால இரவில் கத்தும் தவளைகளை விட மேலானக் கீத அரவத்தைக் கேட்பீர் !

கலில் கிப்ரான். (Decayed Teeth)

++++++++++++
பூமியின் சீற்றம் !
++++++++++++

நான் கண்டேன் இந்தப்
பராக்கிரம மனிதர்
கட்டி எழுப்புவதை !
தகர்க்க முடி யாத
கற் கோட்டைகள் !
நான் கண்டேன்
செம்மைக் கலை ஞர்கள்
தம் சுவர்கள் மீது
ஏராள மான ஓவியத்தைத்
தோரண மாய்
வரைந் திருப்பதை !

++++++++++++

நான் கண்டேன் இந்தப்
பூமியை !
அகண்டத் தனது
தள வாயைத் திறந்து
அப்படியே விழுங்கும் சுளுவாய்
அத்தனைக்
கைத்திறன் வித்தகரை !
சிந்தனைச் சிற்பிகள்
விந்தையாய்ச்
செதுக்கி வைத்ததை !

+++++++++++

நான் அறிவேன் இந்த
நளின மணப்பெண்
பூமியை !
எழிலைப் பெருக்கு வதற்கு
இந்த மனிதன்
செயற்கை யில் சூட்டும்
எந்த ஓர் ஆபரணமும்
இனித் தேவை இல்லை
இந்த பூமிக்கு !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 29, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஆதலால் நான் அடுத்தோர் பல் மருத்துவரை நாடி, “இந்தச் சாபப் பல்லைப் பிடுங்கி எடுங்கள். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்காதீர். அடியை வாங்கிக் கொள்ளும் ஒருவன் அதை எண்ணிக் கொள்ளும் மற்றவனைப் போலில்லை !” என்று கூறினேன். நானிட்ட கட்டளைப்படி மருத்தவர் பல்லை பிடுங்கி எடுத்துச் “சொத்தைப் பல்லைப் பிடுங்கியது நல்லது.” என்றவர் கூறினார்,” மனித சமூகத்தில் எலும்பு வரைச் சீர்கெட்டுப் போன பல்வேறு சொத்தைப் பற்கள் உள்ளன ! அவற்றை அகற்றச் சமூகம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல், தங்கத்தை இட்டு நிரப்புவதில் திருத்தி அடைந்து வருகிறது.

கலில் கிப்ரான். (Decayed Teeth)

+++++++++
திருமணம்
+++++++++

இதிலிருந்து தான்
காதல் தேவி
வாழ்வின் அடிச்சுவடியை
எழுதத் துவங்கிறாள் !
இரவில் தோன்றிப்
பகலில் பாடி வரும்
இசைக் கீத மாகவும்
புகழ்ப் பாமாலை யாகவும் !
நிகழ்வது இதிலிருந்து தான் !
இங்கிருந்து தான்
காதல் வேட்கை
முகத் திரையை நீக்கி விடும் !
இதயச் சந்துகளில்
விளக் கேற்றி
ஆத்மா வுக்கு நிகரற்ற
களிப்பை அளிக்கும் !
கடவுளைத் தழுவ வைக்கும்
அந்த இணைப்பு !

++++++++++++

தெய்வீகப் பிறவிகள் இரண்டின்
ஐக்கிய உடன்பாடுதான்
திருமணம் !
மூன்றாவது பிறவி ஒன்று
வையத்தில்
தோன்றும் என்பதற்குச்
சான்றிதழ் !
ஆத்மாக்கள் இரண்டின்
கூட்டுறவு !
தனிமை போக்கிடும் திருமணம்
ஓர் உறுதிப் பிணைப்பு !
ஈர் ஆன்மாக்கள்,
ஏகாந்தப் பிறவிகள் கூடும்
உன்னத இயக்கம் !
தங்கத்தில் வடித்த வளையம்
சங்கிலில் !
ஆரம்பம் அதற்கு
காதலர் கண்ணோக்கு !
நேரும் விளைவு
நித்தியப் பிணைப்பு !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 22 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -2)

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“ஒருநாள் பொறுமை இழந்து நான் பல் மருத்துவரிடம் தொல்லை தரும் பல்லைப் பிடுங்கச் சொன்னேன். இரவில் என் நித்திரையைக் கெடுத்து என்னை அலர வைத்து வேதனை கொடுத்தது. குணப்படுத்தாது பல்லைப் பிடுங்குவது முட்டாள்தனம்,” என்று பல் மருத்துவர் பிடுங்க மறுத்துத்தார். பிறகு பல்லருகே துளையிட்டுத் தோண்டி உள்ளே சுத்தம் செய்தார்.”

கலில் கிப்ரான். (Decayed Teeth)

++++++++++++++
முதல் முத்தம்
++++++++++++++

அருமைக் காதலியின்
முதல் கண்ணோக்கு
நீர் வெள்ளத்தின் மேல்
மிதந்து
வானக மண்டலத் தையும்
வையகத் தையும்
புலர்ந்திட வைக்கும்
ஆன்மாவைப் போன்றது !
அப்போது
அகிலத் தலைவன்
ஆசிகள் கூறுவான் :
“அப்படியே நடக்கட்டும்”
என்று.

++++++++++++

முதல் முத்த மானது
தேவதை நிரப்பிய
கிண்ணத்தில்
உதடுகள் தொட்டுச் சுவைக்கும்
முதல் வாழ்வுத் தேனமுது !
அதுவே
முத்திரைக் கோலம் !
ஐயத்துக்கும்
இதயத்தை வருத்தி
ஆன்மா மயக்கு தற்கும்
இடைக் கோடு !
இதய உட்சுனையை
பூரிப்பால்
பொங்க வைத்திடும்
ஓர் உறுதிப்பாடு !

++++++++++

அதுவே வாழ்க்கைக் கீதம்
உதித்தெழும் துவக்கம் !
பூரண மனிதன்
ஆரம்ப நாடகத்தின்
முதல் காட்சி !
அதுவே
கடந்த காலத்து வியப்பையும்
எதிர் காலத்து
ஒளி மயத்தையும்
இணைக்கும்
ஓர் ஐக்கிய பந்தம் !
ஊமை உணர்வையும்
ஒலிக்கும் பாட்டையும்
ஒன்றாக்கும்
ஓர் தொடர்ப்பாடு !

+++++++++++++

உதடுகள் நான்கு ஒன்று கூடி
உறுதி செய்யும் போது
வைத்திடும்
முத்தத்தின் மொழி
இதயத் துக்கு ஓர்
ஆசனம் அளிப்பது !
நேச மன்னனை அமர்த்துவது !
கிரீடம் சூட்டுவது !
தென்றல் இதழ்களைத்
ரோஜா மலர் தடவுதல் போல்
மென்மை விரல்கள்
மிருதுவாய்த் தொடுதல் அது !
அப்போது
நீண்ட பெரு மூச்சு
விடுவிப்பும்
இனிய முணங்கலும்
எழுந்திடும் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 8 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“நேற்று காணப்பட்டது போல் இன்று நீ தோன்றுகிறாய். நாளையும் தோன்றுவாய், அடுத்த நாளும் தோன்றுவாய். முதன்முதலில் நான் காண்டது போலிருக்கிறாய் நீ. நேற்று நாம் வாழ்ந்தோம். இன்று நாம் வசிக்கிறோம். இதுவே தெய்வத்தின் நியதி. வானரங்களின் வாரிசுகளே ! உங்கள் உறுதி வாக்கு என்ன ?”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

++++++++++++++
விடுதலைத் தாகம்
++++++++++++++

மனித இதயம் தவித்துக்
கூக்குர லிடும் உதவி நாடி !
மனித ஆத்மா தினமும்
மன்றாடும்
விடுதலைக்குப் போராடி !
ஆயினும்
புரிந்து கொள்வ தில்லை !
கவனிப்ப தில்லை
செவி சாய்ப்ப தில்லை
அவலக் குரலுக் கெல்லாம் !
புறக்கணிப்போம்
புரிந்து கொள் வோனைப்
பைத்தியம் என்று !
விரைந் தோடுவோம்
அவனை விட்டு !

+++++++++++

இரவுகள் கழிகின்றன !
இப்படி நாம் வாழ்கிறோம்
அறியா மையில் !
அடுத்தெடுத்துப்
பகற் பொழுதுகள் புலர்ந்து
அணைத்துக் கொள்ளும்
வரவேற்று நம்மை !
ஆயினும்
இரவுக்கும் பகலுக்கும்
அஞ்சி அஞ்சித் தவிப்போம்
நிரந்தரமாய் !

+++++++++++

இணைந்து கொண்டோம்
இந்தப் புவியோடு
இறைவனின் இதய வாசல்
திறந்துள்ள போது !
மிதிப்போம் காலால் நமது
வாழ்க்கை உணவை
வயிற்றுப் பசி நம்மை
வாட்டும் போது !
எப்படி இனிக்கிறது இவ்வாழ்வு !
ஆயினும் வாழ்வுக்கு
அப்பால் ஒதுங்குவான்
அற்ப மனிதன் !

(முற்றும்)

****************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 26 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



“எழுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நான் அருகில் சென்ற போது, குகைக்குள் நுழையும் ஒரு சுதந்திரப் பூச்சியைப் போல் உன்னைக் கண்டேன் ! ஏழு நிமிடங்களுக்கு முன்பு நீ என் பளிங்குக் கண்ணாடி ஜன்னல் வழியே போவது என் கண்களில் பட்டது. அப்போது மரணம் உனக்கு மேல் தொங்கி நிற்க, அடிமைச் சங்கிலிக் கட்டிய குறுகிய சந்துக்கள் வழியே நீ மனிதனாய்ப் போய்க் கொண்டிருந்தாய்.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++

விடுதலை அழைக்கிறது
நம்மைத் தனது
மேடைக்கு !
அங்கே நின்று
அவளது செழித்த ஒயினையும்
அறுசுவை உணவையும்
சுவைக் கிறோம் !
ஆனால் நாமந்த பீடத்தில்
அமரும் போது
பகற் கொள்ளை அடித்து
பசியைப் போக்க
வயிறு புடைக்கத் தின்கிறோம்

+++++++++++

இயற்கை அன்னை தன்
கரம் நீட்டி நம்மை எல்லாம்
வரவேற்பாள்
தனது எழிலை நாம்
அனுபவிக்க
வேண்டு மென்று !
ஆனால் நாமெல்லாம்
அஞ்சி நடுங்குவோம்
அவளது மௌனத்தைக் கண்டு !
நெருக்க மான
நகருக்கு ஓடுவோம்
நாமெல்லாம்
ஓநா யிக்கு அஞ்சி
ஒதுங்கும்
ஆட்டு மந்தை போல் !

+++++++++++

சத்தியம் அழைக்கிறது
நம்மை யெல்லாம்
குழந்தையின்
களங்க மிலாப்
புன்னகை யோடு
கவர்ச்சிக்
காதலியின் முத்த மோடு !
ஆயினும் நாமெல்லாம்
அதன் அன்பு முகத்தில் அறைவோம்
கதவைச் சாத்தி !
பகைவன் போல் எதிர்த்து
நகைப்போம் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 19 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -2)

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“நேற்று நாம் வசித்தோம். இன்று நாம் வாழ்கிறோம். இதுதான் கடவுளின் ஊழ்விதி. வானரத்தின் வாரிசுகளே ! உமது இறுதி வாக்கு மூலம் என்ன ? இந்தப் பூமியின் பொந்துக் குள்ளிருந்து வந்த பிறகு நீங்கள் உமது முதல் தடத்தை எடுத்து வைத்தீரா ?

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
ஆணுக்குப் பலியான பெண்டிர்
+++++++++++++++++++

கடவுள் வனப்புடன் படைத்த
நீ ஓரிளம் பெண்ணா ?
செல்வந்தர்
உன் இதயத்தை விட்டு
உன்னுடலை விலைக்கு வாங்கி
மோக அணைப்புக்கு
இரையாகி
இன்னல் பட்டு வரும்
நீயோர்
ஏமாளிப் பெண்ணா ?

+++++++++

இப்படித் துன்புறும் பெண் ஒருத்தி
நீயானால்
மனிதன் விதிக்குப்
பலியான பாவை நீ !
துயர்ப் படுபவள் !
வலுத்தோர் அழுத்தப் பிடியில்
அநியா யத்தில்
பழுக்கும் கனி இன்னல் !
செல்வந்தர் கொடுமைச் செருக்கு !
ஒழுக்க மற்றோர் புரியும்
இழுக்குகள் !

+++++++++++

என் ஆறுதல் மொழிகளை
உனக்களிப்பேன்
என்னுயிர்க் காதலி !
நமக்குப் பின்னால்
ஒளிந்திருப்பது
பேராற்றல் படைத்த ஒன்று
இந்த மண்ணுல குக்கு
அந்தப் புறத்தில் !
நேயமும் பரிவும்
நேர்மையும் நியாயமும்
நிறைந்தது !

+++++++++++

மலரைப் போன்றவள் நீ
மரத்து நிழலில்
வளர்ந்து வருபவள் நீ
தென்றல் சுமந்துன் வித்துக்களை
கதிரோன் வெப்பத்தில்
விதைக்கும் !
மீண்டும் முளைப்பவள் நீ
மேனி அழகுடன் !

+++++++++

குளிர்காலப் பனிப் பொழிவில்
வளைந்திடும்
இலை உதிர் மரம் நீ !
வசந்தம் வந்துன் மீது
பசுமை ஆடையைப் போர்த்தும் !
உன் புன்னகை மறைக்கும்
கண்ணீர்த்
திரையைக் கிழித்திடும்
உண்மை !
என்னரும் சகோதரிகளே !
உம்மை நேசிக்கிறேன்
இணைத்துக் கொள்வேன்
என்னுடன் !
வெறுக்கிறேன் உமது
விரோதிகளை !

(முற்றும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 4 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“பூமியே நமக்குத் தலையணை ஆகவும், பனிப் பொழிவுகளே நமக்குப் போர்வையாகவும் நாம் பல இரவுகளைத் தூக்கிமின்றிக் கழித்தோம்.”

“இடையன் மேற்பாராத ஆடுகள் போல் நாம் மந்தையில் ஒருங்கே இருந்தோம். நமது எண்ணங்களை மேய்ந்து, உணர்ச்சிகளை அசைபோட்டு இருந்தாலும் நாம் பசியோடும் தாகத்தோடும் தவித்தோம்.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++++
ஏகாந்த வாழ்க்கை இனிது
+++++++++++++++++++++

என் சகோதரனே !
உன்னைப் பார்த்தி ருக்கிறேன் :
ஓரழகி உன்னை
ஆரத்தி செய்து வந்தாள்,
உன் இதயம்
விழுந்து கிடந்தது அவள்
நளினப் பீடத்தில் !
அவளின் கனிவுக் கண்ணோக்கு
உன் மீது விழும் போது,
என் இதயம் கூறும் :
“நீடு வாழ்க காதல்
நீங்கி விட்டது தனிமை
இந்த மனித னுக்கு !
சீராய் இணைத்து விட்டது
ஈரித யங்களை !”

+++++++++

மீண்டும் நான் காணும் போது
உன் காதல் உள்ளம்
வேறு
ஓர் ஏகாந்தி யுடன்
சேர்ந்தி ருந்தது,
மாதுடன் ரகசியம் பேசி
வீணாய்
முறை யிட்டு
அழுது கொண் டிருந்தது !
மேகத்தில் மிதந்து வரும்
அடுத்தோர்
ஏகாந்த ஆத்மா
வீணாய் வடிக்கும்
கண்ணீர்த் துளிகள்
உன் காதலியின் கண்களில்
வழிந்தன !

+++++++++++

என் சகோதரா ! உன் வாழ்வு
வேறாகப் பிரிந்த
ஓர் ஏகாந்தச் சிறைக் கொட்டம் !
அன்னியர் கண்ணோக்கு
நுழைய முடியா மதில் உள்ள
ஓர் இல்லம் !
இருள் மூடினால்
அண்டையர்
விளக்கொளி படாத வீடு !
காலி யானல்
அடுத்தவர் சாதனங்கள்
தொடுக்க இயலாத வீடு !
பாலை வனத்தில் இருந்தால்
அன்னியர்
சோலை வனத்துக்கு நகர்த்த
முடியாத வீடு !
குன்றின் மீதிருந்தால்
கீழ்ச் சமவெளிக்குக்
கால்கள் சுமக்க இயலாத
வீடு !

+++++++++++

என்னரும் சகோதரா !
உன் ஆன்மீக வாழ்வை
முற்றிலும்
சூழ்ந்திருப்பது ஏகாந்தம் !
ஏகாந்தமும் தனிமையும் இங்கே
இல்லை என்றால்,
நீயாக மாட்டாய் நீ !
நானாக மாட்டேன் நான் !
உன் தனித்துவக் குரல்
கேட்க வந்து
எனது குரல் என்பதை
உணர இயலாது என்னால் !
உன் முகத்தைப் பார்த்து நான்
என் முகமென்று
காண முடியாது முகக்
கண்ணாடியில் !

(முற்றும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 22 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



++++++++++++++
என்னை மயக்கியவள்
++++++++++++++

“நேற்று நாம் ஊழ்வலியின் விளையாட்டுக் கைப் பொம்மையாக இருந்தோம். ஆனால் இன்று ஊழ்வலி தனது விளையாட்டுப் போதைலிருந்து விழிப்புற்று நம்முடன் நடக்கிறது. இப்போது நாமதைப் பின்பற்றுவதில்லை. அதுதான் நம் பின்னால் வருகிறது.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
ஓடிப் போன என் காதலி
+++++++++++++++++++

நேற்று இந்தத் தனி அறையில்
வீற்றிருந் தாள்
என்னிதயம்
நேசித்த அந்த மாது !
இந்த வெல்வெட் மெத்தையில் தான்
ஓய்வெடுத்தது, அவளது
எழில் மேனி ! இந்தப்
பளிங்குக் கிண்ணத்தில் தான்
பருகினாள்
பழைய ஒயின் மதுவை !

++++++++++

நேறைய கனவு இது !
ஏனெனில்
வெகு தூர இடத்துக்குச்
சென்று விட்டாள்
என்னிதயக் காதலி !
சூனியப் பகுதி அது
நினைவில்
மறையும் ஓரிடம் !

++++++++++

முகம் பார்க்கும் கண்ணாடியில்
இன்னும் உள்ளது
அவளது கைரேகை !
அவள் மூச்சின் நறுமணம்
என்னாடை மடிப்புக்குள்
இன்னும் மணக்கும் !
அவள் இனிய பேச்சின்
எதிரொலி
இந்த அறையில் இன்னும்
கேட்கும் !

++++++++++++

ஆனால் என்னிதயக் காதலி
போனாள் எனை விட்டு
வெகு தூர இடத்துக்கு !
நாடு கடத்தப்பட்ட
ஒரு பள்ளத் தாக்கு அது !
நினைவில்
நிற்காத ஓரிடம் !

+++++++++++

என் படுக்கை அறைச்சுவரில்
தொங்கிடும் அவள்
முழு உருவப் படம் !
முத்து பவளம் பதித்த
வெள்ளிப் பேழையில் நான்
வைத்துள்ளேன்
எனக்கு அவள்
எழுதிய காதல் கடிதங்கள்
எல்லாம் !
அவை யாவும்
நாளை வரைதான்
என்னிடம் இருக்கும் !
அன்று அவற்றைக் காற்று
அடித்துச் சென்று
மௌனம் ஆளும் தளத்தில்
மறக்க வைக்கும் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 8 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



++++++++++++++
இயற்கையும், மனிதனும்
++++++++++++++

“நேற்று காலத்தைப் பற்றிப் புகார் செய்தோம். அது விளைவித்த கொடுஞ் செயல்களை எண்ணி நாம் நடுநடுங்கினோம். ஆனால் இன்று நாமதை விரும்பி மதிக்கக் கற்றுக் கொண்டு விட்டோம். ஏனெனில் இப்போது அதன் நோக்கம், இயற்கைப் பண்பாடு, ரகசியம், மர்மம் அனைத்தும் நமக்குப் புரிகின்றன.”

கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

+++++++++++++++++++
இயற்கையும், மனிதனும்
+++++++++++++++++++

பொழுது புலர்ந்ததும்
புல்வெளியில் அமர்ந்தேன்
இயற்கை யோடு உரையாட !
மனிதன் அமைதி யாய்த்
தூக்க
மயக்கத்தில் கிடந்தான் !
மனத்தை ஒருமைப் படுத்திச்
சிந்தித்ததில்
வினா ஒன்று எழுந்தது :
“சத்தியம் என்பது
அழகுத் துவமா ? அல்லது
அழகுத்துவம் என்பது
சத்தியமா ?”

+++++++++

சிந்தனை எனைத் தூக்கிச்
சென்றது
மனித இனத்துக் கப்பால் !
என் தனித்துவ உள் ஒளியைப்
போர்த்தி யுள்ள துணியை
நீக்கியது என்
கற்பனை !
என் ஆத்மா விரிந்தது !
இயற்கையின் நெருக்கத்தில் நான்
பெயர்ந்தேன் ! அதன்
மர்மத்தில் மலர்ந்தேன் !
செவிகள் திறந்தன
இயற்கையின்
வியப்புக்களை வரவேற்க !

+++++++++++

சிந்தனையில் ஆழ்ந்திருந்த
தருணம்
மரக் கிளைகள் ஊடே
தென்றல் வீசியதை
உணர்ந்தேன் !
காதில் விழுந்தது
திரியுமோர் அனாதை விடும்
வேதனை மூச்சு !
“பெரு மூச்சு விடுவதேன்
தென்றலே”
என்று நான் வினவினேன் !
தென்றல் சொன்னது :
“பரிதிக் கனல் மிகுந்த
நகரை விட்டு
நான் வருகிறேன்;
நோயும் நாற்றமும் தீண்டிய
வாயுக்கள்
ஒட்டுமென் ஆடையில் !
அதனால்
அழுதிடும் என்மேல் நீ
பழி சுமத்து வாயா ?”

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
பூரணம் அடைவது
++++++++++++++

“இது எப்போதும் அறிந்ததுதான் : காதலுக்குத் தனது ஆழம் பிரிவு வேளை வருவது வரை தெரியாது.”

கலில் கிப்ரான்.

“கலைத்துவம் என்பது நமக்குத் தெரிந்ததற்கும், மர்மமான மறைதலுக்கும் இடைப்பட்ட ஒரு எட்டு வைப்பு.”

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++
பூரணம் அடைதல் எப்போது ?
+++++++++++++++++++

(முன் பாகத் தொடர்ச்சி)

இவற்றை எல்லாம் உணர்ந்த பின்
இயற்கை யாகவே
பாதி வழி அறிந்திடு வான்
பரிபூரணப் பாதைக்கு !
குறிக்கோளை அடைய
சிந்திக்க வேண்டும் அவன்
தாயைச் சார்ந்துள்ள தானொரு
சேய் என்று !
தானொரு குடும்பத்தின்
பொறுப் புள்ள
ஒரு தந்தை என்று !

+++++++++

காதலில் தோல்வி யுற்ற
வாலிபன் !
கடந்த வாழ்வை எதிர்க்கும்
பழமைவாதி !
ஆலயத்தில் வழிபடும் மனிதன் !
சிறையில் அடைபட்டுள்ள
ஒரு குற்றவாளி !
ஏட்டில் எழுதிக் குவித்திருக்கும்
இலக்கியப் பண்டிதன் !
இரவின் கருமைக்கும்
பகலின்
புரியா மைக்கும் இடையே
தடுமாறும்
ஓர் அறியாப் பாமரன் !
இனிமை உறுதிக்கும்
தனிமை முட்களுக் கிடையே
தவிக்கும்
கிறித்துவ மாடக் கன்னி !
உடலுறவுப்
பலவீனத் துக்கும்
உடற்பசித் தேவைக்கும்
இடையில்
அடைபட் டிருக்கும்
ஒரு விலை மாது !
கசந்த வாழ்வுக்கும்
கையா லாகாத பணிதலுக்கும்
மையத்தில் நையும்
ஓர் ஏழை மனிதன் !
பேராசைக்கும்
மனச் சாட்சிக்கும் இடையே
போரா டாத
ஒரு செல்வக் கோமான் !
அந்தி மயங்கிய ஒளிக்கும்
உதயச் சுடர் கதிருக்கும்
உள்ள இருளை உணர்ந்த
ஒரு கவிஞன் !

+++++++++++

யார் இப்படி
அனுபவம் பெறுவார் ?
எவர் ஆஇப்படி
உலகைக் காண்பார் ?
யார் இப்படி
புரிந்து கொள்வார் ?
பூரணம் அடைய முடியும்
தொடர்ந்து
இவ ரெல்லாம்
கடவுளின் நிழலாய் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 4 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++
ஓ இரவே !
+++++++++++++++++++++++++
“ஒரு மதக் குருவின் புனிதத்தை நாட்டுப்புறத்தான் ஒருவன் சந்தேகப்பட்டால், அவனுக்குக் கிடைக்கும் பதில் : “அவரது உபதேசத்தை மட்டும் கேட்டுக் கொள். அவரது தவறுகளைக் குறைபாடுகளைப் புறக்கணித்து விடு.”

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

++++++++++++++++++++++++++
<< உன்னைப் போன்றவன் நான் >>
++++++++++++++++++++++++++

(சென்ற வாரத் தொடர்ச்சி)

என் இருண்ட உள்ளத்தில்
விண்மீன்கள் உணர்ச்சி வசத்தால்
சிதறிக் கிடக்கின்றன
மின்னிய வண்ணம் !
என் இதயத்தில்
சந்திரன் வெளிச்சம் அளிக்கும்
என் கனவுகட்கு
வழி காட்டிக் கொண்டு !
உறக்க மில்லாத
என் ஆத்மாவில்
ஓர் மௌனம் வெளியாக்கும்
காதலர் மர்மங்களை !
எதிரொலி செய்யும்
முணுமுணுப்போர் வழிபாடுகளை !
முகமூடி அணிந்து கொள்ளும்
என் முகம்,
மரணத்தின் கோரத்தால்
கிழிந்து போய்,
இளைஞர் கீதங்களால்
செப்பணிடப் பட்டு !
இரவே !
ஒருவரை ஒத்தவர் நாம்
இருவரும்
ஒவ்வொரு போக்கிலும் !

+++++++++++

உனைப் போல் நானிருக்க
நினைத்தால்
மனிதன் பெருமைக் காரன்
நானென
நினைப் பானோ ?
பகல் பொழுதைத்
தன்னைப் போல்
எண்ண மாட்டானோ
இந்த மனிதன் ?
இரவே !
உன்னைப் போன்றவன்
நானும் !
இருவரும் இகழப் படுவோம்
இல்லாத வற்றுக்கு !
தங்க முகில் மகுடம்
அணிய வில்லை
அந்தி வேளை மங்கிய வெளிச்சம்
எந்தன் சிரத்தில் !

++++++++++++

உன்னைப் போன்றவன்
நானும் !
உதயப் பொழுது
தன்னொளிக் கதிர்களால்
ஒப்பனை செய்வ தில்லை
என் அங்கியின்
பின்னலை !
உன்னைப் போன்றவன்
நானும்
பால் வீதி ஒளிமந்தை
என்னைச் சுற்றி
வட்ட மிடா விட்டாலும் !
கரையற்ற இரவாய்
மௌனத்தில் உள்ளேன்
துவக்க மில்லை
என் இருட்டுக்கு !
முடிவில்லை
என் ஆழ் மனதுக்கு !

++++++++++

மகிழ்ச்சியின் ஒளியில்
மூழ்கிக் கொண்டு
ஆத்மாக்கள் மேற் செல்லும் போது
கீழிறங்கும் என் ஆத்மா
துக்க இருளின்
துதி பாடி !
உன்னைப் போன்றவன்
நானும் இரவே !
காலை
விடியும் வேளை
முடியும்
எனது காலம் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 9, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! = கவிதை -32 பாகம் -3

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“எதேட்சை அதிகாரத்தை எதிர்த்து ஒரு குழுவினர் ஏழைகளுக்கு விடுதலை அளிக்க அரசியல் சீர்திருத்தங்களைப் புகுத்த வருகிறார். தீப் பறக்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, அவர் ஊசிபோல் குத்தும் பதிப்புகளை வெளியிட்டுப் புரட்சிக் கருத்துகளை முரசடிக்கிறார். ஆனால் ஒரு மாதம் கழித்து நம் காதில் விழுவதென்ன ? அரசாங்கம் அக்குழுத் தலைவரைச் சிறையில் போட்டிருப்பது அல்லது அவருக்கு அரசாங்கப் பெரிய பதவியை அளித்து அவரது வாயை மூடியிருப்பது. அதற்குப் பிறகு மூச்சுப் பேச்சில்லை !”

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

++++++++++++++++++++++++++
ஓ இரவே !
++++++++++++++++++++++++++

காதலர் துணைவன் நீதான் !
சோர்வு அடைவோர்க் கெல்லாம்
ஆறுதல் தருவது நீ !
புறக்கணிக்கப் பட்டோர்க்கு
இருப்பிடம் நீ !
ஏகாந்த மாந்தர்க்கு
இடம் அளிப்பது நீ !
உனது நிழலில் கவிஞன் உள்ளம்
ஓய்வெடுக்கும் !
தீர்க்க தரிசிகளின் நெஞ்சம்
விழித்துக் கொள்ளும்
உந்தன் நிழலில் !
சிந்தனை யாளர் மூளை
செவ்விய நிலை அடையும் !
கவிஞர்க்கு
உள்ளீர்ப்பு அளிப்பாய் !
தூதர்க்கு
ஒளிக்காட்சி ஊட்டுவாய் !
வேதாந்த முனிவர்க்குப்
போதனை வழங்குவாய் !

+++++++++++

மனித இனத்துடன்
எனது ஆத்மா களைப்புறும் போது,
பகற் பொழுதின் முகம் தாக்கி
எனது விழிகள் கடுத்துச்
சலிப்படையும் போது,
அலைந்து திரிவேன் நான்
மலைத்துப் போய்
பழைய பேய் உருக்கள் கண்மூடி
ஒளியும் இடங்களில்,
ஆயிரங் காலுடன் அவனிமேல்
அடி யெடுத்து வைத்து
நடுங்கிடும்
மங்கலான பீடத்தின் முன்பு
தங்கி நிற்பேன் !
நிழலின் விழிக்குள் காண்பேன்
தெரியா இறக்கைகள்,
அசையும் சலசலப்பு கேட்டேன் !
மௌனத்தின் மாய
ஆடைக்குள்
மென்மைத் தொடுதல் உணர்ந்தேன் !
கரிய இருட்டின்
கடுமை தாங்குவேன் !

++++++++++++

இரவே ! அந்த அமைதியில்,
உன்னைக் கண்டேன்
எழிலாய்,
அலங் கோலமாய்,
வானுக்கும் பூமிக்கும் இடையே
மோன நிலையில் மூழ்கி,
மூடு பனியில்
முகத்திரை யிட்டு,
முகில் அங்கி போர்த்தி,
பரிதியை நகையாடிய வாறு
பகலையும் கேலி செய்து,
உறங்காது
வடிவ வழிபாடு செய்யும்
அடிமை மாந்தரைக்
கோபித்துக் கொண்டு !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 20, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++++++
ஊழ்விதி
+++++++++++++++++++++++++++++++++

“உன் தேசத்தின் ஊழ்விதியும் என் தேசத்தின் ஊழ்விதியும் இனி எவ்விதம் இருக்கும் ? எந்தப் பூத வேந்தன் பரிதிக்கு முன்னால் நாம் பிறந்து வளர்ந்து நம்மை ஆடவர் மாதராய் ஆளாக்கிய குன்றுகளையும், சமவெளிகளையும் ஆக்கிரமிப்பான் ? புதிய யுகம் ஒன்று காலையில் புலர்ந்து லெபனான் சிகரத்தின் மீது தோன்றுமா ? ஏகாந்தனாய் உள்ள ஒவ்வொரு சமயத்திலும் நான் இந்த வினாக்களை என் ஆத்மாவிடம் கேட்கிறேன். ஆனால் ஊழ்விதி அதிபனைப் போல் என் ஆத்மா ஊமையாக இருக்கிறது.”

கலில் கிப்ரான். (The Giants)

++++++++++++++++++++++++
<< ஊழ்விதி >>
++++++++++++++++++++++++

இராப் பகலாகச் சிந்திக் காதவர்
எவர் உங்களில் இருக்கிறார்
போதை ஏறிய
பூத மன்னர் ஆட்சியில்
விதவைகள் கண்ணீரும்
அனாதைகள் அழுதிடும் நீரும்
விழுந்திடும்
உலகத்து ஊழ் விதியை
ஒரு பொழு தேனும் எண்ணாமல் ?
பரிணாம விதியை நம்புவோரில்
ஒருவன் நானும் !
பூரண விடுதலைப் புரட்சிகள்
கோர மாந்தரால்
உதித்தெழும் என்று
நம்புவோன் நான் !
மதங்களும் அரசாங் கமும்
உன்னத பீடத்துக் குயரும் என்று
நம்புவோன் நான் !

+++++++++

எனைச் சுற்றி இருப்பவர்
அனைவரும்
பூதங்கள் உதிப்பதைக் காணும்
குள்ளர்கள் !
தவளைகள் போல்
கத்துவார் இந்தக் குள்ளர் !
இவ்வுலகம் காட்டு மிராண்டிகள்
இருப்பிட மாய்த்
திருப்பி வந்துள்ளது !
விஞ்ஞானக் கல்வி படைத்தவை எல்லாம்
இந்தப் புது ஆதி வாசிகளால்
அந்த மாகி அழிந்தன !
கற்காலத்துக் குகை வாசிகளாய்
தற்போது மாறி விட்டோம் !
நாம் படைத்த
நாச எந்திரங்களும்
நுணுக்கத் தொழிற்துறைக்
கொலைக் கருவிகளும்
மினுப்பதைத் தவிர
நம்மைத்
தனித்துக் காட்டு வதில்லை !

++++++++++++

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 22, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -1

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



+++++++++++++++++++++++++++++++++
ஊழ்விதி
+++++++++++++++++++++++++++++++++

கவிதை -30 பாகம் -1

முந்திய காலத்து மாமேதைகளை விட உயர்ந்திருக்கும் மிக்கப் பணிவு கொண்ட மனிதர் வாழும் யுகத்தில் நாம் வசித்து வருகிறோம். நம் மனதில் முன்பு குடிகொண்டிருந்தவை இப்போது பொருளற்றுப் போயின ! அவை மக்களின் கண்ணோட்டமின்றி மூடி வைக்கப் பட்டன ! நமது உள்ளுணர்வுகளில் ஒரு காலத்தில் மிதந்த மூடுபனிபோல் அவை கலைந்து போய்விட்டன ! அந்த இடத்தில் புயல் போல் மாமேதைகள் புகுந்து கடல் போல் கொந்தளித்து,, எரிமலைகள் போல் மூச்சு விட்டு நகர்ந்து செல்கிறார் !

கலில் கிப்ரான். (The Giants)

++++++++++++++++++++++++
<< ஊழ்விதி >>
++++++++++++++++++++++++

போரட் டத்தின் முடிவிலே
எவ்வித மான
ஊழ்விதியை முந்தைய மாமேதைகள்
உலகுக்கு அறிவிப்பார் ?
செத்தவரின் எலும்புகளை
மரணம்
விதைத்துள்ள தனது வயலுக்குக்
குடியானவன் வித்திட
மீள்வானா ?
வாள்கள் அறுத்து விட்ட
வனத்தின்
பசும்புல் தளங்களில்
ஆட்டிடையன் தன் மந்தை
ஆடுகளை
மேய விடுவானா ?
குருதி கரைப் பட்டக்
குளத்து ஊற்று களிலே
ஆடுகள் நீர்
குடிக்குமா ?

+++++++++

சாத்தான்கள் கூத்தாடிப்
புனிதமற்று போன பீடத்துப் கோயிலில்
ஆத்திகர் மண்டி யிட்டு
ஆராதிக் கவும் வருவரோ ?
பீரங்கிப் புகை மறைத்த
தூர விண்மீன் களுக்கு அடியிலே
பாவலர் தம் பாடல்களைப்
படைத் திடவும் செய்வரோ ?
மௌனத்தைக் கலைக்கும்
இரவிலே மூர்க்கரின்
குரலிலே
இசைப் பாடகன் தனது
நாதக் கருவி
நாண்களை மீட்டுவனோ ?

++++++++++++

நாளை வரும் தீங்கெண்ணி
நைந்து போகையில்
தாயானவள்,
தொட்டில் குழந்தைக்குத்
தாலாட்டுப் பாடவும் இயலுமோ ?
போர்க் களத்தில்
குண்டுகள் வெடித்து
புகை மூட்டம் இன்னும்
மண்டிய போது
காதலர்கள் சந்தித்து
மோக முத்தம் இடுவரோ ?
புண்ணை ஆற்றிப்
புவிக் காயத்தைத்
தன் ஆடையில் கட்டி விட
ஏப்ரல் மாதமும் மீளுமோ
இந்த பூமிக்கு ?

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 14, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“பைத்தியம் என்று சொல்லும் அளவுக்கு மீறி வெறி கொண்டவர் அவர். அவர் ஒரு பூரணவாதி (Idealist) ஆன போதிலும் அவரது இலக்கியக் குறிக்கோள் வாலிப இதயங்களில் நஞ்சிட்டுப் பாழாக்குவதே ! திருமணம் பற்றி மனிதரும், மாதரும் கிப்ரான் ஆலோசனைகளைப் பின்பற்றினால் இல்வாழ்வுப் பந்தம் முறிந்துவிடும் ! சமூகம் அழிந்துவிடும் ! அசுரரும் பிசாசுகளும் குடிமக்களாய்க் கொண்ட அக்கினி மயமாய் ஆகிவிடும் !”

இப்படித்தான் என்னைப் பற்றி மக்கள் கூறுகிறார். அவர் உரைப்பது சரியே !

கலில் கிப்ரான். (Narcotics & Dissecting Knives)

+++++++++++++++++++++++++++++++
<< என் படைப்புகள் >>
+++++++++++++++++++++++++++++++

கிழக்காசிய மக்கள் வேண்டுவது
எழுத்தாளன்
தேனைத் தயாரிக்கும்
ஒரு தேனீ போல்
இருக்க வேண்டும் என்று !
தேன் அவருக்குப்
பெருந் தீனி !
மற்றனைத்து உண்டியை விட
தேனே அவருக்குத்
தேவை உணவு !

++++++++++++++

கிழக்காசிய மக்கள் விழைவது :
ஊது பத்தி
புகைவது போல்
அவரது கவிஞனும்
எரிந்திட வேண்டும்
அரசாளும்
அவரது சுல்தான் முன்பு !
கிழக்காசிய வான மெல்லாம்
புகை மூண்டு
நோயுற் றாலும் மக்கள்
ஓய்வ டையார்
ஊது பத்திப் புகைச்சல்
போது மென்று !

+++++++++++++++

உலகம் அதன் வரலாற்றை
உருவாக்க வேண்டும் !
பூர்வீகத்தை,
பழைய வழக்கத்தை
சம்பிர தாயத்தைப்
பயின்று
மொழி ஆளுமையைக்
மேற்கொள்ள வேண்டும் என்று
வேண்டிக் கொள்வார் !
கிழக்காசிய மக்கள்
பழங்கதையை நியாயப் படுத்தி
சுக மெத்தையில்
படுத்திருக் கிறார் !
நேரிய நினைப் பையும்
நிலைத்த அறிவுரை களையும்
மெய்ப்பாடு
ஞானத்தையும் புறக்கணிப்பது
ஏனெனில்
உள்ளத்தைக் குத்தும் அவை !
உறக்கத் தின்று
எழுப்பி விடும் அவை !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 25, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன ? கவிதை -28 பாகம் -4

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர், போவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அவரெல்லாம் காதல் என்பது மனிதருக்கு நம்பிக்கையும், மன வேதனையும் தருவது என்று சொல்லி அதை ஒரு மர்மம்தான் என்று குறிப்பிட்டு முந்தைய கருத்தையே வலியுறுத்தி விட்டுச் சென்றார்.

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< காதல் என்பது என்ன ? >>
+++++++++++++++++++++++++++++++

காதலின் மர்மம் என்ன ?
காதலின் மகத்துவம் என்ன வென்று
கோயில் முன்னின்று கேட்டேன்.
“ஆதி முதல்வன்
அளித்த ஓர் இயல்புப்
பலவீனம்” என்றார் சான்றோர்
ஒருவர்.
“கடந்த காலத்தையும்
வருங் காலத்தையும்
ஒருங்கே பிணைப்பது காதல்”, என்பான்
வாலிபன் ஒருவன் !
“கரு விரியன் தீண்டி
மரணம் தரும் விஷம்,” என்றாள்
மங்கை ஒருத்தி !

++++++++++++++

“காலை மணமகள்
கையில் தரும்
ஒயின் மதுபானம் காதல் !
உறுதி அளிக்கும்
வலுத்த ஆத்மாக் களுக்கு !
விண்மீன்கள் கொட்டிக் கிடக்கும்
விண் வெளிக்கு ஏற்றி விடும்.”
என்று விளக்குவாள்
கண்ணழகி ஒருத்தி
புன்னகை யோடு !
கண்மூடி
வாலிபம் துவங்கி முடிக்கும்
போலி நடிப்பே காதல்,” என்று
கேலி செய்வான்
காவி உடை போர்த்திய
தாடிக்காரன் ஒருவன் !

+++++++++++++++

“கடவுள் நோக்கும் அளவு
மனிதனைக்
காண வைக்கும் தெய்வ உணர்வே
காதல்,” என்பான்
அடுத்தோர் ஆடவன் !
“ஆத்மா வுக்கு
வாழும் ரகசியம் தெளிவா வதை
அரணாக்கிக் கண்களை
மிரள வைக்கும்
மூடுபனிப் படலம்,” என்பான்
ஒரு குருடன் !
“ஆத்மாவின்
எரியும் உட்கருவில் சிதறும்
ஒரு மந்திரக் கதிர் !
காதல் ஒளியூட்டு வது
சூழ்ந்துள்ள மாந்தர்க்கு !
அடுத்தடுத்து வரும்
வாழ்வை
வனப்புக் கனவெனக் காட்டும்
காதல் !” என்பான்
வாத்தியக் கருவி
வித்துவான் ஒருவன் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 18, 2010)

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிஞரும் கவிதைகளும் கவிதை -26

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



“என் சகோதரக் கவிஞர்கள் எழுத்து வரி அடிகளுக்கு வலு ஊட்டிக் கவிதை ஆரங்களைப் பின்னக் கற்பனை செய்திருந்தால், ஒருநாள் (வெறுப்படைந்து) அவர்கள் கடிவாளத்தைப் பின்னுக்கு இழுத்து தமது கைப் பிரதிகளைக் கிழித்துப் போட்டிருப்பார்.”

“தீர்க்க தரிசி அல்-முதாநபி (Al-Multanabbi) முன்னறிவிப்பு செய்திருக்கிறார் : புகழ் பெற்ற அரபிக் கவிஞர் அல்-·பாரித் (Al-Farid) எழுதிய அனைத்தும் தற்காலக் கற்றுக் குட்டி கவிஞருக்கு கட்டாயக் கைநூல் மூலமாக உதவி செய்யும். கவிஞர்கள் மையை வீணாக்கிக் கவனக் குறையால் மறதியில் எழுதித் தள்ளி மயிலிறகுக் கோலை உடைத்திருப்பார்.”

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++

<< கவிஞரும் கவிதைகளும் >>

+++++++++++++++++++++++++++++++

கவிதை என்ப தொரு

புன்முறுவலின்

புனித மீள் பிறப்பு

என்னினிய தோழர்காள் !

கண்ணீரை

உலர வைப்பது கவிதை

ஒரு பெருமூச்சில் !

ஆத்மாவில் வீற்றி ருக்கும் ஓர்

ஆன்மாவே கவிதை !

இதயத்தை ஊட்டி வளர்ப்பதே

கவிதை !

இரக்கம் அதற்கோர்

மதுபானம் !

இவ்விதம் படைக்கப் படாதது

உண்மை யற்ற

ஒரு தூதுச் செய்தியே !

++++++++++++++

நித்திய வானுலகி லிருந்து

கண்காணிக்கும்

கவிஞரின் ஆன்மாக்களே !

முத்து முத்தான உமது

சொற்களால்,

ஆத்மாவின் வைரக் கற்களால்

நீங்கள் போற்றும் பீடங்களைத்

தேடிக் கொண்டு

நாங்கள் செல்றோம் !

காரணம் :

உலோகாயுத இடி முழக்கமும்,

தொழிற் சாலை யந்திரச் சத்தமும்

அழுத்திக் கொண்டுள்ளன

நம்மை எல்லாம் !

ஆதலால்

நமது கவிதைகள் யாவும்

பார வண்டிகள் போல்

பளுவாய் உள்ளன !

நீராவி ரயில் விசில் போல்

தீராத உலைச்சல்

அளிப்பவை !

+++++++++++++++

உண்மைக் கவிஞர்களே !

எம்மை மன்னிப்பீர் !

புத்துலகைச் சேர்ந்த

நாமெல்லாம்

ஓடிக் கொண்டி ருக்கிறோம் !

உலோகாயுதப் பொருட்களைத்

நாடிய வண்ணம் !

கவிதையும் இப்போது

கடைச் சரக்காய்ப் போனது !

நித்திய மூச்சாய்

நிலைக்காது !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:

The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 7, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -2

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கலில் கிப்ரான் சொல்கிறார் :

குப்பைக் குவியலில் நோய்வாய்ப்பட்டு தோலில் கொப்பளங்களோடு நாய் ஒன்று சாம்பல் மேல் கிடப்பதைக் கண்டேன். அத்தமிக்கும் பரிதியை வெறித்து அங்குமிங்கும் பார்க்கும் அந்த நாயின் கண்கள் நாய் பட்ட இன்னல்கள், ஏமாற்றங்கள், அவமானத்தைக் காட்டின.

எனக்குப் புரிந்தது இது :

++++++++++++

ஊமை விலங்கு கூறாமல் கூறியது :

“ஆதாமின் புதல்வனே ! எனது
விழிகட்குத் தெரிகிறது
எனக்கும்
உனது சந்ததி களுக்கும்
இடையே உள்ள
ஒற்றுமை !
தடை செய்தது கால மாற்றம்
அவருக் கெல்லாம் !
நாட்டுக்குப் போராடினர்
படை வீரர்
வாலிபராய் உள்ள போது !
முதிய வயதில் பிறகு
வயலை உழுதார் !
பனிக்கால வாழ்வில் இப்போது
பயனற்றுப் போனார் !
பலராலும்
விலக்கப் பட்டார்
எம்மைப் போல் !”

++++++++++++++

“எனது இனத்துக்கும்
உலக மாதர் குழுவுக்கும்
ஒருமைப் பாடு கண்டேன் !
வாலிப மாது
தனது நளின வயதில்
வாலிபன் இதயத்தில் வாழ்ந்தாள் !
தாயாகிப் பிறகு வாழ்வைச்
சேய்களுக்கு அர்ப்பணித் தாள் !
இப்போது
முதிய வயதில்
தனித்து விடப்பட்டு அவளும்
ஒதுக்கப் பட்டாள் !
உனது போக்கு
எத்தகைய கொடுங் கோன்மை !
கடுமைப் போக்கு !
ஆதாமின் புதல்வனே !

+++++++++++++++

அப்படிச் சொல்லாமல் சொன்னது
அந்த ஊமை விலங்கு !
என்னிதயம் புரிந்து கொண்டது
அந்த உணர்வுகளை !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 30, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -4

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“காலையில் குடியானவன் தன் குடிலை விட்டு உணவுப் பண்டங்கள் வாங்கத் தாய், தங்கையின் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு நகருக்குச் செல்கிறான். மாலையில் உணவுப் பண்டங்களின்றி வெறுங்கையாகப் பணத்தோடு மீள்கிற போது, வீட்டில் தாயும், சகோதரியும் மரணத்துக்கு இரையாகி மீளாத் தூக்கத்தில் விழுந்து கிடக்கிறார். குடியானவன் தன்னிரு கரங்களையும் மேலே காட்டித் தடாலெனத் தரையில் விழுகிறான்.”

கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
+++++++++++

விழித்தது காலை வேளை
என் கண்மணி !
விழிப்பின் மென்மைக் கரங்கள்
கனவு கண்டோர்
கண்களைத் தடவு கின்றன !
கதிரொளிச் சுடர்கள்
கதவுகளைத் திறந்தன
வாழ்வின் தீர்வு, உன்னதம்
காட்டி !
பள்ளத் தாக்குகளில்
அமைதி, சமாதானம் நிலவி
சிற்றூர்கள்
தூக்கம் கலைந்து எழுந்திடும் !
ஆலய மணிகள்
காலைப் பிரார்த் தனைக்குக்
குலாவும் ஓசையில் கூப்பிடும்
உலாவும் காற்றில் !
இயற்கையும் வழிபாட்டில் கலந்து
எதிரொலிக்கும் குகைகளில்
அம்மணி ஓசைகள் !

++++++++++++

பசுங் கன்றுகள் தவ்வி
ஓட்டமிடும்
மாட்டுக் கொட்டத்தை விட்டு !
செம்மறி ஆடுகள்
வெளியேறும்
வேலியைத் தாண்டிப்
பளபளக்கும்
பச்சைப் புல் மேய !
அவற்றின் பின்
புல்லாங்குழல் ஊதிக் கொண்டு
ஆடிச் செல்வான்
ஆட்டிடையன் !
வெளுத்த வானை
வரவேற்று
வாலிபப் பெண்டிர்
குயிலைப் போல் பாடிச் செல்வார்
அவருக்குப் பின்னால் !
இப்போது
பகல் பொழுதின்
கனத்த கரங்கள்
அழுத்திக் கொண்டுள்ளது
நகரத்தை !

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 3, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) – ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் – கவிதை -23 பாகம் -3

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


முன்னிரவில் தாயை விளித்துச் சிறுமி கேட்கிறாள் : “வயிறு பசிக்கிறது அம்மா”. “சற்று பொறு மகளே” என்று தாய் பதில் சொல்வாள். நடு ராத்தியில் மறுபடியும் சிறுமி கேட்கிறாள்: தாயே பசிக்குது. தா எனக்கு ரொட்டி.” “ரொட்டி இல்லை கண்ணே” என்று பதில் கூறுவாள் தாய். விடிவதற்கு முன்பு மரணம் அண்டித் தாயையும் சிறுமியையும் ஒன்றாய்த் தின்கிறது. தெரு வீதியில் இருவரும் நித்திய உறக்கத்தில் விழுந்து கிடக்கிறார். பீடுநடை போடுகிறது மரணம் தூரத்து மாலை அத்தமத்தை நோக்கி !

கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
+++++++++++

கிராமத்தார் தூங்கிப் போனார்
மரங்களுக் கிடையில்
இருக்கும்
தமது குடிசைகளில்
என் கண்மணி !
விரைந்து போயின அவரது
ஆன்மாக்கள்
கனவுக் களம் நோக்கி
என் கண்மணி !
அனைத்து ஆடவர் பொன்தேடும்
வினைப் பளுவில்
முனைந்துள்ளார் !
பசுமையான
செங்குத்துப் பாதையில்
கடுத்துப் போயின கால்கள் !
களைத்து இடருடன்
கனத்துப் போயின கண்கள் !
தொப்பென வீழ்கிறார்
படுக்கைச் சுகத்தில் என் கண்மணி
மனம் தடுமாறி
பயப் பேய் தாக்கி !

+++++++++++++++++

பட்டினிப் பாலகர்
விடுதிகளில் தள்ளாடுவர் !
துயர்ப்
படுக்கையில் தாய்மார்கள்
பெருமூச்சு விடுகிறார்
புரண்ட வண்ணம் !
வானுயர்ந்து போகும்
மக்களின்
வறுமைத் தொல்லை !
வேதனைக் கனவுகள் எல்லாம்
கசப்புக் கவலைகளாய்
கலங்க வைக்கும்
இதயங்களை !

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 23, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << அழகுத்துவம் >> (Beauty) கவிதை -19

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Kahlil Gibran’s Paitings
Poetry of Trees

“உனது கண்கள் நோக்கி அமைதியில் ஓய்வெடுக்கும் உலக மயமான அழகுத்துவத்தில் நீடித்து நிலவுகிறது என் வாழ்க்கை. இயற்கைதான் அழகுத்துவம் எனப்படுவது. குன்றுப் பிரதேசங்களுக்கு இடையே ஓர் ஆட்டிடையன் பெறும் களிப்பின் ஆரம்பக் காட்சி அது. ஒரு குடியானவன் வயல் நிலங்களில் காணும் பூரிப்புக் களம் அது. மலைப் பிரதேசச் சமவெளிகளின் இடையே அற்புதப் பழங்குடியினர் அடையும் பேரானந்தம் அது.”

கலில் கிப்ரான்

+++++++++

<< அழகுத்துவம் >>

கவிதை -19

ஆத்மாவை ஈர்ப்பதுதான்
அழகுத்துவம் !
அள்ளிக் கொடுக்க
ஆசைப் படுவதைத் தவிர
அது வேறு எதையும்
யாசிப்ப தில்லை !
அழகத்துவத்தை நீ சந்தித்தால்
உள்ளத்தின்
உள்ளே உள்ள
உன் கைகள் நீண்டு அதை
உன்னிதய பீடத்துடன்
பின்னிவிடும் !
களிப்பும் துயரமும்
கலந்த ஓர் மகத்துவம் !

+++++++++++++++++

நோக்கும் போது உனக்குக்
காணப் படாது !
புரிந்து கொண்ட போது
உறுதி யற்றுப்
புதிராக இருப்பது !
காதில் விழும் போது
ஊமைச் சொல்லாய்ப் போவது !
புனிதத்திலும்
புனித மான அழகத்துவம்
உன்னுள் உதித்து
உன்னுள் முடிந்து போவது
உன் கற்பனை
உலகைத் தாண்டி !

+++++++++++++

அழகுத்துவம் பற்றி எனக்கு
விளக்குவாய் நீ !
தாறு மாறாய்
தம் இச்சைப் படி மாந்தர்
மொழிந்திடுவார் !
அழகுத்து வத்தைப்
மற்றவர்
மதிப்பதைக் கண்டுள்ளேன்
அழகினை
வழிபடுவோர் இருக்கிறார்
பல்வேறு முறைகளில்
பல்வேறு
பழக்க வழக்கத்தில் !

++++++++++++++

அழகுத்துவம் என்பது
விந்தை அளித்திடும் ஓர்
அபார சக்தி !
மனித இனம்
எல்லா வற்றுக்கும் அஞ்சிடும் !
ஆன்மீக அமைதியை
அள்ளிக் கொடுக்கும்
சொர்க்கத் துக்கு நீ
அஞ்சு கின்றாய் !
ஓய்வளித்து
மனச்சாந்தி தரும்
இயற்கைக்கு அஞ்சுகிறாய் !
சினமுற்றுச் சீறுவதாய்க்
குற்றம் சாட்டி
தெய்வீகச் சக்திக்குப்
பயப்படு கிறாய் !

+++++++++++++

கருணை வடிவான
கடவுளோ
பரிவும் பேரன்பும்
நிரம்பி யுள்ளது !
அழகத்துவம்
அறிவுடை யோரை
ஏந்திச் சென்று
சத்தியத்தின்
ஆசனத்தில் அமர்த்திடும் !
ஆத்மாவை ஈர்ப்பதுதான்
அழகுத்துவம் !
அள்ளிக் கொடுக்க
ஆசைப்படு வதைத் தவிர
அது வேறு எதையும்
யாசிப்ப தில்லை !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 17, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran’s Paintings
Kahlil’s Sister Marianna Gibran

“வாழ்க்கையில் உள்ள ஒவ்வொன்றும் நற்பயனை அளிப்பதுதான். பொன்னைத் திரட்டப் போவதிலும் ஒரு போதனைக் கல்வியைக் கற்றுக் கொள்ளலாம். செல்வம் என்பது நாண்கள் முறுக்கிய ஓர் இசைக்கருவி ! அதை எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்று தெரியாதவன் அதிலிருந்து வரும் அபத்தமான சங்கீதத்தை மட்டுமே கேட்பான். செல்வம் என்பது காதல் போன்றது ! சேமித்து வைப்பவனை வேதனை கொடுத்து மெதுவாகக் கொல்கிறது அது ! குடிமக்களுக்காகச் செலவு செய்பவனைச் செல்வம் சீராக வாழ வைத்து மேல் தூக்கி விடுகிறது.”

கலில் கிப்ரான்

+++++++++

<< நேற்றைய கூக்குரல் >>

கவிதை -17 பாகம் -4

+++++++++++++++++

அறிவுச் சுடர்விளக்கு மங்கி
அணையப் போகிறது !
அதற்கு எண்ணெய் ஊற்றும்
நேரம் வந்து விட்டது !
மெய்யான செல்வ மாளிகை
தகர்க்கப் படுகிறது !
மீண்டும் அதைக் கட்டிப்
பாதுகாக்கும்
வேளை வந்து விட்டது !
அறிவுக் களவாடிகள்
அமைதிக் களஞ்சியத்தைத்
திருடிப் போனார் !
மறுபடி அதைக் கைக்கொள்ளும்
தருணம்
வந்து விட்டது !

+++++++++++++

இதுதான் மக்கள் கூறிடும்
செல்வமா ?
இதுதான் நான் வழிபட்டுப்
பணி செயும் கடவுளா ?
இதுதான் இந்தப் புவியில்
நான் தேடும் ஆசைப் பொருட்களா ?
ஏன் ஒரு துளித் திருப்திக்கு
இவற்றை
மாற்றக் கூடாது நான் ?
ஒரு டன்
பொன் கட்டிகளுக்கு
யார் விற்ப தெனக்கு
ஓர் உன்னத சிந்தனையை ?

++++++++++++++++

கை நிறைந்த
வைரக் கற்களுக்கு
எவரெனக்கு
அன்பு தனை அளிப்பார்
இமைப் பொழுது ?
யாரெனக்கு
ஓர் கண் அளிப்பார்
படி பணத் துக்கு நான்
பண்டம் மாற்ற ?
மற்றவர்
உள்ளத் தினை
ஊடுருவிப் பார்க்க ?

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 10, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை நோக்கி விரைந்து செல்கிறீர் ! நீவீர் வாழ்க்கைச் சகதியில் உழன்று அதன் பூந்தோட்டத்தை விட்டு விலகிப் போகிறீர் ! இயற்கை வனப்பின் நாகரீகப் பட்டு உடுப்பு உமக்காகப் படைக்கப் பட்டுள்ள போது, கிழிந்து போய் இறுக்கமாக இருக்கும் ஓர் அங்கியை ஏன் உடுத்திக் கொண்டிருக்கிறீர் ?

அறிவுச் சுடர்விளக்கு மங்கிக் கொண்டு வருகிறது. அதற்கு எண்ணெய் ஊற்றும் நேரம் வந்து விட்டது. மெய்யானச் செல்வ மாளிகை தகர்க்கப் படுகிறது. அதை மீண்டும் எடுத்துக் கட்டிப் பாதுகாக்கும் வேளை அருகி விட்டது. அறிவுக் களவாடிகள் உமது மனச்சாந்திப் பொக்கிசத்தைத் திருடிப் போய் விட்டார். அதை மீண்டும் கைப்பற்றும் தருணம் வந்து விட்டது !”

கலில் கிப்ரான் (ஜெரூசலத்தில் ஜெரமையாவின் உபதேசம்)

+++++++++

Fig. 1
Kahlil Gibran’s Poem
Liberation of Mankind

<< நேற்றைய கூக்குரல் >>

கவிதை -17 பாகம் -3

வீதியில் நடந்து வரும்போது
வெறுப்புடன்
நோக்குவர் என்னை
பொறாமை யோடு !
பூங்கா வழியே
புகுந்து நான் செல்கையில்
எள்ளி நகையாடி
ஏளனமாய் நோக்கும்
முகங்கள்
என் கண் முன்னே
தெரிகின்றன !

+++++++++++++

நேற்றைய தினத்தில்
செல்வந்தனாய் இருந்தேன்
பூரிப்போடு !
இன்று நான்
ஏழை யாகிப் போனேன்
பொன்னோடு !
நேற்று நான்
ஆட்டு மந்தையைக்
கண்காணித்துக்
களிப்போ டிருந்த
ஓர் ஆட்டிடையன்
திருப்தியுள்ள
குடிமக்கள் மீது
பரிவு காட்டும் ஓர்
அரசன் போல் !

+++++++++++++

இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !

++++++++++++

மன்னிப்பீர் என்னை
என் நீதிபதியே !
அறியாமல் போனேன் எனது
செல்வச் சேமிப்புகள்
எல்லாம்
சிதறடிக்கும் என் வாழ்வை
என்று !
அறியாமல் போனேன்
அது என்னை
வெறுப்பிலும்
இருட்டுக் குகையிலும்
முரட்டுத் தனத்திலும்
விரட்டித் தள்ளும் என்று !
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >>

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



Fig. 1
Kahll Gibran Paintings
“The Angel”

“நீ என் சகோதரன். ஏனெனில் நீ மனித நேயனாய் இருக்கிறாய். மேலும் நாமிருவரும் ஒரே புனித ஆன்மாவின் புதல்வர். நாம் சமமானவர். ஒரே மண்ணில் இருவரும் வடிக்கப் பட்டவர். வாழ்க்கைப் பாதையில் நீ எனது துணைவனாக இங்கிருக்கிறாய். மறைந்திருக்கும் மெய்ப்பாட்டின் உட்பொருளைப் புரிந்து கொள்ள நீ எனக்கு உதவி செய்வாய். மனித நேயனாக நீ இருப்பதே போதுமானது நான் உன்னைச் சகோதரனாய் நேசிப்பதற்கு. என்னைத் தேர்ந்தெடுத்த சமயத்திலே நீ என்னோடு உரையாடலாம். ஏனெனில் நாளைய தினம் உன்னை மறைத்துவிட்டு உனது பேச்சை அவனது நியாயத்துக்குச் ஒரு சான்றாகப் பயன்படுத்தும். அதற்குப் பிறகுதான் உனக்கு நியாயம் வழங்கப்படும்.”

கலில் கிப்ரான்

+++++++++

<< நேற்றைய கூக்குரல் >>

கவிதை -17 பாகம் -2

எங்கே மறைந்தன
அகண்டவெளிப் புஞ்சை வயல்கள் ?
எங்கே வரண்டன
இசைத்தோடும் நீரோடைகள் ?
புனிதத் தென்றல்
எங்கே
உணர்வ தில்லை ?
இயற்கையின் நெருக்கம் ஏன்
இல்லாமல் போனது ?
எங்கே
எனது இறைவன் ?

+++++++++++++

இழந்து விட்டேன் நான்
எல்லா வற்றையும் !
ஏகாந்தத் துயர் தவிர
எதுவும் மிஞ்ச வில்லை
என்னிடம் !
எள்ளி நகைக்கிறது
என்னை நோக்கிப்
பொன் கட்டிகள் எல்லாம் !
சாபம் இடுகிறார்
அடிமைகள்
என் முதுகுக்குப் பின்னால் !
உன்னதத்தில்
என்னிதயம் கவர்ந்து நான்
எடுத்துக் கட்டிய
என் உளங்கவர் அரண்மனையும்
இப்போ தில்லை !

+++++++++++++

திரிந்தேன் நேற்று நான்
ஒருங்கே
சமவெளிகளில், குன்றுகளில்
பெடோவி* இனத்தின்
நாடோடிப்
புதல்வி யோடு !
நேர்மையே
எமக்குத் தோழி !
காதல்
எமக்குக் களிப்பு !
நிலவே
எமக்குப் பாதுகாப்பு !
இப்போது என்னைச்
சூழ்ந்தி ருப்பது எல்லாம்
தாழ்ந்த வனப்பில்
தங்கத் திற்கும் வைரத்துக்கும்
தம்மை விற்கும்
விலை மாதர்கள் !

++++++++++++

நேற்று நான்
கவலை யற்றிருந்தேன்
ஆட்டிடைய ரோடு
உண்டு உறவாடி
ஆடிப் பாடி
அவருடன் விளையாடி
இதய மெய்நெறி இசையில்
ஒருமித் திருந்தேன் !
இன்று மக்கள் ஊடே நான்
காணப் படும்
மானிடர் :
ஓநாய்களுக் கிடையில்
ஒடுங்கிய
ஆடுகள் போல்வர் !

++++++++++
*பெடோவின் இனத்தார் *Bedouin : Semi-nomadic people of the coastal land of South Sinai near Egypt.

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 27, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என் உள்ளொளி நோக்கம் >> (My Vision) கவிதை -18

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



Fig. 1
Kahlil Gibran’s Paintings
“A Woman’s Body”

“உனது ஞானத்திலிருந்து எழுந்த உன் சத்திய சிந்தனைக்காக நானுன்னை நேசிக்கிறேன். அந்த சத்திய நெறி என் அறியாமையால் எனக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அது ஓர் ஆன்மீகச் செயலாக இருப்பதால் நானதை ஒரு தெய்வீகச் சிந்தனையாக மதிக்கிறேன். எதிர்காலத்தில் வரப் போகும் உலகத்தில் உனது சத்திய சிந்தனையும் எனது சத்திய நெறியும் சந்தித்து பூவாசனை போல் ஒன்றோடு ஒன்று கலந்து நிரந்தரமாகப் பூரணச் சத்திய போதனையாய் நீடித்து நேச மோடு அழகு மயத்தில் நிலைபெறும்.”

கலில் கிப்ரான்

+++++++++

<< என் உள்ளொளி நோக்கம் >>

கவிதை -18

ஒரு மாயப் பூதம் சொன்னது :

காதலற்ற வாழ்வு மலர்ச்சியும்
கனியும் விளையாத
மரத்தைப் போன்றது !
அழகுத்துவம் இல்லாத
காதல் வாழ்வு
வாசனை இல்லாத
பூக்களை போன்றது !
வித்துக்கள் இல்லாத
கனிகளைப் போன்றது !
வாழ்வு, காதல், அழகுத்துவம் ஆகிய
மூன்று இயற்பாடுகளும்
தோன்றும் ஒருவரிடம் !
பிரிக்க இயலாதவை
மாற்ற முடியாதவை அவை !

+++++++++++++

இரண்டாம் மாயப் பூதம் சொன்னது :

புரட்சி யற்ற ஒரு வாழ்வு
வசந்த மில்லாத
பருவக் காலங்கள் !
உரிமை யில்லாத
புரட்சி
வரண்டு போன பாலை
வனத்தில் எழுந்த
வசந்தம் !
வாழ்வு, புரட்சி, உரிமை
மூன்று இயற்பாடுகளும்
தோன்றும் ஒருவரிடம் !
பிரிக்க இயலாதவை
மாற்ற முடியாதவை அவை !

+++++++++++++

மூன்றாம் மாயப் பூதம் சொன்னது :

விடுதலை யற்ற ஒரு வாழ்வு
ஆத்மா இல்லாத
ஓர் உடம்பு !
சிந்தனை யற்ற விடுதலை
கொந்தளிக்கும்
ஆன்மா !
வாழ்வு, விடுதலை, சிந்தனை
மூன்று இயற்பாடுகளும்
தோன்றும் ஒருவரிடம் !
நீடித்திருப்பவை
நீங்கிச் செல்லாதவை அவை

++++++++++++

மூன்று மாயப் பூதங்களின் ஏகக்குரல் :

எதைக் காதல்
உண்டாக்கு கிறதோ
எதைப் புரட்சி
உருவாக்கு கிறதோ
எதை விடுதலை
வளர்த்து வருகிறதோ
அம்மூன்றும்
இறைவனின்
திரைக் காட்சிகள் !
அறிவுசார் பிரபஞ்சத்தின்
இறைமை
வெளிப்பாடுகள் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 20, 2009)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran Paintings
The Jail Birds

“பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மாவே. அந்த மகத்தான கடவுள் பேரன்பையும் நன்னெறியையும் உபதேசிக்கிறது. ஆனால் மக்கள் அப்போதனைகளைக் கேலி செய்கிறார். நாஸரத் ஏசு நாதர் அவற்றை ஏற்றார். அதற்காக அவர் சிலுவையில் அறையப் பட்டதே அவருக்கு வெகுமதி. சாக்ரடிஸ் அக்குரலைக் கேட்டார். அவரும் பலியானார். ஏசுவையும், சாக்ரடிஸையும் பின்பற்றி வருகிறார் எண்ணற்ற அவரது சீடர்கள்.”

கலில் கிப்ரான்

ஜெரூஸலம் ஏசு பெருமானைக் கொல்ல முடியாது. அதுபோல் ஏதென்ஸ் சாக்ரடிஸை அழிக்க இயலாது. அவர் இருவரும் இன்னும் வாழ்கிறார். எப்போதும் அவர் அழியாமல் நீடு வாழ்வார். பின்பற்றுவோரைக் கேலி செய்வது வெற்றி அளிக்காது. சீடர்களும் வாழ்வார்; எப்போதும் பெருகுவார்.

கலில் கிப்ரான்

+++++++++

<< நேற்றைய கூக்குரல் >>

கவிதை -17

நேற்று நான்
ஆடு மேய்த்தேன்
பச்சைப் புல்வெளி
மலைச் சரிவுகளில்
புல்லாங் குழல் வாசித்து
சல்லாபமாய்
தலை நிமிர்ந்து கொண்டு !

+++++++++++++

இன்று நான் பேராசைச்
சிறையிலே
சிக்கிக் கொண்டு
பொன் மேல் பொன் திரட்டி
போராட் டத்தில்
உழன்று
ஆறாத் துயரில்
அழுத்தப் பட்டேன்
இறுதியில் !

+++++++++++++

நேற்று நானோர்
பாடும் குயில் பறவை
சுதந்திரமாய்
மேல் நோக்கி உயரும்
கீழ் நோக்கி
அங்கும் இங்கும்
தங்கும் நிலத்தில் !

++++++++++++

இன்று நானோர் அடிமை
நிலையற்ற
செல்வத்தின் மீது
சமூகத்தின்
சட்ட திட்டத்தின் மீது
நகரத்தின்
பழக்க வழக்கத்தின் மீது
விலைக்கு வாங்கிய
நண்பரின் மீது
குறுகிய
விநோத விதிகளுக்கு
உட்பட்டு
மக்களை மகிழ்விப்பேன் !

++++++++++

சுதந்திரமாய் வாழத்தான்
பிறந்தேன் !
வாழ்வுக் கொடையில்
மூழ்கிப்
பூரிப்படைந்தேன் !
ஆனால்
நானின்று
என் முதுகை முறிக்கும்
பொன் பொதி சுமக்கும் ஓர்
மிருகமாய்
இருக்கிறேன் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 13, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran Paintings
“Women’s Dream”

“பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மா. அந்த மனித இனம் கந்தைகளை அணிந்து நிர்வாணத்தை மூடி எலும்புக் கன்னங்களில் கண்ணீர் வடித்த வண்ணம் தமது குழந்தைகளைப் பரிதாபமாய் விளித்துத் சிதைந்து போன இடங்களில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவரது பிள்ளைகள் அன்னையர் அழுகை அரவங்களைக் கேட்க விடாமல் வாள் கத்திகளைத் தீட்டிக் கொண்டு தமது தேசீய கீதத்தைப் பாடுவதில் தீவிரமாய் முனைந்துள்ளார்.”

கலில் கிப்ரான்

“நான் என் பிறந்த தேசத்தைப் புகழ்ந்து பாடுகிறேன். சிறுவனாய் நான் வசித்த வீட்டைக் காண விரும்புகிறேன். ஆனால் அந்த இல்லத்தில் மக்கள் பயணிகளுக்குத் தேவையாக உணவு கொடுத்துத் தங்கியிருக்க மறுத்தால் எனது புகழ்ப் பாக்களை இரங்கற் பாக்களாய் மாற்றி வீட்டை மறக்க வேட்கை அடைவேன். அப்போது என்னுள்ளக் குரல் சொல்லும், “தேவையுள்ளோருக்கு ஆறுதல் அளிக்காத அந்த வீட்டைத் தகர்த்து அழி.” என்று.

கலில் கிப்ரான்

+++++++++

<< ஒரு கவிஞனின் கூக்குரல் >>

கவிதை -16 பாகம் -3

இன்னலில், துயரில்
எனக்கு ஆறுதல் அளிக்கும்
மெய்யான தோழன்
எனது ஆத்மாவே !
தனது சொந்த ஆத்மாவை
நேசிக்காதவன்
மனிதப் பகையாளி !
சுய வழி காட்ட
உள்ளத்தின் உள்ளே ஒன்றில்லாது
மரணம் அடைவான்
மனமுடைந்து !
வாழ்வு மலர்வது
ஒருவன்
உள்ளத்தின் உள்ளே தான்
வெளிப் புறத்தி லன்று !

+++++++++++++

நானொரு வார்த்தை
சொல்ல வந்தேன்
நானதைச் சொல்வேன்
இப்போது !
என் மரணம் உரைப்பதைத்
தடுத்தால்
நாளைக்குச் சொல்லப் படும்
அந்த வார்த்தை !
ஏனெனினில்
நீடிக்கும் சரித்திர நூலில்
வருங் காலம்
ஒருபோதும்
புறக்கணிக் காது
ஓர் இரகசியத்தை !

+++++++++++++

அன்பின் மகிமை,
அழகு மயத்தின் ஒளிச்சுடர்
கடவுளின் பிரதி பலிப்பு !
வாழப் பிறந்தேன் அவற்றில் !
அவ்விதத்தில்
வசிக்கிறேன் நானிங்கு !
துரத்த முடியா தென்னை
அந்த வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !

++++++++++++

எனது கண்களை
நீ பறித்துக் கொண்டால்
காதல் முணு முணுப்புகள்
கேட்கும் எனக்கு !
எழில் மயக் கீதங்கள்
செவியில் விழும் !
நீ செவிகளை அடைத்தால்
காதல் நறுமணம்
கலந்து
தென்றல் தொடும்
இன்பத்தை உணர்வேன் !
அழகத் துவத்தின்
வாசனை நுகர்வேன் !

++++++++++

நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும்
ஒன்றாய் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும்
அன்போடு உதவு வதற்கு !
எனது தனிமையில்
நானின்று புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !

+++++++++++

வெற்றிடத்தில் என்னை
விட்டு விட்டால்
வாழ்திடுவேன் நான்
என் ஆத்மா வோடு
இணைந்து !
அழகத் துவமும் காதலும்
பெற்றெடுத்த
குழந்தை என் ஆன்மா !
நானோர் இதயத்தின் மூலம்
ஓதுவ தெல்லாம்
நாளை
ஆயிரம் இதயங்கள்
வாயசைக்கும் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 6, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -2

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran Paintings
The Fallen Angel

“எனது எழிலான தேசத்தின் மீது எனக்கொரு தாகம் இருக்கிறது. என் நாட்டு மக்கள் மீது அவர் படும் துயரைக் கண்டு எனக்குப் பரிவு உண்டாகிறது. கொள்ளை அடிக்கத் தூண்டப் பட்டு, தேசப் பக்தி என்று சொல்லிக் கொண்டு என் நாட்டு மக்கள் கொலை புரிந்தாலோ, அண்டை நாட்டின் மீது படையெடுத்தாலோ, வேறெந்த மனிதக் கொடுமை இழைத்தாலோ நான் என் தேசத்தையும் என் மக்களையும் அறவே வெறுத்திடுவேன்.”

கலில் கிப்ரான்

“என் உள்ளத்தின் உள்ளே எழும் நம்பிக்கைக் குரலைக் கேட்டு நான் தனிப்பட்டு நின்று சொல்கிறேன் : ‘காதல் ஒரு மனிதனின் இதயத்தில் வலியுடன் வசிப்பதால் அறியாமை ஞானத்தை உண்டாக்க ஒரு வழியைக் கற்பிக்கிறது ! எல்லாம் வல்ல கடவுள் பரிதி மண்டலத்தில் வீணாக எதையும் படைக்க வில்லையாதலால், வலியும் அறியாமையும் நமக்கு ஞானத்தை ஊட்டப் பூரிப்புடன் வழிகாட்டுகின்றன.”

கலில் கிப்ரான்

+++++++++

<< ஒரு கவிஞனின் கூக்குரல் >>

கவிதை -16 பாகம் -2

சொந்தமாகச் சேமித்ததை நான்
தொடும் போது நீ
தடுக்கலாம் !
சேர்த்துப் பெரிதாய்க் குமித்திட
என்னைத்
தூண்டு கின்றன
எனது பேராசைகள் !
உனக்குத் திருப்தி
தருமாயின்
எனது களஞ்சியத்தில்
உனக்குரிமை அளிப்பேன் !

+++++++++++++

விரும்பியதை நீ எனக்குப்
புரியலாம் !
ஆயினும்
என் சத்திய நெறியில் நீ
கை வைக்காதே !

+++++++++++++

என் குருதியை
உருவி
என்னுடலை நீ எரிக்கலாம் !
ஆனால்
ஒருபோதும் நசுக்கி நீ
காயப் படுத்தாதே !
எனது
ஆன்மாவை !

++++++++++++

சங்கிலியால் எனது
கைகளையும் கால்களையும்
கட்டி நீ
இருட் சிறையில்
உருட்டி விடலாம் !
ஆனால்
என் சிந்தனையை நீ
அடிமைப் படுத்த
முடியாது !
விடுதலை பெற்றது அது
விண்வெளித்
தென்றலைப் போல் !

+++++++++++

நீ என் சகோதரன்
நேசிப்பேன் நான் உன்னை !
கிறித்துவ ஆலயத்தில்
நீ தொழுவதை
கோயில் முன் மண்டியிட்டு
நீ வழிபடுவதை
மசூதிக்குள்
நீ துதிப்பதை
நேசிப்பவன் நான் !
நீயும் நானும்
நாம் எல்லோரும்
ஒரு மதக் குழந்தைகள் !

++++++++++++

எல்லா மதப் பாதைகளும்
வல்லமைக் கடவுளின்
அன்புக் கை
விரல்களைத் தவிர
வேறில்லை !
ஆன்மா
முழுமை பெற
நீள்கின்றன கரங்கள்
அனைத்து மாந்தரை
ஆசை யோடு
வரவேற்க !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 29, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“உலக நாடுகளின் ஊர் நகரங்களில் மனிதர் பல்வேறு குழுக்களாகவும் இனங்களாகவும் பிரிவு பட்டிருக்கிறார். ஆனால் நானோ எந்தக் குடியிருப்பையும் சேராமல் எல்லா இனத்தவருக்கும் புதியவனாய்த் தோன்றுவதாக எனக்குத் தெரிகிறது ! பிரபஞ்சமே என் பிறந்த தேசம் ! உலகக் குடி இனத்தோரே என் பூர்வீகக் குலத்தினர் !”

கலில் கிப்ரான்

” மனிதர் பலவீனமானவர் ! தமக்குள் பலவேறு பிரிவுகளை அவர் வகுத்துக் கொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது ! குவலயம் குறுகிப் போனது ! அதைத் தனித்தனி ராஜியங்களாகவும், ஏகாதிபத்தியங்களாகவும், மாநிலங்களாகவும் பிளப்பது அறிவீனமாகும் !”

கலில் கிப்ரான்

Fig. 1
Paintings of Kahlil Gibran
The Gloomy Woman

+++++++++

<< ஒரு கவிஞனின் கூக்குரல் >>

கவிதை -16 பாகம் -1

இவற்றை நான் புரியக் காரணம்
அவற்றில் நான் வசிப்பதினால் !
விதி என் கைகளுக்கு
விலங்கிட்டு நான் புரிவதைத்
நிறுத்தினால்
மரணம் மட்டுமே பிறகென்
விருப்பாகும் !
காரணம் நானொரு
கவிஞன்.
என்னால் கொடுக்க இயலாத
கதி நேர்ந்தால்
கை நீட்டிப்
பெறுவதையும் நான்
மறுத்திடுவேன் !

+++++++++++++

ஆழமாய் என்னிதயத்தில்
வித்திடுவது
அறநெறி உறுதி !
கோதுமைத் தண்டுகள் சேமித்து
அறுவடையில்
தருவேன் பசித் தோர்க்கு !
உயிரளிக்கிறது
என் ஆத்மா
திராட்சைக் கொடிக்கு !
அதை அழுத்திச் சாரெடுத்து
அளிப்பேன்
தாகம் உடை யோர்க்கு !

+++++++++++++

எண்ணை இட்டு
என் விளக்கை நிரப்புபவன்
இறைவன் !
விளக்கை வைப்பேன்
பலகணியில்
வழிப்போக் கனுக்கு
வழி காட்ட
இருட்டினிலே !

++++++++++++

சீறி எழும்
சூறாவளி போல்
மனித இனம் !
பெரு மூச்சு விடுவேன் நான்
மௌனத்தில் !
நின்று விடும் புயல் அடங்கி
என்றன் பெருமூச்சு
ஒன்று
இறைவனை நோக்கி
ஏகும் போது !

+++++++++++

மனித இனம்
பற்றிக் கொள்ளும்
பூதளப் பொருட்களை !
ஆயினும்
பின்பற்றத் தேடுவது நான்
அன்பு விளக்கொளியை
எப்போதும் !
அக்கினியால் தூய தாக்கும்
என்னை அது !
எனது நெஞ்சை விட்டு
அறுத் தெறியும்
மனித வெறுப்பை !

+++++++++++

பெரு வாரியான
செல்வச் சாதனங்கள்
மரணம் தரும்
இன்னலின்றி
ஒரு மனித னுக்கு !
அன்பு நேயம்
அவனை விழித்திட வைக்கும்
இன்பம் தரும்
வலியோடு !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 21, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -4 (மரணத்தில் எஞ்சியவை)

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran Paintings
“ The Gloomy Woman ”

“முன்னேறு ! ஒருபோதும் இடையில் தடைப்படாதே ! ஏனெனில் முன்னேற முனைவது பூரணத்துவம் நோக்கிச் செல்வது. ஆகவே முன்னேறு ! பாதையில் முளைத்த முட்களைப் பார்த்து அச்சம் கொள்ளாதே ! ஏனெனில் அவை இழக்கும் குருதியை மட்டுமே கசிய வைக்கும்.”

“ஆன்மா தான் வேட்கை கொள்வதையே முடிவில் அடைகிறது.”

“காதல் பிரிவு வேளை வரும் தருணம் வரை தன் சொந்த ஆழத்தை அறியாது. அது எப்போதும் அறியப் படுவதுதான்.”

கலில் கிப்ரான்

+++++++++

<< மரணத்தின் அழகு >>

கவிதை -15 பாகம் -4
(மரணத்தில் எஞ்சியவை)

மண்ணைச் சேர்ந்த சாதனங்களை
எல்லாம்
என்னிடமிருந்து நீக்குவீர் !
அன்னைப் பூமியில்
என்னை
ஆழமாய்ப் புதைப்பீர் !
எனது தாயின் மார்பு மீது
கவனமாய்க் கிடத்துவீர் !
மிருதுவான மண்ணால் எனது
உருவத்தை மூடுவீர் !
ஒவ்வொரு பிடி மண்ணிலும்
கலந்திடுவீர்
மல்லிகை விதைகளை.
என்மேல் அவை
முளைத்தெழும் போது
என்னுடல் அணுக்கள்
இதயத்தின்
நறு மணத்தைப் பரப்பிடும்
சூழ்வெளியில் !
என் மௌன ரகசியத்தை
இரவிக்கும்
எடுத்துச் சொல்லித்
தென்றலோடு
ஒன்றி விடட்டும் !
கால் நடையில் செல்வோனுக்கு
ஆறுதல் அளிக்கும் அது !

++++++++++++

ஆதலால்
என்னை விட்டு விலகுவீர்
நண்பர்களே !
மௌனப் பாலை வனத்தில்
எட்டு வைப்பது போல்
என்னை விட்டுப் பிரிந்து போவீர்
அமைதித் தடங்களால் !
கடவுளை நான் அடைய
விடுவிப்பீர் என்னை !
மெதுவாய்க் கலைந்து செல்வீர்
பின்னர் யாவரும்
தென்றல் காற்றின் அதிர்வில்
ஆப்பிள் மலர்களும்
ஆல்மண்டுப் பூக்களும்
அசைந்து செல்வது போல் !

+++++++++++

திரும்பச் செல்வீர் உமது
மகிழ்வு இல்லங்களுக்கு !
உமக்கும் எனக்கும்
மரணம் காணாத
ஒன்றைக் காண்பீர் அங்கே !
நீங்கிச் செல்வீர்
இந்த இடத்தை விட்டு
ஏனெனில்
நீவீர் இவ்விடம் காண்பது
தாரணியி லிருந்து வெகு
தூரத்தில் உள்ளது !
விட்டுச் செல்வீர்
என்னை மட்டும் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 7, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig 1
Kahlil Gibran Paintings
Les Miserables

“உனது நம்பிக்கைகள், இச்சைகளின் ஆழத்தில்தான் உனக்கு அப்பாற்பட்ட உனது மௌன அறிவும் ஒளிந்துள்ளது.”

“மனவருத்தம் மனத்தைத் தண்டிக்காது மனதில் புகைமூட்டத்தை உண்டாக்குகிறது.”

“பொறுமையாக இரு. ஏனெனில் உன் ஐயப்பாட்டிலிருந்துதான் ஞானமே பிறக்கிறது.”

கலில் கிப்ரான்

+++++++++

<< மரணத்தின் அழகு >>

கவிதை -15 பாகம் -3
(மரணத்தில் எஞ்சியவை)

பிரேத அங்கியை நீக்கி வெண்துகிலில் சுற்றி என்னை
மல்லிகை, லில்லி மலர்களால் ஆடை அணிவிப்பீர்
தந்தப் பெட்டி லிருந்து என்னுடலை எடுத்து
ஆரஞ்சுப் பூக்கள் தூவிய தலையணை மேல் கிடத்துவீர் !
அழாதீர் எனக்காக ! பாடுவீர் பூரித்து
எனதிளமைப் பருவப் பாடல்களை !
கண்ணீர் வடிக்காதீர் என்மேல் !
பருவ கால அறுவடை பற்றியும்
ஒயின் பிழியும் நுணுக்கம் பற்றியும் பாடுவீர் !
வேதனைப் பெரு மூச்சு வேண்டாம் !

++++++++++++

விரல்களால் என் முகத்தைத் தடவி உமது
பரிவையும் மகிழ்வையும் காட்டுவீர் !
கூட்டமாய்ச் சாத்திரத்தை உச்சரித்துக்
காற்றின் மௌனத்தைக் கலைக்காதீர் !
என்னோடு பாடட்டும் உம்மிதயங்கள் யாவும்
அந்த மில்லா இந்த வாழ்வின் கானத்தை !
கறுப்பாடை அணிந்து உம் துக்கத்தைக் காட்டாது
வண்ண ஆடையில் என்னோடு ஆனந்தப் படுவீர் !
என் பிரிவுக்கு இதயங்கள் பெரு மூச்சு விடாது
கண்களை மூடிக் காண்பீர் நான் உம்மோடு இருப்பதை !

+++++++++++

பூவிலைக் கொத்துக்கள் மீது வைத்து உமது
நட்பான தோள்களில் என்னுடலைச் சுமப்பீர் !
மெதுவாய் தூக்கிச் செல்வீர் ஒதுக்கிய இடு காட்டுக்கு !
நெருக்க மான புதைக் குழியில் இட்டு விடாதீர்
ஏனெனில் என் தூக்கம் கலைந்து போக
எலும்பும் மண்டை ஓடும் இரைச்சலிடும் அருகில் !
ஒன்றின் நிழலில் ஒன்று வளராத
ஊதாப்பூச் செடி வளரும் சைப்பிரஸ் காட்டுக்கு
எடுத்துச் செல்வீர் தோண்டி என்னுடல் புதைக்க !
ஆழமாய்த் தோண்டுவீர் ! புதை குழியைப் புறத்தே
ஆற்று வெள்ளம் எலும்புகளை அடித்துச் செல்லாது !
அகலமாய்த் தோண்டுவீர் ! அந்தி வேளை நிழல்கள்
அருகில் வந்து என்னோடு அமர்ந்து கொள்ள !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 31, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“எவனும் உனக்கு எடுத்துக் காட்ட இயலாது ஏற்கனவே (ஆழ்மனதில்) உன் அறிவுப் புலர்ந்திடப் பாதி உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு கருத்தைத் தவிர.”

“ஆர்·பலீஸ் நகரப் பொது மக்களே ! வாழ்வின் போக்கு தன் புனித முகத்தை மூடியிருக்கும் திரையை நீக்கும் போதுதான் அழகுத்துவமே (Beauty) குடிவாழ்வு ஆகிறது. ஆனால் வாழ்வும் நீவீர் ! முகத்திரையும் நீவீர் ! தன்னை நோக்கும் கண்ணாடியான அழகுத்துவம் அந்தமற்றது. ஆனால் அந்தமற்றதும் நீவீர் ! கண்ணாடியும் நீவீர் !”

கலில் கிப்ரான்

+++++++++

<< மரணத்தின் அழகு >>

கவிதை -15 பாகம் -2
(மரணத்தின் அணைப்பு)

குன்றின் ஓர் சிகரத்தைக் கடந்தேன்
கட்டுப் படாமல்
பூரண விடுதலை பெற்று
ஏறிச் சென்றிடும் என் ஆத்மா
வான் கூரை உச்சியில் !
தோழர்களே ! போய் விட்டேன்
வெகு தொலைவில்
வெகு வெகு தூரத்தில் !
குன்றுகளை மறைத்திடும்
வான் முகில்கள்
எந்தன் விழிகள் காண முடியாது !

+++++++++++

பாதாளப் பள்ளங்கள்
மூழ்கிக் கிடக்கும் மௌனக் கடலில் !
மூடி விடும் என் நினைவுச் செதில்கள்
வீடுகளையும் வீதிகளையும் !
வெண்ணிற மாயத்தின் பின்னே
புல்வெளிகளும், வயல்களும்
புலப்பட வில்லை !
வசந்த முகில்போல் தெரியும்
மஞ்சள் வண்ணத்தில்
மெழுகு வத்தியின் மங்கல் ஒளி !
அந்தி மயங்கும் மந்தாரம்
செந்நிறத்தில் தெரியும் !

+++++++++

கடல் அலைகளின் கானங்கள்
நீரோ டைகளின் பாடல்கள்
சீர்கெட்டுச் போகும் !
மௌனத்தில் அடங்கின கும்பல்
மாந்தரின் அழு குரல்கள் !
ஆதி அந்தமில்லா இசைக்கீதம் என்
காதில் விழுகிறது
சீரினிய நுட்பத்தில் !
ஆன்மா மோகிக்கும் அதை !
நான் வெண்ணிற
அங்கியால் உடல் முழுதும்
மூடப் பட்டு
இன்பத்தின் அமைதியில்
மூழ்கினேன் !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 24, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -2 (முன் பாகத் தொடர்ச்சி)

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



Fig. 1
A Man with Two Women

“அழகத்துவம் (Beauty) உனது ஆத்மாவை வசீகரிக்கிறது. அது கையேந்தி யாசிப்பதில் விருப்பின்றிப் பிறருக்கு அளிப்பதிலே களிப்படைகிறது.”

கலில் கிப்ரான்

நான் மறைவாகவும், வெளிப்படையாகவும் எல்லா வகையில் காட்டும் எனது வாழ்க்கை வசிப்பு முறை (My Existence), தோற்ற காலம் முதல் முடிவில்லா எல்லை வரை நீட்சி அடையும் ஓர் வெற்றுச் சூனியத்தில் ஒரு குழந்தை ஏக்கத்தில் எழும் ஓர் அணுத்துகள் போல் நடுங்கும் ஒரு கணப் பொழுதாகத் தோன்றுகிறது.”

கலில் கிப்ரான்

+++++++++

<< ஒரு காதலனின் அழைப்பு >>

கவிதை -14 பாகம் -2
(முன் பாகத் தொடர்ச்சி)

நினைவிருக்கிறதா நீயும் நானும் கைகோர்த்து
இணையாக ஒருவர் தலை ஒருவர் மேல் சாய்ந்து
நமக்குள் நாமே ஒளிந்து செல்வது போல்
நாமிருவர் காட்டுப் பாதையில் நடந்து போனது ?

நினைவுக்குக் கொண்டுவா நான் விடை கொடுத்து
உனை அனுப்பிய அந்த மணி நேரத்தை !
நீ என் உதட்டில் அப்போ திட்ட முத்தத்தை !
எனக்குக் கற்றுத் தரும்; இதழ்கள் புரியும்இ காதல்
தெய்வ ரகசியம் சொல்வதை ! வாயால் இஇயலாது !
அந்த முத்தமோர் முத்திரை ஒரு பெரும் மூச்சுக்கு;
மண்ணை மனித மாக்கிய இறை மூச்சு போல்வது !

ஆன்மீக உலகுக்கு வழிகாட்டும் அம்மூச்சு !
ஆத்மாவின் உன்னதம் அறிவிக்கும் அம்மூச்சு !
அடுத்துச் சந்திக்கும் வரை நமைப் பின்பற்றும் அம்மூச்சு !

நினைக்கிறேன் திரும்பத் திரும்ப நீ முத்த மிட்டதை
கன்னத்தில் கண்ணீர் வழிந்தோட நீ சொன்னாய் :
“மனித இனங்கள் பிளவுபட வேண்டும் வாழ்வுத் தேவைகளால்
தனித்தவை வாழ வேண்டும் தாரணிக் கட்டுப் பாடுகளால்”

பாசத்தோடு ‘ஆன்ம உறவு’ இணைந்திடும் பாதுகாப்பாய்
நேசத்தின் கரங்களில் மரணம் நமை அண்டும் வரை
இருவர் ஆத்மாவை ஒன்றாயது ஏந்திச் செல்லும் கடவுளிடம் !

எனதரும் காதலியே செல் ! இல்வாழ்வு உனைத் தேர்ந்துளது !
பணிவாய் அதற்கு அழகூட்டு வதால் ! அமுதைத் தருவது
தன்னைப் பின்பற்றி வருவோர்க்கு ! ஆறுதல் புரிவது
என் வெறும் கைகளுக்கு, உன் காதல் உணர்வு !
உனது நினைவே எனக்கு நிரந்தரத் திருமணம் !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 4, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“மனித நேயம்தான் சுய சேமிப்பாய் நான் கொண்டுள்ளது. எந்த மனிதனும் அதை என்னிடமிருந்து நீக்க முடியாது.”

கலில் கிப்ரான்

எனது இதயத்தின் ஆழத்திலிருந்து
வான் நோக்கி
எழுந்தது ஒரு பறவை !
உயர உயரப் பறந்தது ! ஆனாலும்
பெரிது பெரிதாய் வளர்ந்தது !
தூக்கணாங் குருவியாய்த்
தோன்றிடும் முதலில் !
குயிலாய்ப் பிறகு காணும் !
கழுகாய்த் தோன்றும் பின்னால் !
வசந்த முகிலாய் விரிந்து
தாரகை நிரம்பிய
வான்வெளி முழுதும் பரவும் !
எனது இதயத்திலிருந்து வான் நோக்கி
எழுந்தது ஒரு பறவை !
பறக்கப் பறக்க அது மெழுகாய்
உருப் பெருக்கானது !
ஆயினும் அப்பறவை மெய்யாக
நீங்க வில்லை என்
நெஞ்சை விட்டு !

கலில் கிப்ரான் “தீர்க்கதரிசியின் உள்ளொளி” (Visions of the Prophet)

+++++++++

<< ஒரு காதலனின் அழைப்பு >>

கவிதை -14 பாகம் -1

என் அன்பே ! எங்கே நீ இருக்கிறாய் ?
சின்ன சொர்க்கத்தில் இருக்கிறாயா
அன்னையர் முலை நோக்கும் மதலை போல்
உன்னை நோக்கும்
மலருக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு ?

நின் ஆத்மாவை நின் இதயத்தை அன்பளித்து
நேர்மைச் சன்னிதியை உன் மேன்மையில்
நிறுத்த உன் அரணில் நீ இருக்கிறாயா ?

அல்லது மனித ஞானத்தை நூல்களில் தேடி
ஆன்மீக ஞானம் நிறைந்து இருக்கிறாயா ?
என் ஆத்மத் துணையே ! எங்கு நீ இருக்கிறாய் ?
வழிபட்டு நிற்கி றாயா ஆலயத்தின் முன்னால் ?
கனவுகளின் புகலிடத்தில் இயற்கையை விளித்து
வனாந்திரக் களத்தில் நடமாடி வருகிறாயா ?

ஏழைகளின் குடிசையில் வசிக்கிறாயா உடைந்த
இதயத்தை இனிய ஆத்மா தேற்றிக் கொண்டு
கைநிரம்ப அளிக்கும் கொடைக ளோடு
காணும் இடமெலாம் பொங்கும் தெய்வ அருளோடு
காலத்தைக் காட்டிலும் வலுப் பெற்ற காரிகையாய் ?

நினைவிருக்கிறதா நீயும் நானும் சந்தித்த அந்த நாள் ?
அப்போதுன் ஆன்ம ஒளிவளையம் சூழ்ந்தது நம்மை
காதல் தேவதையர் நம்மருகில் மிதந்து வந்தார்
ஆத்ம வினைகளைப் புகழ்ந்து பாடிக் கொண்டு !

நினைவிருக்கிறதா நீயும் நானும் மரக்கிளையின்
நிழலில் அமர்ந்து இளைப்பாறி இருந்ததை
மனித இனத்தை விட்டு நாம் விலகி இருந்ததை
புனித ரகசியம் காயப் படாது இதயம் பாதுகாப்பதை ?

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 20, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா