எழுத்தின் வன்மம் .

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

ஆறுமுகம் முருகேசன்


வாசித்திருந்த
புத்தகத்தை
சாத்திவிட்டு
சலனமின்றி தொடர்ந்தது
அதன் ஞாபகங்களில்
மனப் பக்கங்கள்.

ஒரு கட்டத்தில்
நான் தொலைந்த
அதே நிமிடத்தை தொட்டுவிட
நடப்பு நிமிடத்தில்
தொலைபட்டேன்.

ஒரு முறைக்கு
ஒவ்வொரு முறையும்
தாக்கிவிடுகிறான்
எழுத்துக்காரன்.

..

Series Navigation

ஆறுமுகம் முருகேசன்..

ஆறுமுகம் முருகேசன்..