அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986)

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

சி. ஜெயபாரதன், கனடா



பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா
எழில் நகரம் அழித்து
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும் அணுப் பேரிடியால்
நாசமாகி
மட்டமாக்கப் பட்டது!
திட்ட மின்றி
தென்னாலி ராமர்
சந்ததி
மூடர்கள் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்புச் சோதனை
அரங்கேற்றி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
சமாதி யானது
மரணித்த மனிதரோடு !

மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார் !
மேலும் மரிப்பார் ! மரிப்பார் !
நாடு நகரம்
வீடு வயல்கள் எங்கும்
மூடின வெங்கதிர் வீச்சுகள்!
கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
கடத்தப் பட்டார்,
கைப்பையுடன்
கதிர்மழைப் பொழிவால்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை !
படுகிறார் வேதனை !
மன்னிக்க முடியாத,
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த
முதல்
அணுயுகப் பிரளய
அரங்கேற்றம் !

++++++++++++
[செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]
********************
[S. Jayabarathan (April 26, 2010)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா