கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)

This entry is part [part not set] of 43 in the series 20110529_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எழுதும் இந்த எழுத்தாணியை
எடுக்காது செம்மறி ஆடு !
பிரிக்கும் இடைவெளிப்
பேதங்கள் இல்லை நமக்குள்ளே !
காதலின் புனித பீடம் இது !
கண்களைக் கசக்கி
காதலைக் காதலோடு நோக்கு
மீண்டும் !

++++++++++++

“வாசலில் யாரெனக் கேட்டாய்”
“உனது அன்புத்
தாசன்” என்றேன் நான் !
“எதற்கு வந்தாய் ?”
என்று நீ கேட்டாய்.
“வழிபட்டு உன் பாதத்தை
வணங்கிட வந்தேன்.”
“எத்தனை காலம் காத்தி ருப்பாய்
எனக்கு நீ” என்றாய் !
“மறு பிறவி நான்
எடுக்கும் வரை” என்று பதில்
விடுத்தேன் !

++++++++++++

வாசலில் பேசிக் களித்தோம்.
நேசம் உன்னத மெனப்
பெருமிதம் எனக்கு ! ஆயினும்
இழந்து நிற்பேன்
இவ்வுலகம் எனக் களித்த
இன்பக் கொடையை !
“இதற்கெலாம் சான்றுகள்
வேண்டும்” என்று
தூண்டுவாய் !
“ஏங்கி நான்
இப்படிக் கண்ணீர் பொழிவதை
எடை போடுவதா ?”

+++++++++++

“என்ன அடிப்படையில் வந்தாய் ?”
என்று விளித்தாய் !
“நீ அளித்த கற்பனை அதற்கு
நியாயம் சொன்னது.”
“உனது குறிக்கோள் என்ன ?”
என்றெனைக் கேட்டாய்.
“இருவருக்குள் ஏற்படும் நட்புறவு ”
என்று பதில் அளித்தேன் !
“எதை எதிர்பார்க் கிறாய்
என்னிடம் ?” என்றாய்
“காத லெனும் பாசத்தை” என்று
ஓதினேன்.

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 23, 2011)

Series Navigationகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நள்ளிரவுப் பொழுதில்
துள்ளி அலறினேன் :
“நான் கொண்டுள்ள காதலில்
வசித்து வருவது யார் ?”
நீ சொல்வாய் :
“நான் அறிவேன். அதனில்
நான் மட்டு மில்லை.
மற்றுள்ள காட்சிப் படங்கள் ஏன்
பற்றி யுள்ளன என்னை ?”
நான் உரைத்தேன் :
உனது பிரதி பலிப்புகள்
அவை எல்லாம் !
ஒருவரை ஒருவர் ஒத்திருக்கும்
துருக்கிய எழிலவர் அவர்.”

++++++++++++

நீ கேட்டாய் :
“காதலில் அடுத்துள்ள
அந்தக் குடிவாசி யாரெனச் சொல் ?”
“காயப் பட்ட
எந்தன் ஆத்மா அது,
அந்தச் ஆத்மாவைச் சிறைப்பிடித்து
வந்துள்ளேன் உன்னிடம் !
ஆபத் தானது ஆத்மா !
அதற்கு விடுதலை கொடுக்காதே
எளிதாய் !” என்று
அளித்தேன் பதில் நான் !
கண் சிமிட்டிக்
கையில் ஒரு நூல் முனைக்
கயிற்றைக் கொடுத்தாய் !
இறுக்கிப் பிடி நாணை, ஆனால்
அறுந்து போகாமல் !

++++++++++++

உனைத் தொட நான்
முனைந் திட்ட போது
வெடுக்கெனத் தடுத்தாய்
எனது கையை !
வெஞ்சினம் கொள்வதும் ஏன் ?”
“நல்ல காரணம்
உள்ளது அதற்கு !
ஒதுக்க வில்லை உன்னை !
இங்கு வருவோரில்
‘நான் நான்’ என்று
கர்வம் கொண்டவன்
கன்னத்தில் அறைய வேண்டும்.”

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 16, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உலகு முழுதும் சுற்றித் தேடி
ஓடாதே
ஒரு குகையைக் கண்டு
ஒளிந்து கொள்ள !
ஒளிந்திருக்கும் கடும் விலங்கு
ஒவ்வோர் குகையிலும் !
எலிப் பொந்தில் நீ வசித்தால்
ஒரு பூனைக் கால் நகம்
உனைப் பிறாண்டி விடலாம் !
உண்மை யான ஓய்வு
உனக்கு வருவது நீ இறையுடன்
தனியாய் உள்ள போது !

++++++++++++

உனக்கொரு முகவரி இங்கே
இருப்பினும்
உதித்து நீ வசித்த இடம்
ஒருவருக் கும் தெரியாது !
இரு தோற்ற மாய்த் தெரியுது
அதனால் நீ
எதை நோக்கினும் !
ஒரு சமயம்
உனக்குத் தெரியுது
ஒருவனை நீ நோக்கும் போது
சீறிப் பாய்ந்திடும் ஓர்
அரவம் என்று !
வேறு ஒருவன்
அருமைக் காதலன் என்று
கருதுவான் அவனை !
இருவர் நினைப்பதும் சரியே !

+++++++++++

ஒவ்வொரு மனிதனும்
நிறுத்துப் பார்ப்பதில் பாதி ! பாதி !
கருப்பு வெளுப்பு போல் !
ஆதாமைக் கண்டு
அழகீனன் என்பார் சோதரர் !
ஒப்பிலா அழகன் என்று
அப்பன் அழுத்திச் சொல்வான் !
கண்களை நம்பாதே
தூரத்தை நோக்கும் போது !
காரணம் உனது
கணிப்பு மிகையோ, குறைவோ ?

+++++++++++

இரு நோக்கு உள்ளது விழிக்கு !
இங்கும் அங்கும்
தாவி அலையும் அதற்கு !
பாய்ந்திட முயல்வாய் ஈர்த்திடும்
பயங்கர வலைக்குள் !
வற்றிடும் சிறிது சிறிதாய் !
சதுரங்கக் கட்டத்தில் ராஜாவை
இப்படி அடைப்பதா ?
அப்படி அடைப்பதா ?
நெஞ்சித் திறந்து வைத்திடு !
தூண்டில் விற்கப் போக
வேண்டாம் இனி !
சுதந்திர மாய் நீந்தும்
சுறாமீன் நீ !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 9 , 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சிறிது சிறிதாய் உன்னை
விடுவித்துக் கொள்
முன்னைப் பழக்கத்தை விட்டு !
முக்கிய அறிவுரை இது
உரைப்பது நான் !
கருவில் இருக்கும் உனக்குக்
குருதியே சத்துணவு !
பிறந்ததும் சிசு
குடிப்பது பாலுணவு !
சிறு பிள்ளை பின்பு தின்பது
அரிசிச் சோறு !
அறிவு வளர்ச்சி அடைந்து
ஆய்வாளி ஆகும்
சேய்கள் எல்லாம் !
காட்டு விலங்குகளைப் பின்னர்
வேட்டை ஆடி
விளையாடு வார் !

++++++++++++

கருவில் இருக்கும் சிசுவுடன்
உரையாடல்
புரிவ தெப்படி ?
இப்படி நீ சொல்லலாம் :
“விரிந்தது, சிக்க லானது
வெளி உலகு !
மலைப் பாதைகளும்
கோதுமை வயல்களும்
பூந்தோப்பு களும் ஆங்கே
காணலாம் !
இரவு வானில் கோடான கோடி
ஒளி மந்தைகள்
விழித் தெழும் !
பரிதி வெளிச் சத்தில் நடக்கும்
திருமணத்தில்
நண்பர்கள் இசை பாடி
நடனம் புரிவது
ஒரு தனி அழகு !”

+++++++++++

கருவுக்குள் இருக்கும் சிசுவைக்
கேட்டுப் பார் :
“ஏன் அது வயிற்றுக்குள்
இமை மூடி
முடங்கிக் கிடக்குது
இருட்டிலே !”
வரும் பதிலைக் கேள் :
“வேறோர் உலகம்” இல்லை,
நேர் மேலே !
எனக்கு மட்டும் தெரியும்
எனது அனுபவம் ! நீ
மாயக் கனவுகள் காண்பதாய்
மனதுக்குத் தெரியுது !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3 , 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா ! (கவிதை -33)

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மெதுவாய் நடப்பது உன் வழக்கம்
பல்லாண்டு களாய் உனக்கு
மன வெறுப்புண்டு !
அந்த மனச் சுமையில் எப்படி
அமைதி பிறக்கும் ?
சுமந்து கொண்டிருக்கும் பளுவோடு
சம நோக்குடன் ஒருவன்
எங்கும் சென்றடைய
எதிர்பார்க்க முடியாது !
இரகசியம் ஒன்றை உளவிட
பரவிச் செல் வாயுவைப் போல் !
இப்போது நீ
சம அளவுக் கலவை
களிமண்ணும், நீரும் சேர்ந்த
சகதிக் கட்டி !

++++++++++++

*ஆப்ரஹா முக்குத் தெரியும் :
ஆதவன், நிலவு, விண்மீன்கள் எப்படி
அத்த மிக்கும் என்று !
அவர் உரைத்தார் :
“கடவுளுடன் பங்குதாரை நான்
கலக்க மாட்டேன்.”
பலவீனம் ஆனவன் நீ !
நளின முள்ள
பரிவுக்குத் தலை வணங்கு !
கடல் அலைகளை ஆழி
கண்காணிக்கும்
கடற் கரையைத் தொடும் வரை !
விரும்பும் அளவுக்கு
அதிகமாய்
உதவி தேவை உனக்கு !
திறந்த வெளியை நோக்கி
ஏணியில் ஏறுகிறாய் !
வாழ விரும்புகிறாய்
தோழமை வாழ்கையில் !

+++++++++++

*பிஸ்மில்லா என்று வழிபடுபாய்
கடவுள் பெயரை
நினைத்துக் கொண்டு
விலங்கு ஒன்றை வாளால்
பலியிடும் போது
பாதிரியார் துதிப்பது போல் !
உன் உண்மைப் பெயரைக்
கண்டுபிடிக்க
பிஸ்மில்லா எனத் துதிப்பது உன்
பண்டை வடிவம் !

**************
*பிஸ்மில்லா : Bismillah is an Arabic language noun that is used as the collective name of the whole of the recurring Islamic phrase b-ismi-llāhi r-raḥmāni r-raḥīmi. This phrase is recited before each sura except for the ninth sura ; according to others it constitutes the first verse of 113 suras/ chapters of the Qur’an and is used in a number of contexts by Muslims. It is recited several times as part of Muslim daily prayers, and it is usually the first phrase in the of Islamic countries. It also forms the start of many dedication inscriptions on gravestones, buildings and works of art, which go on to name the deceased or the donor.

*ஆப்ரஹாம் : Abraham (Hebrew , Avraham Tiberian Aḇrāhām, Arabic language, Ibrahim ʼAbrəham whose birth name was Abram, is the eponym of the Abrahamic religions, among which are Judaism, Christianity, and Islam ; according to both the Hebrew Bible and the Qur’an, Abraham is the forefather of the Hebrews, Israelites and others. It is also said that the Patriarch is the ancestor of Muhammad, through Abraham’s firstborn son Ishmael. Abraham was a descendant of Noah

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 26, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் ! (கவிதை -32 பாகம் -3)

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


******************
நீயாக வாழ்வாய் நீ !
******************

அரை அப்பத்தைக் கையில்
ஏந்திக் கொண்டு செல்கிறான்
எவனோ ஒருவன்
தனது சிறு குடிலை நோக்கி !
தானக வாழாது
எதிலும் பற்றின்றி
வாழும் ஒரு மனிதனை
எவனும்
வரவேற் பதில்லை !
அவனோர் கடிதம் போல்பவன்
எவன் ஒருவனுக்கும் !
திறந்து பார் அக்கடி தத்தை
“நீயாக வாழ் நீ” என்று
நேராகச் சொல்லும் !

++++++++++++

தெளிவா வதில்லை
ஒரு மர்மம்
திரும்பத் திரும்ப
வினா மட்டும் எழுப்பினால் !
விந்தை இடங் களுக்கு
முந்திப் போயினும்
விலைக்கு வாங்க முடியாது !
உன் கண்ணோக்கு அதை
உற்றுத் தேடினும்
இன்னும் ஐம்பது வருடம்
விருப்பப் படினும்
விடுவிக்கப் படாது மர்மம்
குழப்பத்
தடுமாற்றத் திலிருந்து !

(முற்றும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 19, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் ! (கவிதை -32 பாகம் -2)

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


******************
ஆன்மாவுக்குப் போர்வை
*******************

ஏன் அங்கு புகை உள்ளது ?
சடசட வெனும்
வெடிப் பொலியும் கேட்குது ?
காரணம்
நெருப்பும் விறகும்
போராடிக் கொண் டுள்ளன
ஆரவார மாய்ப் பேசி :
“போ வெளியே புகையே !
அடர்த்தி யாய்த் திரண்டு நீ
அலை மோது கிறாய் !
திட முள்ளவன் நான் !”
இருட்டினில் அவ்விரு தோழரும்
தருக்கம் செய்து
வருகிறார் முகமற்ற
தெருச் சுற்றிகள் போல் !
பாரினில் உள்ள
பராக்கிரமப் பறவை போல்
மரக் கிளையில் அமர்ந்து அவை
பறக்க மறுக்கும் !

++++++++++++

நானென்ன சொல்ல முடியும்
நேசத்தை வெறுத்து
நகர மறுத்துப்
படுத்துக் கொள்ளும்
நபர் மீது ?
உன்மதுக் கிண்ணத்தைப் பாறையில்
உடைத் தெறி !
கடலைத் துண்டாக்கி
எல்லாத் திக்கிலும் வீசி
எறிந்திட
வேண்டிய தில்லை !
பேராண்மை விளக்கம் தவிர்த்து
தீரச் செயலை
விட்டு விட்டு வெகு
தூரம் செல்ல வேண்டும் !
மணமகள் தன்
கணவனை உடற் கணப்புக்கு
அணைப்பது போல்
ஆன்மாவும் கீழே படுத்து
உடலைத் தன் மீது
இழுத்துக் கொள்ளும் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 12, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் !(கவிதை -32 பாகம் -1)

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


****************************
நெருப்பே என் பிள்ளை !
****************************

ஒயின் அளிக்க வேண்டாம்
இனிமேல் எனக்கு !
செந்நிற ஒயினையும் தூய
வெண்ணிற ஒயினையும்
உட் கொண்டு
ஓய்ந்து விட்டேன்
உவப்பினில் சலித்துப் போய் !
என் குருதி மீதே
எனக்குத் தாகம் மிகுந்தது
இப்போது !
ஏனெனில் எனக்கது
இயக்க அரங்கை அளிக்குது !
கூரிய வாளை எடுத்துப்
போரிடு !
உருளட்டும் பல தலைகள்
உடல்களைச் சுற்றிக் கொண்டு !
மண்டை ஓடுகள்
குன்று களாய்க் குவியட்டும் !
துண்டாக்கு என்னையும்
இரண்டாய் !
வாய் அருகில் நிறுத்திடாய் !
நான் உரைப்பதைக் கேளாய் !
நடு நெருப் பிடையே
நான் நுழைய வேண்டும் !
நெருப்பே என் பிள்ளை !
நானும்
நெருப்பாக வேண்டும்
எரிக்கப் பட்டு !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 5, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
நீடிக்கும் வாழ்க்கைப் போக்கு
************************************

சகோதரா ! பச்சை குத்தும் போது
சகித்துக் கொள் வலியை !
உணர்ச்சி வசப் படாமல்
நச்சு வலியை வெளி யேற்று !
வானமே வணங்கும் உனது
வனப்பை நோக்கி !
மெழுகு வர்த்தி ஏற்றிடக்
கற்றுக் கொள் !
பொழுது புலர்ந்ததும் எழுவாய்
பரிதி யோடு !
உறங்கும் குகையை விட்டுத்
திரும்பிச் செல் !
அப்போது
ஒரு முள் கூட மலர்ந்து
ரோஜாவாய்
உருவா கலாம் !
ஒரு மலர் ஒளி வீசலாம்
ஒன்றிப்
பிரபஞ்சத் தோடு !

++++++++++++++

உன்னிடம் பீற்றிக் கொள்ள
உள்ள தென்ன ?
பணிவோடு உன்னை ஓர்
அணுவாய் நினைத்து கொள் !
இறைவனைப் பற்றிச்
சிறிது அறிவதில் வரும்
சிரமம் என்ன ?
எரிப்பாய் இதனை !
பொறிப்பாய் உன் இதயத்தில்
இறைவன் இருப்பை
நெருப்பில் எழுதி !
தாமிரம் உருகும்
நமக்கு நலம் அளிக்கும்
அமுதம் படைக்க !
ஆதலால் நீயும் உன்னை
உருக்குவாய் அமுதக் கலவையில்
நித்திய வாழ்க்கை
பூமியில்
நிரந்தர மாய் நிலவ !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 29, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
தோளில் பச்சை குத்தப் போனவன்
************************************

*காஸ்வின் நகரத்தில்
நல் அதிர்ஷ்டம் வருமென
எதிர்பார்த்துப்
பார்சி மக்கள் முதுகிலோ
தோளிலோ அல்லது கரத்திலோ
பச்சை குத்திக் கொள்ளும்
பழக்கம் உண்டு
நீல மையில் அல்லது
கரிய நிறத்தில் !
நாவிதன் கடைக்குச் சென்று
தோள் பட்டையில்
நிமிர்ந்து நிற்கும்
நீல நிறச் சிங்கத்தைப்
பச்சை குத்தச் சொல்வான்
பாமரன் ஒருவன் !
“காலச் சக்கிர ஜோதி டத்தில்
உச்ச சிங்கம் எனக்கு ! ஆதலால்
கண்கவரும் முறையில்
வரைந்திடு
நீல நிறக் கோலத்தில் !”

++++++++++++++

ஊசி முதுகில் குத்தியதும்
‘ஓ வென’ அலறினான் பாமரன் !
“என்ன செய்தாய் இப்போது
எனக்கு வலிக்குது !
சிங்கத்தின்
எந்த உறுப்பை
வரையத் துவங்கினாய் ?”
“வாலை முதலில் வரைகிறேன்” என்று
நாவிதன் பதில் உரைப்பான் !
எலும்புச் சதைமேல் குத்தினால்
வலி உண்டாகும் !
வாலில்லாச் சிங்கத்தை
வரைந்திடு என்பான் !
நாவிதன் சொற்படிச் செய்தான் !
திரும்பவும் பாமரன் அலறி
“எந்த உறுப்பை வரைகிறாய்
இப்போது ?”
என்று வினவினான் !
“சிங்கத்தின்
செவிகளை” என்பான்
நாவிதன் ! “வேண்டாம்
காதிலாச் சிங்கத்தை”
வரையெனக்
கட்டளை இட்டான் பாமரன்.

+++++++++++++

ஊசி குத்திய உடன் மீண்டும்
ஆவென அலறி
ஓலமிட்டான் பாமரன் !
“எதனை வரைகிறாய்
இப்போது ?”
“வயிறை வரைகிறேன்,” என்றான்
நாவிதன் ! “வேண்டாம்
வயிறில்லா சிங்கத்தை
வரை எனக்கு,” என்பான்
பாமரன் !
விழித்தான் பச்சை குத்தும்
நாவிதன்
வழி தெரி யாமல்
கன்னத்தில் கைவைத்துச்
சிந்தித்தான்
கண நேரம் ! பிறகு
வீசி எறிந்தான் ஊசியை !
“எவரும் இதுவரை
இப்படி வரையக் கேட்டிலர் !
வாலில்லா, காதில்லா
வயிறில்லாச் சிங்கத்தை
வரைய விளித் திலார் !
படைத்த கடவுள் கூட
இப்படிப்
பச்சை குத்த முடியா தென
நகர்ந்தான் நாவிதன் !

+++++++++++++
*Qazwin or Ghazvin is the largest city and capital of the Province of Qazvin in Iran.
+++++++++++++
(தொடரும்)
***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 22, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
பெண் வேட்கையைத் தவிர்
************************************

(சென்ற வாரத் தொடர்ச்சி)

+++++++++++

ஞானம் பிறந்தது வேந்தனுக்கு !
“தான்றோன்றிச் செருக்கில்
மாற்றான் பெண்ணைப் பிடித்து வந்தேன் !
வேற்றான் ஒருவன் என்
வேட்கைக் கதவைத் தட்டினான் !
பிறன் மனைவி புணர்வோன்
தன் மனைவிக்குப்
“பிம்ப்” எனப் படுவான் !
பிறருக்குக் காயம் உண்டாக்கின்
தன்மேல் காயங்கள்
மென்மேலும் விளையும் !
எனது வஞ்சக வினைகள்
என்னைத் துரோகியாய் ஆக்கிடும்
தோழனுக்கு !
மீளும் இந்தப் பழிபாபம்
வீழ வேண்டும்.”

++++++++++++++

“பெண்ணே !
உன்னை மீண்டும்
அனுப்பி வைப்பேன் தளபதியிடம்
என் மனைவி ஒருத்தி
பொறாமை யுற்றாள் என்று !
தைரிய மாய்த் தூக்கி வந்த
தளபதியே உன்னை
விரும்பித்
திருமணம் புரிவான் !”
என்று கூறுவான் காலி•ப் !
தத்துவ ஞான முதியவனின்
சத்திய ஆண்மை இது !
காலி•ப் மெய்யாய்
ஆண்மைத் தன்மை இழந்தவன் !
அதிகார வாதி !
முதிர்ச்சி யுற்ற மனிதனின்
அதிசய ஆற்றல்
காம இச்சை அடக்கல் !
காலி•ப் மீண்டும் மீண்டும்
வினை விதைத்து
வினையை அறுவடை செய்பவன் !

(முற்றும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 14, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
ஆண்மையின் குறைபாடு !
************************************

(சென்ற வாரத் தொடர்ச்சி)

+++++++++++

ஏழு குர்ரான் நூட்களை
ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி
உறுதி எடுப்பான்
காலி•ப் !
எழில் மாது கட்டுக்கடங்கி
உள்ளதைச் சொல்வாள்
தெளிவாய் :
புல்வெளியில் சிங்கத்தைக்
கொன்றது,
குடிலுக்குத் திரும்பிய காலி•ப்
குறி எழுந்தது,
குறுக்கே எலி ஓடிய போது
குறி குனிந்தது
எல்லாம் உரைப்பாள்
தயங்காது !
ஒளித்து வைத்த நினைவுகள்
வெளியே வந்தன !

++++++++++++++

வினை விதைக்காதே மனிதா !
விதைத்தால்
வினைதான் அறுவடை செய்வாய் !
வெய்யிலும் மழையும்
விளைவிக்கும் பயிர்களை !
இலையுதிர் காலத் துக்குப் பின்
வசந்தம் வரும் !
மீள் பிறப்பை வலுயுறுத்தும்
சான்றாய்ப்
பருவ காலச் சுழற்சி !
வசந்த காலத்தில் இரகசியம்
வந்திடும் வெளியே !
வயல் மண் வாய் பிளந்து
துளிர்விடும் இலைகள் !
கவலை மிகுந்திடும் ஒயின்
தலை வலியாக !
எங்கிருந்து ஒயின் வருதென்று
சிந்தித்துப் பார் !

+++++++++++++++

விரிந்து மலரும் பூக்கள்
விதைகள் போல் தோன்றா !
மீன் போலிருக்கும்
ஸீமன் போன்று மனிதன்
தோன்று வதில்லை !
ஏசு நாதர் பிறந்தது
காபிரியல் மூச்சி லிருந்து !
ஆயினும்
அந்த வடிவில் ஏசு இல்லை !
முந்திரிக் கொடி போல்
கனி தெரிவதில்லை !
காதல் உடல் உறவுகள்
சில வற்றின்
வேறு பட்ட விதைகள் !
மாறான இடங்கள் !
பிறவி எல்லாம் மூலம் போல்
இருப்ப தில்லை !
வலி எங்கிருந்து
வருவ தென்று அறியோம் !
நாம் முன்பு செய்த தெல்லாம்
ஏனென்று அறியோம் !
காரணம்
அறியா திருப்பது நல்லது !
கவலை தாக்கும்
அல்லது !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 8, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
ஆண்மையின் குறைபாடு !
************************************

(சென்ற வாரத் தொடர்ச்சி)

+++++++++++

சினமுற்றுச் சீறுவான் காலி•ப் !
முணுமுணுக் கும் பெண் குரல்
வைக்கோல்
பாயின் கீழ் எழுமோர்
பாம்பென நினைப்பான் வேந்தன் !
ஆண்குறி தயங்கி
வணங்கு வதை நகையாடி
வக்கணை அடிப்பாள்
அணங்கு !
பொக்கெனச் சிரிப்பாள்
பொங்கும் அலைகள் போல் !
முன்பொரு நாள் காலி•ப்
சிங்கத்தைக் கொல்லும் போது
அங்கம் நிமிர்ந்தை
சிந்தித்துப் பார்த்தாள் !
சிரிப்பொலிகள் வெடித்துச்
சிதறும்
பெண்ணின் வாயில் !

++++++++++++++

செவ்விளங் கன்னியவள்
சிரிக்கச் சிரிக்க
சினம் மிகுந்திடும் வேந்தனுக்கு
மருந்து தின்னத் தின்ன
மதி சுழல்வது போல !
மங்கையின் நகைப்புக் கிடமாகும் !
ஒவ்வோர் உணர்ச்சிக்கும்
ஓர் ஊற்றுள்ளது
மூல வேராய் !
திறவு கோலும் உள்ளது
மூடியைத் திறக்க !
கடுஞ்சின முற்றான் காலி•ப் !
கத்தியை உருவினான் :
“என்ன சிரிப்புனக்கு இதிலே ?
என்னிடம் சொல்
நினைப் பதை எல்லாம் !
ஒளிமறை வின்றிச் சொல் !
உணர்ச்சி வசப்பட வில்லை நான் !
எச்சரிக்கை இது :
பொய் சொன்னால்
போய்விடும் உன் தலை !
உண்மை கூறினால்
உனக்கு விடுதலை கிடைக்கும் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 28, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
எது பொய் ? எது மெய் ?
************************************

“மனிதனுக்குக் காமப் பசியும் வயிற்றுப் பசியும் மறைந்து போகும் காட்சிப் பிம்பங்கள்.”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

முடிவற்ற நீடிப்பு
மெய்ப்பாடாய் இருப்பது போல்
இந்த வினை யெல்லாம்
உண்மையே ! ஆயினும்
காம உறுப்பு,
கும்பியின் குடலை மட்டுமே
நம்பிடும் சிலருக்கு அவை
மதத்தின்
மாயக் கனவுகள் !
அறிமுகம் செய்யாதே சிலரை
உன் தோழனுக்கு !

++++++++++++++

பிறருக்கு இது தெரியும் :
காமப் பசியும்
வயிற்றுப் பசியும்
மறைந்து போகும் காட்சிப்
பிம்பங்கள் !
பிடிவாதக் காரன்
உன் தோழன் !
குன்று போல் அசையாதவன் !
மதவாதிகள் செல்லட்டும்
அவரது
ஆலயங் கட்கு !
நாம் செல்வோம்
நமது ஆலயங் களுக்கு !
நாத்திகர் என்று
பீற்றிக் கொள்வோ ருடனும்
கடவுளை
நம்பா தவருடனும்
நீண்ட பேச்சு வார்த்தை
வேண்டாம் !

+++++++++++++

காலி•ப் விழைந்தான்
கன்னி யோடு
காம உறவு கொள்ள !
எண்ணியதும்
கன்னியை நெருங்குவான்
காலி•ப் !
பெண்ணழகு தாக்கி
சிந்தை மங்கிய உடனே
முந்தி யெழும்
ஆணுறுப்பு !

++++++++++++++

பெண் மேலேயும்
காலி•ப் கீழேயும்
படுக்கையில் கிடக்க
கடவுள் குரல் மேலிருத்து
கட்டளை யிட்டது
காமக் காட்சியை உடனே
நிறுத்தச் சொல்லி !
எலி அரவம் கேட்பது போல்
இடையூறு நேர்ந்தாலும்
முடங்கி விடும்
ஆணுறுப்பு !
அடங்கி விடும் காமம் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 21, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
எது பொய் ? எது மெய் ?
************************************

“உன் ஆத்மாவிலிருந்து நீ வினைகள் புரியும் போது ஓர் ஆறோட்டம் உன்னுள்ளே எழுகிறது. அப்போது புது மலர்ச்சியும், ஆழ்ந்த பூரிப்பும் அந்த ஆறோட்டத்தின் சின்னங்களாய் வெளிப்படும்.”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

“உன் உடம்பு முழுத் தோற்றம்
ஓர் முகம் பார்க்கும்
கண்ணாடி ஆகும் !
அதனுள்ளே கண்களும்,
ஆன்மீக மூச்செடுப்பும்
காணலாம் !
உன் செவி
இழுத்துச் செல்லட்டும்
உன்னை
உனது காதலியிடம் !”

++++++++++++++

காலி•பின் கல் மனதைக்
கலக்கி விட்டாள் அந்த கன்னி !
மறைந்திடும் மின்னல் போலவன்
மாபெரும் பேரரசு !
உன் காதல்
உறைந்து போனால்
என் அறிவுரை இதுதான் :
உனக்குரியவை மறையும் வேளை
கனவாய்ப் போகும் !
கர்வம் தணியும் !
மீசை வழியே நீங்கும் மூச்சு !
கொன்று விடும்
உன்னை அந்த இழப்புகள் !

+++++++++++++

“எதுவும் நிலைப்ப தில்லை”,
என்று உரைப்போர்
சிலர் உள்ளார் !
அது தவறான கருத்து
“வேறோர் உண்மை இருக்கு மானால்”
நானதைக் கேட்டி ருப்பேன்,
எனக்குத் தெரியாமல்
எதுவும்
இருக்க முடியாது !

++++++++++++++

சங்கிலித் தொடர் விளைவு
சிறுமிக்குப்
புலப்படாது போனால்
விலக்கத் தேவை யில்லை
வாலிபர்
மூல காரணங் களை !
காதல் நிலவி இருப்பதைக்
காரணக் கர்த்தாக்கள்
தாரணியில்
காண வில்லை யென்றால்
காதல் இல்லை யெனப்
போதிக் காதே !

+++++++++++++

ஜோசப்பின் சகோதரர் காணார்
ஜோசப்பின் எழிலை !
ஆனால் ஜேகப்
அதைக் காணத் தவறிலார் !
மோசஸ் போதகர்
முதலில் தனது
மரப்பாச்சிச் சீடரைக் கண்டார் !
அடுத்துச் சிலநாள் கண்ணோக்கில்
கடிக்கும் விரியன் கண்டார் !
கலவரப் பீதியின்
காரணம் அறிந்தார் !
கண்ணுக்குத் தெரிவது
இதய உணர்வுக்கு முரணாகும் !
மோசஸின் கரம்
முறுக் கேறிய கரம் !
ஒளிவீசும் நித்திய விளக்கு !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -4)

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
எது பொய் ? எது மெய் ?
************************************

“நான் இறப்பதால் எனக்கு நேரும் இழப்பென்ன ? ஓர் உடலிலிருந்து வேறோர் உடலுக்கு உயிர் மாறுகிறது ! காமத் தாகத் தணிப்பு வேறோர் வீட்டு விருந்துக் கதையாகிறது. சூரிய வெளிச்சத்தில் புகழ்ச்சி அணுக்கள் மின்னுகின்றன ! நீ பற்றிக் கொள்ளும் நதிக்கரை நீரோட்டத்தில் உடைந்து போகிறது !”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

தளபத்திக் கேதும் புரியவில்லை !
மோர்க் குடத்தில்
வீழ்ந்த கொசுப் போல்
மூழ்கியது உள்ளம்
மோக த்தில் சிக்கிக் கொண்டு !
வேகமாய்ச் சொல்வான்
தளபதி :
“எழில் பெண்ணே !
என்னைப் பற்றி
எதுவும் சொல்லி விடாதே
காலி•ப் மன்னரிடம்.”
கன்னியின் கவர்ச்சி பட்டதும்
காலி•ப் இதயம்
மேலும் கீழும் ஆடியது !
நினைத்தை விடப்
பாவை எழில் மேனி
முதன்முதல்
பார்வை யில் தெரிந்தது
நூறு மடங்காய் !

++++++++++++++

குருநாதர் ஒருவரிடம்
கேள்வி கேட்டான்
ஒரு மனிதன் :
“எது மெய் ? எது பொய் ?
என்றெனக்கு உரைப்பீர் குருவே !”
குருநாதர் சொல்வார் :
“பொய் இதுதான் !
பரிதி யிடமிருந்து வௌவால்
பதுங்கிக் கொள்ளும் !
கதிரோன் என்னும் வடிவக்
கருத்தி லிருந்து அல்ல !
காலி•ப் என்னும் சொல்தான்
பயத்தைப் புகுத்தி
பாதாளக் குகைக்குள்
பதுங்க வைக்கும் தளபதியை !
பகைவர் சிக்கிட எழிற்
பாவையை
பணையம் வைப்பார் சதிகாரர்
தூண்டி முள்ளில் !

+++++++++++++

உள்ளொளி வீசிடும்
உன்னதப் போதகர் மோசஸ்
சினாய் மலை உச்சியில்
ஒளி எழச் செய்தார் !
ஆயினும் குன்றின் மீது
ஒளி விளக்கு
நிலைத்து எரிய
இயலாமல் போனது !
ஏமாற்றிக் கொள்ளாதே
உன்னை !
வெறும் சிந்திப்பு
மெய் வாழ்க்கை ஆகாது !
போர் எண்ணம் உனது
வீரம் ஆகாது !
சிந்தனை
செவியி லிருந்து
செங்கண்ணில் பொங்கி எழ
செயற்பட வேண்டும் நீ !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 8, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
ஆண் பெண் காதல் உறவு
************************************

“காமத் தாகத்தை எப்படித் தீர்த்துக் கொல்வது ? காம சக்தியே நில்லாமல் நம்மை நடத்தியும் இயக்கியும் வருகிறது. இறைவனுடன் ஐக்கியமாகத் தொடர்ந்து மலர்கிறது. நம்மைக் கவரும் அழகுத்துவம் நம்மை முடுக்கிச் செயற்படுத்த இயக்குகிறது.”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

ஈருடல்கள் ஒன்றாக
இணைந் திடும் போது
வேறொன்று காணா உலகிலிருந்து
புதிதாய்ப் பிறக்கிறது
சிசு கலையா திருந்தால் !
இரண்டு மானிடம்
காதல் உறவிலோ
வெறுப்பிலோ கலந்து ஐக்கியம்
மூன்றா வது ஒன்றை
ஈன்று விடும் !
அப்படித் தோன்றிய அத்தீவிர
ஐக்கிய உடல் உணர்ச்சி
ஆன்மீக உலகிலே
தோன்றிடும் அற்புதம் !

++++++++++++++

போகுப் போது ஆங்கொரு
புதுமையைக் கண்டு பிடிப்பாய் !
உனது கூடுறவுகள்
உண்டாக்கும் பின் வாரிசுகளை !
கவனமாய் இரு ஆதலால் !
காத்திரு !
சுய உணர்வோடு
எவரையும்
காணச் செல்லும் முன்பு
நீ குழந்தைகளை
நினைவில்
வைத்துக் கொள் !

+++++++++++++

குழந்தைகளை நீதான்
வளர்க்க வேண்டும்
உன் உறவில்,
உன் உணர்வில் பிறந்ததால் !
உருவோடு,
உரையாடத் தேவை
ஓரிடம் !
உன்னை நோக்கி
அழுகின் றன உனது
குழந்தைகள் :
“மறந்து விட்டாய்
நீ எம்மைக் காண
திரும்பி வா.”
கவனம் வை இப்புகாருக்கு !
ஆடவனும் மங்கையும்
கூடுவது
ஆன்மீக நியதி !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 1, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ?
************************************

“அப்படிச் செய்வது அவனுக்குச் சிறகுகள் முளைத்து வளர்வதைப் போன்றது. ஒழுக்கமற்ற செயலைச் செய்யாமல் இருக்கிறான் ஒரு சிறுவன் என்பது ஆபத்தானது. அதாவது அச்சிறுவன் சிறகுகளின்றிக் கூட்டை விட்டு வெளியே ஏகுகிறான் ! ஒரே பாய்ச்சலில் விலங்கு ஒன்றுக்குப் பிறகு இரையாகிறான்.”

கவிஞானி ரூமி (ஒழுக்கமற்ற செய்கை புரிந்தவனைப் பற்றி)

+++++++++++++

வயல் நிலம் செழிப்பாக
உயரு தென்று
பயிரை வித்திடுவான்
அந்தத் தளபதி ! அன்றிரவு
கண்ட கனவில்
காதலி தோன்றினாள் !
காம மயக்கத்தில்
போலிப் பெண் காட்சியைப்
புணர்ந்தான் !
விந்தணுக்கள் வெளியேறும் !

++++++++++++++

சிறிது நேரம் கழித்து
விழித் தெழுந்தான் தளபதி !
காதலி
கண்முன் இல்லை யெனக்
கவலை யுற்றான் !
வித்துக்கள்
வீணாகி விட்டதாய்
வேதனை யுற்றான் :
“சோதனை செய்வேன்
சூழ்ச்சி மாதினை” என்று
சூளுரைத்தான் !

+++++++++++++

உடல் இச்சையை
அடக்கு முடியாத
ஒரு தளபதி
தலைவனாய் இருக்கச் சிறிதும்
தகுதி யற்றவன்
நிலத்தில்
வீணாய் விதைத் தவன் !
காலி•புக்கு அஞ்சாது
கட்டுப் பாடும் இல்லாது
சாவ தற்குத் துணிந்து
காதல் வயப் பட்டான்
மோகத் தளபதி !

++++++++++++++

ஆத்திரப் பட்டுச் செய்தலும்
அவசரப் பட்டுச் செய்தலும்
ஒருபோதும் கூடாது !
குருநாதர் ஒருவரிடம்
அறிவு பெறச்
சரண் அடைவாய் !
ஆனால் தளபதி யானவன்
ஏதும் செய்ய
இயலாத நிலை !

++++++++++++++

எழில் பெண்ணிடம்
இதயம் இழந்த
இந்த ஈடுபாட்டு மையல்
சரியில்லை !
உடன் படாத காதலியின்
உருவம் மறுபடியும்
வந்து வந்து தவிக்க வைக்கும் !
இருட் டுருவாய்
எதிர்ப்படும் கிணற்றில் !
சிங்கத் தையும் ஏமாற்றி
குதிக்க வைக்கும் குழியில்
போலிப் பிம்பம் !

++++++++++++++++

மேலும் ஓர் அறிவுரை
உனக்கு !
உன்னரும் காதல் மாதுடன்
உறவு கொள்ள
அடுத்தவர்
ஆழ்ந்து நோக்குவது
ஆபத்தானது !
பஞ்சும் நெருப்பும்
பற்றி எரியும்
பக்கத்தில் இருந்தால் !
எரியும் தீயை அணைப்பது
எளிதன்று !
இயலாத ஒன்று !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 25, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ?

************************************

காதலர் விரைவாய் ஒருவரை ஒருவர் நாடுவது, முனிவர்கள் உலக மெய்ப்பாடைத் தேடுவது எல்லாம் இறைவனால் வழிகாட்டப் படுபவை. ஒவ்வோர் மனித ஈர்ப்பும் நம்மை அறிவுக் கடலுக்கு இழுத்துச் செல்கிறது. எவ்விதம் வாழ்வு அமைந்து வருகிறதோ அப்பாதையிலே செல்ல வேண்டும். அப்படி முயலாது சிக்கிக் கொண்டு முடங்கிப் போவது இயற்கை நியதி ஆகாது !

கவிஞானி ரூமி

+++++++++++++

எகிப்து நாட்டின் காலி•ப்*
மெய்க் காப்பாளன் கூறுவான் :
“மோசுல் வேந்தருக்கு
மேனி எழிலான
மோகக் கிழத்தி ஒருத்தி
இருக்கிறாள்.
என்னால் எழிலை வர்ணிக்க
இயலாது !
இப்படி இருப்பாள்,” என்றவன்
ஒரு தாளில்
ஓவியம் வரைந்து காட்டினான் !

++++++++++++++

காலி•பின் கைதவறிக் கீழ்விழும்
ஒயின் கிண்ணம் !
தன் தளபதியை மோசுலுக்கு
உடனே அனுப்பினான்
படைவீரர்
பல்லாயிரம் சூழந்து செல்ல !
முற்றுகை இட்டார் ஒருவாரம்
செத்தனர் படைவீரர்
கோட்டைச் சுவர் இடிந்தது !
கோபுரங்கள் சாய்ந்தன !
“ஏனிந்த சாவுகள்,” என்று அலறி
தூதனை அனுப்பினார்
மோசுல் வேந்தர்.
“நகரம் வேண்டு மெனின்
நான் தருவேன்
எடுத்துக் கொள்வீர் !
ஆபரணம் வேண்டு மெனின்
அதுவும் அளிப்பேன் ! போர்
அவசிய மில்லை !”

+++++++++++++

தாளில் வரைந்த எழில்
மாதின் ஓவியத்தைத்
தளபதி காட்டினான்
மோசுல் வேந்தருக்கு !
தயங்க லின்றிக்
“கூட்டிச் செல் அவளை”
என்று உடனே
அனுமதி கொடுத்தார் !
“எழில் மாதை வழிபடுவோன்
தழுவிக் கொள்ளட்டும் !”
மோகினி
மாதைக் கண்டதும்
மயங்கி வீழ்ந்தான் தளபதி !
காதல் வயப் பட்டான்
காலி•பைப் போல் !

++++++++++++++

திடீர்க் கவர்ச்சியும்
முடிவிலாக் காதல் உணர்வின்
ஓர் ஆரம்பக் காட்சியே !
உலகம் வளர்ந்து வாராது இந்த
உணர்ச்சி யின்றி ?
ரசாயன மாற்றம் அடைந்திடும்
அண்டப் பொருட்கள்,
காய்கறிப்
பயிர்களி லிருந்து !
உயிர் பிணையும் உடலோடு
ஒவ்வோர் காதல் உணர்விலும்
மானிடம்
முழுமை அடையத் தான்
விழையும் போது !

+++++++++++++++
*காலி•ப் –> Caliph
+++++++++++++++

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 19, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பயம் உன் தொண்டையை
இறுக்கும் படி
விட்டு விடாதே !
இடையே
இராப் பகலாய்
மூச்சை இழுத்து வா
மரணம் உன் வாயை
மூடுவ தற்குள் !

++++++++++++++

சர்க்கரை கரைவதைப் போல்
உருக்கி விடு என்னை
தருணம் அது வென்றால் !
மிருதுவாய்ச் செய்
கையால் தடவியோ அல்லது
கண்ணோக் கிலோ !
காலைப் பொழுதில் அனுதினமும்
காத்தி ருப்பேன்
இதற்கு முன்பு அவ்விதம்
நேர்ந்தது போல் !
தீர்த்துக் கட்டுவது போல்
திடீரெனக் கொல் !
இல்லா விடில்
எப்படி நான்
இறக்கத் தயாராய் இருப்பது ?

+++++++++++++

உடலின்றி மூச்செடுக் கிறாய்
தீப்பொறி போல் !
ஏங்கி வேதனை அடைகிறாய்
நீங்குதென் மனப் பாரம் !
கை அசைத்து என்னைக்
காத தூரம் தள்ளி
நிறுத்து கிறாய் !
தூரத்தில் என்னை வைப்பதால்
ஈர்க்கப் படுகிறேன் !

++++++++++++

வெளுத்த பகல் வேளை !
வெள்ளை மதில் சுவர் !
காதல் தேயுது !
வெளிச்சம் மாறுது !
எண்ணத்தை விடவும்
எனக்கு மிகவும் தேவை
நளினம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 10, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எனது தீய பழக்கம் :
கூதற் காலத்தில் பொறுமை இழந்து
பாதகம் செய்வேன்
என்னோடு இருப்போ ருக்கு !
நானில்லா விட்டால்
நகலாது எதுவும் இங்கே !
தெளிவான சிந்தனை எனக்கில்லை !
மொழிகளில் முரண்பாடு
அவிழ்க்க இயலாத
முடிச் சாகப் போகும் !
மாசுற்ற நீரை
தூய தாக்குவ தெப்படி ?
ஆற்றில் மீண்டும் ஊற்றி விடுவதா ?
தீய பழக்கத்தை
நல்லதாய் மாற்றுவ தெப்படி ?
என்னைத் திரும்பவும்
உன்னிடம் அனுப்பி விடுவதா ?

++++++++++++++

நீர்ச்சுழிலில் சிக்கும் போது
நீரை
ஈர்த்திடும் கடலடி மட்டம் !
நம்பிக்கை யற்றுக்
காயப் படுத்துவோர்
நலமடைய
ஓர் இரகசிய மருந்துள்ளது !
நீ நேசிக்கும் நண்பனை
நெடுங்காலம் நினைத்துக் கொள்
உன்னை விட்டு அவன்
நீங்கி னாலும் சரி இல்லை
உன்னை அவன்
நெருங்கி னாலும் சரி !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 4, 2011)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எம்மோடு அமர்ந்துள்ளாய்
இப்போது.
பொழுது புலர்ந்ததும் நீ
நிலத்தில் நடமாடுவாய் !
நீ நீயாக இருக்கிறாய் ! நாம்
விரட்டிச் செல்லும்
வேட்டை விலங்குகள்
வேட்டை யாடப் படும்
வேட்டைக்கு நீ எம்மோடு
விரையும் போது !
உடம்பிற்குள் உள்ளாய் நீ
நிலத்தில் நிற்கும்
திட மான செடிபோல் !
ஆயினும் நீயொரு
வாயு !
கடற்கரையில்
காலியாய்க் கிடக்கும்
நீ முத்தெடுப் போன் உடம்பு !
நீயொரு மீன் !

++++++++++++++

கடலுக்குள் கிடக்கின்றன
கதிர்வீசும்
கணக்கற்ற நாண்கள் !
கரிய நாண்களும் உள்ளன
ஏராளமாய் !
இரத்தக் குழல்கள் போல்
தெரியும் அவை
ஒருபுறம் திறக்கும் போது !
கடலிசை எழுப்பும்
இசைக் கருவியின் நாண்கள்
ஒளிந்திருக்கும்
உனது இரத்தக் குழாய்கள் !
கடல்நுரை நோகும் விளிம்பல்ல
காணாத
கடற்கரையின் ஓலம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 28, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கண்ணில் படாமல் போனது
தோட்டம் உனக்கு !
காரணம்
அத்திப்பழம் வேண்டும் என்கிறாய்
எந்த மரமாய் இருப்பினும் !
எழிற் பெண்ணை நீயும்
சந்திக்க மாட்டாய் !
நகை யாடி வருகிறாய்
நரைத்துப் போன கிழவியுடன் !
பல்லாயிரம் பறவை இனம்
உள்ளது !
அழுகை உண்டாகும் எனக்கு
புழுத்த வாயோடு
மாடி மதில் மேல்
தலை வைத்துக் கீழ் நோக்கும்
கிழவி உன்னை
அழைத்து நிறுத்தி வைத்தது !
மடிப்பு மேல் மடிப்பு
படிந்த அத்திப் பழத்தில்
சுவை யில்லை !
காய்ந்து அழுகிக் கூடான
வெள்ளைப் பூடு !

++++++++++++++

இறுக்கிப் பிடிக்கிறாள் தோல்
இடுப்பணியில்* !
பூவும் இல்லை, பாலும் இல்லை
மூதாட்டி உடலில் !
முகத் தோற்றம் எப்படி
இருக்கும் என்று அறிந்திடத்
திறக்கும் உன் கண்களை
மரணம் !
கரிய முதலை ஒன்றின்
முதுகுக் தோல் அது !
இதற்கு மேல் இல்லை
என் புத்திமதி !
மௌனமாய்
உன்னை இழுத்து செல்லட்டும்
உறுதியாய் நீ
காதலிக்கும் ஒன்று !

***************
*தோல் இடுப்பணி — Leather Belt

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 21, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

++++++++++++++++++
கணவன் கூறிய பதில் :
++++++++++++++++++

வறுமையே எனக்குப்
பெருமகிழ்ச்சி
தருவது பெண்ணே !
எளிய வாழ்வே நேர்மையும்
எழிலும் உள்ளது.
எளிய வாழ்வில் எதையும்
ஒளிக்க வேண்டம் !
அகந்தை பேராசை பிடித்தவன்
என் றென்னை
விளித்தாய் நீ !
பாம்பு, பாம்பாட்டி என்றும்
பழித்தாய் நீ !
அனைத்து அவப் பெயரும்
உனைத்தான் சாரும் !

++++++++++++++

உனது தேவைகள் மீதுள்ள
சினத்தால் நீ
என்னைப் பழிக்கிறாய் !
எதுவும் வேண்டேன்
இந்த உலகில் !
சுற்றிச் சுற்றி
மறுபடி ஓடி வரும்
சிறு பிள்ளை போன்றள் நீ !
இப்போது நீ நினைப்பது
இந்த இல்லம்
சுற்று கிறது என்று !
குற்றம் காண்பவை
உனது கண்களே !
பொறுமையாய் எண்ணிப் பார் :
இறைவன் நம் இல்லத்தில்
ஏற்றி யுள்ள ஒளியை !
கிடைத் துள்ள உனது
கொடைகளை !

++++++++++++++

இரவு பூராவும்
இப்படி நடக்கும் தர்க்கம்
இருவரை யும் புண் படுத்தும் !
மறைத்து வைத்த ரகசியங்கள்
உறுத்தும் என்னை !
எல்லாம் தம்பதிக ளுக்குள்
உள்ளதா அன்பு
இல்லையா
என்பதைப் பொருத்தது !
இந்த இரவு
இப்படிக் கழியும் !
இருக்குது நிரம்ப வேலை
எமக்கு !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 13 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

மனைவி கூறிய பதில் :
++++++++++++++++++

என்னிடம் பேசாதீர்
உன்னத நிலையைப் பற்றி !
எப்படி நடிக்கிறாய்
என்று பார் !
அனைத்திலும் ஈனத்தனம்
ஆன்மீகத் திமிர் !
ஆடைத் துணி ஈரமாகிப்
பனிப் பொழிவாகிக்
குளிரில் நடுங்கும்
நாளைப் போன்றது இது !

++++++++++++++

என்னால் பொறுக்க இயலாது
இதனை !
நானுனக்கு
இணையானவள் என்று நீ
அழைத்திடாய் !
நீ யொரு ஏய்ப்பாளி !
நாய்க ளுடன்
எலுப்புத் துண்டுக்குச் சண்டை
இடுவோன் நீ !

++++++++++++++

பாவனை செய்வது போல்
நீ திருப்தி அடைய வில்லை !
நீ ஒரு பாம்பாட்டி !
அதே சமயத்தில்
நீதான் பாம்பும் ! ஆனால்
நீ அதை
அறியா தவன் !
பாம்பிடம் மகுடம் ஊதுவாய்
பணத்துக் காக !
பாம்பும்
மகுடம் ஊதும் உனக்கு !

+++++++++++++

இறைவனைப் பற்றி நீ
ஏராளமாய்ப் பேசி
குற்ற உணர்வை எனக்கு
உண்டாக் குவாய் !
எச்சரிக்கை செய்வேன் !
இறைவன் எனும் சொல்லைச்
சொல்லிச் சொல்லி
நெஞ்சை நஞ்சாக்கும்
நீ என்னை
ஆட்டிப் படைக்க
நினைத்தால் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 6 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)கவிதை -26 பாகம் -2 என்னருகில் வராதே

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

கணவன் கூறிய பதில் :
++++++++++++++++++++++

எத்தனை நாட்கள் பணமின்மை பற்றி
இப்படிப் புகார் செய்வாய் ?
வக்கில்லாத போக்கைச் சொல்லி
வசை பாடுவாய் ?
வாடிய நாட்கள் பெரும்பாலும்
ஓடிப் போயின !
ஓயப் போகும் இந்த
மாறும் நிலை எண்ணிச்
சீறுவது ஏன் ?
விலங்கினம் எப்படி வாழுதென்று
சிந்தித்துப் பார் !
கிளையில் அமர்ந்து
களிப்போ டுள்ளது புறா !
கான மழை பொழியுது
கருங்குயில் !
மின்மினியும் யானையும்
படைத்தவன் மீது
நம்பிக்கை வைக்கும்
தம் உணவுக்கு !

++++++++++++++

நீ படும் இடர்களே உனக்கு
நெறி கூறும் போதகர் !
கேள் அவற்றைக் கவனமாய் !
இனிமை யாக்கு துயர்களை எல்லாம் !
ஏறக் குறைய
காரிருள் நீங்கி விட்டது !
ஒருமுறை வரும் இளமையின் போது
திருப்தியாய் இருந்தாய் !
அதிருப்தியில் இப்போது
அவதிப் படுகிறாய்
எல்லா வேளையும் !
செல்வத்தில் புரண்டாய்
ஒரு காலத்தில் !
செழித்த முந்திரிப் பழமாய்
மிளிர்ந்தாய் !
அழுகிப் போன பழம் நீ
இப்போது !
இனிமை படிப் படியாய் உயர
வளர வேண்டும் நீ !
தீயவளாய்
நீ மாறி விட்டாய் !
மனைவி யான நீ
இணை யானவள் எனக்கு !
இரட்டைச் செருப்பில்
ஒரு செருப்பு
இறுக்கமாய் இருந்தால் பயனின்றி
இரண்டும் வீணாகும் !
இணையாய்ப் பொருந் தாத
இரு கதவுகள் நாம் !
ஓநாயுடன் புணராது
ஒரு சிங்கம் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 30 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++
என்னருகில் வராதீர்
++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

மனைவியின் புகார் :
++++++++++++++++++++

பாலைவன நாடோடி களின்
குடிசை ஒன்றில்
பதியிடம் கேட்பாள் பத்தினி :
“எல்லோரும்
வளமொடு வாழ்கிறார்
களிப்புடன் நம்மைத் தவிர !
உண்ண உணவில்லை !
உப்பு மிளகாய் ஒன்று மில்லை !
குடிலில் நீர்க்குடம் இல்லை
தேவைக்கு உடுப்பில்லை
போர்த்திக் கொள்ளப்
போர்வை இல்லை இரவில் !
முழு நிலவே அப்பம் என்று
கற்பனை
செய்து கொள்வோம் !
தேடிச் செல்வோம் நாம்
ஓடிப் பெற்றிட !
பிச்சைக் காரரும் திகைப்புறுவார்
நம்மைத்
துச்சமாய் எண்ணி !
நம்மை விட் டெல்லோரும்
விலகிச் செல்வார் !
பரிவு நிரம்பிய போராளியாய்
அறியப் படுவர்
அரேபியர்.
பார் உன்னை நீயே
படி தடுமாறி விழுகிறாய் !
வீட்டுக்கு விருந்தாளி வந்தால்
கிழிந்த அவனது
வேட்டியைத் திருடுவோம்
தூக்கத்தில் அவன்
விழுந்து கிடக்கையில் !
இந்த வழியில் உம்மைத் தள்ளும்
விந்தை வழிகாட்டி யார் ?
கைப்பிடி அளவுப் பருப்பும்
கைவச மில்லை !
பத்தாண்டு தாம்பத்திய வாழ்வின்
மெத்த விளைவுகள் இவை !
கடவுள் எங்கு மிருந்தால் போலிக்
கயவரை நாம் ஏன்
கண்மூடிப் பின்செல வேண்டும் ?
நமக்கு யார்
நல் வாழ்வுக்கு வழி காட்டுவது ?
நாளை ஒளிமய மாகி
வாழ்வில் செல்வம் குவியும்
என்று ஏமாற்றும்
போலிக் குருவா ?

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 23 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
என்னருகில் வராதீர் !
++++++++++++++

+++++++++++++
பிரிவின் நிழல் !
++++++++++++++

பிரிவென்றால் நன்றாகத்
தெரியும் நமக்கு
பிணைப்பு உறவை நாம்
சுவைத்தி ருப்பதால் !
புல்லிலைப் புல்லாங் குழல்
பொங்கிடும் இசை வெள்ளம் !
ஏனெனில் ஏற்கனவே அது
அனுபவித் துள்ளது
மண்ணும், மழையும், ஒளியும்
கரும்பாய்
உருவாகி இருப்பதை !
இடைவெளி நமக்குள் தூரமானால்
காதல் தாகம்
கசந்து போகும்
காதலி திரும்பி வருவாளா
அல்லது
காணாமல் ஓடி விட்டாளா
என்றோர்
காரணம் அறியாத தால் !
உள்ளிழுக்கப் படுவாய்
புறத்தே நீ
தள்ளி விடும் போது !

+++++++++++++++++++++
சில சமயம் ஏற்படும் மறதி
+++++++++++++++++++++

நினை வின்றிப் போகும்
சில வேளை எனக்கு
துணைவியின் ஐக்கியம் என்பது
என்ன வென்று தெரியாமல் !
உள்ளுணர் வின்றி
தெள்ளறி வின்றி
தெளிக்கிறேன் நான் எங்கும்
என் சோக பாரத்தை !
எனது கதை பல்வேறு வழிகளில்
எங்கும் சொல்லப் படுகிறது :
வாலிபக் காதற் களிப்பாய்
கேலி நகைப்பாய்
ஆணின் போராட் டமாய்
காலி இடமாய்க்
கதைக்கப் படும் !

+++++++++

எந்தன் மறதியை
வகுத்து விடு
எண்ணற்ற இலக்கத்தில் ! அவை
இயங்கிடும்
ஒரு சுற்று வட்டமாய் !
பின்பற்றும் எனது
இருண்டு போன
ஆலோசனைகள் எல்லாம்
தெரியாத ஒன்று
தீட்டிய
ஒரு சதித் திட்டமா ?
கவனம் வைப்பீர்
நண்பரே !
என்னருகில் வர வேண்டாம்
அனுதாபப் பட்டோ
அல்லது
ஆவல் மிகுந்தோ !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 15 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



++++++++++++++
சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++

++++++++++++++
விளையாட்டுச் சிறுவனாய் இரு !
++++++++++++++

சிறந்த அறிவைப்
பெறுவதற்கு
உகந்த முறை இதுவல்ல !
அறிவுப் பாரம் சுமப்போர்
குருவின் சீடர்
விரும்பினும் சரி
விரும்பாது போயினும் சரி
வேதனைப் படுவார் !
பொது மக்க ளிடையே
புகழ் பெறத்
தூண்டில் போன்றது அது !
தர்க்கத்துக் குட்படும் அறிவுக்கு
வாடிக்கை யாளர் இல்லை !
ஆத்மாவும் இல்லை அதற்கு !
உறுதியும் ஆற்றலும் படைத்த
விருப்பக் கூட்டத்தில்
ஞானம்
வீழ்ந்திடும் தரையினில்
ஒருவரும்
வரவில்லை என்றால் !
உண்மை யான
வாடிக்கை யாளர் கடவுள்
ஒருவர் தான் !

+++++++++++++

மெதுவாக மென்று தின்பாய்
இனித்திடும் கரும்புத் தண்டை !
அது போல்
கடவுளின் அன்பும்
சுவைக்கும் !
விளையாட்டுச் சிறுவனாய்
நிலைத்திரு !
ஒளி பெறும் உன் முகம் !
சிவப்பு ரோஜா போல்
மலர்ந்திடும் !

++++++++++

அலை மோதும்,
மனநிலை மறந்திடும்,
காதல் மோகி
வெட்கித்
தலை குனியட்டும் !
தெளிவு உள்ளவன்
கவலை அடைவான்
வாழ்க்கை
தாறு மாறாய்ப் போயின் !
காதலனும்
கவலைப் படட்டும் !

+++++++++

இரவு, பகல் எந்நேரமும்
இசை வெள்ளம் !
அமைதி ஒளியில்
பொங்கி
எழும் பாட்டு !
அவை எல்லாம்
மங்கிப் போனால்
அனைவரும்
மாய்ந்து போவோம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 8 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++
எத்தனை விதமான பெண்டிர் ?
++++++++++++++

சிறுவரை விட்டு அகன்றார்
குருநாதர்.
வாலிபன் உரக்கக் கேட்டான் :
“மேலும் கூறுவீர்
இவ்வூர் மாதரைப் பற்றி.”
அருகில் வந்தார் குருநாதர்
மரக் குதிரையில்.
“உன் முதற் காதலி
கன்னி அழகு உனக்குத்தான் !
களிப்பும் விடுவிப்பும்
அளிப்பாள் !
இரண்டாம் மாது
குழந்தை யில்லா விதவை !
பாதி மனைவி ஆவாள் உனக்கு !
மூன்றாம் மாது
வேண்டாம் உனக்கு !
திருமணம் ஆன மாது !
ஒரு பிள்ளையும் உண்டு.
முதற் பதிக்குப் பிறந்த பிள்ளை !
அவளது அன்புப் பகிர்வு
அந்தப் பிள்ளை மீதுதான் !
உந்தன் மீது
உண்டா காது உறவு !
சிந்திப்பாய் இப்போது !
வந்த வழியே திரும்பிச் செல் !
மரக் குதிரையை
திருப்ப வேண்டும் நான் !

++++++++++

சிறுவரை விளித்துக் கொண்டு
குருநாதர் நெருங்கினார்.
“மேலும் ஒரு கேள்வி மேதையே !”
“சீக்கிரம் கேள்
குதிரைச் சவாரிக்காரி
உதவிக்கு நான் தேவை.”
நேசிக்கப் போகிறேன்
நான் அவளை.”
வாலிபன் மீண்டும் கேட்டான் :
“ஈதென்ன விளையாட்டு
மேதையே ?
உமது ஞானத்தை ஏன் இப்படி
ஒளித்து வைக்கிறீர் ?”
குருநாதர் கூறினார் :
“என்னைத் தலைவனாய் ஆக்க
இம்மக்கள் விழைகிறார் !
குற்றத்தை விசாரித்து நான்
நீதி சொல்ல,
வேத நூலை விளக்க
வேண்டு மென விழைகிறார் !
என்னறிவு அதற்கு
இடங் கொடுக்க வில்லை !
இன்பத்தில் மூழ்க்க என்னை
இழுக்குது என்னறிவு !
நானொரு
கரும்புத் தோட்டம் !
அதே சமயத்தில் அதனைத்
கடித்து இனிப்பைச் சுவைப்பதும்
நான் தான் !”

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 1 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



++++++++++++++
சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++

++++++++++++++
எத்தனை விதமான பெண்டிர் ?
++++++++++++++

வாலிபன் ஒருவன் வழி நெடுவே
கேள்வி கேட்டு அலைந்தான் :
“ஞானி ஒருவரைக்
காண நான் விழைகிறேன்;
இயல வில்லை என்னால்.”
அருகில் நின்றவன் கூறினான் :
“மரக் குதிரை மேலமர்ந்து அங்கே
சிறுவரோடு
விளையாடி வரும்
அந்த மனிதரைத் தவிர
எந்த நபரும் இல்லை
எமது ஊரில்.
உள்ளொள,¢ கூரிய அறிவு
விரிந்த விழுமம் உடையவர்,
ஆனால் அவற்றை யெல்லாம்
மறைத்துக் கொண்டு
சிறுவரோடு விளையாடுகிறார்.”

++++++++++

சிறுவர் விளையாடும் இடத்தை
நெருங்கிக் கேட்டான் :
“அன்புத் தந்தையே !
நீர் சிறுவனாய் மாறியதின்
மர்மம் என்ன ?”
மா மனிதர் கூறினார் :
“போடா போ !
எந்த மர்மமும் இன்றில்லை”
வழிப்போக்கன் கேட்டான் :
“குதிரையைத் திரும்பி ஒருகணம்
பதில் அளிப்பீர் !”
குருநாதர் கூறினார் :
“விரைவாகக் கேள் !
நேர மில்லை எனக்கு !”

+++++++++++

தனது முக்கிய
வினாவைக் கேளாமல்
விகடம் பேசினான் வழிப்போக்கன் !
“திருமணம் புரிய வேண்டும்
பொருத்த மான பெண்ணொருத்தி
இருக்கி றாளா இந்தத்
தெருவில் ?”
குருநாதர் கூறினார் :
“முத்தரப் பெண்டிர் உள்ளார்
இத்தரையில் !
இருவர் துயர் கொடுப்பவர் !
ஒருத்தி ஆத்மாக்கு
அமுத சுரபி !
முதல் பெண்
முழு மனைவி ஆவாள் உனக்கு !
அடுத்த பெண்
பாதி மனைவிதான் உனக்கு !
மூன்றாம் பெண்
தீண்டாள் உன்னை !
ஊரை விட்டு
ஓடிப் போய்விடு
குதிரை உன் தலையை எட்டி
உதைப்ப தற்கு முன் !”

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 26 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++
++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++

(முன்வாரத் தொடர்ச்சி)

விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !
நீரோட்டம் சுற்ற வைக்கும்
ஆழிபோல் உடலைச்
சீராக இயக்குவது
ஆன்மா !
மூச்சை உள்ளிழுக்கச் செய்வதும்,
வெளியே தள்ளுவதும்
ஆன்மா புரிவதே !

++++++++++

ஒரு கணத்தில் சினம்
மூட்டுவதும்
அடுத்த கணத்தில்
அமைதி உண்டாக்குவதும்
ஆன்மாவே !
இறைவனைத் தவிர
இல்லை ஓர் மெய்த்துவம்
என்று சொல்கிறார்
தன்னை முழுமை யாக
அர்ப்பணம் செய்த
குருநாதர் !
மனித இனத்துக்குப்
புனிதக் கடல் போன்றவர் !

+++++++++++

படைப்பின் அடுக்குகள் எல்லாம்
கடலின் துடுப்புகள் !
துடுப்பின் அசைவுகள்
கடலில் அலைகள் எழுப்புவதால்
தொடர்பவை !
துடுப்புகளை எல்லாம்
கடல் ஓய வைக்க
துரத்தி விடும் கரையோரம் !
மீண்டும் கொந்தளிப்பில் அவை
வேண்டப் பட்டால்
புயல் அடித்து வளைக்கும்
புல்லிலை போல் !
நில்லாது இந்த நிகழ்ச்சி
ஒருபோதும் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)

கவிஞானி ரூமியின் கவிதைகள்
(1207 -1273)

++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++

கவிதை -23 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++

(முன்வாரத் தொடர்ச்சி)

விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !
நீரோட்டம் சுற்ற வைக்கும்
ஆழிபோல் உடலைச்
சீராக இயக்குவது
ஆன்மா !
மூச்சை உள்ளிழுக்கச் செய்வதும்,
வெளியே தள்ளுவதும்
ஆன்மா புரிவதே !

++++++++++

ஒரு கணத்தில் சினம்
மூட்டுவதும்
அடுத்த கணத்தில்
அமைதி உண்டாக்குவதும்
ஆன்மாவே !
இறைவனைத் தவிர
இல்லை ஓர் மெய்த்துவம்
என்று சொல்கிறார்
தன்னை முழுமை யாக
அர்ப்பணம் செய்த
குருநாதர் !
மனித இனத்துக்குப்
புனிதக் கடல் போன்றவர் !

+++++++++++

படைப்பின் அடுக்குகள் எல்லாம்
கடலின் துடுப்புகள் !
துடுப்பின் அசைவுகள்
கடலில் அலைகள் எழுப்புவதால்
தொடர்பவை !
துடுப்புகளை எல்லாம்
கடல் ஓய வைக்க
துரத்தி விடும் கரையோரம் !
மீண்டும் கொந்தளிப்பில் அவை
வேண்டப் பட்டால்
புயல் அடித்து வளைக்கும்
புல்லிலை போல் !
நில்லாது இந்த நிகழ்ச்சி
ஒருபோதும் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -1

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++

++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++

ஒரே காற்றுதான்
வேரோடு மரங்களை வீழ்த்திப்
புல்லின் இலைகளை
வில்லாய் வளைத்து
மின்னிடச் செய்யுது !
தெய்வீகக் காற்று
இலைகளின்
பலவீனத்தை நேசிக்கும் !
பணிவையும் விரும்பும் !
பராக்கிரமம் தன்னிடம் உள்ளதைப்
பீற்றிக் கொள்வ தில்லை
காற்று
ஒரு போதும் !

+++++++++++

வெட்டித் துண்டாக்கும்
கோடரி
கிளைகளின் தடிப்பைக்
கண்டு
கவலைப் படாது !
இலைகளின் விதி வேறு
அவற்றை விட்டு
விலகிச் செல்லும்
கோடரி !
கட்டுமரத்தின் குவியலைக்
கண்டு கொள்ளாது
கனல் பொறி !
ஆட்டு மந்தைக்கு
அஞ்சி
ஓடிப் போக மாட்டான்
கசாப்புக் கடையாளி !

+++++++++++++

மெய்த்து வத்தின்
முற்றத்தில்
வையகத்தின் வடிவென்ன ?
மிக மங்கிய தோற்றம் !
சுற்றிடும் ஒரு
கும்பா போல் வானை
நம்மீது
குப்புறக் கவிழ்த்துவது
மெய்ப்பாடு !
விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 12 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
என் நாக்கின் வடிவு
++++++++++++++

என்னுள் இருக்கும் கண்ணாடி
எனக்குக் காட்டுகிறது;
என்னால்
என்ன வென்றும் சொல்ல ஆஇயலாது !
ஆனால் தெரியா தென்றும்
நானுரைக்க முடியாது !
என் உடலி லிருந்து நான்
இயங்குபவன் !
என் ஆன்மா விலிருந்து நான்
எழுந்தவன் !
எந்த ஒன்றுக்கும் நானிங்கு
பந்தப் படாதவன் !

+++++++++++

உயிரோ டில்லைஆ நான் !
ஊசி நாற்றம் அடிப்பதை உன்
நாசி நுகர்கிறதா ?
என் கிறுக்குத் தனம் பற்றிப்
பேசி வருகிறாய் !
ஊசி முனை அறிவைக் கேள் !
நானும்
நட்மாடும் அங்கி மேல்
கொடிப் பழமாய் ஆஇருப்பது !
நீ அறிந்த ஒரு நபர் போல்
நானிருக் கிறேனா ?

+++++++++++++

வீழ்ந்த இந்தக் கொடிப் பழம்
நீர்மை மிகுந்தது !
தலை கீழாய்த் தொங்கினும்
துளிநீர் சிந்தாது !
அவ்விதம் நீர்த்துளி சிந்தினும்
அத்துளிகள்
இறைவன் மேல் விழுந்து
முத்துக்களைப் போல்
உருண்டு விடும் !

++++++++++

கடல் மேல் நானொரு
முகிலாய்
வடிவெடுப்பேன் !
சிந்திய
நீர்த் துளிகளை எல்லாம்
சேமிப்பேன் !
பொழிவேன் மழையாய்
சூரியன்
இங்குள்ள போது !
ஓரிரு நாட்களில்
மல்லிகைப்
பூக்கள் மலரும் என்
நாக்கு வடிவத்தில் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 4 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
++++++++++++++

நடனம் புரிவதற்குத்
தெரு வழியே வரும்
புல்லாங் குழலிசை
நாத வெள்ளம்
நமது செவிப்பட
அதிட்டம் செய்துள்ளோம் !
புவித்தளம் மிளிர்கிறது !
முற்றத்தில்
தயாராக உள்ளது மேஜை !
எல்லா ஒயினையும்
இன்றிரவே அருந்துவோம் ! இதோ
வசந்த காலம்
வந்து விட்டது !
கடல் குமுறி ஏறுகிறது.
முகிலாகி நாங்கள் மிதக்கிறோம்
கடல் வான்மீது !
உள்ளொளி யால் கடலுக்குள்
ஒளி தெரியும் போது
கடுகுபோல் ஆகிவிட்டோம்
கடல் மேல் !
குடி மயக்கத்தில் நான்
கிடப்பது எனக்குத் தெரிகிறது
கடல் பேச்சை நான்
தொடங்கிய போது !
ஒரே வீச்சில்
வெண்ணிலவை
இரண்டாய்ப் பிளக்க
விரும்பு வாயா நீ ?

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 27 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
என் வாழ்வு எனக்கில்லை
++++++++++++++

வசந்த காலம் வந்து விட்டது !
வளர்ந்து வருகுது
ஒவ்வொன்றும் தளிர்த்து !
உயர்ந்த
சைப்பிரஸ் மரமும் வளருது
நாமிந்த இடத்தை விட்டு
நீங்கக் கூடாது !
கிண்ணத்தின் விளிம்பைச் சுற்றி நம்
எண்ணத்தைப் பகிர்கிறோம் !

++++++++++++++++

இசைக்கீதம் யாரேனும் பாட விழைந்தால்
இனிமை மிக்கதாய் இருக்க வேண்டும் !
நாம் ஒயின் குடிக்கிறோம்
நமது வாயிதழ் மூலமின்றி !
நாம் உறங்கி விழுகிறோம்
நமது படுக்கையில் இருந்தல்ல !
கிண்ணத்தை நெற்றியில் உரசு
இறப்புக்கும், வசிப்புக்கும் அப்பால்
இந்த நாளை சிந்தித்துக் கொள்வீர் !

+++++++++++++

மற்றவர் வைத்திருப் பதை எல்லாம்
மனதில் இச்சிப்பதை
விட்டு விடு !
அதுவே பாதுகாப் புனக்கு !
எங்கு பாதுகாப் புள்ள தெனக்கு
என்று கேளாய்
இனிமேல் !

++++++++++++++++++

வினாக் களைக் கேட்க
வேண்டாம்
இந்த ஒரு நாள் !
நாள்காட்டி சுட்டும் எந்த ஒரு
நாளும் வேண்டாம் !
இந்த நாளுக்கு
ஓர் உணர்ச்சி உண்டு !
இந்த நாள்
நமக்கு நேச மானது !
உணவு போன்றது !
பரிவானது ! சொல்வதை விட
எளிதானது !

+++++++++++++++++++

சிந்தனை யாவும் வார்த்தைகள்
செதுக்கியவை !
ஆயினும்
இந்த நாள்
சிந்தனைக்கும் கற்பனைக்கும்
அப்பாற் பட்டது !
அவை இரண்டும் தாக முள்ளவை
தண்ணீ ருக்கு மென்மை
தருபவை !
அவற்றின் வாய் வரண்டவை !
களைத்துப் போனவை !
இக்கவிதையில்
மற்றவை படிக்க இயலாமல்
மங்கிப் போனவை !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 20 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -19 திறப்பாய் உனது புனை நினைவை

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
திறப்பாய் உனது புனை நினைவை
(Unfold Your Own Myth)
++++++++++++++

பொழுது புலர்ந்ததும்
எழுந்து யார்
பூத்தெழும் ஒளியை நோக்குவார் ?
அணுக்களைப் போல்
வக்கிரமாய்
வட்ட மிட்டுவதை
யாரிங்கு பார்ப்பது ? தாகமுள்ள
நீர்ச்சுனை ஒன்றை
யார் ஒருவர்
நெருங்கிச் சென்று
நிலவு பிரதி பலிப்பதை
நேராகக் காண்பது ?
கவலையில் மூப்படைந்த
கண்ணில்லா ஜேகப்* போல்
மரணமுற்ற மைந்தன் உடை நுகர்ந்து
மறுபடியும்
கண்ணொளி பெற்றது யார் ?
வாளி ஒன்றைக்
கீழிறக்கி ஓடும்
ஞானத் தூதுவரை
மேல் தூக்கி வருவது யார் ?
தீயை நாடிச் சென்ற
மோசஸ்* போல்
பொழுது புலர்ச்சியில்
எழுந்திடும் நெருப்பைக்
கண்டது யார் ?

++++++++++++++++

பகைவரிட மிருந்து
தப்பிக் கொள்ள
இல்லம் ஒன்றில் ஒளிந்து கொண்ட
ஏசு நாதர்
புதியதோர் உலகுக்குக்
கதவு திறந்தார் !
மீனை அறுத்த சாலமன்
பொன் மோதிரம்
ஒன்றைக் கண்டான் !
தூதரைத் தாக்கிக் கொல்லப்
பாய்ந்த ஓமார்*
ஆசிகள் பெற்று
ஏகினான் !
மானை விரட்டிப்
போனவர்
எல்லா இடத்துக்கும்
போவார் !
ஒரு துளிக்கு
வாய் திறக்கும் சிப்பியில்
இப்போது
இருப்பதோர் முத்து !

+++++++++++++

சிதைந்த குவியல்களில்
திசையற்றுத்
திரியும் நாடோடி ஒருவன்
செல்வீகன் ஆவான்
திடீரென்று !
திருப்தி அடையாதீர்
எப்படிப் பிறர் இருந்தார்
என்னும்
இந்தப் புனை கதைகளில் !
உமது புனைவு உணர்வுகளைத்
திறந்து வைப்பீர்
சிக்கலான விளக்க மின்றி
பிறருக்குப் புரியும் படி !
திறந்து வைப்போம் உமக்காக !
மோசடிகள்,
பாசாங்குகள் நோக்கி நடந்தால்
பாரமாகும் கால்கள்
களைப்படைந்து !
ஒருகணம் உனக்கு வந்திடும்
இறக்கை முளைத்துப்
பறப்பதாய் !

++++++++++++++++++

*ஜேகப், *மோசஸ், *சாலமன் பைபிள்
கூறும் நபர்கள்.
*ஓமார் இஸ்லாமிய நபர்.

++++++++++++++++++

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 13 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
பூமியின் கூக்குரல்
++++++++++++++

புவித்தளம் போல் உணர்கிறேன்
வியப்புடன் !
எத்துணை அரிய விளைவை
பெற்று வந்துள்ளது
இச்சூழ்வெளி !
எனக்குத் தெரிந்த தெல்லாம்
என்னுள் வளரும் !
ஒவ்வொரு மூலக்கூறையும்
மழைப் பொழிவு
கர்ப்பம் ஆக்கும்
மர்மத்தை நிரப்பி !
பிள்ளைப் பேறு வலியில்
தாயுடன் அலறுவோம்
நாமெல்லாம் !
பூமியும் அலறு கிறது :
“நான்தான் சத்தியம் !
கீர்த்தி இங்குள்ளது !”

++++++++++++++++

திறக்கிறது பூமி ! அதிலிருந்து
பிறக்கிறது ஓர் ஒட்டகம் !
மரம் ஒடிந்து
கிளை ஒன்று விழுகிறது !
அங்கே ஒரு பாம்பு !
நபி நாயகம் நவில்கிறார் :
“மெய்யான
நம்பிக்கை கொண்டவன்
நல்லதோர் ஒட்டகம் போன்றவன் !
தன்னை ஒழுங்காய்ப் பேணும்
எஜமா னனை மட்டும்
எதிர்நோக்கும் அது
எப்போதும் !
வைக்கோல் இடுவான் அவன் !
முழங்காலைக்
கட்டிப் போடுவது
தாங்கிக் கொள்ளும் சட்டம் !
கட்டுப்பாடு நீக்கிய பின்
ஒட்டகம்
நடனம் ஆட விடப்படும்
அங்கியைக் கிழித்துக் கொண்டு
கடிவா ளத்தை
அறுத்துக் கொண்டு !

+++++++++++++

புதிய வடிவத்தில் தளிர்க்கும்
பயிரினம்
பூமியின் தளத்தில் !
கற்பனை செய்யாத
அற்புதச் செடிகள் முளைக்கும் !
நடனமிடும் ஒட்டகம்
அவை மேல் !
இந்தப் புதிய விதைகள் எல்லாம்
என்னதான் முயன்றாலும்
வேறோர் பரிதியை
விளக்கமாய்க் காட்டுவ தில்லை !
அவை மறைக்கும் அதனை !
ஆயினும்
முயற்சி அளிக்கும் மகிழ்ச்சி
சிப்பிக்குள் இருக்கும்
முத்துக்களை
ஒவ்வொன்றாய் வெளியே
எடுக்கும் போது !

++++++++++++++++++

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 6 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++
நீராவிப் புகை இழைகள்
+++++++++++++++++++

நிரப்பிடும் குளிக்கும் இடத்தை
நீராவி !
விழித்திடும் சுவரில் உறைந்த
துளிகள் !
திறக்கும் ஈரக் கண்கள்
வட்டமாய் !
சுயக் காதல் விழிகள்
நோக்கும் வெகு தூரம் !
புதுச் செவிகள்
எக்கதையும் கேட்க விழையும் !
நண்பரைப் போல்
வடிவங்கள் எல்லாம்
நடனங்கள் ஆடும் நீரில்
ஆழமாய் பாய்ந்தும்
மேல் எழுந்தும்
மீண்டும் குதித்தும் !

++++++++++++++++

முற்றத்தில் நீராவி கசியும்
மறுபடி கேட்கும் அதன் அரவம் !
ஒரு மூலையில் துவங்கி
ஓடும் அடுத்த மூலைக்கு
சிரித்த வண்ணம்
நீராவி !
எவரும் கூர்ந்து நோக்கார்
எவ்விதம் நீராவி
ஒவ்வோர் மனத்தின் ரோஜாவைத்
திறக்கிற தென்று !
பிச்சைக் குவளையை
எப்படி நாண யங்களால்
நிரப்பிக் கொள்வது ?
நீண்ட கூடை ஒன்று
நிரம்பிடும் நன்கு உடனே
நீர் விழைவது போல !

+++++++++++++

நீதி வழங்கும் நெறியாளரும்
தவறு செய்த மானிடரும்
தீர்ப்பை மறந்து
சென்றிடுவார் !
ஒருவர் எழுந்து நிற்பார்
உரையாற்ற !
எதிரே இருக்கும்
மரமேஜை புனிதம் அடையும் !
அவ்விநாடி மதுக்கடை
ஆக்கப் படும் ஒயினால் !
மதுவைக் குடிப்பான்
மயக் கத்தில் மாய்ந்தவன் !

++++++++++++++++++

அடுத்து நீராவி
ஆவி யாக மறையும் !
வடிவங்கள்
சுவரில் பதிந்து கொள்ளும்
வெறுமை ஆயின விழிகள்
நேர் கோடாகும் செவிகள் !
வெளிப்புறத்
திரையில் நிகழும் அக்காட்சி !
பறவையின் குரலும்
சருகுகள் சலசலப்பும் கேட்கும்
தோட்டத்தில் !
எழுந்து நிற்போம் இந்த சத்தத்தில்,
காற்றாய் மாறுவோம் !
என்ன நடக்குமென
எவர் சொல்ல இயலும்
எல்லாரும் பேனாவை
கோடி முறை மைச்சிமிழில்
நாடி விடும் போது ?

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 30, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++
நீராவிப் புகை இழைகள்
+++++++++++++++++++

மீண்டும் ஒளியை ஏற்றுவாய்
ஒளியூட்டும் ஒன்றிலே !
வாழும் வழியை மாற்றுவாய் !
கடல் கொப்பரையில் நீ
எடுக்கும்
ஒவ்வொரு குவளை
ஒயினும்
நெருப்பைப் பற்ற வைக்கும் !
நெடுங்காலத் துக்கு முன்
செத்துப் போன
ஓரிரண்டு உடல்களும்
உயிர்த்தெழும் !
ஓரிரண்டு குடிகாரர்
சிங்க வேட்டைக் காரர்
ஆவார் !

++++++++++++++++

கறுப்பு முகத்தை வெளுப்பாக்கும்
கதிரவன் ஒளி !
மெய்யான மலர் ஒன்று
மிளிர்ந்திடும் அந்த முகத்தில் !
புல்வெளிகளும்
பூந்தோட்டமும் ஈரமாகும்
மீண்டும் !
வீரிய ஒளி போன்ற
விரல்கள்
எமது தலையை
நளினமாய்த் தடவின !
பிரிவினை எதுவும் இல்லை
விரல்களுக் குள்ளே !

+++++++++++++

பூட்டுத் தாழ்ப்பாளை நகர்த்து !
மேலிருந்து ஓர் அடுக்கு
கீழடுக்கை நோக்கி விழும் !
வெப்பம் பரவிடும் எப்புறமும் !
வெறி கொண்ட
கொப்பரைகள் கொதிக்கும் !
கிழிந்திடும் உடைகள் காற்றினில் !
வெளி விடுவார்
வெகுண்ட கவிஞர்
நீராவிப் புகை இழைகள் !
களிப்புக் கோர் அளவில்லை
ஒளிவெளியில் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 23, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -16 ஏசு கிறித்து வசந்தம்

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
ஏசு கிறித்து வசந்தம்
++++++++++++++

“ஒவ்வொருவரும் உண்டப் பிறகு ஓய்வெடுத்து உறங்குகிறார். வீடு காலியாக இருக்கிறது. பீச் பழம் ஆப்பில் பழம் சந்திக்கவும், மல்லிகைக்கும் ரோஜா மலருக்கும் இடையே உரையாடல் நிகழவும் நாங்கள் தோட்டத்தை நோக்கி வெளியே போகிறோம்.”

ரூமி.

++++++++++++++++
ஏசு கிறித்து வசந்தம்
++++++++++++++++

வசந்த காலமே ஏசு கிறித்து !
தியாகம் செய்யும்
பயிர்ச் செடிகளை
வளர்க்கும் புல் புதர்களில் !
வாய் பிளக்கும் அவை நன்றியில்
வாய் முத்தம் வேண்டி !
ரோஜாவின் சுடரொளிக்கும்
மணிமலர்* ஒளிக்கும்
காரணம்
உள்ளே இருக்கும் விளக்கு !
ஓரிலை நடுங்கும் !
எனக்கும் நடுக்கம் வருகுது
இனிய தென்றலில்
துருக்கிஸ்தான் பட்டுத்
துணி போல் !
ஊது பத்திச் சிமிழ் கனலாய்
ஓங்கி எரியுது !

+++++++++++++

தென்றல் காற்றே புனித ஆன்மா !
மரங்கள் யாவும்
புனித மேரி !
கவனித்து நோக்கு :
கைகோர்த்துக்
கணவனும் மனைவியும் எப்படிக்
களிக்கிறார்
எளிய விளையாட்டில் !
பளிங்கு முத்துக்கள்
ஏடனி லிருந்து
காதலர் இடையே வீசப்பட்டன
திருமண வழக்குப்படி !

+++++++++++++

ஜோஸ•ப் அணியுடை
நறுமணம்
ஜேகப் நோக்கி வருகிறது !
மெக்காவி லிருந்து
முகமது நபியின்
விலை மதிப்பில்லா
செந்நிறக் கல் சிரிப்பொலி
செவியில் கேட்கிறது !
நாமெல்லாம்
இதைப் பற்றியும் அதைப் பற்றியும்
கதைக்கிறோம் !
ஓய்வில்லை நமக்கு
உரையாடும்
இடைவேளை தவிர !

+++++++++++++
மணிமலர்* –> Tulip Flower

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 16, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -1

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
உன் முகத்தை நோக்கும் போது
++++++++++++++++++++++++++++++

நான் உன்முகம் நோக்கும் போது
கற்சிலைகள் தலைசுற்றும்
தோன்றுவது நீ !
நான் கற்ற தெல்லாம்
குழம்பிப் போகும் !
இழப்பது நான்
என் இருப்பிடம் !
முத்துக்களாய் மாறும் நீர்த் துளிகள்
செத்திடும் நெருப்பு ! அது
சிதைப்ப தில்லை எதையும் !
உன் முன்னிலையில்
எனக்கு விருப்ப மான
அம்மூன்று தொங்கு
விளக்கு களையும் நான்
வேண்டேன் !
உன் முகத்தின் உட்புறத்தில்`
புராதன எழுத்தேடுகள்
துருப்பிடித்த கண்ணடி போல்
இருக்கின்றன` !

+++++++++++

காற்றை நீ சுவாசிப்பதால்
புதுப் புதுத்
தோற்றங்கள் உருவாகும் !
ஆசைகள் யாவும்
கீதங்களாய்
வசந்த காலம் ஊர்வது போல்
பயணி செய்யும்
ஒரு பெரும்
வாகனம் போல் !
கவனமாய், மெதுவாய் ஓட்டிச் செல்
வழிப் பயணிகளில் சிலர்
கால் முடவர் !

++++++++++++++

இன்றைக்கு விழித்து எழுந்தோம்
என்றும் போல்
வெறுங் கையாய்
ஒன்று மில்லாது
பயத்தோடு !
படிப்பறையின்
கதவைத் திறவாதே !
எதையும் படிக்கத் துவங்காதே !
இசைக் கருவி ஒன்றை
எடுப்பாய் !
நாம் வழிபடும் அழகுத்துவம்
நமது பணிகளில் புலப்படட்டும் !
நூற்றுக் கணக்கான
தோற்ற முறையில்
துதிக்கலாம் நாமெல்லாம்
மண்டி யிட்டு
மண்ணை முத்த மிட்டு !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 27, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எங்கே இசை பொங்கிடுமோ

கவலைப் படாதே இந்தக்
கானங்களைக் காத்திடுவாய் என்று !
வருத்தம் அடையாதே
கருவிகளில் ஒன்று முறிந்து போயின் !
இசைக் கானமே
இன்பமயம் என நாமெல்லாம்
மூழ்கிக் கிடக்கிறோம் !
யாழின் நாண்களை மீட்டிச்
சூழ்வெளியில்
புல்லாங் குழல் இசை வெள்ளம்
பொங்கி எழட்டும் !
தரணியின் மகர யாழ்க் கருவியே
எரிந்து போயினும்
இன்னும் இசை வெள்ளம் மீட்டும்
மறைந்தி ருக்கும்
இசைக் கருவிகள் !

+++++++++++

மெழுகு வர்த்தி ஒளி துடித்து
அணைந்து போனது !
பிழைத் திருப்பது சிறு
தீப்பொறி
நமது கரங்களில் !
பாடும் இந்த இனிய கலை
ஆடும் கடல் நுரை !
ஆழ்கடல் தளத்தில் எங்கோ
நளின நகர்ச்சிகள்
வெளிவரும் ஓர் முத்திலிருந்து !
பொங்கிக் குவியும் கவிதைப் பாக்கள்
செலவாளி செல்வம் போல்
கட்டுமரக் கட்டை நுனி
கரையிலே விரும்பி
விட்டு விட்டதைப் போல் !
அவை உறிஞ்சும் மெதுவாய்
ஆனால் வலுவாய்
வேர் மூலம் நமக்குத்
தெரியாத வாறு !
வார்த்தையை நிறுத்து இப்போது !
இதயத்தின் நடுவே
திறந்து வை ஜன்னலை !
ஆன்மீகச் சிந்தனை
பறக்கட்டும்
உள்ளே வந்து போய் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 19, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) வசந்த கால மயக்கம் கவிதை -13 இளவேனிற் காலம்

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஒரு வேத முனிக்கு (Mystic) உள்ளொளி உலகமே ஒரு கால நிலை அறிவிப்பிடம் ! அங்கே பிரபஞ்சம் அடங்கியுள்ளது, மொழிச் சின்னமாகப் பயன்படுவதும் அதுவே !

கவிஞானி ரூமி

******************

அல்லிக்குத் தலை வணங்கும்
மீண்டும் ஊதாப் பூ !
அவள் பாவாடையைக் கிழிக்கும்
மீண்டும் ரோஜாப் பூ !
பசுமை இனங்கள் பறந்து வரும்
பிற உலகி லிருந்து !
போதையில் கிடப்போன் தென்றலை
மோகித்தல் புதுமை
மூடத் தனம் !
மீண்டும்
மலை உச்சியின் மீது
அனிமோன்* பூவின்
இனிய மெய்ப்பாடுகள் தோன்றும் !
அயாசிந்த்* மல்லிகை யோடு
சம்பிர தாயம் பேசும் :
“சமாதானம் நெருங்கட்டும் உன்னை !
அடைவாய் நீயும் அமைதி !
என்னோடு நடப்பாய்
இந்தப் பசும்புல் வெளியில் !
மீண்டும் சூ•பிகள் காணப் படுவார்
எங்கெங்கு நோக்கினும் !

+++++++++++

மொட்டு நாணி உள்ளது
சட்டென
முகத்திரை நீக்குது காற்று
“என் தோழி” எனக் கருதி !
நதியில் நீர் போன்றும்
நீரில் தாமரை போன்றும்
தோழி தோன்று கிறாள் இங்கே
நீ விளிக்கும் போது
தளப் பூக்கள் கண்சிமிட்டும்
கொடிப் பூக்களை !
செடியிடம் சொல்லும் மொட்டு :
“நீ தான் எனது
சுமைதாங்கி !”
“இந்தக் குடில்கள் யாவும்
சொந்தம் உனக்கு !
உனை வரவேற் கிறேன்”
எனக் கூறிடும் செடி !
ஆரஞ்சை நோக்கி
“ஏன் முகஞ் சுழிப்பு ?”
என்று கேட்கும் ஆப்பிள் !
“காயப் படுத்த விழைவோர் என்
கவினைக் காணார் !
மீண்டும்
வந்தது வசந்தம் !
ஒவ்வொன் றுக்கும் உள்ளே
வசந்தத்தின் அடிப்படை
எழுகிறது !
நிலவு ஒன்று
நுழைந்து செல்லும்
நிழலி லிருந்து !
பல்வேறு முயற்சிகளைச்
சொல்லாது விட வேண்டும் !
நேரம் இருட்டி விட்டது
நேற்றிரவு
விடப் பட்ட உரைகளைத்
தொடர்வோம் நாளை !

++++++++++++

அனிமோன்* பூ – Anemone – Poppy like Flower
அயாசிந்த்* பூக்கள் -Hyacinth Flowers

****************
சூ•பி Sufi & Sufism : Sufism or Taṣawwuf is, according to its adherents, the inner, mystical dimension of Islam.
Classical Sufi scholars have defined Sufism as “a science whose objective is the reparation of the heart and turning it away from all else but God.” Alternatively, in the words of the renowned Sufi teacher Ahmad ibn Ajiba ” a science through which one can know how to travel into the presence of the Divine, purify one’s inner self from filth and beautify it with a variety of praiseworthy traits.”

*****************

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 12, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -4

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சோற்று மூட்டை

சோற்று மூட்டை காலியாகத்
தொங்கிக் கிடந்ததைச்
சூ•பி (Sufi*) ஒருவர் கண்டார்
சுவர் ஆணியில் !
சினம் மிகுந்து
தனது உடைகளைக் கிழித்து
அலறினார் :
பசித்தவருக்குப்
பசியாற்ற
உணவுப் பண்ட மில்லை !
எரிச்சல் மிகைப்படப் பிறரும்
அவருடன் சேர்ந்தார்
அக்கினிப் பசிக் காதலால்
அரவத் தோடு
முணு முணுத்து !

+++++++++++

“காலிப் பாத்திரம் அது” என்பார்
மெதுவாய்க்
கடந்து போவோர் !
சூ•பி சொல்வார் : விலகிச் செல் !
யாம் விரும்பாததை எல்லாம்
நீவீர் வேண்டுவீர் !
நேசர் அல்லர் நீவீர் யாவரும் !
நேசருக்கு
பாசமே உணவு !
உணவுப் பண்ட மல்ல !
நேசம் கொண்டோர் எவரும்
வாழ்வைக்
காதலிப்ப தில்லை !
காதலர் வாழ்வைப் பற்றி
கவனிப்ப தில்லை !
முதலின்றி வட்டி சேர்க்கும்
மனிதப்
பதர்கள் அவர் !

+++++++++++++++

இறக்கை இல்லா விடினும்
பறப்பார் அவர்
தரணி முழுதும் !
கரங்கள் இல்லா விடினும்
களத்தில்
போலோ பந்தைத் தூக்கிச்
செல்வார் !
சூ•பி மெய்த்துவம் மோந்து
சுவாசிப்பார் !
இன்று தூய ஒளிக் காட்சியைப்
பின்னிக்
கூடையாய் நெய்கிறார் !
கூடாரத்தைக்
கண்ட இடமெல்லாம் இடுகிறார்
காதலர்கள் !
களத்தைப் போல்
கூடாரம்
அனைத்தும் ஒரே நிறத்தில் !

++++++++++++

தாய்ப் பால் அருந்தும் சிசு
சுட்ட மாமிசத்தின்
சுவை அறியாது !
ஆன்மா வுக்கு
உணவில்லா வாசனையே
தனக்குணவு !
எகிப்திய மனிதனுக்கு
நைல் நதி
செந்நிறமாய்த் தெரிகிறது !
யூதனுக்கு நதி
தெளிந்தி ருப்பதாய்த்
தெரிகிறது !
ஒருவனுக்கு
பெரு வீதியாய்த் தெரிவது
பேரிட ராய்த் தெரியும்
வேறொரு வனுக்கு !

****************
Sufi & Sufism : Sufism or Ta?awwuf is, according to its adherents, the inner, mystical dimension of Islam.
Classical Sufi scholars have defined Sufism as “a science whose objective is the reparation of the heart and turning it away from all else but God.” Alternatively, in the words of the renowned Sufi teacher Ahmad ibn Ajiba ” a science through which one can know how to travel into the presence of the Divine, purify one’s inner self from filth and beautify it with a variety of praiseworthy traits.”

*****************

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 5, 2010)

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
சுயப் புராணம் வேண்டாம்
++++++++++++++++++++++++++++++

எனது வார்த்தை களைப்
பணம் கொடுத்து வாங்கு வோரை
ஒரு காலத்தில் எதிர்பார்த்து
விரும்பினேன் !
இப்போது என் படைப்பின்றி
என்னை மட்டும்
வாங்குவோர்
வர வேண்டுமென விழைகிறேன் !
கவர்ந்து சிந்திக்க வைக்கும்
கற்பனைக் காட்சிகள்
அநேகத்தை
உற்பத்தி செய்தேன்
அற்புத ஒளித் திலகமான
ஆப்ரகா மோடும்
அவரது பிதா அஸாரோடும்* !
அவ்விதம் செய்ததில்
அயர்ச்சி அடைந்தேன் நான் !

+++++++++++

பிறகு வடிவ மில்லா
ஒரு காட்சி
வருகை தந்தது !
விரைவில் அகன்றேன் !
அங்காடியைக்
கவனித்துக் கொள்ள
எவனை யாவது
வைத்துக் கொள் !
சுயப் பெருமையை
மயக்கிக் காட்டிடும்
வணிகத்தைப்
புறக்கணித்து வருகிறேன் !

+++++++++++++++

முடிவில் தெரியுது எனக்கு
பித்த மயக்கத்தின்
விடுவிப்பு ! மீண்டும்
தயங்காமல் ஏனோ வருகிறது
சுயப் பெருமை மயக்கம் !
“விட்டு வெளியேறு,” என்று
சட்டென அலறுவேன் !
முற்றும் சிதைகிறது அச்சிந்தை !
என் இனிய காதலி !
தேசக் கொடி தான்
நேசக் கையில் வசப்படக்
காற்று வேண்டும் !
ஆனால்
சுயக் கொடி வேண்டாம் !

***************
ஆஸார் *Azar – Abraham’s Father

*****************

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 28, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
இறைவன் உன்னோடு உள்ளான்
++++++++++++++++++++++++++++++

என் இனிய காதலி !
இந்த மர்மத்தை விளக்கும்
எனக்கோர் நிகழ்ச்சியைச் சொல்
இப்போது !
எப்படிச் சுதந்திர மாய் நாம்
இயங்கி வந்தோம் !
ஆயினும் நாம்
வலிந்து செயற் பட்டோம் !
முடக்கு வாதத்தில் ஒரு கரம்
நடுங்கிடும் !
ஆடிடும் மறு கரம்
அதனைத் தடுக்க முனையும்
தருணத்தில் !

+++++++++++

நரம்பு நடுக்கம்
இரண்டும்
இறைவனால் வந்திடும் !
ஆனால் உனக்குள்ளது
ஒன்றின் மேல் குற்ற உணர்வு !
ஆனால்
அடுத்த கரம் பற்றி நீ
விடுப்ப தென்ன ?
இவை ஞான வினாக்கள் :
ஆன்மா நெருங்கும் அவற்றை
வேறு முறையில் !
ஓமாரின் விஞ்ஞான நண்பன்
பூல்-ஹாக்கம்*
எளிய பிரச்சனைகள் தீர்வுகளில்
இருப்பார் நிபுணராய் !
ஆனால் ஓமாரை
ஞான ஒளிச் சிந்தனையில்
வியந்து
காண முடிவதில்லை விஞ்ஞானி !
புத்தகத் துக்கு மீள்கிறேன்
இப்போது.
இறைவன் உன்னோடு உள்ளான்
எங்கு நீ இருப்பினும் !
ஆனாலும்
நான் எப்போ தவனை விட்டு
நழுவிச் சென்றேன் ?

++++++++++++

அறிவின்மை என்பது
இறைவன் சிறைக் கோட்டை !
அறிவுப் புலமை
இறைவனின் மாளிகை ! நாம்
உறங்கிக் கிடப்பது
இறைவன் மெய்மறந்த நிலையில் !
விழித்தெழுவது நாம்
இறைவன் திறந்த கரங்களில் ! நாம்
அழுது கொண்டிருப்பது
இறைவன்
மழை பொழியும் போது !
புன்னகை செய்வது நம் இறைவன்
மின்னல் வெடிகளில் !
நமக்குள்
சண்டை யிடுவதும் நாம்
சமாதானம் செய்வதும்
கடவுளின் உள்ளே தான்
நடக்கின்றன !

+++++++++++++++

அப்படி யாயின்
இப்படிப் பல்வேறு சிக்கல்கள்
பின்னிய உலகில்
நாமெல்லாம் யார் சொல்வீர் ?
ஆதி காலத்தில்
மெய்ப்பாடு நேர்மைக் கோடாகத்
தோன்றியவர்
அல்லாஹ் இறைவன் !
நாமெல்லாம் வெறும்
காலிப் பாத்திரம் !
சூனியம் !

*****************
பூல்-ஹாக்கம்* (Scientist Bu’l-Hakam)

*****************

(தொடரும்)

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 21, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -1 கடவுளின் படைப்பு வேலை

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
கடவுளின் படைப்பு வேலை
++++++++++++++++++++++++++++++

மனிதன் செய்யும் வினைகட்கும்
கடவுள் புரியும்
இயக்கங் களுக்கும்
இடையே உள்ள வேற்பாடுகளை
சிந்தித்துப் பார் !
அடிக்கடி நாம் கேட்கிறோம் :
“அப்படி ஏன் செய்தாய் ?”
அல்லது
“இப்படி ஏன் நடந்தாய்”
என்று !
நாம் செய்ய முனைந்தவை
நாமின்று செய்து
முடித்தவை எல்லாம்
கடவுளின்
படைப்பு வேலை கள்தான் !

+++++++++++

பார் நீ பின்னோக்கி
நம் வாழ்வில்
நேர்ந்த நிகழ்வுகளை எல்லாம்
ஆராய்வோம் !
வேறு முறை நோக்கொன்றும்
உள்ளது
ஒரே காட்சி முறையில்
முன்னும் பின்னும் ஆராய்வது;
அவற்றைக் காரண மோடு
புரிந்து கொள்வது
அரிது !
இறைவன் ஒருவனே அதனை
அறிவான்.

+++++++++

கடவுளுக்குப் புரியும் அது !
விழுவதைத் தூண்டுவதாய்ச் சொல்லி
நழுவிச் செல்லும் சாத்தான் !
ஆயினும்
ஆதாம் சொல்வான் கடவுளிடம்
“யாமிதை விரும்பிச் செய்தது
எமக்காகத் தான்”
இந்தப் பாப ஒப்புதலுக்குப்
பிறகு அவனை
இறைவன் கேட்டார் :
இவை அனைத்தும் எனது
கட்டுப் பாட்டுக்கு
உட்பட்டதால்
ஏனதைக் காரணம் காட்டி
மானத்தைக்
காத்திட வில்லை ?

++++++++++++

“அச்சமே காரணம்” என்பான்
ஆதாம் !
மரியாதை யோடு வாழ
விரும்பினேன் !
பிறருக்கு
மதிப்பளித்து வாழ்பவன்
தனது
மதிப்பைப் பெறுவான் !
இன்பச் சூழ்நிலை அமைப்பவன்
இனிய தின்பண்டம்
பெறுவான் !
நல்வழி ஆடவர்
நன்னெறி மாதரைக் கவர்ந்திட
முனைவார் !
உன் நண்பனை மதித்திடு !
கடுமையாய் நீ நடத்தினால்
நடப்ப தென்ன பார் ?

(தொடரும்)
***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 14, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



++++++++++++++++++++++++++++++
பொறுமையின் பெருமை
++++++++++++++++++++++++++++++

பிற வழிகள் மூலமாய் எழும்
உடலின் இச்சைகள்
அறிவிக்காது
நெருக்கிடும் தொடர்புகள் !
பொறுமை யாய்
இருக்க வேண்டும் அவற்றுடன் !
உறவுகள் உதவலாம்;
எனெனில்
அமைதியும் அன்பும் பற்றிடப்
பொறுமை கொள்ளும்
திறமையே நீடிக்கும்.

+++++++++++

ரோஜா இதழ்கள் முள்ளுக்கு
அருகிலே
இருப்ப தால்தான் அதன்
நறு மணத்தைப்
பொறுமை
காத்து நிற்கிறது !
மூன்றாண்டு கழிந்த பின்னும்
ஆண் குட்டிக்குப்
பால் அமுது அளிக்கும்
தாய் ஒட்ட கத்தின்
பொறுமை !
தேவ தூதர் நமக்குப்
போதிப்பதும்
பொறுமை ஒன்றுதான் !

+++++++++

பொறுமை என்பது
கவன மாக
வெகு நளின மாகக்
நெசவு செய்யப் பட்டுள்ளது
அணியும் ஆடையில் !
புனித நட்பும், மனிதப் பற்றும்
பொறுமை யுள்ளவை !
உறுதி அளிக்கும்
பந்தப் பிணைப் புக்கு !
தனிமை உணர்ச்சியும்
தாழ்மை எண்ணமும்
பொறுமை இன்மையைப்
புலப்படுத்தும் !

++++++++++++

கடவுளை நம்புவோர் சூழ்ந்திட
உடனி ருப்பாய்
தேனோடு கலக்கும்
பால் போல !
போவதும் வருவதும்
போல,
ஏறியும் படிவதும் போல
மாறுபவை
எனது விருப் புக்கு
மாறானவை !
தேவ தூதரைப் படைத்த
தேசத்தில் வாழ்வீர் !
இன்றேல்
பாலை வனப் பயணத்தில்
பாதை ஓரத்தில்
தனித்து எரிந்தணையும்
தீ போல்
நீ இருப்பாய் !

*****************

(தொடரும்)
***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 7, 2010)

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று – கவிதை -11 – பாகம் -2

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எரிந்தழியும் மெழுகுவர்த்தி

என்னருமை ஆத்மாவே ! இந்தப்
பரந்த வெளிக் குள்ளே
உனக்கு
உறவில்லை என்றால்
பின் ஏன் அதில் வலை வீசி
எதையோ
பிடிக்க வைத்துக்
காத்திருக் கிறாய் ?
கண்ணுக்குப் புலப்படாத இந்தக்
கடலானது
களஞ்சியமாய்க் கொடுத்துள்ளது !
ஆயினும்
அதை மரணம் என்றும்
ஊழியம்
வாழ்வு நீடிக்கும் என்றும்
சொல்வாய் !

+++++++++++

கடவுள் அனுமதித் துள்ளர்
சிற்சில
மர்மத் திருப்பங்கள்
விளைவதை !
அதனால் தெரியுது உனக்கு
நீ விரும்பும்
தேள் குழியும்
சூழ்ந்துள்ள எழில் வெளியில்
பாம்புப் புற்றுக்களும் !
மரண அச்சமும்
வரண்ட வாழ்க்கையும்
எத்தகை வியப்பெனத் தெரியும்
உனக்கு !
பேராசை என்பது
எத்தகைய
மன முறிவு கொண்டு
ஒட்டிக் கொள்ளும்
இணைப்புகள் !

+++++++++

தாய் தந்தையர் உனது
இரத்த இணைப்புகள்
அரவணைப்பு விருப்புக்கு
உகந்தவர்
தந்தை தாய் சொற்படி நடப்பதைத்
தவிர்ப்பாய் !
பாதுகாப்பது அவராயினும்
உன்னைச்
சிறைப் படுத்தவர் !
தீவிரப் பகை ஆவார்
உனக்கு !
அச்சம் உண்டாக் குவர்
சூனியமாய்ப் போனது உனது
துச்ச வாழ்வு !
ஒரு நாள் நீ
உவப்படைவாய் கண்ணீர் சிந்தி
பெற்றோரைப்
புரிந்து கொள்ளாத
பிழையை எண்ணி !

*****************

உடல் உனது உள்ளத்தின்
ஆன்மாவை வளர்க்கும்
உணவூட்டி !
ஆயினும்
பிறகு தவறான
அறிவுரை போதிக்கும் !
உருவம் பின்பு
இரும்புச் சங்கிலி கோர்த்த
கவசமாகும்
அமைதிக் காலத்தில் !
கோடையில் கூடும் வெப்பம் !
குளிர் காலத்தில்
கூதல் மிகையாகும் !

(தொடரும்)
***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 31, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



எரிந்தழியும் மெழுகுவர்த்தி

எரிந்த ழியவே
உருவாக்கப் பட்டிருப்பது
ஒரு மெழுகு வர்த்தி !
அந்த அழிவுக் கோலச்
சந்தர்ப் பத்தில்
நிழல்
விழுவ தில்லை !
சரண் புகும் மெழுகு வர்த்தி
எரி நாக்கைத் தவிர
வேறு ஒன்றில்லை !
நல்லதும், தீயதும் எதுவென
அறியாமல்
தானே மாய்ந்திடும்
தண்டு மெழுகு வர்த்தியைக்
கண்ணால் பார் !
பெருமையும், சிறுமையும்
ஒருங்கே தேடிச் செல்வோம் !
முன்பே இதைச்
சொல்லி யிருக்கிறேன் :
கைத் தொழில் பயில் வதற்கு
இல்லாத ஒன்றைத்
தேடுபவன்
கலைத் தச்சன்!

+++++++++++

கூரை இiடிந்து விழுந்த
பாழும்
குழியைத் தேடிப் போவான்
கட்டடக் கலைஞன் !
காலிப் பானையைத் தேடி
கையில் எடுப்பான்
நீர் பரிமாறி வருபவன் !
ஓர் கதவு மில்லா
வீடு தேடிப் போவான்
வேலை வேண்டும் தச்சன் ஒருவன் !
வேலைக் காரர் எல்லாம்
காலி யாக இருப்ப வற்றைப்
பூர்த்தி செய்ய
வேர்த்து விரைவார் !
ஆதலால் இல்லாமை ஒன்றே
ஊதிய எதிர்பார்ப்பு
நம்பிக்கை !
தவிர்த்திட நினைத் திடாய்
அவற்றை எல்லாம் !
நீவீர் வேண்டுவது
நிறை வேறும் அவற்றால் !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 24, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
காதல் மௌனம்
++++++++++++++++++++++++++++++

மலர்ந்த இப்புதிய காதலுக்குள்
மடிந்து விடு ! ஆயினும்
உனது பாதை
உருவாவது மறு பக்கத்தில் !
வானமாக
வடிவு எடுப்பாய் !
சிறைக் கோட்டை மதிலை
இடிக்க
கோடரி எடுத்துப் போ !
தப்பிச் செல் !
நிறத்துக்குள் உருமாறி
திடீரெனத் தோன்றியவன் போல்
வெடித்துச் செல் !
இப்போதே செய்து முடி !
அடர்ந்த புகை மூட்டம்
உனைப் போர்த்தி யுள்ளது.
நழுவிச் செல் அப்பகுதியை விட்டு !
மரணம் அடைவாய்
அமைதி யாக !
மௌனமே மெய்ப்பிக்கும்
மரணத்தை !
முந்தைய உந்தன் பிறப்பு
மூர்க்கத் தனமாய் மௌனத்தில்
முளைத்த
ஓர் ஓட்டப் பந்தயம் !
வாய் பேசாத முழுநிலவு
இப்போது
வானில் எழுகிறது !

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 18, 2010)

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



++++++++++++++++++++++++++++++
காதல் உலகு ஒரு சூனியம்
++++++++++++++++++++++++++++++

நமது உயிர் வாழ்வை
இருட்டடிக்கும்
ஒரு சூனியத்தைப் போற்று !
நமது காதலால்
உருவான
இந்தக் குடியிருப்பிடம்
தோன்றியது
சூனியத் துக்கு !
எப்படியோ வெறுமை
புகுந்திடும்
இவ்வுயிர் வாழ்வு மங்கிப் போய் !
மீண்டும் மீண்டும்
போற்று அந்த விளைவை !

+++++++++++++

வெகு காலங் களாய்
வெறுமையில் கடத்தினேன்
எனது குடிவாசத்தை !
பிறகு ஒரே பாய்ச்சலில்
கரத்தின் ஒரே சுழற்சியில்
அப்பணி முடிந்தது !
நான் யார் என்பது
நழுவிப் போனது !
முன்னிருப்பது
கண்ணுக்குத் தெரியாது !
ஆபத்தைத் தரும் அச்சம்
அகன்றது !
எனது நம்பிக்கையும்
மலைமேல் ஏறும் தேவையும்
விடுதலை பெற்றன !

++++++++++++

இங்குள்ள குன்று இப்போது
வெறுமை நோக்கி
வெளியே வீசப் பட்ட
ஒரு துரும்பு இழையின்
சிறு துணுக்கு !
பொருளற்றுப் போயின
நான் கூறும்
இந்த வார்த்தைகள் !
குடிவாசம், சூனியம், சிறு துரும்பு
குன்று, வாய்ச் சொற்கள்
கூறுகின்ற
அர்த்தம் யாவும்
பலகணி வழியே கூரையில்
சரிந்து
நழுவிச் செல்லும் !

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 10, 2010)

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++
போதுமா சொற்கள் ?
++++++++++++++++++++++++++++++

அமைதிப் புறாவை விட நீ
மௌனமாய் இரு
அந்த மரத்தி லிருந்து
சிறகும் இறக்கைகளும் உன்மேல்
துளிர்க்கும் போது !
புறாச் கூச்ச லுக்கும்
திறக்காதே உனது வாயை !
குளத்தில் பாயும் தவளையைப்
கொத்திப் பற்ற முடியாது
பாம்பு !
தவளை மீண்டும் கரைமேல்
தாவிக் கத்தும் !
துரத்திடும் அதைப் பாம்பு
மறுபடியும் !

+++++++++++++

கீச்சுக் குரல் கொடுக்கத்
தவளையும்
கற்றுக் கொண்டால்
புரிந்து கொள்ளும் பாம்பு
தவளையின்
அடித்தளக் குரலென்று !
தவளை
முழு மௌனத்தில் இருந்தால்
மீண்டும்
தூங்கச் செல்லும்
பாம்பு !
தவளைக்குக் கிடைக்கும் பார்லித்
தானியம் !

++++++++++++

ஆங்கே மூச்சு விட்டு
ஆத்மா வசிக்கும்
அமைதியாய் !
பார்லி தானியத்தை
நிலத்தில்
விளைத்தால் முளைக்கும் !
மோதுமா இந்தச் சொற்கள் ?
அல்லது
பிழிந்து சாரெடுக்க வேண்டுமா
இதற்கு மேலும் ?
நான் யாரெனச் சொல்
நண்பனே ?

(தொடரும்)

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++
ஓளியும், நிழலும்
++++++++++++++++++++++++++++++

உலகத்தின் ஒரு பகுதி
உலகை விட்டு
எப்படி
விலகிச் செல்லும் ?
நீரை விட்டு
நீர்மை எவ்விதம்
நீங்கும் ?
தீயை மென்மேலும் ஏவி
தீயை அணைக்க
முயலாதே !
காயத்தைக் கழுவக்
குருதிச்
சாயத்தை ஊற்றாதே !

+++++++++++++

எத்தனை விரைவாய் நீ
ஓடிச் சென்றாலும்
அத்தனை வேகத்தில்
உன்னைத் தொடரும்
உன் நிழலும் !
நிழல் முன்னே செல்லும்
சில சமயம் !
உச்சி வேளைச்
சூரியன்
நிழல் வடிவைச்
சிறிய தாக்கி விடும்
நிச்சயம் !

++++++++++++

உனக்குப் பணி புரியும்
அந்த நிழல் !
உன்னைக் காயப் படுத்தும்
ஒன்று
உனக்கு ஆசிகள் வழங்கிக்
கண்காணிக்கும் !
இருளே உனக்கு
எரியும் மெழுகு வர்த்தி !
வரையறை
வட்டங் களே நீ
தீர்க்கப் போகும்
மர்ம வினாக் களுக்கு
விடைதேடும்
கர்மக் கோடுகள் !

++++++++++

விளக்கம் தர முடியும்
இதற்கு !
ஆயினும் அது
உன் இதயத்தின்
கண்ணாடிக் கவசத்தை
உடைத்து விடும் !
பிறகு அதைப்
பிணைப்பது சிரமம் !
நிழலும் தேவை
உனக்கு !
ஒளியும் வேண்டும்
உனக்கு !

(தொடரும்)

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 20, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -7

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++
தாகமுள்ள ஒரு மீன்
++++++++++++++++++++++++++++++

எனக்குக் களைப்பு வருவதில்லை
உனது அருகா மையில் !
வெறுப்படை யாதே நீயும் என்மேல்
பரிவு மேற்கொண்டு !
தண்ணீர்க் கூஜா
நீர்க் குடங்கள் போன்ற
தாக முள்ள
சாதன மெல்லாம்
ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்
ஒருநாள்
என்னை விட்டு !
மோகம் கொண்டதில் என்றும்
தாகம் தீராத
தாகமுள்ள மீன் ஒன்று
வாசம் செய்யும் என்
உடலுக் குள்ளே !
கடலுக்குப் போக
காட்டுவாய் எனக்குப் பாதை !
குறை குடத்தையும்
சிறு கிண்ணத் தையும்
உடைத்து விடு !
இந்தக்
கனவு வாழ்வையும்
எனது மன உலைச் சலையும்
தவிர்ப்பாய் !

+++++++++++

நேற்றிரவு
முற்றத்தில் பொங்கி எழுந்த
கடல் அலைகளில்
மூழ்கட்டும்
இதயத்துள் மறைந்துள்ள
எனது இல்லம் !
நிலவு கிணற்றில் குதித்தது போல்
விழுந்தார் ஜோஸப் !
எதிர்பார்த்த
அறுவடை விளைச்சலை
அடித்துச் சென்றது வெள்ளம் !
அதற்குக் கவலை இல்லை !
என் புதைப்புக் கல்லின் மேல்
எரியுது நெருப்பு !
உரிய மேன்மை வேண்டேன்,
மரியாதை வேண்டேன்.
அறிவும் வேண்டேன் !
கான இசை வேண்டும் !
காலைப் புலர்ச்சி வேண்டும் !
நம்மிருவர்
கன்னங் களும் உரசிக் கொண்ட
கணப்பு வேண்டும்
எனக்கு !

+++++++++++

அணிவகுத் திங்கு நிற்கிறார்
அவல மோடு
இராணுவ வீரர்கள் !
ஏக வில்லை நான்
அவரோடு
இணைந்து கொண்டு !
இப்படித் தான் இருக்கும்
என் கவிதை முடியும் போது !
நீடித்த மௌனம்
மூடிக் கொள்ளும்
என்னை !
வியந்து போவேன் நான்
எழுத்து வரிகளைப்
பயன் படுத்தியது
ஏன் என்று ?

(தொடரும்)

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 20, 2010)

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நாணல் புல்லாங் குழல் கீதம்

அந்தரங்க உறவுக்கு இச்சையும்
அந்தரங்க உறவும்
ஒரே கீதத்தில் எழும் !
அவல முற்ற
சரண் அடைவும்
அரிய காதலும் உண்டாகும்
ஒருங்கே ! அதை
இரகசிய மாய்க் கேட்கும்
ஒருவன்
அறிவில் லாதவன் !
ஒரு நாக்குக்கு
வாடிக்கை யாய்க் கிடைப்பது
ஒரு செவிதான் !
கரும்புப் புல்லாங் குழலுக்கு
வருவதும்
அவ்விதப் பலனே !
காரணம்
சாரின் சுத்திகரிப்புக் களத்தில்
சர்க்கரை கிடைக்கும் !
புல்லாங் குழலில் எழும்
சங்கீதம்
எல்லோ ருக்கும் !

+++++++++++

நாட்கள் கடந்து செல்லட்டும்
நாம் தவிர்க்க இயலாத்
துயரின்றி !
புல்லாங் குழல் இசையின்
உல்லாசப் பாடலில்
ஊறிக் கிடப்பாய் !
ஒவ்வொரு தாகமும்
நிறை வேற்றப் படும் !
பரந்த நளினக் கடலில்
விரைந்து வரும்
விந்தை மீன்களுக்கு
நீர் மீதிருக்கும் நேசம்
தீராது !
கடலருகில் வாழ்வரோ அங்கே
உடல் வளர்க்க
முடியாது போனால் ?
புல்லிலைப்
புல்லாங் குழலிசை கேட்க
உல்லாசம்
இல்லாது போனால்
உளறுவதை நிறுத்தி விட்டு
விலகிச் செல் நீ
விடை பெற்று !

+++++++++++

(தொடரும்)

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 13, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -1

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



நாணல் புல்லாங் குழல் கீதம்

பிரிவைப் பற்றி

புல்லின் இலைகள் சொல்லும்

புனைகதை கேளீர் !

“மண்தரை மேலிருந்து என்னைத்

துண்டித்த வேளை முதல்

இந்த அழுகுரல் எழுப்பினேன் !

நேசிப் பவரை விட்டுப்

பிரிவுத் துயர் உற்றோர்

புரிந்து கொள்வர் நான்

உரைப்பதை !

தம்மிடத்தி லிருந்து கட்டாயம்

கடத்தப் படுவோர்

தாகம் கொள்வார் மீண்டும்

தடம் வைக்க !

+++++++++++

எந்தக் கூட்டத்திலும் நான் போய்ப்

பங்கெடுக் கிறேன்

பந்த பாசமாய்ப் பழகிப்

பரவசமாய் ஈடுபட்டு !

தோழனாய் உள்ளேன் நான்

ஒவ்வொரு வனுக்கும் !

ஆயினும்

அவரின் குறிப்பு இரகசியம்

அறிபவர் மிகச் சிலரே !

செவிகள் இல்லை அதற்கு.

உடம்பி லிருந்து

உந்திச் செல்லும் ஆன்மா !

உடலுக்கு

ஒளியேற்றி வைக்கும் ஆன்மா !

காணப் படாது

கலந்தி ருக்கும் ஆன்மா !

ஆத்மாவைக் காணும்

ஆற்றல்

அற்ப விழிகட்கு இல்லை !

+++++++++++

புல்லிலைப் புல்லாங் குழலிசை

வெறும் காற்றில்லை.

நெருப்பு அது !

காலி யாக இருக்கட்டும் !

காதல் தீயானது

புல்லிலைக்

கீதத்தில் பின்னித்

தூண்டப் படுவதைக் கேள் !

குழப்பமே ஒயின்

குடி போதையில் தள்ளும் !

புல்லிலைப்

புல்லாங் குழல் ஒரு தோழன்

ஆடைத் துணி

கிழிந்து போய் எறிவதை

விரும்பு வோர்க்கு !

நாணல் இலைகள் புண்பட்டுப்

பாதம் பணியும்

அடிமைகள் போல் !

அந்தரங்க உறவுக்கு இச்சையும்

அந்தரங்க உறவும்

ஒரே கீதத்தில் எழும் !

(தொடரும்)

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 6, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -6

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



++++++++++++++++++++++++++++++++++
நாம் எங்கே இருக்கிறோம் ?
++++++++++++++++++++++++++++++++++

அங்கே புயல் அடித்துத் தூக்கிச்
சிதறிவிட உதவுகிறது
அதே வேளையில்
செலுத்துகிறது பாதை நோக்கி
ஒரு கப்பலை !
உண்மையாக உள்ளது கடவுள்
என்று எவரும்
உரைப்பர் அங்கே !
எங்கே ?
எதற்கு அப்பால் உள்ளது ?

+++++++++++

இங்கும் அங்குமாய் நுழைந்து
நெய்து செல்கிறது
ஒளி வெட்டித்
தையல் பொறிக் கருவி !
எங்கிருக் கிறோம் நாம்
கிழக்கிலா ? இல்லை மேற்கிலா ?
எங்கிருக் கிறேன் என்று
விண்ணில்
வினாவிக் கொண்டு மிதக்கும்
பரிதி கேட்பது போல்
தெரிகிறது !

+++++++++++

நண்பன் நுழைகிறான்
என் உடலுக் குள்ளே
நடு மையம் தேடிக் கொண்டு !
காண முடியாமல் தனது
கத்தியை உருவி
குத்திக் கிழிப்பான்
எங்காவது !
அங்கே ஓர் பளுவில்லா
வித்துள்ளது !
நிரப்பிக் கொள் உன் உடலுக்குள்
நீ அதனை,
இல்லையேல்
செத்து விடும் வித்து !

++++++++++++++

இந்த நீர்ச்சுழி விசையில் நான்
பிடி பட்டேன்
உந்தன் நெளிந்த கூந்தல் !
ஊமையாய் இருப்போன்
நியாயமாய் நடப்போன்
பித்தனாய் எண்ணப் படுவான் !
நானென்ன செய்கிறேன் என்று
எனக்குத் தெரிவதாய்
உனக்குப் புரிகிறதா ?
முழு மூச்சு அல்லது
அரை மூச்சு இழுக்க
நானெனக்குச் சொந்தமா ?
பேனா அறியுமா இனிமேல்
தானென்ன எழுதும் என்று ?
அல்லது
ஓடும் கோளம் ஒன்று
அடுத்துப்
போகு மிடம் யூகிக்குமா ?

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 30, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -5

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++++++
நாம் எங்கே இருக்கிறோம் ?
++++++++++++++++++++++++++++++++++

விண்ணில் பறக்கிறது
கண்ணுக்குப் புலப் படாத
பறவை ஒன்று !
ஆயினும்
விரைந்து அந்தப் பறவை
விட்டுச் செல்கிறது
ஒரு நிழலை !
மனித உடல் என்ப தென்ன ?
உன் காதலில் உதித்த
ஒரு நிழலின்
மற்றொர் நிழல் அது !
அந்த நேசத்தில்
முழுப் பிரபஞ்சம் எப்படியோ
அடங்கி யுள்ளது !

+++++++++++

ஆழ்ந்து உறங்கு கிறான்
மனிதன் !
ஆதவன் போல்
விளக்கு ஒன்று அவனுள்ளே
ஒளிச்சுடர் வீசுகிறது
தாவணியின் கரையில்
உன்னத தோரணம்
தைத்துள் ளது போல !
போர்வை அங்கிக்குள்
புரள்கிறான்
மெருகிட்ட தோற்ற முகப்பெல்லாம்
மெய்யில்லை !
சிவப்புத் தூய கல்லொன்று
சுவைத்தால் இனிக்கிறது !

+++++++++++

ஓரழகிய பெண்ணின் வாயை
முத்தமிடு கிறாய் நீ !
அச்சத்தின் பூட்டைத்
திறக்கிறது
ஒரு சாவி !
கூறிய சொல் ஒன்று
கூர்மை யாய்த் தீட்டிக் கொள்ளும் !
குக்கூ வென கூவி
எங்கே என்று
தாய்ப் புறா ஒன்று
தன் கூட்டைத் தேடிச் செல்லும் !
தங்கும் இருப்பி டத்தில் ஒரு
சிங்கமும் உறங்கிறது !
ஆணும் பெண்ணும்
அங்குதான் போய் அழுகிறார் !
நோயாளி யும் அங்கு போவான்
நோய் குணமாகும்
என்னும்
நன்னம் பிக்கை யோடு !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 22, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -4

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++

என் காதற் பித்தை
ஏற்றுக் கொள் வாயா ?
ஆமென்று சொல் !
எந்த மொழியில் கூறுவாய்
அரபியிலா
அல்லது பாரசீ கத்திலா ?
திரும்பவும்
கட்ட வேண்டும் என்னை !
கொண்டுவா உன்
நெளிந்த கூந்தலின்
வளைந்த நாண்களை !
இப்போது நினைவுக்கு
வருகிறது
எனது கதை !

+++++++++++

உண்மை யான மானிடன்
உற்று நோக்குவான்
தன் பழைய செருப்பையும்
ஆட்டுத் தோல் உடுப்பையும் !
ஒவ்வொரு நாளும்
வீட்டுப் பரணில்
ஏறுகிறான்
வேலைப் பூட்ஸைக் காண,
கிழிசல் கோட்டை
நோக்க !
அறிந்த ஞானம் இது :
பிறந்த தனது பூர்வீக
மண்ணை
மறவா திருப்பது !
குடி போதையில் கிடந்து
நான் என்னும் அகந்தை,
தான்தோன்றித் தனத்தை அறவே
தவிர்ப்பது !

+++++++++++

பழைய காலணி களையும்
கிழிந்த கோட்டையும்
திரும்பவும் தேடுவது
பாராட்டுக் குரியது !
தனித்துவ அதிபன் இயங்குவது
வெற்றுச் சூனியத்தில் !
பணி புரியப்
பட்டறை இல்லை !
படைத்திட மூலப்
பண்டங்கள் கிடையா !
ஒன்றும் எழுதப் படாத
ஒரு காகிதத் தாளாய்
இருக்க முயல்வாய் !
எதுவும் முளைக்காத
ஒரு தரிசல் துண்டு நிலமாய்
இருப்பாய் !
அங்கே நீ விதையோ
இல்லை எதையோ
தனித்துவ அதிபன் நமக்கு
அளித்த தையோ
ஏதாவது ஒன்றை
விளைச்சல் செய்யலாம்

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 16, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++

நண்பனே !
உன் கதையைச் சொல்ல
உரோம இழையாய்ச்
சுருங்கினேன் !
நீ என் கதையைச் சொல்வாயா ?
நெய்துள்ளேன்
நிரம்பக் காதற் கதைகளை !
புனைகதைப்
படைப்பாளி யென்று நான்
உணர்கிறேன் இப்போது !
சொல்
உரைப்பது நீ தானே
உண்மை அது !
நானோர் சினாய் மலை !
நீ ஏறி வரும்
மோஸஸ் !

++++++++++

இக்கவிதை உன் வாய்மொழியின்
எதிரொலிப்பு ! வெறும்
தரைநிலம் பேச முடியாது
எதுவும் அறியாது !
உரைப்பினும்
வரையறைக் குட்படும் !
ஆன்மீக வானியல் கணிக்கும்
ஓர் எந்திரம்
இந்த மனித உடல் !
உயரம் அளக்கும் கருவியை
ஊடுருவி நோக்கிக்
கடலாக ஆகிவிடு !

++++++++++++

சிந்தையைத் திருப்பும்
இந்த மொழிகள் எதற்கு ?
என் தவறில்லை
இப்படி நான் உளறு வதற்கு
இதைச் செய்தது நீ !
என் காதற் பித்தை
ஏற்றுக் கொள் வாயா ?
ஆமென்று சொல் !
எந்த மொழியில் கூறுவாய்
அரபியிலா
அல்லது பாரசீ கத்திலா ?
திரும்பவும்
கட்டப்பட வேண்டும் என்
கரங்கள் !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 9, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -2

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++

“உன்னோடு எப்போதும் இருக்கிறேன்”
என்றால், இறைவனை நீ
சிந்திக்கும் போது
உந்தன் விழிகளின் ஒளியில் இருப்பான் !
உன்னைக் காட்டிலும் அவன்
உன் அருகிலே ஒட்டி இருப்பான் !
உன் மூளையில் இருப்பான் !
உனக்கு நேரும்
வினைகளில் இருப்பான் !
இறைவனைத் தேடி நீ வெளியே
ஏகிட வேண்டாம் !

++++++++++

உருகிடும் பனியாக மாறிடு !
நீயாக நீ இருந்திட
நீயே உனைக் குளிப்பாட்டிக் கொள் !
வெள்ளைப் பூ ஒன்று
விரிந்திடும் மௌன மாக !
உன் நாக்கே அப்பூவா கட்டும் !
வானைப் போல் அகண்ட ஓர்
வாய் வேண்டும் எனக்கு
மெய் மனிதனின்
இயற்கையை எடுத்துச் சொல்லவும்
பேராசை கொண்ட
வார்த்தையைக் கூறவும் !

++++++++++++

எனக்குள் இருந்து
எளிதாய் நொருங்கும் இச்சிமிழ்
உடைந்திடும் அடிக்கடி !
நான் அதனால் பித்தனாவதில்
வியப்பில்லை !
ஒவ்வொரு மாதமும் நிலவு போல்
ஒளிந்து போவேன்
மூன்று நாட்கள் !
உன்னைக் காதலிக்கும் ஒருவனும்
காணாமல் இருப்பது
இந்த நாட்களில் தான் !

++++++++++++++++

நான் சொல்லும் கதையைப்
பின்னிடும் நூலை
நான் இழந்து விட்டேன் !
எனது யானை அலைந்து திரியும்
இந்தியக் கனவுகளில்
மறுபடியும் !
வசனக் கவிதை அமைப்புச்
சிதைந்து போனது
பதிலுக்கு எனது உடலும்
பாதிக்கப் பட்டது !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 2, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -1

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உதவ முடியா நெருக்கடிகள்

கடந்த வேளை நான் மட்டும்
இருந்தேன் எனது
உடலென்னும் படகில் !
விளக்கில்லை !
கால் வைக்க நிலமில்லை
எப்புறமும் !
அடர்ந்த மேகங்கள் !
நீர் மேலிருக்க முயல்கிறேன்
நீர்க்கடியில் ஆயினும்
ஏற்கனவே
வாழ்ந்து கொண்டு வருகிறேன்
ஆழியின்
வேலிக்குள்ளே !

+++++++++++++++

பரிதியின் அத்தமனம்
சில வேளை
பரிதி உதிப்பதாய் நமக்குத்
தெரிவ தில்லையா ?
வஞ்சக மற்ற காதல் வாழ்வு
எப்படி
இருக்கு மெனத் தெரியுமா ?
அழுகிறாய் நீ !
எரிந்து போவதாய்ப்
புலம்பு கிறாய் !
சிந்திப் பாயா நீ
எவராவது
புகை மூட்டத்தில்
வெளிறிப்
போகார் என்று ?

+++++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++

முழுச் சுய உணர்வோடு
எந்தக் குறிக்கோளும்
இல்லாது
என்னைக் காண வா !
அப்படி
ஒருவன் உள்ளானா என்று
நான் கேட்கிறேன் !
நிலவு !
முழு நிலவே உன்
வீட்டுக்குள் ஒளிவீசும் !
தெரு வழியே
ஓடித் திரிகிறோம்
நானும் என் தோழரும் !
நானிங் குள்ளேன் என்றோர் குரல்
வீட்டி லிருந்து கேட்கிறது !
வானைப் பார்க்கிறோம் காதில்
கேட்காமல் !

++++++++++

என் செல்லக் குயில்
பெருமூச்சு விடும் தோட்டத்தில்
குடி போதையில்
மயங்குவதைப் போல் !
மரங் கொத்தி
எங்கே எங்கே யென்று
அழுது
முணுமுணுக்கும் !
அப்போது நள்ளிரவு
பக்கத்து வீட்டார் யாவரும்
பதறி எழுந்து
தெருவுக்கு வந்தார் சிந்தித்து :
“மாயத் திருடன் மறுபடி
வருகிறான் !”
அவனைக் காண்பார் இல்லை !
மெய்க் கள்வனும்
கூக்குர லிட்டு
தாக்க வருவான் அங்கு !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 23, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உதவ முடியா நெருக்கடிகள்

++++++++++

நீ விரும்பும் விசித்திர
நிகழ்ச்சிகளின் அறிகுறிகள் இவை :
இரவு முழுவதும் அழுது
உதயத்தின் போது
எழுந்து வேண்டுவாய் :
பகலுக்குத்
தேவை யானதை நீ
கேளாத போது
இருள் கவ்விக் கொள்கிறது !
உன் கழுத்து குச்சிபோல்
உள்ளது !
உனக்குச் சொந்த மான
உறக்கம், உடல் நலம்,
உன் சிந்தனை அனைத்தையும்
பிறர்க்குத் தானம் செய்யும்
ஒரு தியாகி நீ !
நெருப்பின் நடுவே நீ அமர்ந்து
நெளிந்த
மண்டைக் கவசம் அணிந்த
படையாளியின்
உடை வாளையும் தொடப் போவாய்
அடிக்கடி !
உதவ முடியா நெருக்கடிகள்
ஒருவருக்கு
நடமுறை யானால்
இவைதான்
எடுத்துக் காட்டும் அறிகுறிகள் !

+++++++++++++

ஆயினும் நீ அங்கு மிங்கும் ஓடி
அபூர்வ நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டு
ஆழ்ந்து நோக்குவீர்
பயணம் போகும் முகங்களை !
பைத்தியம் போல் நீ ஏன்
பார்க்கிறாய் என்னை ?
நண்பனை இழந்த என்னை
மன்னிப்பாய் !
அப்படித் தேடுவது
தோல்வி பெறாது ! உன்னை
நெருங்கி அணைத்துக் கொள்ளும்
ஒரு குதிரை வீரன்
வருவான் !
மயக்கமுற்று உளறுகிறாய் நீ !
முகவரி இல்லாதவர்
அவனைப் போலி என்பார்
அவருக்கு எப்படித் தெரியும் அது ?
கடற்கரை மீன் ஒன்றை
அடித்துத் தள்ளும்
நெருக்கடிகளின் கடல் நீர் !
என் குழப்பத்திற்கு மன்னிப்பீர் !
எப்படி ஒருவன் குழப்பத்தில் சீராய்
இயங்க முடியும் ?

***************************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 8, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -2

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உதவ முடியா நெருக்கடிகள்

என் குழப்பத்திற்கு மன்னிப்பீர்
என்னை !
எப்படிக் குழப்பத்தில் ஒருவன்
சீராய்
இயங்க முடியும் ?

புறாக்களின்
கூக்கூக்களையும்
காக்கைகளின் கத்தலையும்
சேர்த்துக் கொண்டு பூங்காவின்
இலைகளை எல்லாம்
எண்ணுவது போலாகும் !
கூட்டலும், கழித்தலும்
கூட்டுறவு அமைப்புகளும்
சில சமயம்
ஆட்டம் கண்டு விடும் !

ஆயிரக் கணக்கான
குடிவாசிகளில்
மாந்தர் நாம்
மனிதன் நான் என்னும்
மமதை நோக்கில்
நான் யார் ?

இப்படி நான் கேட்பதைத்
தடுக்காதீர் !
எப்போது தப்புவேன்
இந்தக் கட்டுப்பாட்டி லிருந்து
என்பதைக் கேட்பீர் !
முறியும் பாண்டம் எதையும்
என் முன் வைக்கதீர் !

எனக்குள்ளே ஒளிந்துள்ளது
ஓர் மூலத்துவ வடிவம் !
எதிரே நீ
காண்பதோர்
கண்ணாடிப் பிம்பமே !

நீ பூரித்தால் எனக்கும் பூரிப்பு !
வருத்த மானால் உனக்கு
வாழ்வு கசந்தால் உனக்கு
வையகம் நளின மானால் உனக்கு
எனக்கும் அவை எல்லாம்
எதிர்ப்படும் !

பச்சைப் புல் தளத்தில்
சைப்பிரஸ் மரத்து நிழல் போல்
ரோஜா வுக்கு நிழல் போல்
நெருங்கி நான் வசிப்பேன்
ரோஜா வுக்கு அருகில் !
காரிகை நீ பிரிந்து சென்றால்
மாறுவேன் நானொரு முள்ளாய் !

ஒவ்வொரு வினாடியும்
அடுத்தடுத்து
ஒரு கிண்ணத்தில் அருந்துவேன்
என் குருதி ஒயினை !
ஒவ்வொரு கணமும் கதவில் வீசி
உடைக்கிறேன்
ஒரு கிண்ணத்தை !

உன் முன் நிற்கிறேன்
என்னைப் பிளந்து
உள்ளே திறந்து பார் !
ஸலாதீன் கருணையால்
என் நெஞ்சில் மெழுகு வர்த்தி
விளக்கேற்றும் !
வேறு நான் யார் ?
அவனது
வெற்றுப் பிச்சைப் பாத்திரம் !

***************************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -2 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஐந்து உரைகளை மொழிவேன்

++++++++++

இவ்வாறுதான் அவர் சொல்கிறார்
சுற்றியுள்ள
ஒவ்வொரு வரும்
அவனோடு
அழத் தொடங்குவார்
கிறுக்குத் தனமாய்ச்
சிரித்துக் கொண்டு,
காதலன் காதலியிடம் ஐக்கியம்
ஆவதை
முணுமுணுத்து !
மெய்யான மதம் இதுதான்
மற்றவர் யாவரும்
அத்தோடு தம் கால் கட்டுகளை
அறுத்து விட்டார் !

+++++++++++++

இதுவே அடிமைத் தனமும்
அதிகாரத் தனமும்
கைகோர்த்து நடம் புரியும்
காட்சிக்கு ஓர்
எடுத்துக் காட்டு !
இதுவே உயிர்த் தனத்தை
இல்லாமை ஆக்கும் !
வாய் வார்த்தைகளோ
அல்லது
இயற்கை மெய்ப் பாடுகளோ
தயங்கும் உரைப்பதற்கு
இவற்றை !

+++++++++++++++

இந்த நாட்டியக் குழுவினரை
நன்கு அறிவேன் !
பகல் இரவாய்ப்
பாடுவேன் அவரின் பாடல்களை
இந்த உணர்ச்சிக் கூண்டில் !
என் ஆத்மாவே
இதற்குப் பதில் கூறாய் !
ஒரு தோழனைத் தேடி நீ
மறைந்து கொள் !
ஆனல் பதுக்குவது என்றாவது
காணாமல் போகுமா ?
காதலின் ரகசியம்
தலை தூக்கும் எப்போதும்
மறைவிடத்தி லிருந்து !
“இங்குளேன்”
என்பதைக் காட்டி !

***************************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 2, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -1 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஐந்து உரைகளை நான் மொழிவேன்

++++++++++

விழித் தெழுந்த காதலன்
நேரே
விளம்புகிறான்
தன்னருமைக் காதலியிடம் :
“நீதான் எனது
ஆன்மா சுற்றி வரும்
வானுலம் !
காதல் உட்கருவின்
நேசம் !
அதுவே எனக்கு
மீள் பிறப்பிடம் !

+++++++++++++

இந்தச் சாளரம்
உந்தன் செவியாய் இருக்கட்டும் !
செவிமடுக்கும்
உன் மௌனத்தை விரும்பி
புத்துயிர் அளிக்கும் உன்
புன்னகை நோக்கி
பல தடவை
என் மன உணர்வை
இழந்தேன் !
விளக்க நுட்பங்களில்
செலுத்து உன் கவனத்தை !
பெரிதான என்
இரகசிய
ஐயப்பாடுகள் அவை !

+++++++++++++++

எனது நாணயங்கள் எல்லாம்
போலி யானவை
என்பதை நீ அறிவாய் !
ஆயினும் நீ
அவற்றை வாங்கிக் கொண்டாய்
ஆசையாய்,
என் அவமதிப்பைக் கண்டும்
என் பசாங்கைப்
பார்த்தும் !

+++++++++++++++

ஐந்து உரைகளை நான்
மொழிவேன் !
ஐந்து விரல்களால் எண்ணி
நீட்டுவேன்
உன்னருட் கொடைக்கு !

+++++++++++++

முதலாக நான் மொழிவது :
உன்னை விட்டுப்
பிரியும் போது இவ்வுலகே
தெரியாமல் போகும் !
வேறெந்த உலகும்
தோன்றாது !
இரண்டாவது :
நான் தேடிப் போவ தெல்லாம்
நீதான் எப்போதும் !
மூன்றாவது :
நான் ஏன் மூன்றாவது
இலக்கத்தை
எண்ணிடக் கற்றேன் ?
நாலாவது :
என் தானிய விளைநிலம்
எரிந்து கொண்டுள்ளது !
ஐந்தாவது :
இந்த விரல்
புனித மங்கை
ரபியாவின்* சார்பாக
நிற்கிறது !
வேறு
யாருக்கோ சொந்தம் !
இதில் ஏதும்
மாறுபாடு உண்டா ?

++++++++++

வார்த்தைகளா
அல்லது விழிகளின்
நீர்த் துளிகளா
அவை யெல்லாம் ?
நீ அழுதது போதாதா ?
என்னருமைக் காதலி !
சொல்
என்ன செய்ய வேண்டும்
நான் இனிமேல் ?

***************************
*Rābia al-Adawiyya al-Qaysiyya was a female saint.

***************************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 26, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


புதிய நியதி

++++++++++

பழைய நியதி இதுதான் :
குடிப்போர்
வாதாடிச் சண்டை இடுவர்
மோதிக் கொண்டு !
காதலர் அதற்கும் மோசம் !
பாதாளக் குழியில்
வீழ்வார் ! அவர்
கீழே காண்பது
மினுமினுக்கும் ஏதோ ஒன்றை !
பண மதிப்பளவைத்
தாண்டிய தொன்றை !
ஆற்றல் மிக்க தொன்றை !

+++++++++++++

நேற்றிரவு நிலவு வந்தது
உடைகளை
நீக்கிக் கொண்டு
வீதியில் !
எனக்கது ஓர்
சமிக்கையாய்த் தோன்றும்
வானக் கும்பாவில் வீழ்ந்து நான்
கானம் பாடிட !
பானை உடைந்தது,
எல்லா இடங்களும் இடிந்தன
எதைச் செய்யவும்
இயல வில்லை
என்னால் !

+++++++++++++++

இதுவே புதிய நியதி :
கண்ணாடிக் கலயத்தை உடைத்து
ஒயின்
முன்பாக சரண் அடை
கண்ணாடிக் குமிழி ஊதுவோர்
மூச்சுக்குள்ளே !
இதுதான் சித்திரவதை !
மிகவும் களைத்துப் போனேன் !
தடுக்கப்படும் வேதனையில்
முடங்கி யுள்ளான்
பித்தனைப் போல் !
இந்த இதயக் கனியின்
உட் சுளையைச்
சுவைப்பதற்கு
ஓட்டை*
உடைத்த வாறு இருக்கும் !

***********************
*ஓட்டை : Shell
***********************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எரிந்து போன புலால் உணவு

++++++++++

ஒயின் வகைகளைச்
சுவைக்கக் கடந்த வருடம்
உவப்போடு இருந்தேன் !
செந்நிற உலகுக்குள்
சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன் !
சென்ற வருடம்
செந்தீயை உற்று நோக்கினேன்.
இவ்வருடம்
எரிந்த புலால் உணவாக
தகிக்கிறேன் !
தாகம் என்னைத்
தண்ணீருக்குள் தள்ளியது !
அங்கே
நிலவின் பிரதி பலிப்பை
அருந்தினேன் !

+++++++++++++

நானொரு சிங்கம் இப்போது,
மதுவின் மோகத்தில்
முழுவதும் மூழ்கிப் போய்
விழிக்கிறேன் !
தீராத என் இச்சை பற்றிக்
கேளாதீர் !
பாரீர் என் முகத்தை !
குடி போதையில் ஆத்மா !
முடங்கிப் போன உடல் !
உடைந்த வாகனத்தில்
உள்ளன அவை இரண்டும்
உதவி யின்றி !
எதற்கும் வண்டியைச்
செப்பனிடத்
தெரியவில்லை !

+++++++++++++++

புழுதிக் குழியில் விழுந்து
எழுந்திடத் தவித்து ஆழ்ந்து
புதைந்து போகும்
கழுதை போல்
என்னிதயம் தோன்றும்
எனக்கு !
ஆயினும் ஒருகணம் நான்
சொல்வதைக் கேள் !
துக்கமுறுவதைத் தவிர்த்திடு !
உன்னைச் சுற்றி
உனக்குக் கிடைத்துள்ள
கொடைகளின் மலர்ச்சியை
உனது
உடமையாய்க் காண்பாய் !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 11, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-6 மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


வெவ்வேறு வகை உணவுத் தட்டுகள்

++++++++++

(விண்வெளியில்)
துகள் ஒவ்வொன்றும் எவ்விதம்
நகர்வ தென்று நோக்கு !
ஒவ்வொரு வரும் பயணத்தி லிருந்து
எவ்விதம்
இங்கு வந்து அடைந்தனர்
என்பதைத் தெரிந்து கொள் !
வெவ்வேறு வகை உணவுகளை
ஒவ்வொருவர்
எவ்விதம் விரும்புகிறார்
என்று உளவிப் பார் !
கதிரவன் அதி காலையில்
உதிக்கும் வேளை
தாரைகைகள்
மறைந்து போவதை நோக்கு !
ஆறுகள் யாவும் எவ்விதம்
கடலை நோக்கி ஓடுவதைக்
காண்பாய் !

+++++++++++++

சமையல் செம்மல்
உணவுப் பண்ட வகைகளை
வெவ்வேறு விதமாகத்
தகுதிக் கேற்றார் போல்
ஒவ்வொரு வருக்கும்
தயாரித்து
வைப்பதைப் பார் !
கடல் நீர் கொள்ளும் இந்த
மதுபானக்
கிண்ணத்தைப் பார் !
கண்ணாடியில் தமது முகத்தைக்
காண்போரைப் பார் !
பாவனை புரியும் விழிகள் மூலம்
பூராவும்
ஆபரணம் போல் மின்னும்
நீருக்குள்ளே
உற்று நோக்கு !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 4, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-5 மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பல்வேறு ஒயின் வகைகள்

++++++++++

கருமை நிறத்தில்
உக்கிரமாய்ப் போதை தரும்
ஒரு வித ஒயினைக்
கடவுள் கொடுத்துள்ளார் நமக்கு !
அதனைக் குடித்தால் நாம்
இவ்விரண்டு
அவனியை விட்டு நீங்குவோம் !
ஹாஷீஸ்* மயக்கச் செடியில்
கடவுள் இட்டுள்ளார்
குடி போதைத் தீவிரத்தை
குடிப்பவன் சுயத் தன்மை
விடுதலை பெற !

+++++++++++++

உறக்கத்தை அளித்துக் கடவுள்
ஒவ்வொரு
நினைவையும் அழிப்பார் !
மஞ்னு லைலாவை
நேசிக்கச் செய்தவன் இறைவன் !
அவளது நாயும்
அவனைக் குழப்பி
அவலப் படுத்தக் காரண மாகும் !
ஆயிரக் கணக்கில் உள்ளன
ஒயின் வகைகள்
நமது மூளையை ஆட்டுவிக்க !

++++++++++++++

எல்லா வித மான
எக்ஸ்டஸீஸ்* மருந்தெல்லாம்
ஒன்றல்ல !
ஏசு நாதர்
தன்னையே அர்ப்பணம் செய்தார்
இறைவன் மேல் கொண்ட
அன்புக்காக !
ஏறி வந்த அவரது
கழுதை
பார்லிக்* குடிப் போதையில்
ஊர்ந்தது !

+++++++++++++

குடிப்பாய் நீ
புனிதர் முன்னிலையில் !
மற்றவர் குவளைகளில் நீ
மதுவை அருந்தாதே !
ஒவ்வோர் வடிவமும்
ஒவ்வோர் உயிர் இனமும்
இனிமை நிரம்பிய குவளைதான் !
ஓவியக் கலைஞனாய்
உலவி மதுவைக்
கவனமோடு சுவைப்பாய் !

+++++++++++

ஒயின் எதுவாயினும் போதை
ஊட்டுவதே !
அரசனை உளவுவது போல்
ஆய்வு செய் அதனை !
தூய்மை யான மதுவை
கலப்பட மற்றதை
அவசிய மானதைக்
கவனமாய்த் தேர்ந்தெடு !

+++++++++++

அவிழ்த்து விட்டதும்
ஊர்ந்து
மெதுவாய் நகரும்
ஒட்டகம் போல்
உன்னை இயங்க வைக்கும்
அத்தகைய
ஒயினைக் குடிப்பாய் !

+++++++++++

ஹாஷீஸ்* —> Hashish
எக்ஸ்டஸீஸ்* —> Ecstasies
பார்லி* —> Barley

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 28, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மயிரைப் பிளப்பதிலும்
நுணுக்க மாகத் திருக்கம் செய்து
சீரமைக்கும் மனது !
ஆயினும்
கலைப் படைப்போ
கைச் செதுக்கோ
துவக்கம் ஆவது மில்லை
தொடர்வது மில்லை
குருதேவர் ஒருவர்
அரிய ஞானம் புகட்டாது !

கவிஞர் ரூமி

+++++++++++

கவிதை -2 பாகம்-4

மதுக்குடி அங்காடி

குழந்தைகளின் விளையாட்டு

++++++++++

விளையாட்டுக் குதிரைகள் மீதேறும்
மதலைகள் போலச்
சேனைப் படையினர்
புரவி மேல் ஏறிப்
புகழ்ந்து கொள்வார் !
போர் புரிவதலிலும்
புணர்ச்சிக் கலவையிலும்
பொருளில்லை
உமது வினைகளுக்கு !
‘தந்தானே தகிடத் தந்தானே’ என்று
இடை உடுப்பைப் பற்றித்
தவ்வித் தவ்விச் சுற்றுகிறாய் !

+++++++++++++

மரணம் வரும்வரைப் தாமதிக் காதே
இதனைக் காண !
அறிந்து கொள்வாய் நீ
உனது கற்பனை, உனது சிந்தனை
உணர்ச்சிக் கூர்மை ஆகியவை
மதலையர் செதுக்கி
மூங்கில் கணுக்கு களைக்
குதிரை போல் வடித்தவை !

++++++++++++++

மர்மக் காதலரைத் தெரிந்து கொள்வதில்
மாறாட்டம் உள்ளது !
சுருக்கப் பட்ட விஞ்ஞானம்,
உணர்ந்திடும் ஆன்மீகம் ஆகியவை
கழுதை மீதேற்றிய
பொதிகள் போன்றவை ! அல்லது
அழகி ஒருத்திக்குப் பூசிய
ஒப்பனை போல்பவை !
கழுவினால் அழிபவை !

+++++++++++++

பளுவைச் செம்மையாய்த் தூக்கினால்
களிப்பினை அளித்திடும் !
ஆயினும்
சுயத் தேவைக்கு
அறிவுப் பொதி சுமப்பதை
நிறுத்திடு !
இச்சைகளையும் வேண்டுதலையும்
தவிர்த்திடு !
உன் கால் அடியே
ஓர் உண்மைப் பீடம் தோன்றலாம் !
வார்த்தை களால் வெறும்
ஒப்பனை செய்யும்
கடவுளின்
ஒலிப் பெயரைக் கேட்டு
அடையாதே
அகத்தினில் திருப்தி !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 22, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


போனது என் அகமும் புறமும் !
வான மில்லை ! வையம் இல்லை !
நிலவு மில்லை !
அடுத்துமோர் கிண்ணத்தில் ஒயினை
அளிக்காதீர் எனக்கு !
வாயில் ஊற்றுவீர் அதனை !
வழி மறந்து போனது
வாயிலே குடிக்கும் முறை !

கவிஞர் ரூமி

+++++++++++

நாமருந்தும் ஒயின் மெய்யாக
நமது குருதி யேதான் !
இந்த அண்டாக்களில்
புளித்துப் போய்
பொங்கியவை நம் உடல்கள் தான் !
இருப்பதை
எல்லாம் நாம் கொடுப்போம்
ஒரு குவளை ஒயினுக்கு !
தருவோம் நம் இதயத்தையும் கூட
ஒரு மடக்கு மது குடிக்க !

கவிஞர் ரூமி

+++++++++++

கவிதை -2 பாகம்-3

மதுக்குடி அங்காடி

குழந்தைகளின் விளையாட்டு

ஒதுங்கிக் கிடந்த கவிஞர் சேனாய்
உரைப்பதைக் கேளாய் :
“தெருவினில் அலைந்து திரியாதே
குடி போதையில் !
மதுக் கடையில் தூங்கு !”
தெருவில் திரியும் போது
குடிகாரனைக் கண்டு கேலி செய்யும்
குழந்தைகள் !
சகதியில் தடுமாறி விழுவான்
குடிகாரன்
எந்தத் தெருவிலும் போவான் !
எல்லாத் தெருக் களிலும் திரிவான் !
சிறுவர் அவன்பின் செல்வார்
ஒயின் சுவையை அறியார் சிறுவர்,
குடிகாரர் மனநிலை உணரார் !
ஒரு சிலரைத் தவிர
உலக மாந்தர் அனைவரும்
குழந்தைகள் தான் !
இச்சையில் மூழ்காத சிலரைத் தவிர
எல்லாரும்
முதிர்ச்சி அடையா தவர் !

+++++++++++++

இறைவன் கூறினார் இவ்விதம் :
“இவ்வுலகம் ஒரு நாடகம் !
சிறுவரின் விளை யாட்டுகள் அவை !
நீவீர் யாவரும்
விளையாட்டுப் பிள்ளைகள் !”
இறைவன் சொன்ன துண்மைதான் !
சிறுவர் விளையாட்டை
நீக்கா விடில் நீவீர்
முதியவர் ஆவ தெப்படி ?
ஆன்மீகத் தூய்மை அடையாது
ஆசைக்கும் காமத் துக்கும் இடையே
அடிமை யாய்க் கிடக்கிறீர் !
அவசிய மான வற்றிலும்
மதலையர் போல் வாழ்கிறீர்
உடலுறவு இன்பத்தில் திளைத்துப்
போராடுவர் அவர்,
புணர்ச்சி யில்லை அது !
மனித இனப் போர்களில் இதுபோல்
வாய்ப் போர் புரியும்
வெறும் விளையாட்டு வாள்கள் !
குறிக்கோ ளில்லாமல்
வீணாகும் முயர்ச்சி
முழுவதும் !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 15, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மதுக்குடி அங்காடி

ஒயின் உள்ளது பெரிய அண்டாவில் !
ஆயினும் கிண்ணங்கள் இல்லை !
அவ்வித மாயின் சரி !
உடம்பு மினுமினுக்கும்
ஒவ்வோர் காலைப் பொழுதிலும் !
மேனி மிளிரும் எமக்கு
மீண்டும் மாலைப் பொழுதில் !

+++++++++++

எதிர்காலம் எமக்கில்லை என்று
இடித்துரைப்பார் அவரெல்லாம் !
அப்படி சொல்வது சரிதான் ! அதை
ஒப்புக் கொள்ளும் எமதுள்ளம் !

கவிஞர் ரூமி (The Tavern)

+++++++++++++

முன்னுரை :

பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில் தற்போது ஆ·ப்கானிஸ்தான் எனப்படும் பூர்வீகப் பாரசீக தேசத்தில் உள்ள பால்க் (Balkh) என்னும் இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே மங்கோலியர் படயெடுப்புக்கு அஞ்சி அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டுத் துருக்கியில் உள்ள கொன்யாவுக்கு ஓட வேண்டியதாயிற்று. அங்குதான் ரூமி தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடந்தார். நாஷாப்பூரில் (Nashapur) சில காலம் தங்கிய போது கவிஞர் அத்தார் (Poet Attar) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்தது. ரூமிக்கு வாய்த்த மகாக் குருமார்களில் முதல்வர் (Mentors) கவிஞர் அத்தார். ரூமியின் ஞானக் கொடையை அறிந்த கவிஞர் அத்தார் “அஸ்ரார் நமா” (Asrar Nama – The Book of Secrets) என்னும் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார். 1226 இல் ரூமி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன்.

அறிஞராகத் திகழ்ந்த ரூமி டெர்விஸ் (Dervish) இஸ்லாமியக் குரு ஸாம்ஸ் ஆ·ப் தபிரிஷ் (Shams of Tabriz) அவர்களை 1244 இல் சந்தித்த பிறகு புத்துயிர் பெற்று அவரது ஆன்மீகச் சிந்தனையில் மகத்தான ஒரு திருப்பம் ஏற்பட்டது. “நெடுங் காலமாய் முன்பு நான் நினைத்து வந்த அந்தக் கடவுளைக் கண்டேன்,” என்று ரூமி அந்த தேவதூதரைக் கண்ட போது பெருமிதம் கொண்டார். மதக்குரு ஸாம்ஸ் அவர்களுக்குப் பிறகு ரூமியின் சிந்தனையைச் செழிக்கத் தூண்டியவர் ஸலாதீன் ஸர்கப் (Saladin Zarkub) பிறகு ஹ¤ஸம் (Husam) என்பவர். கவிஞர் ரூமி பல கவிதைகளில் விளிக்கும் “நீ” என்பது கடவுளா, ஸாம்ஸா அல்லது யார் என்பதை வாசகர்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.

ஞானக் கவிஞர் ரூமி ஓர் மதஞானி, பேரறிஞர், இஸ்லாம் மதத்தின் ஒரு தூணாகக் கருதப்படுபவர். 1244 ஆண்டு ஆன்மீகத் திருப்பத்துக்குப் பிறகு ரூமி தனது 38 ஆவது வயது முதல் 24,000 பாக்கள் கொண்ட “மத்னாவி” (Masnavi or Mathnawi) என்னும் தன் படைப்பு நூலை எழுதத் துவங்கினார். அவரது அடுத்த புகழடைந்த நூல் “திவான்-இ-ஸாம்ஸ்-இ-தாமிரிஷ் (Divan-E-Shams-E-Tabriz – The Collective Poems of Shams of Tabriz) என்பது. ரூமியின் கவிதைப் படைப்புகளில் ஒரு வித “மாயப் புதிர்” (Mystic Connotation) புரிந்தும் புரியாத பொருளில் புலப்படும். ரூமியின் பட்டப் பெயர் “மௌலானா”. மௌலானா என்றால் நமது கோமான் (Moulana means our Master) என்று பொருள். ரூமிக்குப் பிடித்த இசைக் கருவி புல்லாங்குழல். பாரசீகப் பாக்களை இசைக் கருவிகள் மூலம் பாடலாம் அல்லது வாசிக்கலாம்.

ரூமியின் கவிதைகள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது ஞானக் கருத்துக்கள் அகில நாடுகளுக்கும் உகந்தவை. கவிஞர் ரூமி கொய்னாவைச் சார்ந்த “மெவ்லெவி மதக்குழு நெறி” (Mevlevi Dervish Order, called Whirling Dervishes) எனப்படும் “இசைப்பா ஆட்டக் குழுவின்” துவக்கப் பிதா. ரூமி இஸ்லாமியர், யூதர், கிறித்துவர் ஆகிய மூன்று மத இனத்தவர் மீதும் சமமான மதிப்பைக் கொண்டவர். பாரசீகக் கவிஞர் ரூமி உலகிலே மிகப்பெரும் “ஸ¤·பி மாயப் புதிர் கவிஞராக” (Sufi Mystic Poet) மதிக்கப் படுகிறார். ரூமியின் கருத்து : “கடவுளைத் தவிர வேறோர் கடவுள் இல்லை. கடவுள் என்பவர் ஒருவரே.” 1273 டிசம்பரில் ரூமி நோய்வாய்ப் பட்டுத் தன் மரணத்தைத் தானே முன்கூட்டி அறிவித்துப் புகழ் பெற்ற கஜல் (Ghazal) கவிதை ஒன்றை எழுதினார்.

++++++++++++++++

கவிதை -2 பாகம்-2

மதுக்குடி அங்காடி

குடிபோதை இனமொன் றுள்ளது !
அத்துடன் சேர்ந்து
பித்துடன் மகிழ்வீர் !
கூச்சல் வீதியில் நடப்பீர்
கூக்குரல் நாயகர் ஆகி !
ஆசை தீரும் மட்டும்
அருந்துவீர்
உம்மை
அவமதித்துக் கொண்டு !

++++++++++++

இரு கண்களை மூடிக் கொள்
மறு கண்ணால் நீ பார்த்திட !
கரங்களை விரித்திடு
கைகளைக் குலுக்க வரும் போது !
இந்த வட்டத்தில் நீ
வந்து உட்கார் !
ஓநாய் போல் நடிப்பதைத்
தவிர்த்திடு !
ஆட்டிடையன் பரிவு
உள்ளத்தில் நிரம்புவதை
உணர்ந்திடு !

+++++++++++++

இரவு வேளையில்
உன்னருங் காதலி
திரிகிறாள் உன்னைத் தேடி !
ஆறுதல் அளிக்க வருவோரை
ஏற்றுக் கொள் ளாதே !
வாயை மூடிக் கொள்
வாயிக்குள்
உண்டியைத் திணித்த பிறகு !
உன் காதலி வாயை
உன் வாயால் சுவைத்திடு !

++++++++++++++

“என்னை விட்டுப் போனாள் அவள்”
“என்னை விட்டுப் போனான் அவன்,”
என்று முணுமுணுத்து நொந்தால்
இருபது பேர் உன்னை நெருங்குவார் !
கவலை படுவதைக் காலி செய் !
மனக்கவலை
உனக்குத் தருபவன் யாரென
நினைத்திடு !

++++++++++++

சிறைக் குள்ளே நீ ஏன்
தங்கி யுள்ளாய்
அறைக் கதவு முழுவதும்
திறந்துள்ள போது ?
முக்கோணப் பயத்தில்
முடங்காது நீ வெளிச் செல் !
சிந்தித்து
மௌனமாய் வாழ்ந்திடு !

+++++++++++

வாழ்வு வட்டத்தை விரிவாக்கித்
தாழ்ந்து பணிவாய்
எப்போதும் !
விரைந்து செல் தணிவாய் !
எந்தன் தலையில் கொந்தளிக்கும்
விந்தை
பறவைகள் பயணம் பற்றி !
ஒவ்வோர் அணுவும்
தனக்குள் சுழலும் ! எனது
மனத்தின் காதல் அவைதான் !

+++++++++++++

காவல் துறை அதிகாரியைக்
கண்டு அஞ்சுவார்
குடிகாரர் !
ஆனால் காவல் துறை
அதிகாரியும் குடிக்கின்றார் !
இங்குள்ள மக்கள்
நேசிப்பர்
மது மண்டும் இருவரையும்
மாறு பட்ட
சதுரங்கக்
காய்கள் போல் !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++
On-line texts and translations of Rumi
“MA-AARIF-E-MATHNAVI A commentary of the Mathnavi of Maulana Jalaluddin Rumi (R.A.)”, by Hazrat Maulana Hakim Muhammad Akhtar Saheb (D.B.), 1997 .
Four new translations of Rumi poems by Coleman Barks
Rumi poetry set to beautiful Persian Music on Mp3 and CD
The Masnavi I Ma’navi , by Maulana Jalalu-‘d-din Muhammad Rumi, Abridged and Translated by E.H. Whinfield on sacred-texts.com
Dar al Masnavi , several English versions of selections by different translators.
(Rumi.net) Rumi’s little-known biography and poems (Quatrains and Odes) in English by Shahram Shiva
Quatrains at Iranian.com

On Rumi
The Foundation of Universal Lovers of Mevlana Jelaluddin Rumi (EMAV)
The Rubaiyat of Rumi Lecture of Khosro Naghed .
Rumi, Poet of Love and Justice , CHN News
Jalaluddin Rumi
About Rumi, English translations and personal/rare biography
Several Rumi Poems (Quatrains and Odes) in English
Iranian studies site
The Threshold Society and Mevlevi Order
The Mevlevi Order of America . [This organization and the one above are unaffiliated with each other]
Official website of the Family of Jalal al-Din Muhammad Rumi
Mevlana
Mawlana Jalal al-Din Rumi- Mevlevi webpage
RumiOnFire.com – A Tribute to Rumi
What goes round… – The Guardian , November 5, 2000
Rumi Lectures at Harvard University
Rumi and the Tradition of Sufi Poetry
Mewlana Jelal Ad-Din Rumi
Treasures of Persian Literature , by Professor Behrouz Homayoun Far
Guernica Magazine (guernicamag.com) on the 800th anniversary of Rumi’s birth
Sermon on Rumi by UU Minister John Young
Can Rumi Save Us Now?

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 8, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-1 மதுவருந்தும் அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மதுவருந்தும் அங்காடி

“யாரிங்கு என்னை அழைத்துக் கொண்டு வருகிறாரோ அவர்தான் இல்லத்துக்கும் என்னை இழுத்துக் கொண்டு போக வேண்டும்.

மது குடிக்கும் அங்காடி ஒரு கீர்த்தி பெற்ற நரகம் ! அங்கே மனித இனம் மகிழ்ச்சியாகத் துயருற்றுச் சத்தியத் தேடலில் பின்தங்கிப் போகிறது ! மதுவருந்தும் கடை ஓர் அபாயக் குடிக் கூடம் ! அங்கே சில சமயம் மாறு வேடம் தேவைப்படுகிறது ! ஆனால் உனது இதயத்தை அங்கு நீ மூடிக் கொள்ளாதே ! அதைத் திறந்து வை ! மன முறிவு, வீதியில் ஒரு கூப்பாடு – இவை மதுக்குடிக் கடைகளிலிருந்து தொடங்குபவை. அங்கிருந்து மனித ஆத்மா தன் இல்லப் பாதை தேடி மீள்கிறது.”

கவிஞர் ரூமி (The Tavern)

முன்னுரை :

பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில் தற்போது ஆ·ப்கானிஸ்தான் எனப்படும் பூர்வீகப் பாரசீக தேசத்தில் உள்ள பால்க் (Balkh) என்னும் இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே மங்கோலியர் படயெடுப்புக்கு அஞ்சி அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டுத் துருக்கியில் உள்ள கொன்யாவுக்கு ஓட வேண்டியதாயிற்று. அங்குதான் ரூமி தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடந்தார். நாஷாப்பூரில் (Nashapur) சில காலம் தங்கிய போது கவிஞர் அத்தார் (Poet Attar) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்தது. ரூமிக்கு வாய்த்த மகாக் குருமார்களில் முதல்வர் (Mentors) கவிஞர் அத்தார். ரூமியின் ஞானக் கொடையை அறிந்த கவிஞர் அத்தார் “அஸ்ரார் நமா” (Asrar Nama – The Book of Secrets) என்னும் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார். 1226 இல் ரூமி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன்.

அறிஞராகத் திகழ்ந்த ரூமி டெர்விஸ் (Dervish) இஸ்லாமியக் குரு ஸாம்ஸ் ஆ·ப் தபிரிஷ் (Shams of Tabriz) அவர்களை 1244 இல் சந்தித்த பிறகு புத்துயிர் பெற்று அவரது ஆன்மீகச் சிந்தனையில் மகத்தான ஒரு திருப்பம் ஏற்பட்டது. “நெடுங் காலமாய் முன்பு நான் நினைத்து வந்த அந்தக் கடவுளைக் கண்டேன்,” என்று ரூமி அந்த தேவதூதரைக் கண்ட போது பெருமிதம் கொண்டார். மதக்குரு ஸாம்ஸ் அவர்களுக்குப் பிறகு ரூமியின் சிந்தனையைச் செழிக்கத் தூண்டியவர் ஸலாதீன் ஸர்கப் (Saladin Zarkub) பிறகு ஹ¤ஸம் (Husam) என்பவர். கவிஞர் ரூமி பல கவிதைகளில் விளிக்கும் “நீ” என்பது கடவுளா, ஸாம்ஸா அல்லது யார் என்பதை வாசகர்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.

ஞானக் கவிஞர் ரூமி ஓர் மதஞானி, பேரறிஞர், இஸ்லாம் மதத்தின் ஒரு தூணாகக் கருதப்படுபவர். 1244 ஆண்டு ஆன்மீகத் திருப்பத்துக்குப் பிறகு ரூமி தனது 38 ஆவது வயது முதல் 24,000 பாக்கள் கொண்ட “மத்னாவி” (Masnavi or Mathnawi) என்னும் தன் படைப்பு நூலை எழுதத் துவங்கினார். அவரது அடுத்த புகழடைந்த நூல் “திவான்-இ-ஸாம்ஸ்-இ-தாமிரிஷ் (Divan-E-Shams-E-Tabriz – The Collective Poems of Shams of Tabriz) என்பது. ரூமியின் கவிதைப் படைப்புகளில் ஒரு வித “மாயப் புதிர்” (Mystic Connotation) புரிந்தும் புரியாத பொருளில் புலப்படும். ரூமியின் பட்டப் பெயர் “மௌலானா”. மௌலானா என்றால் நமது கோமான் (Moulana means our Master) என்று பொருள். ரூமிக்குப் பிடித்த இசைக் கருவி புல்லாங்குழல். பாரசீகப் பாக்களை இசைக் கருவிகள் மூலம் பாடலாம் அல்லது வாசிக்கலாம்.

ரூமியின் கவிதைகள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது ஞானக் கருத்துக்கள் அகில நாடுகளுக்கும் உகந்தவை. கவிஞர் ரூமி கொய்னாவைச் சார்ந்த “மெவ்லெவி மதக்குழு நெறி” (Mevlevi Dervish Order, called Whirling Dervishes) எனப்படும் “இசைப்பா ஆட்டக் குழுவின்” துவக்கப் பிதா. ரூமி இஸ்லாமியர், யூதர், கிறித்துவர் ஆகிய மூன்று மத இனத்தவர் மீதும் சமமான மதிப்பைக் கொண்டவர். பாரசீகக் கவிஞர் ரூமி உலகிலே மிகப்பெரும் “ஸ¤·பி மாயப் புதிர் கவிஞராக” (Sufi Mystic Poet) மதிக்கப் படுகிறார். ரூமியின் கருத்து : “கடவுளைத் தவிர வேறோர் கடவுள் இல்லை. கடவுள் என்பவர் ஒருவரே.” 1273 டிசம்பரில் ரூமி நோய்வாய்ப் பட்டுத் தன் மரணத்தைத் தானே முன்கூட்டி அறிவித்துப் புகழ் பெற்ற கஜல் (Ghazal) கவிதை ஒன்றை எழுதினார் :

எப்படி நீ அறிவாய்
என்னுள்ளே துணையாய்
எத்தகைய
மன்னவன் ஒருவனை
மறைத்து வைத்துளேன் என்று ?
என் பொன் முகத்தை
நோக்காத வண்ணம்
உன் ஓரக்கண் பார்வையைத்
தவிர்த்திடு !
ஏனெனில் இரும்பால் ஆனவை
எனது கால்கள் !

++++++++++++++++

கவிதை -2 பாகம்-1

மதுவருந்தும் அங்காடி

பகல் பூராவும் சிந்திப்பேன் அதைப் பற்றி
பிறகு இரவில் அதைச் சொல்வேன் !
எங்கிருந்து வந்தேன் நான் ?
என்ன செய்திருக்க வேண்டும் நான் ?
ஒன்றும் நான் அறிந்திலேன் !
எங்கிருந்தோ வந்தது என் ஆத்மா
எனக்கது உறுதியாய்த் தெரியும் !
அங்கு போய் அடங்க முடிவில் ஆசை !

++++++++++++

எனக்கு இந்தக் குடிப் பழக்கம்
வேறோர் மதுக்கடையில் துவக்கம் !
எனக்கில்லை குடிமயக்கம் !
முழுச்சுய நினைவிருக்கும்
மீண்டும் நானங்கு உலவும் போது !
வேறு கண்டத்துப் பறவை போல்
ஒரு பெருங் கூண்டுக்குள் அமர்ந்துளேன் !
பறக்கும் நாளும் நெருங்கும் ! ஆனால்
யார் உள்ளார் காதருகில் என்குரல் கேட்க ?
யார் பேசுவார் என் வாயுடன் சேர்ந்து ?

++++++++++++

அப்பால் நோக்குவது யார் என் கண்களோடு ?
ஆத்மா வென்றால் என்ன ?
வாய் இனிக்கும் பதில் எனக்குள தென்றால்
இந்தக் குடிச்சிறை உடைக்க முடியும் என்னால் !
நானாகப் பிறந்திலேன் இங்கே என் இச்சைப்படி
நானிதை நீங்கவும் இயலாது விருப்பப்படி !
இங்கு என்னைக் கொண்டு வந்தவரே
இழுத்துச் செல்ல வேண்டும் மீண்டும் வீட்டுக்கு !

++++++++++++

இக்கவிதையில் என்ன சொல்வேன்
என்பதை நான் அறியேன் !
அதைத் திட்ட மிடுவ தில்லை !
வெளியே நான் சொல்லும் போதில்
மிக்க அமைதி யாக இருப்பேன்
அபூர்வ மாகத் தான் பேசுவேன் !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++
On-line texts and translations of Rumi
“MA-AARIF-E-MATHNAVI A commentary of the Mathnavi of Maulana Jalaluddin Rumi (R.A.)”, by Hazrat Maulana Hakim Muhammad Akhtar Saheb (D.B.), 1997 .
Four new translations of Rumi poems by Coleman Barks
Rumi poetry set to beautiful Persian Music on Mp3 and CD
The Masnavi I Ma’navi , by Maulana Jalalu-‘d-din Muhammad Rumi, Abridged and Translated by E.H. Whinfield on sacred-texts.com
Dar al Masnavi , several English versions of selections by different translators.
(Rumi.net) Rumi’s little-known biography and poems (Quatrains and Odes) in English by Shahram Shiva
Quatrains at Iranian.com

On Rumi
The Foundation of Universal Lovers of Mevlana Jelaluddin Rumi (EMAV)
The Rubaiyat of Rumi Lecture of Khosro Naghed .
Rumi, Poet of Love and Justice , CHN News
Jalaluddin Rumi
About Rumi, English translations and personal/rare biography
Several Rumi Poems (Quatrains and Odes) in English
Iranian studies site
The Threshold Society and Mevlevi Order
The Mevlevi Order of America . [This organization and the one above are unaffiliated with each other]
Official website of the Family of Jalal al-Din Muhammad Rumi
Mevlana
Mawlana Jalal al-Din Rumi- Mevlevi webpage
RumiOnFire.com – A Tribute to Rumi
What goes round… – The Guardian , November 5, 2000
Rumi Lectures at Harvard University
Rumi and the Tradition of Sufi Poetry
Mewlana Jelal Ad-Din Rumi
Treasures of Persian Literature , by Professor Behrouz Homayoun Far
Guernica Magazine (guernicamag.com) on the 800th anniversary of Rumi’s birth
Sermon on Rumi by UU Minister John Young
Can Rumi Save Us Now?

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 1, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -1 தடம் காண முடியாச் சுவடு

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

ஆங்கில மூலம் : கொலிமன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Poet Rumi’s 800 th Birth
Anniverasary

முன்னுரை :

பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில் தற்போது ஆ·ப்கானிஸ்தான் எனப்படும் பூர்வீகப் பாரசீக தேசத்தில் உள்ள பால்க் (Balkh) என்னும் இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே மங்கோலியர் படயெடுப்புக்கு அஞ்சி அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டுத் துருக்கியில் உள்ள கொன்யாவுக்கு ஓட வேண்டியதாயிற்று. அங்குதான் ரூமி தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடந்தார். நாஷாப்பூரில் (Nashapur) சில காலம் தங்கிய போது கவிஞர் அத்தார் (Poet Attar) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்தது. ரூமிக்கு வாய்த்த மகாக் குருமார்களில் முதல்வர் (Mentors) கவிஞர் அத்தார். ரூமியின் ஞானக் கொடையை அறிந்த கவிஞர் அத்தார் “அஸ்ரார் நமா” (Asrar Nama – The Book of Secrets) என்னும் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார். 1226 இல் ரூமி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன்.

அறிஞராகத் திகழ்ந்த ரூமி டெர்விஸ் (Dervish) இஸ்லாமியக் குரு ஸாம்ஸ் ஆ·ப் தபிரிஷ் (Shams of Tabriz) அவர்களை 1244 இல் சந்தித்த பிறகு புத்துயிர் பெற்று அவரது ஆன்மீகச் சிந்தனையில் மகத்தான ஒரு திருப்பம் ஏற்பட்டது. “நெடுங் காலமாய் முன்பு நான் நினைத்து வந்த அந்தக் கடவுளைக் கண்டேன்,” என்று ரூமி அந்த தேவதூதரைக் கண்ட போது பெருமிதம் கொண்டார். மதக்குரு ஸாம்ஸ் அவர்களுக்குப் பிறகு ரூமியின் சிந்தனையைச் செழிக்கத் தூண்டியவர் ஸலாதீன் ஸர்கப் (Saladin Zarkub) பிறகு ஹ¤ஸம் (Husam) என்பவர். கவிஞர் ரூமி பல கவிதைகளில் விளிக்கும் “நீ” என்பது கடவுளா, ஸாம்ஸா அல்லது யார் என்பதை வாசகர்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.

ஞானக் கவிஞர் ரூமி ஓர் மதஞானி, பேரறிஞர், இஸ்லாம் மதத்தின் ஒரு தூணாகக் கருதப்படுபவர். 1244 ஆண்டு ஆன்மீகத் திருப்பத்துக்குப் பிறகு ரூமி தனது 38 ஆவது வயது முதல் 24,000 பாக்கள் கொண்ட “மத்னாவி” (Masnavi or Mathnawi) என்னும் தன் படைப்பு நூலை எழுதத் துவங்கினார். அவரது அடுத்த புகழடைந்த நூல் “திவான்-இ-ஸாம்ஸ்-இ-தாமிரிஷ் (Divan-E-Shams-E-Tabriz – The Collective Poems of Shams of Tabriz) என்பது. ரூமியின் கவிதைப் படைப்புகளில் ஒரு வித “மாயப் புதிர்” (Mystic Connotation) புரிந்தும் புரியாத பொருளில் புலப்படும். ரூமியின் பட்டப் பெயர் “மௌலானா”. மௌலானா என்றால் நமது கோமான் (Moulana means our Master) என்று பொருள். ரூமிக்குப் பிடித்த இசைக் கருவி புல்லாங்குழல். பாரசீகப் பாக்களை இசைக் கருவிகள் மூலம் பாடலாம் அல்லது வாசிக்கலாம்.

ரூமியின் கவிதைகள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது ஞானக் கருத்துக்கள் அகில நாடுகளுக்கும் உகந்தவை. கவிஞர் ரூமி கொய்னாவைச் சார்ந்த “மெவ்லெவி மதக்குழு நெறி” (Mevlevi Dervish Order, called Whirling Dervishes) எனப்படும் “இசைப்பா ஆட்டக் குழுவின்” துவக்கப் பிதா. ரூமி இஸ்லாமியர், யூதர், கிறித்துவர் ஆகிய மூன்று மத இனத்தவர் மீதும் சமமான மதிப்பைக் கொண்டவர். பாரசீகக் கவிஞர் ரூமி உலகிலே மிகப்பெரும் “ஸ¤·பி மாயப் புதிர் கவிஞராக” (Sufi Mystic Poet) மதிக்கப் படுகிறார். ரூமியின் கருத்து : “கடவுளைத் தவிர வேறோர் கடவுள் இல்லை. கடவுள் என்பவர் ஒருவரே.”

++++++++++++++++

என்னைத் தவிர நீ வேறு
எல்லோருடனும் இருப்பாயானால்
எவரோடும் நீ இருக்க வில்லை !

என்னைத் தவிர நீ வேறு
எல்லோரிடம் இல்லா விட்டால்
ஒவ்வொருவர் உடனும் நீ இருக்கிறாய் !

ஒவ்வொரு வருக்கும் உரிமையாய்
இருப்பதற்குப் பதிலாக
எல்லாரும் போல் இருப்பாய் !

பலரைப் போல் நீ இருந்தால்
நீ எவனு மில்லை !
பூஜியம் !

ஜெலாலுதீன் ரூமி.

தடம் காண முடியாச் சுவடு
கவிதை -1

நான் கிறித்துவன் அல்லன்
நான் யூதனோ, இஸ்லாமோ அல்லன்
இந்து, புத்தம், சு·பி அல்லது
ஸென் போன்ற
எந்த மதத்தையும் சாராதவன் !

++++++++++++

எந்தக் கலாச்சார கட்டமைப்பும்
எனக்கில்லை !
கிழக்கி லிருந்தோ, மேற்கி லிருந்தோ
உதித்தவன் அல்லன் !
கடலி லிருந்தோ அல்லது
கடல் மேலிருந்தோ வரவில்லை !

++++++++++++

மண்தளத்தி லிருந்து
இயற்கைக்குப் புறம்பான
புனிதனாகப்
பிரபஞ்சத் தனிமங்கள் கலப்பின்றிப்
பிறக்க வில்லை நான் !

++++++++++++

இவ்வுலகு அல்லது
அவ்வுலகின்
தனித்துவ வடிவ மில்லை.
ஆதாம், ஈவாளின்
சந்ததியோ அன்றி
வேறொன்றி லிருந்தோ நான்
அவதரிக்க வில்லை.

+++++++++++++

என் பூர்வீகக் கதை :
எனது நாடு எந்த நாடு மில்லை !
உடம்புக்கோ
என் ஆத்மா வுக்கோ
தடம் காண முடியாத
ஒரு சுவடு நான் !

++++++++++++

நேச இனத்தைச் சார்ந்தவன் !
இரு உலகங்களை
ஒருங்கே கண்டவன் நான் !
அழைத்திட
ஒரே குரல் தான் !
அறிவது முதலோ, முடிவோ,
அகமோ, புறமோ
மூச்சு விடுகின்ற
அனைத்தும்
மனித இனத்தின்
சுவாசிப்பு தான் !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++
On-line texts and translations of Rumi
“MA-AARIF-E-MATHNAVI A commentary of the Mathnavi of Maulana Jalaluddin Rumi (R.A.)”, by Hazrat Maulana Hakim Muhammad Akhtar Saheb (D.B.), 1997 .
Four new translations of Rumi poems by Coleman Barks
Rumi poetry set to beautiful Persian Music on Mp3 and CD
The Masnavi I Ma’navi , by Maulana Jalalu-‘d-din Muhammad Rumi, Abridged and Translated by E.H. Whinfield on sacred-texts.com
Dar al Masnavi , several English versions of selections by different translators.
(Rumi.net) Rumi’s little-known biography and poems (Quatrains and Odes) in English by Shahram Shiva
Quatrains at Iranian.com

On Rumi
The Foundation of Universal Lovers of Mevlana Jelaluddin Rumi (EMAV)
The Rubaiyat of Rumi Lecture of Khosro Naghed .
Rumi, Poet of Love and Justice , CHN News
Jalaluddin Rumi
About Rumi, English translations and personal/rare biography
Several Rumi Poems (Quatrains and Odes) in English
Iranian studies site
The Threshold Society and Mevlevi Order
The Mevlevi Order of America . [This organization and the one above are unaffiliated with each other]
Official website of the Family of Jalal al-Din Muhammad Rumi
Mevlana
Mawlana Jalal al-Din Rumi- Mevlevi webpage
RumiOnFire.com – A Tribute to Rumi
What goes round… – The Guardian , November 5, 2000
Rumi Lectures at Harvard University
Rumi and the Tradition of Sufi Poetry
Mewlana Jelal Ad-Din Rumi
Treasures of Persian Literature , by Professor Behrouz Homayoun Far
Guernica Magazine (guernicamag.com) on the 800th anniversary of Rumi’s birth
Sermon on Rumi by UU Minister John Young
Can Rumi Save Us Now?

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 23, 2009)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா